இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன்

2 posters

Go down

ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன் Empty ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன்

Post by ஆனந்தபைரவர் Wed Aug 04, 2010 3:37 pm

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சரணம்!

அண்டங்களைக் காக்கும் பராசக்தி

மீனாட்சி அம்மன் கோவிலிலோ அல்லது வேறெந்த அம்பிகை கோவிலிலோ நமக்கு முன்னர் அம்பாளின் முன் நின்று அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே, தாயே என்னை காப்பாற்றம்மா என்று பலரும் வேண்டிக் கொள்வதை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்?

அப்போதெல்லாம் அந்த வேண்டுதலில், இன்றைய மிகப் பெரும் விஞ்ஞானிகளெல்லாம் வியக்கும் மாபெரும் உண்மை போகிற போக்கில் சில வார்த்தைகளில் காட்டப்படுகிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள்?

அறிவியல் விஞ்ஞானிகள் அனைவரும் பிரபஞ்சத்தின் அகல, நீள, ஆழத்திற்கு ஒரு முடிவே இல்லை என்ற உண்மைக்கு வந்து விட்டார்கள். அண்டங்கள் கோடி, அதற்கும் மேலே கோடானு கோடி இருக்கக்கூடும் என்பது அவர்களது முடிவு!

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான சக்தியின் தத்துவம் எல்லையற்ற துல்லியத்துடன் அனைத்தையும் இயக்கி வருகிறது!

மாக்ஸ் டெக்மார்க்கின் இணை பிரபஞ்ச தத்துவம்

2003-ம் ஆண்டு மே மாத ஸயின்டிபிக் அமெரிக்கன் இதழில் பாரலல் யுனிவர்ஸ் என்ற தனது கட்டுரையில் மாக்ஸ் டெக்மார்க் என்ற விஞ்ஞானி "இதே கட்டுரையை உங்கள் ஜெராக்ஸ் காப்பியான இன்னொரு "நீங்களே" வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதை நம்ப முடிகிறதா?

ஒருவேளை அவர் நீங்கள் படிக்கும் இதே சமயம் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்து விட்டுக் கீழே இதழை வைத்திருப்பார்." என்ற வரிகளோடு தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.

நமது பூமியைப் போல இன்னொரு பூமி 10 to the 10 power 8 என்ற கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருப்பதையும் விளக்குகிறார்.

விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சம் போலவே இணையான "பாரலல் பிரபஞ்சம்" (Parallel universe) இருக்கிறது என்பதை கணிதப் பூர்வமாக நிரூபித்துவிட்டதன் வெளிப்பாடே மாக்ஸ் டெக்மார்க்கின் கட்டுரை வடிவமாக உலகின் பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் வந்துள்ளது!

ஹ்யூ எவரெட்டின் பல்பிரபஞ்சக் கொள்கை

இதைவிட ஒரு படி மேலே போய் தீவிர பகுத்தறிவு விஞ்ஞானியான ஹ்யூ எவரெட்டின் பல் பிரபஞ்சங்கள் கொள்கையை ஸயின்டிபிக் அமெரிக்கன் டிசம்பர் 2007 இதழில் தனது கட்டுரையில் விளக்கி எழுதி பீட்டர் பைர்ன் என்ற எழுத்தாளார் விஞ்ஞானிகளையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறார்!

ஹ்யூ எவரெட் (Hugh Everett) அபூர்வமான கணித நிபுணர். 1954-ம் ஆண்டு ஒரு நாள் நள்ளிரவில் பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற கொள்கையைக் கண்டு பிடித்து அதை ஒரு கட்டுரையாக எழுத அவரை விஞ்ஞான உலகம் எள்ளி நகையாடியது. இதனால் வெறுத்துப் போன அவர் இயற்பியலையே விட்டுவிட்டு ராணுவ ரகசிய ஆராய்ச்சியில் இணைந்து சாரமில்லாத ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து 1982, ஜூலை மாதம் 19ம் தேதி தனது 51-ம் வயதில் மரணமடைந்தார்.

ஆனால் அவரது விஞ்ஞான கொள்கையை இப்போது ஆராயும் பல்வேறு விஞ்ஞானிகள் அதில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்டு விளக்கி வருகின்றனர்; அவரைப் போற்றிப் புகழ்கின்றனர்!.

பி.பி.சி. நிகழ்ச்சி

2002ம் ஆண்டு பி.பி.சி. ஒளிபரப்பிய பாரலல் யுனிவர்ஸஸ் என்ற தொடரில் விஞ்ஞானிகளின் இந்த கொள்கை விரிவாக விளக்கப்பட்டது. அத்தோடு இந்த எல்லையற்ற பிரபஞ்சங்கள் ஒரு மிலி மீட்டர் தூரத்திலேயே இருக்கின்றன என்ற சுவையான செய்தியையும் அது தந்தது!

மாறுபட்ட பிரக்ஞை நிலையில் நாம் காணும் உலகங்கள்

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக உள்ள பிரபஞ்சங்கள் பிரக்ஞையின் மாறுபட்ட நிலைகளில் எளிதில் அடைய முடியும் என்று இந்த நிகழ்ச்சியில் தெளிவாக விளக்கப்பட்டது!

மிக உயரிய (மூன்று டைமன்ஷனுக்கு அப்பாற்பட்ட) வேறுபட்ட பரிமாணங்களில் இதை உணருவது சாத்தியமே என்கிறது பி.பி.சி.யின் விஞ்ஞான நிகழ்ச்சி!

இந்த சூட்சும உலகங்களை யோக வாசிஷ்டம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனுடன் பிரபஞ்ச யாத்திரை செல்லும்போது அர்ஜுனன் பல்வேறு உலகங்களைப் பார்த்து வியந்து கிருஷ்ணரிடம் அது பற்றிக் கேட்க அவர் தக்கவாறு கூறும் பதிலை மஹாபாரதத்தில் வேத வியாசர் விளக்குகிறார்.

(இறந்தவர்கள் தங்களது செயல்களுக்குத் தக்கபடி வெவ்வேறு உலகங்களுக்குச் செல்வதை அர்ஜுனன் பார்க்கிறான். அன்னத்தை தானமாகத் தந்தவருக்கு அவரை அழைத்து செல்ல அன்ன ரதம் வருவதை அர்ஜுனன் பார்த்து வியக்கிறான்!)

கிருஷ்ணர் பதினாயிரம் கோபிகளுடன் ஒரே சமயத்தில் இருந்தார் என்பதும், மஹரிஷி தௌம்யர் ஒரே சமயத்தில் தன் மனைவிமார் அனைவருடனும் தனித்தனியே இருந்தார் என்பதும் இந்த விஞ்ஞான யுகத்தில் புதிய கோணத்தில் பார்க்க முடிகிறது.
கந்த புராணம் விளக்கும் பல அண்டங்கள்

கந்த புராணத்தில் அசுரன் சூரபன்மன் தனது 'ரிஸர்வ்' படைகளை மற்ற அண்டங்களில் இருந்து கொண்டு வந்தான் என்பதை புராணக் கட்டுக் கதை என்று சொன்ன காலம் போய் விட்டது. மற்ற அண்டங்கள் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய நிலையை விஞ்ஞானம் உருவாக்கி உள்ளது.

சீதையின் விசித்திர வாதம்!

ஆனந்த ராமாயணத்தில் ராமர் சீதையை காட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னபோது சீதை ராமரை நோக்கி மற்ற எந்த யுகத்தின் ராமாயணத்திலாவது ராமர் சீதையை விட்டுவிட்டுப் போயிருக்கிறாரா என்று கேட்கிறாள். இதை கவியின் சமத்காரம் என்றோ அல்லது வேடிக்கையான வாதம் என்றோ இன்று ஒதுக்கிவிட முடியாது. யுக சுழற்சியில் அனைத்தும் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என்பதையும் இணை பிரபஞ்சங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் பதிவாகி இருக்கின்றன என்பதையும் நமது இதிஹாஸ புராணங்கள் விளக்கி உள்ளன. சரியான விஞ்ஞான நிரூபணம் இன்றி அவற்றை கற்பனையின் எல்லை என்று நாம் எண்ணி வருகிறோம்.

இப்போது இணைய தளத்தில் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரது பிரத்தியேகமான ப்ளாக்குகளிலும் ரிக்வேத சூக்தமும் அதை அப்படியே திருப்பிக் கூறும் பிக்பேங் கொள்கையும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன!

ஹிந்து புராணங்கள் மறுசுழற்சியாக கல்பங்கள் பல தோன்றி மறைந்து கொண்டே இருக்கும் என்று விளக்குவதையும் பல இணையதளங்கள் ஆச்சரியத்துடன் விளக்கி வருகின்றன! புராண சம்பவங்களும் புராண பாத்திரங்களின் அதீத செயல்களும் விஞ்ஞான நோக்கில் ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்டு வருகின்றன!

பாரதியாரும் மணிவாசகரும்

மகாகவி பாரதியார் கோமதி மஹிமையை விளக்கிக் கூறும் தனது பாடலில்

"நக்கபி ரானருளால் - இஇங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இஇக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்?
எல்லையுண்டோ இஇலையோ - இஇங்
கியாவர் கண்டார்திசை வெளியினுக்கே?

என்று கூறி வியப்பதும்

மணிவாசகர் தில்லையில் பாடிய திருவண்டப் பகுதியில்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன"

என்று போற்றுவதும் இப்போது நமக்குப் பொருள் புரிந்து படிக்க முடியும்!

மனித குலம் அடைய இருக்கும் உயரிய நாகரிகம் பற்றி மிச்சியோ ககு!

உயரிய நாகரிகம் ஒன்றை நோக்கி மனித இனம் சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்க எழுத்தாளரான மிச்சியோ ககு தனது நூல்களில் விளக்கி இந்த பல் பிரபஞ்ச கொள்கை அப்போது நன்கு விளங்கி நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியத்தில் வந்து சேரும் என்கிறார். இவரது நூல்கள் உலகளாவிய அளவில் பல கோடிகள் விற்கப்பட்டு சாதனை படைத்து விட்டன.

பாமரருக்கும் விஞ்ஞானம் என்ற கொள்கையுடன் நூல்களை எழுதும் இவரது படைப்புகளைப் படிக்கும்போது ஹிந்து புராணங்களின் எல்லையற்ற ஆழத்தை உணர நிச்சயம் ஒரு வாய்ப்பு உருவாகிறது!

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சரணம் என்பதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்து அதைக் கூறி நமது பிரார்த்தனையை இனி நாம் தொடரலாம்!
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன் Empty Re: ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன்

Post by ராகவா Tue Feb 11, 2014 1:15 am

அருமை...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum