இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நீரின் மீதுள்ள தாமரையைப் போன்று திகழுங்கள்

Go down

நீரின் மீதுள்ள தாமரையைப் போன்று திகழுங்கள் Empty நீரின் மீதுள்ள தாமரையைப் போன்று திகழுங்கள்

Post by ஆனந்தபைரவர் Mon Apr 25, 2011 11:08 pm

நீரின் மீதுள்ள தாமரையைப் போன்று திகழுங்கள் Sai_baba_27jan08
இந்தப் பெரிய கூட்டத்தில் பல மொழிகள் பேசுகிறவர்களும் உள்ளனர். இதிலுள்ள ஒவ்வொரு மனிதனாலும், அவனுடைய மொழியினை மட்டுமே பேசிட இயலும். அந்த மொழியிலேயே மற்றவர்களும் அவனுடன் பேசிடல் வேண்டும் என விரும்புகிறான். ஆனால் இதயம் எனும் மொழி ஒன்று உள்ளது. அதனை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். அனைவராலும் கேட்டிடவும் முடியும்.

இந்;த மொழயினையே நான் பேசுகின்றேன். அது எனது இதயத்திலிருந்து உங்களுடைய இதயத்திற்குச் செல்கிறது. இதயம் இதயமுடன் பேசும் பொழுது, எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்பு பரிமாறப்படுகிறது. உடன் பதிலளிக்கக் கூடிய இதயமானது, இரக்கத்துடன் அவற்றைக் கவனித்து, அன்பினால் விடையளிக்கிறது. துன்பம், குழப்பம், கடும் வேதனை, பீதி, தேடல் போன்ற இயல்புகள் எல்லா மனித வர்க்கத்திற்கும் உண்டு.

ஓவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்க ஆவல் கொண்டுள்ளனர். ஓவ்வொருவரும் குறைவாகப் பணி செய்து, அதிகமாகப் பலன் பெற்றிட விரும்புகின்றனர். குறைவாகக் கொடுத்து, அதிகாகப் பலன் பெற்றிட விரும்புகின்றனர். ஆனால் எவரும், மற்ற எந்த முறையினையும் சோதிக்க விரும்பவில்லை. அதாவது குறைவாக விரும்பி அதிகமாகத் தருவது. ஒவ்;வொரு விருப்பமும் இயக்கத்தைத் தடைசெய்திடும.; இடையூறாக, பாதத்தைப் பின்நோக்கி இழுத்திடும.;

ஒரு கல்லூரி இளைஞன் இரு கால்கள் கொண்டு சுதந்திரமாகத் திரியலாம். அவன் திருமணம் புரிந்தால், நான்கு கால்கள் கொண்டவனாகிறான். குழந்தை அவனை ஆறுகால்கள் கொண்டவனாக்கிறது. அவனது இயக்கத்தின் வேகம் குறைந்து, பூ மியின் பிடிமானம் இன்னும் இறுகிவிடுகிறது. மரவட்டை ஊர்கின்றது. அதிக பொருட்கள், அதிக தடங்கல்கள், அதிக குறைபாடுகள், சோபாக்கள், நாற்காலிகள், கட்டில்கள், மேசைகள், அலமாரிகள், அலங்காரப் பொருட்கள் என வரவேற்பறை முழுவதும் பொருட்களால் நிரம்பி, இயக்கமே மெதுவாக, ஆபத்து நிரம்பியதாக உள்ளது.

தேவைகளைக் குறையுங்கள். எளிமையாக வாழுங்கள.; அதுவே மகிழ்ச்சியான வழியாகும.; பற்றுதல் துயரத்தைத் தந்திடும.; ஆனால் மரணமானது அனைத்தையும் பின்னே விட்டுவிட்டு வரவேண்டும் எனவும், அனைவரும் பின் தங்கிவிட, நீங்கள் சோகத்தால் ஆட்கொள்ளப் படுகிறீர்கள். நீரின் மீது உள்ள தாமரையைப் போன்று திகழுங்கள.; அதன்மீது இருங்கள.; அதனுள் அல்ல. தாமரை வளர்ந்திட, நீர் தேவைபப்படுகிறது. ஆனால் அதன் ஒரு துளி கூட தன்னை நனைத்துவிடாது அது பார்த்துக் கொள்கிறது.

இந்த லௌகீக உலகே, பண்பின் இருப்பிடமும,; ஆத்மாவின் ஆடுகளமும் ஆகும். ஆனால் அதனை அந்த இலக்கிற்காக மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்கு அதிகமான நிலைக்கு அதனை உயர்த்தி, அதுவே அனைத்திற்கும் முக்கியமானது எனப் போற்றாதீர்கள்.

சாதனையால் பயிற்சி செய்து வந்தால் இறைவன் புலப்படுவான்
தங்களால் இறைவனைக் காணமுடியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று கூறியபடடி உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்கள் வெளியே, நிலவின் பாதையில், நிலவில் என எங்குமே இறைவனைக் காணவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களே, எந்நேமும் அவர் வாசம் செய்திடும்; மாளிகைகளாகத் திகழ்கின்றனர்.

எவ்வாறு ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டி கீழே விழச் செய்கிறானோ, கிளியினைப் போன்று இந்த நாகரீகமான வாக்கியத்தை மற்றவரக்குத் திருப்பிச் சொல்கின்றனர். எவரும் வேர்களைப் பார்க்கவில்லை. ஆனால், அவை மண்ணில் ஆழத்தில் அனைவரதும் கண்பார்வைக்கும் அப்பால் உள்ளன. அதற்காக மரங்களுக்கு வேர்களே இல்லை எனவும், அவற்றைப் போசித்து கீழிருந்து தாங்;கிட எதுவுமே இல்லை எனவும் உங்களால்; அறுதியிட்டுக் கூற இயலுமா?

இறைவன் உணவளித்துக், காத்து, கண்ணுக்குப் புலப்படாது உறுதியுடன் தாங்கிக் கொள்கிறார். முயற்சி செய்பவர்களுக்கே இந்த இலக்கிற்காக வகுக்கப்பட்ட பாதையில் சென்று அவரை உணர்வதில் வெற்றி கண்டவர்;களைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவாகளுக்கே, அவர் கண்ணுக்குப் புலப்படுவாh.; இறைவன் பாலில் வெண்ணெயைப் போன்று, சாதனையினால் (ஆன்மீக முயற்சி) திரட்டப்படும் பொழுதே புலனாகிறார்.

பல மாடிக் கட்டித்தின் அடித்தளத்தினை உங்களால் காண இயலாது. அதற்காக அது புமியின் மீது அப்படியே அமாந்துள்ளது என உங்களால் விவாதம் செய்ய இயலுமா? இந்த வாழ்கையின் அடித்தளங்கள் கடந்த காலத்தில் ஆழமாக எழுப்பப்பட்டுவிட்டன. ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த பிறவிகளில் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இந்த அமைப்பானது, அந்த அந்த பிறவிகளினது அடிப்படை திட்டத்தைக் கொண்டே, வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாதவரே வளைவுகளையும், முடிவுகளையும் தீர்மானம் செய்கிறார். மாடிகளின் எண்ணிக்கை, உயரம் ,எடை போன்றன தீர்மானிக்கப்படுகிறது.

இறைவன் சிறப்பு வாய்ந்த, கண்ணுக்குப் புலப்படாதவரும் விரிந்து பரந்தவரும், அறிய இயலாதவருமாவார். உங்களால் வேர்களைக் காண இயலாவிடினும் அல்லது அது எத்தகு விரிவானது அல்லது எவ்வளவு ஆழமாக பூமிக்குள் சென்று பிடித்துக் கொண்டுள்ளது என்பதனையும் காணாவிடினும், நீங்கள் அதன் அடிப்பாகத்தில் நீர் ஊற்றுகிறீர்கள். அதன் வாயிலாக அந்த நீர் அதனை அடையும் என்பதால் அல்லவா ?

வேர்கள் நீரைப் பெறுகின்ற பொழுது, மரம் கனியை அளிக்கம் என எதிர்பாhக்;கிறீர்கள். அதே போன்று, படைப்பின் அடிப்படையாக இறைவன் இருக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்களுக்குக் கனியைப் பொழிவார்.

உங்களது மனதை இதர சிதறல்களிலிருந்து பற்றுதலை எடுத்து இறைவனை நோக்கிய தேடலில் உங்களது பற்றுதலை வைத்துக் கொள்ளுமாறு நீங்கள் செய்கின்ற வகையே, யோகமும் (இறைவனுடனான தொடர்பு) தியாகமும் ஆகும்.
காமமானது (ஆசை) தியாகத்தால் விட்டொழிக்கப்பட வேண்டும். ராமா (இறைவன்) யோகத்தால் பெறப்பட வேண்டும். ஆசை அறிவினை வர்ணமற்ற தாக்கிறது. அது நீதியை குலைக்கின்றது. அது புலன்களின் பசியை அதிகரிக்கின்றது. லௌகீக உலகிற்கு பொய்யான தோற்றத்தை அது அளிக்கிறது.

ஆசை மறையும் பொழுது அல்லது இறைவனை நோக்கி கவனம் செலுத்தும் பொழுது, அறிவானது தானே விழிப்புணர்வு பெற்று, அதனுடைய மிகச் சிறப்பான பிரகாசத்துடன் ஒளிர்கிறது. அந்த பிரகாசமானது உள்ளே மற்றும் வெளியே நிறைந்துள்ள இறைவனை வெளிப்படுத்துகிறது. இதுவே உண்மையான ஆத்ம சாட்சாத்காரம். (தன்னை உணர்தல்)
நீங்கள் ஈடுபடுகின்ற சாதனையில் வெற்றியினை அடைந்திட நான் உங்களை ஆசீர்வதிக்கின்றேன்.

இப்பொழுது நீங்கள் எதனையும் பயிற்சி செய்யவில்லை என்றால், நாமஸ்மரணம் (இறைவனை நினைவுறுத்திக் கொள்ளதல) போன்ற எளிமையான ஒன்றை மேற்கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

அதனுடன் பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்தல், ஏழைகளுக்கு, நோயுற்றவர்களுக்கு சேவை செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளுங்கள்.
அவர்கள் ஒவ்வோருவரையும் உங்களுடைய இஷ;ட தேவதையாக, உங்களுக்கு மிகவும் பிடித்தமான இறைவனின் வடிவமாகப் பாருங்கள். அது உங்களுடைய இதயத்தை அன்பால் நிரப்பி, உங்களது மனம் மற்றும் அமைதிக்கு நிலையான தன்மையை அளித்திடும்.
15.05.௧௯௬௯

நன்றி சாய் சந்நிதி இணையத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum