Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பேசுவதை நிறுத்து ஞானம் பெருகும் தியானம்
Page 1 of 1
பேசுவதை நிறுத்து ஞானம் பெருகும் தியானம்
தியானம் என்றால் என்ன?
மன இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; தன்னையறிதல், புலன்களை நெறிப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்தல்; இறைவனை, இயற்கையை அறிய உதவி செய்யும்; நமது அறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைக்கும்.
இதுபோல் பல கூறலாம். பொதுவாக ஒன்றின் மீது முழுமையாக ஈடுபாடு கொள்வது. மன அலைச்சுழல் வேகத்தை தேவைப்படும்போது தேவையான அளவுக்கு குறைத்துக் கொள்வது. அவசரமான உலகில் நம் மனதுக்குள் ஏராளமான கருத்து மோதல்கள் உருவாகும். தியானம் இதை சரி செய்து மனம் அமைதி நிலைக்குச் செல்ல உதவுகிறது. தியானம் செய்வதால் நம் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அழகான ஓர் உதாரணம் மூலம் அறியலாம். தெளிந்த நீரில் அடியில் உள்ளவைகளைப் பார்ப்பதற்கு ஒப்பானது. தியானம், மனதின் அலைச்சுழல் வேகத்தைக் குறைக்கிறது. எனவே நம் குறிக்கோளை அடையாளம் காணலாம்.
பலன்கள்
சாதாரணமாக விநாடிக்கு 20 முதல் 30 முறை நம் (மூளை) மனமானது சுழல்கிறது. தியானம் செய்வதால் இந்த சுழல் வேகம் குறைகிறது. வேகம் எந்த அளவு குறைகிறதோ, அந்த அளவு நல்ல எண்ணங்கள் வான்வெளியிலிருந்த நம்மை அடைகிறது. திடீரென கோபப்படும்போது அலைச்சுழல் வேகம் அதிகரிக்கும். இது வரை பேசாத சொற்களை பேசுவர்; செய்யாத செயல்களைச் செய்வர். அந்த அலைச்சுழல் வேகத்தில் வாழ்ந்து மறைந்தோர் எண்ண அலைகள் நம்மை அடைவதே இதற்குக் காரணம். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சீர்குலையும் மூளை மற்றும் உடல் செல்கள் தியானத்தால் விரைவில் புதுப்பிக்கப்படுகின்றன.
புலன் வரை எல்லை கட்டிய கவர்ச்சியில் உண்டாகும் மயக்க நிலை நீங்கும்; அறிவில் தெளிவு உண்டாகும். ஒன்றைச் செய்தபின் வருந்த வேண்டியதில்லை. பொறுப்புணர்ந்து செயல்படும் பண்பு அதிகரிக்கும். முழு மன ஈடுபாடும், விழிப்பு நிலையும் அதிகரிக்கிறது. தீய குணங்கள், பாவச் செயல் பதிவுகள் நீங்குகின்றன. மனம் நுண்ணிய நிலையை அடைவதால், பிறரது மனதை ஊடுருவி அவரது எண்ணங்களை எளிதாய் உணரும் ஆற்றல் பெறலாம். மனம் தளராமல் செயல்களில் தொடர்ந்து வரலாறு, புராணங்கள், இதிகாசங்கள் முதற்கொண்ட இன்றைய நாகரிக உலகம் வரை, தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறவர்களே வாழ்வில் வெற்றிடைய முடிகிறது என்பதைப் பறைசாட்டுகின்றன.
எந்தவிதமான மாறுபட்ட எண்ணமும் இல்லாமல், ஒரே நினைவுடன் விழிப்பு நிலையில் செயல்பட்டே அர்ச்சுனன் வில்லுக்கு சிறந்த வீரானார். தியானத்தில் ஈடுபட்டவர்களே விஞ்ஞானிகளாக வலம் வருகின்றனர். எந்த ஒரு சவலான செயலையும் செய்ய தியானம் செய்த பின்றே செய்து வெற்றி பெற்றனர்/பெறுகின்றனர்.
உலகை வசமாக்கும் தியானம்
பிறரால் பெரும்பான்மையாக விரும்பப்படும் நிலைதான் எல்லோரிடமும் சுமுகமாய் நடப்பது. சாதாரணமான நிலையில் நமக்கு நெருக்கமானவர்களிடம், மட்டுமே சுமுகமாய் நடப்போம். தியானம் செய்த பின், எல்லோரையும் சமமாய் பாவிக்கத் தோன்றும். உலகையே வசமாக்கும் தாரக மந்திரம் பிறருக்கு உதவுதல். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் உதவமாட்டோம். ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னிடமுள்ள எல்லா வளங்களாலும், பிறருக்கு உதவி செய்வதால் மட்டுமே உலகை வச மாக்கலாம். இதற்கு தியானம் உதவுகிறது. இது போன்ற பல பலன்களைத் தருவது தியானம்.
தன்னம்பிக்கை
ஒன்று தன்னால் முடியும் என்ற திடமான, உறுதியான எண்ணம் தான் தன்னம்பிக்கை. பேச்சு, செயல்கள் மூலமே மற்றவர்களின் தன்னம்பிக்கையை அறிய முடியும். வளர்ப்பு முறை, பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் ஆகியன தன்னம்பிக்கையை நிர்ணயிககும் காரணிகள்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்”
என்றார் பொய்யாமொழிப்புலவர். அசாதாரணத் துணிச்சல், அறிவார்ந்த செயல்பாடு ஆகியன வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
தியானம் செய்வோம்; திருப்தியாய் வாழ்வோம்!
தியானம் என்பது ஒரு பயிற்சி என நாம் நினைதுக் கொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அது பயிற்சி தான். பின் அதுவே வாழ்க்கையாக வேண்டும். பள்ளியில் சிறு வயதில் படித்தவைகள் (வாய்ப்பாடு, சில பார்முலாக்கள்) இன்றும் நம் நினைவில் நிற்கிறதே. நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் முதலியவை ஆரம்பத்தில் பழகும் போது பயிற்சிதான். பின் எப்போது வேண்டுமானாலும் எந்த வயதிலும் அவைகளைச செய்கிறோமே. அதுபோல் தான் தியானமும்.
ஏதாவதொன்றின் மீது நம் எண்ணங்களை (மனதை) செலுத்தி, ஒருமுகப்பாட்டுடன், விழிப்பு நிலையில் இருபதே தியானம். இது போல் செய்வதால் நம் ஆற்றல் அதிகரிக்கிறது. அறிவை அறிய முடிகிறது. அத்தியாவசியத் தேவை என்ன எனத் தெரிகிறது. அவைகளை அடைவதற்கான வழி முறைகளை நம் மனமே தெளிவாய் அறிந்து கொள்கிறது. காரணம் Tuning of Mind: மன அலைச்சுழல் வேகத்தைக் குறைத்தல் என்ற ஒரு செயல் தியானத்தால் நடைபெறுகிறது. அதனால் வான்காந்தக் களத்திலே (Cosmic Energy) கலந்து நிறைந்துள்ள எண்ண அலைகள் நமது மன வேகத்துக்கு ஏற்றவாறு நமக்கு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்கள் சாதனைகளை உதாரணமாய் கூறலாம். நல்ல முழு அளவில் உள்ள பலரால் செய்ய முடியாத சாதனைகளை எவ்வாறு அவர்களால் செய்யமுடிகிறது.
அவர்களது திண்ணிய எண்ணம். அதையே சதா நினைத்து, அதைச் செயல்படுத முழு முனைப்புடன், விழிப்பு நிலையில், கவனச் சிதறலின்றி திட்டமிடுவதால்தான் வெற்றி பெறமுடிகிறது. நெருப்பு பிடித்துக் கொள்ளும் வரை போராட்டம்தான். அதன் பிறகு அது சுற்றிலுமுள்ள காற்றிலிருந்து ஒக்ஸிஜனை எடுத்துக் கொண்டு எரிவதுபோல, நம் மனமானது ஆற்றலை வெளியிலிருந்து பெற்று தனது நம்பிக்கையாக தன்னம்பிக்கையாக மாற்றிக்கொள்கிறது.
என்ன பேசினாலும், எச்செயல் செய்தாலும் அதன் விளைவை அறிந்து செய்வதுதான் தியானத்தின் பலன். எப்போதும் விழிப்புநிலையில் இருப்பதே தியானத்தின் வழி. நமக்குப் பின்னால் வருபவர்களைகூட அறிந்து கொள்ளும் திறமை வந்துவிடும்.
நம்மிடமுள்ள குணங்களை அறிந்து கொள்வோம்; மனதை ஒருநிலைப்படுத்தும் எளிய தியானத்தைச் செய்வோம்; நம் மன ஆற்றலை அதகரித்துக் கொள்வோம். பெரியோர்களிடம் ஆலோசனைகள் பெறுவோம். இப்படி நம் வாழ்க்கையை நடத்தினால், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் தன்னம்பிக்கையாளராக, சொல்வதைச் செய்யும் திறமையுடன், செய்வதை மட்டும் சொல்லும் விழிப்பு நிலையுடன் வாழலாம். வாழ்வோம். மகிழ்வோம்.
வாழ்க வளமுடன்!
மன இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; தன்னையறிதல், புலன்களை நெறிப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்தல்; இறைவனை, இயற்கையை அறிய உதவி செய்யும்; நமது அறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைக்கும்.
இதுபோல் பல கூறலாம். பொதுவாக ஒன்றின் மீது முழுமையாக ஈடுபாடு கொள்வது. மன அலைச்சுழல் வேகத்தை தேவைப்படும்போது தேவையான அளவுக்கு குறைத்துக் கொள்வது. அவசரமான உலகில் நம் மனதுக்குள் ஏராளமான கருத்து மோதல்கள் உருவாகும். தியானம் இதை சரி செய்து மனம் அமைதி நிலைக்குச் செல்ல உதவுகிறது. தியானம் செய்வதால் நம் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அழகான ஓர் உதாரணம் மூலம் அறியலாம். தெளிந்த நீரில் அடியில் உள்ளவைகளைப் பார்ப்பதற்கு ஒப்பானது. தியானம், மனதின் அலைச்சுழல் வேகத்தைக் குறைக்கிறது. எனவே நம் குறிக்கோளை அடையாளம் காணலாம்.
பலன்கள்
சாதாரணமாக விநாடிக்கு 20 முதல் 30 முறை நம் (மூளை) மனமானது சுழல்கிறது. தியானம் செய்வதால் இந்த சுழல் வேகம் குறைகிறது. வேகம் எந்த அளவு குறைகிறதோ, அந்த அளவு நல்ல எண்ணங்கள் வான்வெளியிலிருந்த நம்மை அடைகிறது. திடீரென கோபப்படும்போது அலைச்சுழல் வேகம் அதிகரிக்கும். இது வரை பேசாத சொற்களை பேசுவர்; செய்யாத செயல்களைச் செய்வர். அந்த அலைச்சுழல் வேகத்தில் வாழ்ந்து மறைந்தோர் எண்ண அலைகள் நம்மை அடைவதே இதற்குக் காரணம். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சீர்குலையும் மூளை மற்றும் உடல் செல்கள் தியானத்தால் விரைவில் புதுப்பிக்கப்படுகின்றன.
புலன் வரை எல்லை கட்டிய கவர்ச்சியில் உண்டாகும் மயக்க நிலை நீங்கும்; அறிவில் தெளிவு உண்டாகும். ஒன்றைச் செய்தபின் வருந்த வேண்டியதில்லை. பொறுப்புணர்ந்து செயல்படும் பண்பு அதிகரிக்கும். முழு மன ஈடுபாடும், விழிப்பு நிலையும் அதிகரிக்கிறது. தீய குணங்கள், பாவச் செயல் பதிவுகள் நீங்குகின்றன. மனம் நுண்ணிய நிலையை அடைவதால், பிறரது மனதை ஊடுருவி அவரது எண்ணங்களை எளிதாய் உணரும் ஆற்றல் பெறலாம். மனம் தளராமல் செயல்களில் தொடர்ந்து வரலாறு, புராணங்கள், இதிகாசங்கள் முதற்கொண்ட இன்றைய நாகரிக உலகம் வரை, தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறவர்களே வாழ்வில் வெற்றிடைய முடிகிறது என்பதைப் பறைசாட்டுகின்றன.
எந்தவிதமான மாறுபட்ட எண்ணமும் இல்லாமல், ஒரே நினைவுடன் விழிப்பு நிலையில் செயல்பட்டே அர்ச்சுனன் வில்லுக்கு சிறந்த வீரானார். தியானத்தில் ஈடுபட்டவர்களே விஞ்ஞானிகளாக வலம் வருகின்றனர். எந்த ஒரு சவலான செயலையும் செய்ய தியானம் செய்த பின்றே செய்து வெற்றி பெற்றனர்/பெறுகின்றனர்.
உலகை வசமாக்கும் தியானம்
பிறரால் பெரும்பான்மையாக விரும்பப்படும் நிலைதான் எல்லோரிடமும் சுமுகமாய் நடப்பது. சாதாரணமான நிலையில் நமக்கு நெருக்கமானவர்களிடம், மட்டுமே சுமுகமாய் நடப்போம். தியானம் செய்த பின், எல்லோரையும் சமமாய் பாவிக்கத் தோன்றும். உலகையே வசமாக்கும் தாரக மந்திரம் பிறருக்கு உதவுதல். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் உதவமாட்டோம். ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னிடமுள்ள எல்லா வளங்களாலும், பிறருக்கு உதவி செய்வதால் மட்டுமே உலகை வச மாக்கலாம். இதற்கு தியானம் உதவுகிறது. இது போன்ற பல பலன்களைத் தருவது தியானம்.
தன்னம்பிக்கை
ஒன்று தன்னால் முடியும் என்ற திடமான, உறுதியான எண்ணம் தான் தன்னம்பிக்கை. பேச்சு, செயல்கள் மூலமே மற்றவர்களின் தன்னம்பிக்கையை அறிய முடியும். வளர்ப்பு முறை, பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் ஆகியன தன்னம்பிக்கையை நிர்ணயிககும் காரணிகள்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்”
என்றார் பொய்யாமொழிப்புலவர். அசாதாரணத் துணிச்சல், அறிவார்ந்த செயல்பாடு ஆகியன வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
தியானம் செய்வோம்; திருப்தியாய் வாழ்வோம்!
தியானம் என்பது ஒரு பயிற்சி என நாம் நினைதுக் கொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அது பயிற்சி தான். பின் அதுவே வாழ்க்கையாக வேண்டும். பள்ளியில் சிறு வயதில் படித்தவைகள் (வாய்ப்பாடு, சில பார்முலாக்கள்) இன்றும் நம் நினைவில் நிற்கிறதே. நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் முதலியவை ஆரம்பத்தில் பழகும் போது பயிற்சிதான். பின் எப்போது வேண்டுமானாலும் எந்த வயதிலும் அவைகளைச செய்கிறோமே. அதுபோல் தான் தியானமும்.
ஏதாவதொன்றின் மீது நம் எண்ணங்களை (மனதை) செலுத்தி, ஒருமுகப்பாட்டுடன், விழிப்பு நிலையில் இருபதே தியானம். இது போல் செய்வதால் நம் ஆற்றல் அதிகரிக்கிறது. அறிவை அறிய முடிகிறது. அத்தியாவசியத் தேவை என்ன எனத் தெரிகிறது. அவைகளை அடைவதற்கான வழி முறைகளை நம் மனமே தெளிவாய் அறிந்து கொள்கிறது. காரணம் Tuning of Mind: மன அலைச்சுழல் வேகத்தைக் குறைத்தல் என்ற ஒரு செயல் தியானத்தால் நடைபெறுகிறது. அதனால் வான்காந்தக் களத்திலே (Cosmic Energy) கலந்து நிறைந்துள்ள எண்ண அலைகள் நமது மன வேகத்துக்கு ஏற்றவாறு நமக்கு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்கள் சாதனைகளை உதாரணமாய் கூறலாம். நல்ல முழு அளவில் உள்ள பலரால் செய்ய முடியாத சாதனைகளை எவ்வாறு அவர்களால் செய்யமுடிகிறது.
அவர்களது திண்ணிய எண்ணம். அதையே சதா நினைத்து, அதைச் செயல்படுத முழு முனைப்புடன், விழிப்பு நிலையில், கவனச் சிதறலின்றி திட்டமிடுவதால்தான் வெற்றி பெறமுடிகிறது. நெருப்பு பிடித்துக் கொள்ளும் வரை போராட்டம்தான். அதன் பிறகு அது சுற்றிலுமுள்ள காற்றிலிருந்து ஒக்ஸிஜனை எடுத்துக் கொண்டு எரிவதுபோல, நம் மனமானது ஆற்றலை வெளியிலிருந்து பெற்று தனது நம்பிக்கையாக தன்னம்பிக்கையாக மாற்றிக்கொள்கிறது.
என்ன பேசினாலும், எச்செயல் செய்தாலும் அதன் விளைவை அறிந்து செய்வதுதான் தியானத்தின் பலன். எப்போதும் விழிப்புநிலையில் இருப்பதே தியானத்தின் வழி. நமக்குப் பின்னால் வருபவர்களைகூட அறிந்து கொள்ளும் திறமை வந்துவிடும்.
நம்மிடமுள்ள குணங்களை அறிந்து கொள்வோம்; மனதை ஒருநிலைப்படுத்தும் எளிய தியானத்தைச் செய்வோம்; நம் மன ஆற்றலை அதகரித்துக் கொள்வோம். பெரியோர்களிடம் ஆலோசனைகள் பெறுவோம். இப்படி நம் வாழ்க்கையை நடத்தினால், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் தன்னம்பிக்கையாளராக, சொல்வதைச் செய்யும் திறமையுடன், செய்வதை மட்டும் சொல்லும் விழிப்பு நிலையுடன் வாழலாம். வாழ்வோம். மகிழ்வோம்.
வாழ்க வளமுடன்!
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum