இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

4 posters

Go down

இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா. Empty இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

Post by சாமி Tue Mar 06, 2012 1:35 am

திருவருட்பா என்னும் நூலை இயற்றியவர் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார். இந்நூல் ஆறு திருமுறைகளை உடையது. திரு+அருள்+பா = திருவருட்பா. திரு என்றால் தெய்வத் தன்மை உடையது. அருள்பா என்பது இறைவன் அருளால் பாடப்பட்ட பா என்றேனும் இறைவனின் அருளை விளக்கும் பா என்றேனும் பொருள் கொள்ளலாம்.

இறையருள் நெறி பெற விரும்புவோர் உச்சிமேற் கொண்டாடப்பட வேண்டிய பாடல்கள் இவை. அதில் இருந்து ஒரு பாடலும் விளக்கமும்.

கரையில்வீண் கதையெலா முதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்ட தீக்
கந்தம் நாறிட வூத்தை காதம் நாறிட வுறு
கடும் பொய்யிறு காதம் நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதமிடுவார் சிவ
மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு
மவுன மிடுவாரிவரை மூடரென வோதுறு
வழக்குநல் வழக்கெனினும் நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசுமவ
ரோடுறவு பெற வருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானுமுள்
ளுவப்புறு குணக் குன்றமே
தரையிலுயர் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.


உயர்ந்த தெய்வயானையையும் குறவர் மகளான வள்ளி பெருமாட்டியையும், உள்ளத்தினால் விரும்புகின்ற குணக் குன்று போன்றவனே!

மண்ணுலகத்தில் சிறந்து விளங்கும் சென்னைப் பதியில் உள்ள கந்த கோட்டத்துள் வீற்றிற்கும் முருகப் பெருமானே! குளிர்ந்த ஒளியுடைய மணிகளுள் சிறந்த சைவமணியாய்த் திகழும் ஆறுமுகங்களை உடைய தெய்வமணியே

பேசப் புகுந்தால் பயனில்லாத கதைகளை எல்லாம் முதிய கரிய காக்கையைப் போன்று கதறியுரைப்பவரும், கள் குடித்தலால் உண்டாகும் தீநாற்றம் வீசும் வாயில் உள்ள ஊத்தை நாற்றம் காத தூரம் வரை வீசிட, பேசும் சொற்களில் மிக்குள்ள பொய் இரண்டு காத தூரம் வரை பரவ,

எல்லையில்லாது பேசும் தம் வாய் கொண்டு கொடிய வாதம் செய்வாரும், சிவ மணம் கமழ வேண்டிய மலர் போன்ற தம் அழகிய வாயால் மௌனம் கொள்பவரும் என்னும் இவர்களை மூடர் எனக் கூறும் உலக வழக்கு நல்ல வழக்கு எனக் கூறப்படுமாயினும்,

கூறுமிடத்து நான் அவர்களது உறவைக் கொள்ளாமல் நின் புகழினைப் பேசுபவருடன் உறவைக் கொள்ளல் வேண்டும்.


Last edited by சாமி on Thu Mar 08, 2012 9:33 am; edited 3 times in total
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா. Empty Re: இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

Post by ஹரி ஓம் Tue Mar 06, 2012 12:52 pm

திருவருட்ப்பாவும் அதன் விளக்கமும் அருமை
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா. Empty Re: இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

Post by tmm_raj_ramesh Tue Mar 06, 2012 2:11 pm

தங்களுக்கு பூரண இறையருள் கிடைக்க
எங்கள் குலப் பெருமான் திருப்பரங்குன்றம் முருகப்​ பெருமானை
வேண்டிக் ​கொள்கிறேன்,
நன்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா. Empty Re: இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

Post by சேயோன் Thu Mar 08, 2012 11:20 am

வள்ளலார் பெருமானின் மற்ற பாடல்களையும் விளக்குங்கள்.
உபயோகமாக இருக்கும்.
மிக்க நன்றி

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா. Empty Re: இறைவன் அருளால் பாடப்பட்ட பா, திருவருட்பா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum