Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்!
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்!

ஏழுமுறை புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பவர்களின் தோஷம் போக்கி மணவாழ்வு அளிக்கும் கோதண்டராமர் சென்னை அருகிலுள்ள பெருமுடிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
தல வரலாறு:அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் கிடைத்த பாயசத்தை அவரது மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகியோர் பங்கிட்டு அருந்தினர். அதன் பயனாக கோசலைக்கு ராமரும், கைகேயியிக்கு பரதரும், சுமித்ரைக்கு லட்சுமணர், சத்ருக்கனரும் பிறந்தனர். ராமருக்கு பட்டம் கட்ட நாள் குறித்தார் தசரதர். ஆனால், கைகேயி தன் பிள்ளை பரதனுக்கு பட்டம் சூட்டவும், ராமனை வனவாசம் அனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். அதன் காரணமாக ராமர் காட்டுக்கு மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் புறப்பட்டார். அங்கு, இலங்கை மன்னன் ராவணனால் சீதை சிறையெடுக்கப்பட்டாள்.
பின் அனுமன் உள்ளிட்ட வானரங்களின் உதவியுடன் ராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். மீண்டும் பட்டாபிஷேகத்திற்காக அயோத்தி புறப்பட்ட ராமர், பெருமுடிவாக்கம் என்னும் இத்தலத்தின் வழியாகச் சென்றார். அதன் அடிப்படையில் ராமருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டது. பெருமுடி என்பதற்கு "கிரீடம்' என்பது பொருள். முற்காலத்தில் இத்தலம் "மகுடாபிஷேகம்' என வழங்கப்பட்டு வந்தது. 1897ல் ரங்கசாமி அய்யங்காரால் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது.
ஏழு புனர்பூசம்: கருவறையில் ராமர், சீதாதேவி, லட்சுமணர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். கோதண்டராமர் என்பது அவரது திருநாமம். திருமணத்தடை நீங்கவும், நோய் நீங்கி ஆரோக்கியம் மேம்படவும் ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர்பூசத்தன்று, ஏழு மாதம் தொடர்ந்து தரிசிப்பதற்காக பக்தர்கள் வருகிறார்கள்.
திருப்பணி: 43 அடி உயரத்தில், மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுர திருப்பணி 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடக்கிறது.
திருவிழா: ஸ்ரீ ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பூஜை.
இருப்பிடம்: சென்னை- பெரிய பாளையம் சாலையில் உள்ள கன்னிகைப்பேரில் இருந்து 4 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7.00- 9.00, மாலை 4.30- மாலை 6.00.
போன்: 94451 11371, 044- 2762 9099.
-தினமலர்
Re: ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்!
ஏழுமுறை புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பவர்களின் தோஷம் போக்கி மணவாழ்வு அளிக்கும் கோதண்டராமர்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்!
நன்றி...லெட்சுமணன் wrote:ஏழுமுறை புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பவர்களின் தோஷம் போக்கி மணவாழ்வு அளிக்கும் கோதண்டராமர்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum