Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
குருகுல கல்வி
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
குருகுல கல்வி
குருகுல அமைப்பு முறையானது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அம்சமாகும். பல்கலைக்கழகம் தோன்றியது முதல் குருகுல அமைப்புச் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் அனைவரும் குருவாகத் திகழ்கின்றனர். மேலும், குருபீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு வேண்டிய கல்விப் பணி செய்கின்றார்கள். மாணவர்கள் அனைவரும் குருவாகிய ஆசிரியர்களிடம் உயர்கல்விக்கு, குறிப்பாக வகுப்பறை, ஆராய்ச்சி மற்றும் கிராம விரிவாக்கப் பணிகளில் வழிகாட்டுதலைப் பெற்றுப் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் குருக்கள்; அனைத்து மாணவர்களும் சிஷ்யர்கள் - சீடர்கள்.
குரு தத்துவம் மேலானது. குருவினும் சிறந்தவர் வேறு எவருமில்லை. ஒருவன் குருவை வணங்க வேண்டும். தனது மனம் - சொல், வாக்கு, செயல் - காரியங்களை, குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும். 'கு' என்ற எழுத்து இருளையும் 'ரு' என்ற எழுத்து அந்த இருளைப் போக்குவதையும் குறிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை இருட்டறையிலிருந்து வெளிச்சத்திற்குக் கொணரப் பாடுபடுகின்றனர்.
குரு தத்துவம் மேலானது. குருவினும் சிறந்தவர் வேறு எவருமில்லை. ஒருவன் குருவை வணங்க வேண்டும். தனது மனம் - சொல், வாக்கு, செயல் - காரியங்களை, குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும். 'கு' என்ற எழுத்து இருளையும் 'ரு' என்ற எழுத்து அந்த இருளைப் போக்குவதையும் குறிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை இருட்டறையிலிருந்து வெளிச்சத்திற்குக் கொணரப் பாடுபடுகின்றனர்.
Re: குருகுல கல்வி
ஒழுக்கம், கட்டுப்பாடு எனுமிரண்டும் குருகுல வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒழுக்கத்தில் இருந்துதான் பண்பாடு வருகிறது. 'ஒழுக்கம் உயிரினும் மேலானது' என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். ஒழுக்கத்தில் இருந்துதான் மேன்மை உண்டாகிறது. கட்டுப்பாடான வாழ்விலிருந்து திடகாத்திரமான உடலும் நோயற்ற உடலும் வந்து அமைகின்றன. மனத்தை நம் வசத்துக்குக் கொண்டு வருவதற்கும் கட்டுப்பாடான வாழ்வு உதவுகிறது. மனக்கட்டுப்பாட்டிலிருந்துதான் மேன்மைகள் அனைத்தும் ஏற்படுகின்றன. ஆகையால், உண்பதிலும், உறங்குவதிலும் உழைப்பதிலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இன்றியமையாதவையாகின்றன. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக குருகுல அமைப்பு முறையின் மாணவர்களாகிய நீங்கள் கட்டான உடம்பும், உறுதியான மனமும், கூர்மையான புத்தியும் உடையவர்களாக விளங்க வேண்டும். எனவே, பல்கலைக்கழக குருகுல அமைப்பு முறை, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையை அமைப்பதற்கு அனைத்து ஆசிரியர்கள் மூலம் போதிய வழிகாட்டி வருகிறது.
காந்தியக் கண்ணோட்டத்தில் மாணவர்கள்
மாணவருக்கு அழகு, பணிவுடைமை மட்டுமல்ல – பணிவில்லையேல் படிப்பே வருவதில்லை என்பதும் உண்மையே.
மாணவர் ஆசிரியரிடம் நம்பிக்கையும், பணிவும் சேவா மனப்பான்மையும்; கொண்டிருக்க வேண்டும்; ஆசிரியர் சொல்வதெல்லாம் தன் நன்மைக்கே என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மாணவர் தன் ஐயங்களை ஆசிரியரிடம் தெரிவித்து அவற்றிற்கு விளக்கம் பெற வேண்டும்.
ஆசிரியருக்குத் தெரிந்தவகளையெல்லாம் ஒரே நாளில் கற்றுவிடுவதற்கான அதிக ஆசை மாணவருக்குக் கூடாது. பணிவுடன் ஆசிரியர் மனத்தைத் திருப்தி செய்யும் மாணவருக்குத் தமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் போதிக்க வேண்டுமென்ற ஆவல் ஆசிரியருக்கு இயல்பாகவே உண்டாகும். ஆசிரியருக்கு இத்தகைய ஆவல் உண்டாகும் வரை மாணவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதே.
ஆனால், ஆசிரியர் ஞானத்தைச் சொரியத் தொடங்குகையில் மாணவர்கள் அசட்டையாக இருந்து சந்தர்ப்பத்தை நழுவ விடலாகாது. (மூலம் : கிசோர்லால் க. மஸ்ரூவாலா (2000) காந்திய நவநீதம், -காந்தியச் சிந்தனைகள் களஞ்சியம், காந்திய இலக்கியச் சங்கம், மதுரை. பக். 158-160)
பல்கலைக்கழக குருகுல அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் கீழ்க்கண்ட பாடலை மனத்தில் கொண்டு அன்றாடம் கல்வி கற்கலாம்:
ஞானம் ஓங்கிடக் கொட்டு முரசே – நல்ல
பண்பு வளர்ந்திடக் கொட்டு முரசே
நல்லோர்கள் ஆட்சிபெறக் கொட்டு முரசே – சிறந்த
குருகுலக் கல்வி வளர்ந்திடக் கொட்டு முரசே!
காந்தியக் கண்ணோட்டத்தில் மாணவர்கள்
மாணவருக்கு அழகு, பணிவுடைமை மட்டுமல்ல – பணிவில்லையேல் படிப்பே வருவதில்லை என்பதும் உண்மையே.
மாணவர் ஆசிரியரிடம் நம்பிக்கையும், பணிவும் சேவா மனப்பான்மையும்; கொண்டிருக்க வேண்டும்; ஆசிரியர் சொல்வதெல்லாம் தன் நன்மைக்கே என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மாணவர் தன் ஐயங்களை ஆசிரியரிடம் தெரிவித்து அவற்றிற்கு விளக்கம் பெற வேண்டும்.
ஆசிரியருக்குத் தெரிந்தவகளையெல்லாம் ஒரே நாளில் கற்றுவிடுவதற்கான அதிக ஆசை மாணவருக்குக் கூடாது. பணிவுடன் ஆசிரியர் மனத்தைத் திருப்தி செய்யும் மாணவருக்குத் தமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் போதிக்க வேண்டுமென்ற ஆவல் ஆசிரியருக்கு இயல்பாகவே உண்டாகும். ஆசிரியருக்கு இத்தகைய ஆவல் உண்டாகும் வரை மாணவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதே.
ஆனால், ஆசிரியர் ஞானத்தைச் சொரியத் தொடங்குகையில் மாணவர்கள் அசட்டையாக இருந்து சந்தர்ப்பத்தை நழுவ விடலாகாது. (மூலம் : கிசோர்லால் க. மஸ்ரூவாலா (2000) காந்திய நவநீதம், -காந்தியச் சிந்தனைகள் களஞ்சியம், காந்திய இலக்கியச் சங்கம், மதுரை. பக். 158-160)
பல்கலைக்கழக குருகுல அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் கீழ்க்கண்ட பாடலை மனத்தில் கொண்டு அன்றாடம் கல்வி கற்கலாம்:
ஞானம் ஓங்கிடக் கொட்டு முரசே – நல்ல
பண்பு வளர்ந்திடக் கொட்டு முரசே
நல்லோர்கள் ஆட்சிபெறக் கொட்டு முரசே – சிறந்த
குருகுலக் கல்வி வளர்ந்திடக் கொட்டு முரசே!
Re: குருகுல கல்வி
குருகுலக் கல்வி என்பது காந்தியக் கல்வி முறையாகும். எனவே, அனைத்துச் சீடர்களாகிய மாணவர்களும் குருவாகிய - பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் முறையாகக் கல்வி கற்று எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்வது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.
வாழ்க குருகுல அமைப்பு மாணவர்கள்! வளர்க காந்தியக் கல்வி! வளர்க காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக குருகுல அமைப்பு முறை!
வாழ்க குருகுல அமைப்பு மாணவர்கள்! வளர்க காந்தியக் கல்வி! வளர்க காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக குருகுல அமைப்பு முறை!
Similar topics
» பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
» நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
» நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum