Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
4 posters
Page 1 of 1
ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:
’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.
அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.
பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.
ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?
முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம்.
அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.
அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.
அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.
அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம்.
ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.
அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக - உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம்.
இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

நன்றி: பசும்பொன் களஞ்சியம்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
அனைவருக்கும் வணக்கம்
நல்லதொரு பதிவு. திரு தேவரய்யா அவர்கள் அருள் திரு முருகனைப் பற்றி இராமநாதபுரத்தில் ஆற்றிய உரை கிடைத்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்
பதிவிட்டவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
அன்புடன்
நந்திதா
நல்லதொரு பதிவு. திரு தேவரய்யா அவர்கள் அருள் திரு முருகனைப் பற்றி இராமநாதபுரத்தில் ஆற்றிய உரை கிடைத்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்
பதிவிட்டவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
பகிற்வுக்கு மிக்க நன்றி..
பகிற்வுக்கு மிக்க நன்றி..
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
முயற்சி செய்து பார்க்கிறோம் நந்திதா அக்காAdmin wrote:அனைவருக்கும் வணக்கம்
நல்லதொரு பதிவு. திரு தேவரய்யா அவர்கள் அருள் திரு முருகனைப் பற்றி இராமநாதபுரத்தில் ஆற்றிய உரை கிடைத்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்
பதிவிட்டவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
அன்புடன்
நந்திதா
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
நன்றிஅச்சலா wrote:என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
பகிற்வுக்கு மிக்க நன்றி..
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
லெட்சுமணன் wrote:நன்றிஅச்சலா wrote:என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
பகிற்வுக்கு மிக்க நன்றி..


rdevendrakumar1989- Posts : 1
Join date : 14/08/2014
Age : 33
Location : Karaikudi
Re: ஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்
உங்களையும் சிறிது அறிமுகம் செய்துக்கொண்டால் நன்றாக இருக்கும்rdevendrakumar1989 wrote:Nandri
அதெப்போல் தமிழில் எழுதலாமே...

» ஹந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்
» நந்தி தேவர் துதி
» சிவராமத் தேவர்-கிராமத்து சாமி
» தெற்கத்தி தெய்வங்கள் -1
» தெற்கத்தி தெய்வங்கள் -2
» நந்தி தேவர் துதி
» சிவராமத் தேவர்-கிராமத்து சாமி
» தெற்கத்தி தெய்வங்கள் -1
» தெற்கத்தி தெய்வங்கள் -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum