Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நவக்ரகங்கள் நமக்கு தேவையில்லை!
3 posters
Page 1 of 1
நவக்ரகங்கள் நமக்கு தேவையில்லை!
வணக்கம்!
தலைப்பு ஏன் வித்யாசமாக இருக்கிறது என தோன்றுகிறதா? எப்போதுமே அப்படித்தான்! மனம் ஒப்புக்கொண்டுவிட்ட ஒரு வழியில் இருந்து விலகிய சிந்தனை நம்மை அடைந்தால், உடனே குழப்ப நிலை தோன்றும். விரிவாக அலசினால் உண்மை நிலை புரியும்.
நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே. இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்! அது தான் தர்மம். அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது. உதாரணமாக, சிவனை பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் பெற்றான்.
ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது. உண்மைகளை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம். அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்துகொள்ளுங்கள்.
"நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும். நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும், ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணிவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது. ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும். இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார். மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். "
இன்றைய ஜோசியர்களின் நிலையை பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலர் தவிர, எல்லா சோதிடனும், தங்கள் வாழ்க்கையை மட்டும் கணக்கில் வைத்துகொண்டு, தன் வருமானத்தை பெருக்கிகொள்ளவே, உண்மையை மறைத்து, தேவை இல்லாத பரிகாரங்களை சொல்லி, மக்களை வருத்துகின்றனர். சுருக்கமாக சொல்ல போனால் மக்களை அலைய விட்டு தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொள்கின்றனர்.
சரி! இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நம்மை காத்துக்கொள்ள என்ன வழி?
எந்த சோதிடனாவது நேராக நவக்ராஹங்களுக்கு பூசை, பரிஹர்ரம் செய்ய சொன்னால் அதை நம்பாதீர்கள்!
எந்த கோவிலுக்கு சென்றாலும், நவக்ரஹ சன்னதி இருந்தால், அங்கு செல்லாமல், ஏன், அவர்களை திரும்பி கூட பார்க்காமல், சுவாமியை தரிசனம் செய்யுங்கள். நவக்ரக சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து வேண்டிகொள்வது, கசப்பு கடை காரனிடம், ஆடே சென்று கழுத்தை கொடுத்து "என்னை வெட்டு" என்று சொல்வது போல்.
ஒன்பது பேர்களில் ஒருவரைதவிர (வியாழன்) பாக்கி எட்டு பேர்களும் கழிசடைங்க. இருக்கும் இடம், சேரும் இடம், பார்வைக்கு ஏற்ப சுபாவத்தை மாற்றி கொள்வார்கள்.
கலியுகத்தில் "அன்னதானத்துக்கு" சமமான தானம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. அதை செய்யுங்கள், ஆத்மார்த்தமாக, அது போதும்.
தலைப்பு ஏன் வித்யாசமாக இருக்கிறது என தோன்றுகிறதா? எப்போதுமே அப்படித்தான்! மனம் ஒப்புக்கொண்டுவிட்ட ஒரு வழியில் இருந்து விலகிய சிந்தனை நம்மை அடைந்தால், உடனே குழப்ப நிலை தோன்றும். விரிவாக அலசினால் உண்மை நிலை புரியும்.
நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே. இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்! அது தான் தர்மம். அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது. உதாரணமாக, சிவனை பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் பெற்றான்.
ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது. உண்மைகளை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம். அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்துகொள்ளுங்கள்.
"நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும். நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும், ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணிவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது. ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும். இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார். மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். "
இன்றைய ஜோசியர்களின் நிலையை பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலர் தவிர, எல்லா சோதிடனும், தங்கள் வாழ்க்கையை மட்டும் கணக்கில் வைத்துகொண்டு, தன் வருமானத்தை பெருக்கிகொள்ளவே, உண்மையை மறைத்து, தேவை இல்லாத பரிகாரங்களை சொல்லி, மக்களை வருத்துகின்றனர். சுருக்கமாக சொல்ல போனால் மக்களை அலைய விட்டு தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொள்கின்றனர்.
சரி! இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நம்மை காத்துக்கொள்ள என்ன வழி?
எந்த சோதிடனாவது நேராக நவக்ராஹங்களுக்கு பூசை, பரிஹர்ரம் செய்ய சொன்னால் அதை நம்பாதீர்கள்!
எந்த கோவிலுக்கு சென்றாலும், நவக்ரஹ சன்னதி இருந்தால், அங்கு செல்லாமல், ஏன், அவர்களை திரும்பி கூட பார்க்காமல், சுவாமியை தரிசனம் செய்யுங்கள். நவக்ரக சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து வேண்டிகொள்வது, கசப்பு கடை காரனிடம், ஆடே சென்று கழுத்தை கொடுத்து "என்னை வெட்டு" என்று சொல்வது போல்.
ஒன்பது பேர்களில் ஒருவரைதவிர (வியாழன்) பாக்கி எட்டு பேர்களும் கழிசடைங்க. இருக்கும் இடம், சேரும் இடம், பார்வைக்கு ஏற்ப சுபாவத்தை மாற்றி கொள்வார்கள்.
கலியுகத்தில் "அன்னதானத்துக்கு" சமமான தானம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. அதை செய்யுங்கள், ஆத்மார்த்தமாக, அது போதும்.
agnilingam- Posts : 14
Join date : 28/05/2011
Re: நவக்ரகங்கள் நமக்கு தேவையில்லை!
ஒருவர் தர்மப்படி சுத்தமாக நடந்து கொண்டால், எம்பெருமான் நம்மை நோக்கி வருவான். மேலும் ஒருவர் குணாதிசயம் எளிதில் மாறாது. மாறுவதும், மாறவைப்பதுவும் அரங்கனின் சித்தம். அது ஒருவர் ஜாதகத்தில் 9வது இடமான பாக்கிய ஸ்தானத்தில் காணலாம். நாம் கெட்ட வழியிலிருந்து விலகி (தர்மத்தை அறிந்த பின்) நல்ல வழிக்கு திரும்பினால் (திரும்ப வேண்டும்) நவ கிரகங்களும் தங்கள் சுபாவத்தை நம்மிடம் மாற்றிக்கொள்ளும் (கெடுதல் செய்யாமல்). பாக்கிய அதிபதி ஜாதகத்தில் நலம் பெற்று இருந்தால் நாம் மாறுவது சாத்தியம். கிரகங்களும் நமக்காக மாறுவதும் சாத்தியம். நாம் நம்மை மாற்றி கொள்ளாத போது கிரகங்களை நமக்காக (நன்மைக்காக) மாற வேண்டும் என்று விரும்புவதில் நியாயமில்லை. பரிகாரங்கள் பிரயாஜோணமில்லை.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: நவக்ரகங்கள் நமக்கு தேவையில்லை!
இறைவனது ஆலயத்தில் அவனைத்தவிர யாவர்க்கும் இடமில்லை. பழங்கோயில்களில் நவக்ரகங்களுக்கு இருப்பிடமும் இருந்ததில்லை (சிதம்பரமும் இதற்கு சாட்சி)
எம் குருவின் கூற்றும் இதுவே.
பெரும்பாலும் சுயநலம் கருதுபவர்களே நவக்ரகங்களை சுற்றுவதை ஆலயத்தில் காணலாம்.
எது எப்படியென்றாலும், நவக்ரகங்கள் தம் கடனை தவறாமல் செய்பவர்கள். அவர்களை "கழிசடைங்க" வரிசையில் சேர்க்காதீர்கள்!
உண்மையில் அவர்கள் கசாப்புக் கடைக்காரர்களில்லை...
நீ கொடுத்திருந்தால் திரும்பக் கொடுப்பவர்கள், எடுத்திருந்தால் அதை திரும்பவும் எடுப்பவர்கள்...
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
எம் குருவின் கூற்றும் இதுவே.
பெரும்பாலும் சுயநலம் கருதுபவர்களே நவக்ரகங்களை சுற்றுவதை ஆலயத்தில் காணலாம்.
எது எப்படியென்றாலும், நவக்ரகங்கள் தம் கடனை தவறாமல் செய்பவர்கள். அவர்களை "கழிசடைங்க" வரிசையில் சேர்க்காதீர்கள்!
உண்மையில் அவர்கள் கசாப்புக் கடைக்காரர்களில்லை...
நீ கொடுத்திருந்தால் திரும்பக் கொடுப்பவர்கள், எடுத்திருந்தால் அதை திரும்பவும் எடுப்பவர்கள்...
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்- Posts : 54
Join date : 30/05/2012
Age : 39
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum