இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அருட்பெருஞ் ஜோதி

Go down

அருட்பெருஞ் ஜோதி Empty அருட்பெருஞ் ஜோதி

Post by bala Fri Apr 01, 2011 9:19 am

எல்லாம் வல்ல இறை அருளின் கருணையால் வாழ்க வளமுடன்.


பிறப்பில் நாம் முயன்று முன்னேறவேண்டியது இறை அருளை நோக்கியே என்று பலவிதத்திலே மகான்கள் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, அந்தக்காலகட்டத்திலே மக்களுக்கு இருந்த ஏற்புத்திறனுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்து எதனையும் தந்தார்கள்.

மகான்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களை நாம் புத்தகவடிவிலே படித்தால், ஒவ்வொரு மகான்களின் அறிவுரைகளும் ஒவ்வொரு விதம் இருப்பது போல நமக்குத் தோன்றுவது இயல்பே.. ஆனாலும் மகான்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிலைத்து நிற்பது என்பது மனதைக்கடந்த நிலையாம் மௌனத்தில் ஒன்றே.

மனதைக்கடந்த மௌனவெளியிலே தம்மைக்கரைத்து நின்றால், மகான்கள் என்கிற பேதம் நீங்கும். சுத்தவெளி ஒன்றே மிஞ்சி நிற்கும்.

எப்போது ஒருவருக்கு பேதம் கொள்ள மெய்ப்பொருளோடு மற்றொன்று தெரிகிறதோ, அதுவும் " தான்" என்ற விழிப்பில், மெய்ப்பொருளோடு கலந்து நிற்கிற தன்மை குருவின் துணையால் சீடன் முயன்று பெற்றாக வேண்டும். எதனையும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம் இருக்கலாம்... அதை விட முனைப்பின்றி இருப்பதை உணரவேண்டும் என்கிற ஆர்வம் சீடனுக்கு மிக முக்கியம்.

எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல் (137)
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
வல்லதா யெல்லா மாகியெல் லாமும் (139)
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோ ர் (141)
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

என்ற அருட்பெருஞ்சோதி அகவல் வரிகளில் வள்ளல்பெருமானார் மிக அழகாக எடுத்துத்தருகிறார்....


எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல்
அப்பாலுமாகிய அருட்பெருஞ்சோதி...
வல்லதாய் எல்லாமாகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்சோதி...
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்க்கண்டோர்
அப்பொருளாகிய அருட்பெரும்சோதி...


எத்தனை பெருவெளிகளைத் தாண்டி ஒன்றை விட மற்றொன்று பெரிதாகக் கண்டாலும், முடிவினில் அப்பாலுமாக விளங்கிடுவது அருட்பெருஞ்சோதியே என்கிறார் வள்ளலார்.

எத்தனையோ பெரிய பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பேரியக்கமண்டலம் என்று பேசினாலும், அதைவிட வல்லதாய் விளங்குவது அருட்பெருஞ்சோதியே...

தியான நிலையிலும், பொது வாழ்விலும் முனைப்புடன் நாம் நினைப்போம்.... இதுவே சிறந்தது.. இதுவே பெரியது... இதுவே என்று நாம் எங்கெங்கோ சுற்றுகிறோம்... ஆனால் முனைப்பினால் எழும் எதையும் விட, வல்லமையாய் விளங்குவது அருட்பெரும்சோதியே என்கிறார்.

நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் (305)
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் (307)
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே (309)
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி


நாயைவிட, ஈயை விட இகழ்ந்தேன், ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி....
எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே, அச்சோ என்று அருள் அருட்பெருஞ்சோதி என்று இறைஞ்சுகிறார்.


வள்ளலாருடைய வாழ்வை எவரும் எழுதலாம் ஆனால் எழுதுபவர் எந்த நிலையிலே இருக்கிறாரோ அந்த நிலையே தான் அந்த புத்தகம் வெளிப்படுத்தும். உள்ளது தான் வெளி வரும். ஆனால் வள்ளலாரின் வாழ்வும் அவரின் அனுபவமும் மாற்ற முடியாதது. அது அருட்பெரும்சோதி.

நாயை விட, ஈயை விட இகழ்ந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி என்கிற வரியில், எவர் எப்படி இருப்பினும் கூட இறையை அணுகினால் அப்படியே அருளிடும் என்று சொல்வது மட்டுமின்றி, இறை உணர்வு உணர்ந்ததை வெளிப்படுத்துகிறார் வள்ளல் பெருமான்.


, எவர் இறை என்ற அருளின் முன் தன் முனைப்பை ஒடுக்கி நின்று கரைகிறாரோ அவர்களுக்கு இருப்பதை உணர்த்தும் அருட்பெரும்சோதி...

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர் அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்சோதி..

எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர் அப்படி அளித்தருள் அருட்பெருஞ்சோதி....


என்பது போல அனைத்தும் நிகழ்கிறது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ... வாழ்க வளமுடன்.
நன்றி : பேரா. சுந்தரேசன் .

bala

Posts : 6
Join date : 28/03/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum