இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


படித்துறை பேச்சியம்மன்

3 posters

Go down

படித்துறை பேச்சியம்மன் Empty படித்துறை பேச்சியம்மன்

Post by ராகவன் Fri Jul 13, 2012 6:44 pm

படித்துறை பேச்சியம்மன் P11a10

'படித்துறை பேச்சியம்மனை வணங்கினால், மனதில் உள்ள பாரமெல்லாம் வடிந்துவிடும்’ என்கின்றனர் பக்தர்கள். அத்தனை சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, வைகை ஆற்றுக்கு அருகில் அமர்ந்தபடி அருளாட்சி நடத்துகிறாள், பேச்சியம்மன்.

மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பேச்சியம்மன் படித்துறை.

'இந்த உலகையே கட்டிக் காக்கும் வீரம் கொண்டவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்’ என ஸ்ரீபிரம்மாவை நோக்கிக் கடும் தவம் இருந்தான் வல்லாளன் எனும் அரசன். அவனது தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீபிரம்மா, அப்படியே ஆகட்டும் என அவனுக்கு வரம் தந்தருளினார். அதன்படி, வல்லாளனின் மனைவி கருவுற்றாள். இந்த நிலையில், தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி, 'வல்லாளனின் மகன் சூரனாகப் பிறப்பான். பின்னாளில், நம் இந்திரலோகத்தையும் சிறைப்பிடிப்பான்’ எனப் பயந்தார்கள். ஸ்ரீபிரம்மா அளித்த வரம் குறித்து, அவரின் மனைவி ஸ்ரீசரஸ்வதிதேவியிடம் சொல்லி முறையிடுவது எனத் தீர்மானித்தனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கடும் கோபமான ஸ்ரீசரஸ்வதிதேவி, வல்லாளனை மிதித்துக் கொன்றாள். அப்போது அவளது திருமேனியும் முகமும் மாறிப்போயிருந்தது. வல்லாளனின் மனைவியை மடியில் கிடத்தி, அவளையும் கொன்றாள். அந்தத் திருவுருவத்தில், ஸ்ரீபேச்சியம்மன் எனும் திருநாமத்துடன் இன்றைக்கும் கோயில் கொண்டிருக்கிறாள், மதுரையம்பதியில்!

படித்துறை பேச்சியம்மன் P1110

ஆற்றுப் படுகையில், ஆலமரத் தடியில்... சுயம்புவாகத் தோன்றிய அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடத் துவங்கி, சுமார் 600 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் பக்தர்கள். சக்தி வாய்ந்த ஸ்ரீபேச்சியம்மனை கண்ணாரத் தரிசித்து வழிபட்டால், சகல பிணிகளும் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! வாய் பேச இயலாதவர்கள், பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால்... விரைவில் பேச்சுத் திறன் கூடும்; பேச்சுக் குறைபாடுகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கு ஸ்ரீசங்கு விநாயகர், ஸ்ரீமுருகக்கடவுள், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகம்மாள், ஸ்ரீஅய்யனார் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இந்தத் தலத்தின் ஸ்ரீநாகம்மாள் சந்நிதிக்கு வந்து, பாலபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் நாக தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!

வெள்ளிக்கிழமை அன்று ராகுகால வேளையில் சிறப்பு பூஜைகள் முடிந்து, 12.05 மணிக்கு ஆயிரம் லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அன்று மாலை, குங்கும அலங்காரத்தில் ஜொலிப்பாள் பேச்சியம்மன். திருமணத் தடையால் கலங்குவோர், கல்வியில் ஞானம் பெற விரும்புவோர், பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லாதோர் வெள்ளிக்கிழமையில் இங்கு வந்து, பால் அபிஷேகம் செய்து வழிபட, விரைவில்

நல்லது நடக்கும். ஆடி மாதம் வந்துவிட்டால், தினமும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் என ஆலயம் அமர்க்களப்படும். வெள்ளிக்கிழமை காலை 5 மணியில் இருந்து துவங்குகிற அம்மனின் சிறப்பு அலங்காரம் மற்றும் அம்மனுக்குச் செய்யப்படும் பாலபிஷேகம் என விசேஷ தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது! அருளையும் வரத்தையும் அள்ளித் தரும் ஸ்ரீபேச்சியம்மனைத் தொழுவோம்; வாழ்வில் எல்லாப் பேரின்பங்களையும் பெறுவோம்! -

- ரா.அண்ணாமலை
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

படித்துறை பேச்சியம்மன் Empty Re: படித்துறை பேச்சியம்மன்

Post by ஹரி ஓம் Thu Jul 19, 2012 3:11 pm

நன்றி பகிர்வுக்கு அண்ணா
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்துறை பேச்சியம்மன் Empty Re: படித்துறை பேச்சியம்மன்

Post by ராகவா Sat Sep 14, 2013 3:25 am

பகிர்வுக்கு நன்றி ராகவன்...Very Happy 
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

படித்துறை பேச்சியம்மன் Empty Re: படித்துறை பேச்சியம்மன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum