இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத்

3 posters

Go down

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Empty ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத்

Post by ஆனந்தபைரவர் Sun Dec 19, 2010 12:46 am

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் New+Bitmap+Image+(28)
சுவாமிகள் தன்னுடைய வாழ்வில் அநேக அற்புத நிகழ்ச்சிகளை (miracles) நடத்தினார் என்றாலும் ஸ்ரீ மத்வாச்சாரியாருடைய வேதாந்த சித்தாந்தத்திற்கு அவர் காணிக்கையாக்கிய இலக்கியப் பொக்கிஷமே மிகவும் சிறந்த அற்புதக் காணிக்கை என்று உறுதியாகக் கூறலாம். ராகவேந்திரர் உபநிஷத்துகள், பகவத் கீதை, வேதங்கள், மத்வாச்சாரியார் எழுதிய வேறு பல நூல்கள் முதலியவற்றிற்கு விரிவான விளக்கவுரைகள் (பாஷ்யங்கள்) எழுதினார்.

அந்த சமயத்தில் தஞ்சாவூர் பெரும் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டு மக்கள் துன்புற்றனர். ராகவேந்திரர் தஞ்சாவூர் மன்னனை அணுகித் தக்க பரிகாரங்களும், ஹோமங்களும், பூஜைகளும் செய்வித்தார். வருண பகவான் கண் திறந்ததனால் நாடு சுபீக்ஷமடைந்தது. தன் நன்றியைத் தெரிவிக்க மன்னன் விலை மதிப்பற்ற ஒரு ஹாரத்தை சுவாமிகளுக்குப் பரிசாக அளித்தான். அதை சுவாமிகள் சுபீக்ஷத்தைத் தஞ்சை மண்ணிற்குக் கொடுத்த ஸ்ரீமன் நாராயணனுக்கு யக்ஞ குண்டத்தில் போட்டுக் காணிக்கையாக்கினார். மன்னன் சுவாமிகள் தன்னை அவமானப் படுத்தியதாகக் கருதிச் சினம் கொண்டான். சுவாமிகள் உடனே ஹாரத்தை மீட்டுக் கொடுத்தார். முற்றும் துறந்த முனிவர்க்குப் பொன்னும், பொருளும் ஒரு பொருட்டன்று என்ற உண்மையை உணர்ந்த மன்னன் தன் தவறை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிக்க வேண்டினான்.

சுவாமிகள் பீஜாப்பூருக்குச் சென்ற பொழுது வெயிலின் கொடுமையினால் ஒரு அந்தணச் சிறுவன் கீழே விழுந்து எழ முடியாது தவித்த போது அவர் ஒரு மந்திரத்தை ஜபித்துச் சுடு மணலில் இருந்து நீரூற்றை வரச் செய்து அவனைக் காப்பாற்றினார். மற்றொரு முறை ஒரு சிறு குழந்தை பாலைவனத்தில் சூடு பொறுக்காமல் அழத் துவங்க, ராகவேந்திரர் தன் மேல் உத்தரீயத்தை எடுத்து வீச, காற்றில் அது விரிந்து, குடையாக நிழல் கொடுத்து அந்தப் பயண வழி முழுவதும் தொடர்ந்து பறந்து அந்தச் சிசுவைக் காத்தது.
ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Sri+Raghavendra+SwamyJஅந்தச் சமயத்தில் நாத்திகனான தேசாய் என்பவன் அறிஞர்களிடம் ஒரு மரக் குச்சியை வேத மந்திரங்களினால் முளை விடச் செய்ய முடியுமா என்று சவால் விட்டுவந்தான். மற்றவர்களால் இயலாததால் மக்கள் சுவாமிகளை அழைத்து வேதத்தின் மகிமையை நிரூபிக்கச் சொன்னார்கள். அவர் வேத மந்திரங்களை உச்சரித்தவாறு சிறிது நீரை அந்த மரக்குச்சியின் மீது தெளித்தார். தேசாயின் கண்களின் எதிரிலேயே அது துளிர் விடத் துவங்கியது. அங்குக் குழுமியிருந்த அறிஞர்கள் ஸ்ரீ சுவாமிகள் சிறிது காலத்திற்கு முன்னர் அக்னி சூக்தத்தைச் சொல்லி அரைத்த குளிர்ச்சியான சந்தன விழுதை எரியச் செய்ததாகவும், பின்னர் வருண சூக்தத்தைச் சொல்லி மீண்டும் குளிரச் செய்ததாகவும் கேள்விப்பட்டிருந்த பொழுதிலும் தங்கள் கண் முன்னர் கண்ட விந்தையினால் இறைவனின் அருளினால் இத்தகைய அற்புதங்களையும் நடத்த முடியும் என்று ஆழமாக நம்பினார்கள். இந்த நாள் வரை வேதங்களை அவமதிப்பாகப் பேசி வந்த தேசாயும் மனம் மாறி ஸ்ரீ சுவாமிகளின் துணையுடனும், உறுதியான இறை நம்பிக்கையுடனும் வேதங்களை மேன்மைப் படுத்த உறுதி கொண்டான். இத்தகைய அற்புதங்களைத் தான் மந்திர தந்திரங்களாலோ, கண் கட்டி வித்தையினாலோ, பதஞ்சலி யோகத்தை உபயோகித்தோ செய்யவில்லை என்றும் ‘பகவத் கீதை’ என்னும் யோகத்தினால் தான் செய்ய இயன்றது என்றும் ஸ்ரீ சுவாமிகள் தெளிவு படுத்தியிருக்கிறார். தன்னை நாடி வந்து சரணடைந்தவர்களின் துயரைத் துடைத்து இறைவனிடமும், மதத்திடமும் நம்பிக்கையை வளர்ப்பதுவே அவர் அற்புதங்களின் உள் நோக்கமாகத் இருந்திருக்கிறது.

சுவாமிகளின் இறுதிப் பிரசங்கம்

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Sri_guru_raghavendra-image1
சுவாமிகள் பிருந்தாவனத்தில் நுழைந்து ஜீவ சமாதி அடையும் அந்த நாள் (விரோதிகிருத வருடம்-ஷ்ராவண மாதத்தில் கிருஷ்ண பக்ஷ த்வீதியை: 1671 A.D) வந்தது. ஸ்ரீ சுவாமிகள் பிருந்தாவனம் புகும் நாளைக் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அங்குக் குழுமினர். அதில் சந்தேக நோக்கில் பார்ப்பவர்களும் இருந்தனர். கேலி பேசுபவர்களும் சிலர் இருந்தனர். தம்முடைய பெரும் மதிப்பிற்குரிய குருவானவர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கனத்த இதயத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர். ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் (1600 A.D) இதே போன்று உயிருடன் பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்ததை வெகு சிலரே பார்த்திருந்தனர். அது போன்ற ஓர் அற்புதத்தைத் தம் கண்களால் காணும் பேற்றை எண்ணி வியந்தவாறு நின்றிருந்தனர்.

ஸ்ரீ ராகவேந்திரர் எப்பொழுதும் போல் வைகறையில் எழுந்து ஸ்ரீ ஹரியைத் தியானித்து விடியும் முன்னரே தன் நித்ய நியமங்களை முடித்துக் கொண்டார். ஜபம் செய்து தியானத்தை முடித்துக் கொண்ட பின்னர் சீடர்களுக்குக் காலைச் சொற்பொழிவை நடத்தினார். அவருடைய சீடர்கள் தம் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய குருவின் இறுதிச் சொற்பொழிவு என்று மிகவும் துயரத்துடன் அமர்ந்து கேட்டனர். உணர்ச்சி வசப்பட்ட குருவானவர் தம் பிரிய மாணாக்கர்களுக்கு என்றும் போல் ஸ்ரீ மத்வாச்சாரியாரின் பாஷ்யத்தையும், அதற்கு ஸ்ரீ ஜெய தீர்த்தரின் விளக்கவுரையையும் நுணுக்கமாகத் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்குக் கவனத்துடன் கற்பித்தார். சீடர்களும் அதே ஆர்வத்துடன் கவனம் சிதறாமல் உள்ளத்தில் இருத்திக் கொண்டனர். அன்றைய உபன்யாசம் அவருடைய வாழ்க்கையின் பூரண சாரமாக அமைந்திருந்தது. அத்தகைய ஞானக் கருவூலத்தைத் தாம் இனி எப்பொழுதும் காண இயலாது என்ற துயர அலைகள் அன்றைய காற்றின் அணு அணுவிலும் கலந்திருந்தது. சொற்பொழிவை முடித்துக் கொண்ட சுவாமிகள் மீண்டும் நீராடி சமஸ்தானத்து ஸ்ரீ ராமபிரான் விக்கிரகத்திற்கும், மற்ற விக்கிரகங்களுக்கும் விரிவாக விதிப்படிக் கிரமமாகப் பூஜையை முடித்துக் கொண்டு கூடியிருந்தவர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமும், பல மந்திராக்ஷதையும் கொடுத்தார். குறிப்பிட்ட நேரம் நெருங்கிய பொழுது அவர் தேர்ந்தெடுத்த இடத்தில் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். எதிரில் வியாச பீடத்தில் மூல கிரந்தங்களும், அவர் எழுதிய பாஷ்யங்களும் வைக்கப் பட்டிருந்தன. ஸ்ரீ ராகவேந்திரர் வலது கையில் ஜப மாலையை வைத்திருந்தார். அவர் சிறிது நேரம் ஆழ்நிலைத் தியானத்தில் ஆழ்ந்த பிறகு ஆன்மாவை நெகிழ்த்தும் தம் பேச்சைத் துவக்கினார்.

"இன்றிலிருந்து நான் உங்கள் பார்வையிலிருந்து மறைந்து விடப் போகிறேன். உங்களிடம் என்னை அனுப்பிய இறைவனிடம் நான் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது. இறைவனால் எனக்கிடப்பட்ட பணி முடிவடைந்து விட்டது. இப்பூலகிற்கு வந்த ஒவ்வொருவரும் இறை நியதியின் படி இறைவனின் அழைப்பிற்கேற்ப மீண்டும் செல்ல வேண்டியவர்களே. நான் பிரிந்து செல்வதை நினைத்து நீங்கள் வருந்தத் தேவை இல்லை. மூல கிரந்தங்களும், ஸர்வ மூல மற்றும் பாஷ்யங்களும் உங்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். தக்க ஆசிரியரின் துணையோடு அந்த நூல்களை விடாது தொடர்ந்து பயின்று வாருங்கள். விலை மதிப்பற்ற இந்த மனிதப் பிறவி இறைவனால் கற்றுத் தேர்ச்சி பெறவே நமக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. நம் தினசரி வாழ்வின் பிரச்சினைகளுக்குச் சாஸ்திரங்களில் விடை கிடைக்கும். சாஸ்திரங்களின் பிரகாரம் நடந்து மஹான்களின் சொற்படி நடந்தால் வாழ்வு மேன்மையுறும். கூடிய வரையில் கற்றவற்றை நடைமுறைப் படுத்தினால் உங்கள் வாழ்வு அமைதி, வளம், மகிழ்ச்சியை நோக்கிச் செல்லும் ராஜ மார்க்கமாக அமையும். அறிவைத் தேடி அடைதல் என்பது கத்தி முனையில் நடப்பது போன்ற கடினமானதொன்றெனினும் ஸ்ரீ ஹரியின் அருளும், ஆச்சாரியரின் கிருபையும் இருந்தால் அசையாத நம்பிக்கையுடன் இடையில் விட்டு விடாது தொடர்ந்து முயற்சிப்பவர்கள் இலக்கை எளிதில் அடையலாம். வேத சாஸ்திரங்களைப் பின்பற்றாமல், அற்புதங்களை மாத்திரம் செய்து தம்மைக் ‘குரு’ என்று அழைத்துக் கொள்பவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். நானும், ஸ்ரீ ஆச்சாரியரும் நடத்திய அற்புதங்கள் யோக சித்தியையும், சாஸ்திரங்களையும் ஆதாரமாகக் கொன்டவை. இவற்றில் தந்திரமோ அல்லது ஏமாற்று வித்தையோ இல்லை. இந்த அற்புதங்கள் எல்லாம் வல்ல இறையருளை உலகிற்குக் காட்டும் பொருட்டே நிகழ்த்தப் பட்டன. உண்மை அறிவே (ஞானம்) எல்லாவற்றிலும் உயர்ந்தது. அவ்வறிவில்லாத அற்புதங்கள் செய்வோருக்கும் நன்மை தராது. நம்புபவர்களுக்கும் நலன் அளிக்காது.

பூரண பரமாத்மா பவித்ரமான அப்பழுக்கற்ற பண்புகளுடன் கூடியவர். அவரிடமில்லாத நற்பண்புகளே இல்லை என்று சொல்லலாம். ராமர், பிரமன் போன்ற எல்லா தேவதைகளுக்கும் எல்லாக் காலங்களிலும், எல்லா விதங்களிலும் அவரே இறைவனாவார். அவருடைய உருவம் இயற்கையைக் கடந்து நிற்பது. அவருடைய உடல் ஞானத்தாலும், ஆனந்தத்தாலும் நிரம்பியது. அவர் எல்லாக் காலங்களிலும், எங்கும் நிறைந்து எல்லாம் வல்லவராக இருப்பவர். எல்லா உயிர்களும் அவருக்கு உட்பட்டவை தான். அன்னை மஹா இலக்குமி அவருடைய துணைவியார். சாஸ்திரங்களின் படி உயிர்களனைத்தும் சத்வ, தமோ, ரஜோ குணங்களாலானவை. இறுதியாக அவர்கள் அடையும் நிலைகள் அவரவர்களுடைய குணங்களைப் பொருத்து அமைகின்றன. சாத்வீக குணமுடையவர்கள் சாஸ்வதானந்த நிலை என்கிற மோக்ஷத்தை அடைவார்கள். தாமச குணம் உடையவர்கள் சாஸ்வத நரகம் என்கிற இருண்ட உலகை அடைவார்கள். இங்கு எப்பொழுதும் துயரமே. ராஜஸ குணமுடையவர்கள் பவ சாகரமாகிய சம்சாரத்தில் உழன்று இன்ப துன்பங்களை அனுபவிப்பார்கள். சாஸ்திரங்களின் படி மூன்று வகையாகத் தரம் பிரிக்கப் பட்ட மனிதர்களை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணலாம்.
இந்த உலகில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வேதாந்தத் தத்துவங்கள் ‘கடவுள் இல்லை. மதம் இல்லை, ஜீவனும், பிரம்மமும் ஒன்றே. உயிர்களிடையே வேறுபாடில்லை, வேதங்களில் உண்மை இல்லை, பிரம்மம் குணங்களும், உருவமும் அற்றது.’ என்று பல விதமாகச் சொன்னாலும் அவற்றில் உண்மை இல்லை. நாம் காணும் இந்த உலகம் சத்தியமானது. இந்த உலகிற்கு ஒரே தலைவன் இறைவனே. அவன் சத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதினால் நிர்குண, நிராகாரன் என்று அழைக்கிறோம். துயருரும் ஆன்மாக்கள் அந்த ஆண்டவன் அருளினால் மாத்திரமே மோக்ஷம் என்னும் சாஸ்வத ஆனந்தத்தை அடைய முடியும். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் உண்மை ஆனந்தத்தை அடைய முடியாது.

நேர்மையான வாழ்க்கை வாழாதவர்கள் நேர்மையாகச் சிந்திக்க முடியாது. நேர்மையாக வாழ்வதென்பது விதிப்படி ஒவ்வொருவருக்கும் இறைவனால் அளிக்கப் பட்டிருக்கும் பணிகளைப் பலனை இறைவனுக்கு அர்ப்பித்து விட்டுத் தம்மால் இயன்ற வரையில் சிறப்பாகச் செய்வதாகும். இது தான் கர்ம யோகம். இக் கர்ம யோகத்தின் மற்றொரு அங்கமாக உண்ணா விரதம் அனுஷ்டிப்பார்கள். ஏகாதசியன்றும், கிருஷ்ணாஷ்டமியன்றும் ஒவ்வொருவரும் தவறாமல் உபவாசம் இருக்க வேண்டும். எல்லாத் துறையைச் சேர்ந்த இரு பாலாரும் இதைக் கடை பிடிக்க வேண்டும். இதைக் கை விட்டவர்களுக்கு இறைவனின் அருட் கதவு மூடப்பட்டு விடும் என்பதை உணருங்கள். 'சாதுர்மாஸ்ய விரதம்' அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறை ஆகும். இதைத் தவிரத் தங்கள் தகுதிக்கேற்ப வேறு வைஷ்ணவ விரதங்களையும் தம் சக்திக்குத் தக்கவாறு அனுசரிக்கலாம்.

வேதாந்தச் சிந்தனைகள் ஆன்ம வளர்ச்சிக்கும், சரியான முடிவுகளை எடுத்து நல்ல முறையில் வாழவும் உதவும். எவரையும் துன்புறுத்தாமலும், வெறுக்காமலும் இருக்க வேண்டும். தக்கவருக்குச் சமூக நலன் கருதிச் செய்யப்படும் சமூக சேவையும் இறை வணக்கமேயாகும். சுருங்கச் சொன்னால் நம் வாழ்க்கையே வழிபாடு. நம் ஒவ்வொரு செயலும் பூஜையாக அமைய வேண்டும். இந்த வாழ்வும், இதன் ஒவ்வொரு துளியும் விலை மதிப்பற்றது. கடந்து சென்ற காலம் மீண்டும் வராது. அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழக் குருட்டுத் தனமாக இல்லாமல் இறைவனைப் பூரணமாக நம்ப வேண்டும். பெரியோரையும், அறிவாளிகளையும் மதிக்க வேண்டும். நாடி வருவோரை மனதை வருத்தியோ, வெறும் கையுடனோ அனுப்பக் கூடாது. சமூக நல்லெண்ணங்கள் இல்லாமல் மதம் வளராது. மதமின்றிச் சமூகம் இல்லை. தவறான சிந்தனைகளைத் துறந்து, நேர்மையாக எண்ணி, நேர்மையாக வாழ வேண்டும். முடிவாகச் சத்தியத்தை விரும்ப வேண்டும். தனிப்பட்ட வெறுப்பை விட வேண்டும்.

இதுவே ஆச்சாரியர், ஜனகர், சனகர் போன்ற அரசர்கள், துருவன், பிரஹலாதன் போன்ற பக்தர்கள் அனைவரும் சாஸ்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்து வாழ்ந்த முறை ஆகும். உங்கள் செயல்களின் பலனை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு உங்களால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்து வாருங்கள். சுய நலத்துடன் செய்யப்படும் செயல்கள் பால் திரிந்து மோர் ஆனது போன்று அகும். இப்பொழுது நான் விடை பெறுகிறேன். என்னுடைய நூல்களிலும், பிருந்தாவனத்திலும் நான் வாழ்வேன். என் நூல்களைக் கற்பது, கற்பிப்பது, பிரசாரம் செய்வது, என்னுடைய சொற்பொழிவைக் கேட்பது போன்றவற்றால் நீங்கள் எனக்குத் தொண்டாற்றலாம்.
ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் SRSராகவேந்திரரின் இறுதிச் சொற்பொழிவால் அங்குக் கூடியிருந்த மக்கள், மனதில் புது ஒளியைப் பாய்ச்சியதைப் போன்று உணர்ந்தார்கள். அவர் தாம் இது நாள் வரை நம்பிய, வாழ்ந்த, பிரசாரம் செய்த வேதாந்தத் தத்துவத்தின் ரகசியத்தைத் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். அவருடைய சொற்பொழிவு அளித்த ஆனந்தத்தை குருநாதரின் பிரிவு என்னும் மேகம் மறைத்தது. கண்களில் பனித்த நீரை அவருக்கு மன வருத்தத்தை அளிக்கலாகாது என்ற ஒரே காரணத்திற்காக மறைத்தனர். அவருடைய பேச்சைக் கேட்கும் பொழுதே தம் குரு ஒரு உண்மையான ஞானி, யோகி, அறிவாளி, ஒளி பொருந்திய துறவி என்பதையும், அவருடைய உள்ளம் மிருதுவானது என்றும், பரிவு நிரம்பியது என்றும் சீடர்கள் வெள்ளிடை மலையாக அறிந்தனர். இதன் பின்னர் ஸ்ரீ சுவாமிகள் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கினார். வெகு விரைவில் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். தியானத்தின் உன்னத நிலையை அவர் அடைந்த பொழுது அவருடைய முகம் அமைதியாகவும், ஒளி பொருந்தியும் காணப்பட்டது. அங்கிருந்த அறிஞர்களுக்குப் பகவத் கீதையின் ஸ்லோகம் நினைவிற்கு வந்தது.

தன்னுடைய இறுதிப் பயணத்தின் பொழுது 'ஓம்' என்ற பிரணவத்தில் தன்னை நிலை நிறுத்தியவாறு பற்றற்றுத் தேகத்தைத் துறப்பவன் மோக்ஷம் என்ற உயரிய நிலையை எய்தி இறைவனுடன் ஒன்றறக் கலக்கிறான். என்ற பொருளுடைய சுலோகம் அது.

ஒரு நிலையில் சுவாமிகளின் கையில் ஜபமாலை சுழலாமல் நின்றுவிட்டது. வெங்கண்ணாவும், இதரச் சீடர்களும் குறிப்பாலுணர்ந்து அவரைச் சுற்றிலும் கற்களை அடுக்கத் துவங்கினார்கள். அவருடைய தலை வரை கற்களை அடுக்கிய பிறகு ஸ்ரீ சுவாமிகள் முன்னரே சொன்னவாறு ‘கண்டகி’ நதியிலிருந்து விசேஷமாகக் கொண்டு வந்திருந்த 1200 லஷ்மிநாராயண சாலிகிராமங்கள் அடங்கிய தாமிரப் பெட்டியை வைத்தனர். பிறகு மூடும் கல்லை வைத்து விட்டு மணலால் நிரப்பினர். தாம் அமைத்த பிருந்தாவனத்தின் மீது 12000 குடங்கள் சுத்த நீரால் அபிஷேகம் செய்தனர்.

அப்பண்ணாச்சார்யா ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தருக்கு அத்யந்த நண்பர். அவர் பிருந்தாவனத்திற்குள் புகும் அந்தச் சமயத்தில் துங்கபத்திரை நதியின் மறு கரையில் இருந்தார். துங்கபத்திரை நதியில் வெள்ளப் பெருக்கிருந்தபடியினால் அவர் தன் பூஜ்ய குருவுடன் இருக்க விரும்பினாலும் இயலாது போயிற்று. அவர் ‘பூர்ண போத ஸ்தோத்திர’த்தைச் சொல்லியவாறு துங்கபத்திரை நதியில் குதித்து விட்டார். சம்சார சாகரத்திலிருந்து தன்னைக் கரையேற்ற வல்ல சுவாமிகள் தன்னை நதிக்கப்பால் சேர்ப்பிப்பார் என்ற அவருடைய திட நம்பிக்கை அவரை நீரில் நீந்திக் கரை சேரத் துணை புரிந்தது. ஆனால் சுவாமிகள் பிருந்தாவனத்திற்குள் புகுந்து விட்டபடியால் மனம் துயருற்ற நிலையில் தான் இயற்றிய ஸ்தோத்திரத்தை முடிக்கவில்லை. ஏழு எழுத்துக்கள் குறைந்தன. அந்த இறுதி ஏழு எழுத்துக்கள் பிருந்தாவனத்திலிருந்து ஒலித்தன. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராகவேந்திரருடைய அங்கீகாரத்தையும், அவர் ஜீவனாகப் பிருந்தாவனத்துள் இருப்பதையும் தெளிவாகக் காட்டிற்று. சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்த பிறகு நடந்த முதல் அற்புதம் இது என்றாலும் இன்றும் மந்திராலயத்தில் அமைந்துள்ள பிருந்தாவனத்திற்குச் சென்று மனமுருக வேண்டும் பக்தர்களின் மனோபீஷ்டங்கள் நிறைவேறுவதைக் காணலாம்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்துள் புகும் முன்பு ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வேதாந்த சாரத்தைத் தன் இறுதிச் சொற்பொழிவில் ரசமாகப் பிழிந்து கொடுத்தார். இன்றைய இயந்திர மயமான வாழ்வில் ஸ்ரீ ராகவேந்திரர், மற்றும் அநேக மஹான்களின் நெறி முறைகளும், வாழ்க்கை வரலாறுகளும் மனிதனுடைய உள்ளொளியைப் பெருக்கி உண்மை ஆனந்தத்தை அறிய உதவும். நாம் நம் சௌபாக்கியத்தினால் தவறைத் திருத்தி நல்வழி காட்டும் மஹான்களைப் பெற்றிருக்கிறோம்.

நன்றி நிலாச்சாரல்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Empty Re: ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத்

Post by ராகவன் Sun Dec 19, 2010 12:25 pm

என் குருநாதரைப் பற்றிய கட்டுரையை வழங்கியதற்கு நன்றி நண்பரே!

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ:
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Empty Re: ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:39 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத் Empty Re: ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் -பிரேமா சுரேந்திரநாத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum