இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நல்ல தங்காள்-கிராமத்து சாமி

Go down

நல்ல தங்காள்-கிராமத்து சாமி Empty நல்ல தங்காள்-கிராமத்து சாமி

Post by ஆனந்தபைரவர் Sun Oct 03, 2010 2:40 pm

தென் தமிழக மக்கள் இன்றும் நினைவில் வைத்து போற்றி வழிபடும் குறும்சாமிகளில் ஒன்று நல்லதங்காள் நல்ல தங்காள் என்ற நங்கை வறுமையின் குறியீடாக துயரத்தின் அடையாளமாக இன்றும் எங்கள் பகுதி மக்களால் சுட்டி காட்டப்படுகிறாள்.
வாழ்ந்துகெட்டு மிகுந்த வறுமை நிலைக்கு ஆளாகிவிட்ட பெண்ணைப் பார்த்து எங்கள் பகுதியில் அட பாதவத்தி மகளே நல்ல தங்காள் மாதிரி ஆயிட்டியே என்று புலம்புகிறார்கள்.

நல்ல தங்காளின் சோகத்தை நாடறிந்த கதைதான் ஏற்கனவே நல்ல தங்காள் கும்பிப்பாடல் என்ற சிறுநூல் ஒன்று நல்ல தங்காளின் வரலாற்றை பாடலாக பதிவு செய்துள்ளது நல்லதங்காள் கதைப்பாடல் ஒன்றும் மலிவு விலை பதிப்பாக வெளி வந்துள்ளது குறுஞ்சாமிகளை வரிசைபடுத்தும் போது நாம் நல்லதங்காளை விட்டுவிட முடியாது அதே போல் அவளின் அண்ணன் நல்லதம்பியும் ஒரு குறுஞ்சாமியாக விளங்குகிறான் அவனுடைய வரலாறும் அதே கதை பாடலில் சேர்ந்துள்ளது நல்ல தங்காளுக்கும் அவன் அண்ணன் நல்ல தம்பிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சனாபுரம் என்ற ஊரில் கோயில் உள்ளது அக்கோயிலின் நல்லதங்காள் சிலையும் நல்லதம்பி சிலையும் உள்ளது அர்ச்சுனாநதி பாய்வதால் இவ்வூர் அச்சனாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

வத்தராயிப்பு என்ற பெரூரின் அருகில் இச்சிற்றூர் உள்ளது கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அர்ச்சனாபுரம் உள்ளது சுற்றிலும் நான்கு புறதும் வயலால் சூழப்பட்ட நிலப்பகுதியின் நடுவில் பசுமையான சூழலில் நல்ல தங்காளுக்கு இவ்வூர் மக்கள் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
அக்கோயிலில் நல்ல தங்காளுக்கு மட்டுமின்றி அவள் கிணற்றில் போற்றுக் கொன்ற ஏழு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன நல்லதங்காள் விழுந்து இறந்த கிணறு என்று அப்பகுதிமக்களால் நம்மப்படும் கிணறு ஒன்றும் இடிந்த நிலையிலும் நீர் நிறைந்து காணப்படுகின்றன.

அர்ச்சானாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை (தேவர்)சேர்ந்த மக்கள் மட்டுமே இன்றும் வசிக்கின்றார்கள் மற்ற ஜாதியையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அவ்வூருக்கு குடி போனால் அம்மா என்று வழங்கப்படும் நல்லதங்காள் என்ற குறுஞ்சாமி புதிதாக அவ்வூரில் குடியேறுகின்றவர்களை தொந்தரவு செய்து விரட்டி விடுவாள் என்ற வினோதமன நம்பிக்கையும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
இனி நல்லதங்காளின் கதையைப் பார்ப்போம் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்தராயிருப்புதான் நல்லதங்காள் பிறந்த ஊர் இவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான் அவன் பெயர் நல்லதம்பி
மிகுந்த செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காள் சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்துவிடுகிறாள் அவளின் அண்ணன் நல்லதம்பிதான் நல்லதங்காளை வளர்த்து ஆளாக்குகிறான்.
உரிய வயதும் வந்தது நல்லதங்காளை மானாமதுரையை சேர்ந்த காசிராஜன் என்பவனுக்கு மணமுடித்து கொடுக்கிறான் அண்ணன் நல்லதம்பி.

காசிராஜனும் ஒரளவுக்கு வசதி வாய்ப்பான குடும்பத்தை சேர்ந்தவன்தான் நல்லதங்காளின் அண்ணனும் தங்கைக்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளை எல்லாம் முறையாக செய்கிறான்.
தங்கைக்கு திருமணன் முடிந்த பிறகு நல்லதம்பி அதே ஊரைச் சேர்ந்த மூளியலங்காரி என்பவளையும் திருமணம் செய்து கொள்கிறான் மூளியலங்காரி பிறவியிலேயே மிக கொடூரமான குணம் படைத்தவளாக திகழ்கிறாள் யாருக்கும் எதையும் ஈயாத கஞ்சப் பிசுநாரியாக இருக்கிறாள்.
வந்து வாய்த்தவள் தீய குணம் கொண்டவள் என்று தெரிந்தும் தொட்டு தாலிகட்டி விட்ட பாவத்திற்காக மூளியலங்காரியிடம் சேர்ந்து குடும்பம் நடத்துகிறான் நல்லதம்பி நல்லதம்பி நல்லதங்காள் மூளியலங்காரி போன்ற பெயர்களே அவர்களின் குணங்களை காட்டுவதாக உள்ளது.

காலம் செல்கிறது நல்லதங்காள் ஏழு பிள்ளைகளை வரிசையாக பெற்றெடுக்கின்றாள் காசிராஜனின் கவனகுறைவினாலும் ஊதாரித்தனத்தினாலும் அதிகமாக பிள்ளைகள் பிறந்தாலும் அவன் தன் சொத்து சுகங்களை விற்று குடும்பம் நடத்துகின்றான்.
இந்த நேரத்தில் மிக கடுமையான பஞ்சம் வேற வருகிறது எனவே விவசாயத்தில் இருந்து எந்தவிதமான வருமானமும் வரவில்லை காசிராஜனும் நல்லதங்காளும் வறுமையின் பிடிக்குள் சிக்குகின்றார்கள் ஏழு பிள்ளைகளையும் பசியோடு வைத்துக் கொண்டு இனி இந்த ஊரில் வாழ முடியாது என்ற நிலை வந்ததும் தன் அண்ணனின் உதவியை நாடலாம் என்று நினைக்கிறாள் நல்லதங்காள்.

அவன் கணவன் காசிராஜனும் ஊரில் வாழும் உன் அண்ணனிடம் சென்று ஏதாவது உதவிகள் பெற்று வா என்று சொல்லி நல்லதங்காளையும் ஏழு பிள்ளைகளையும் அவள் அண்ண்ன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.
நல்லதங்காள் தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தன் அண்ணனின் ஊரான வத்தராயிருப்புக்கு மானா மதுரையில் இருந்து நடந்தே வருகிறாள்.
பல நாட்கள் பசியோடும் பட்டினியோடும் நல்லதங்காள் தன் பிள்ளைகளுடன் வருவதை ஊரின் எல்லையில் பார்த்த ஒரு பெண் மூளியலங்காரியிடம் போய் உன் நாத்தனார் தன் ஏழு பிள்ளைகளையும் கூட்டுகொண்டு உன் வீட்டை பார்த்து வருகிறாள் என்று சொன்னாள்.
உடனே மூளியலங்காரி தன் கழுத்திலு காதிலும் மூக்கிலும் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தானும் வறுமையில் வாழ்வதைபோன்று தோற்றம் கொண்டாள் செழுமையின் அடையாளமாக தெரியும் பொருட்களை எல்லாம் மாற்றி வைத்தாள்.

நல்லதங்காள் மூளியலங்காரி வீட்டிற்கும் சென்றதும் வா என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இங்கு ஏன் வந்தாய் என்பதுபோல மூச்சியைஉம்மென்று வைத்துகொண்டு தலையை ஒரு வெட்டு வெட்டினாள்.
அண்ணிகாரியின் முகத்தை பார்த்ததுமே நான் ஏன் இங்கு வந்தேன் என்று நினைத்தாள் நல்லதங்காள் என்றாலும் தான் கொண்ட வறுமையின் காரணமாக அண்ணியின் மூளியலங்காரி தன்னை அவமதித்தையும் பொருட்படுத்தாமல் அண்ணி நானும் என் பிள்ளைகளும் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகி விட்டது வயிற்று பசி தாங்க முடியவில்லை முதலில் என் பிள்ளைகளின் பசியமத்தங்கள் என்றால் கொஞ்சுகிற குரலில்.

மூளியலங்காரி காட்டிற்கு சென்றிருக்கும் நம் கணவர் வந்தால் தன் தங்கையும் தங்கை பிள்ளைகளையும் பார்த்து பரிதாபபட்டு நம் விட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிடுவார் எனவே நாத்துனரான நல்லதங்காளை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்து காச்சி குடிக்க ஒரு மண் சட்டியும் விறகு எரிக்க ஒரு பச்சை வாழை இழையும் கொடுத்து இப்போதைக்கு என்னிடம் உள்ளது இதுதான் உன் அண்ணன் வெளீயூருக்கு போயிருக்கிறார் வருவதற்கு நாளாகும் இங்கு எங்கள் வீட்டிலும் வறுமைதான் எவனே நான் கொடுத்ததை வாங்கி கொண்டு நீ இப்பவே இங்கிருந்து புறப்படு என்றாள்.
ஏற்கனவே மூளியலங்காரியான தன் அண்ணியை பற்றி நல்ல தங்காளுக்கு தெரியும் எனவே அவளிடம் பேசியோ வாதாடியோ பிரோஜனம் இல்லை என்று நினைத்த நல்லதங்காள் தன் விதியை நினைத்து நொந்து கொண்டு பசியோடு இருக்கும் தன் பிள்ளைகளை அழைத்து கொண்டு அண்ணியார் கொடுத்த ஒட்டை சட்டியையும் பச்ச வாழை மட்டைகளையும் நனைந்த கோப்பையையும் எடுத்து கொண்டு அங்கிருந்து புறபட்டு கால் போன போக்கில் நடந்து ஒரு காட்டு பகுதியை அடைந்தாள்.
அங்கு மரத்தடியில் மூன்று கல்லை கூட்டி அதன் மேல் ஒட்டை சட்டியை வைத்து நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த ஒட்டை சட்டி ஒழுகாமல் இருக்கட்டும் என்று சொல்லி ஒட்டை சட்டியில் தண்ணிர் ஊற்றினாள் ஒட்டை சட்டியில் ஊற்றியட் தண்ணிர் ஒழுகவில்லை.

அதன் பிறகு அடுப்பில் பச்சை வாழை மட்டையை வைத்து நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த பச்சை வாழை மட்டையில் தீப்பிடிக்கட்டும் என்றால் நல்லதங்காளின் வாக்கு பலித்தது பச்சை மட்டையில் தீப்பிடித்து எரிந்தது அதன் பிறகு நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த கேப்பை காய்ந்து மாவாகவும் ஆகட்டும் என்றால் நனைந்த கேள்வரகு கேப்பை ஆகியது.
பசியோடு இருக்கும் தன் முழந்தைகளுக்கு அந்த கேப்பைகளியை பங்கு வைத்து கொடுத்த் பசியமர்த்தி காட்டுவழியே நடத்தி கூட்டி கொண்டு போன நல்லதங்காள் தான் புகுந்த வீட்டிலும் வறுமை சூழ்ந்துவிட்டது பிறந்த விட்டிலும் ஆதரவு இல்லை
இனிமேலும் இந்த பூமியில் நாம் வாழ்வதில் அர்த்தம் இல்லை நம் பிள்ளைகளையும் வறுமையோடு பிச்சை எடுத்து வாழ்வதற்கு இந்த பூமியில் அவர்களை விட்டு செல்ல கூடாது என்று நினைத்த நல்லதங்கால் சற்று தொலைவில் இருந்த கிணற்றீல் நீச்சல் தெரியாத தன் ஏழு பிள்ளைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு விட்டு தானும் கிணற்றில் விழுந்து உயிரை விட்டாள்.

ஒட்டை பானையில் உலை வைத்து பச்சை வாழை மட்டையைஎரிய வைத்து தன் தெய்வீக தன்மையை மெய்பித்துவிட்டு இறந்து விட்ட் நல்லதங்காளும் அவளின் ஏழு பிள்ளைகளும் இன்று சிறு தெய்விகங்களாக வணங்கபடுகின்றன.
நல்லதங்காள் கிணற்றில் விழுந்து முன்புதான் உடுத்தியிருந்த பச்சைநிறச் சேலையை அவிழ்த்து கிணற்றின் பக்கத்தில் வைத்துவிட்டு அதன் மேல்தன் கழுத்தில் கிடந்த தாலி கொடியையும் கழற்றி போட்டு விட்டுதான் கிணற்றிற்குள் விழுந்து தானும் இறந்தாளி இறக்கும் முன்பு பச்சை நிற சேலையும் தாலியும் அண்ணன் கைக்கு போ சேர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் கிணற்றிகுள் குதித்து தற்கொலை செய்துகொண்டாள் என்று நம்பபடுகிறது.
அதன்படி அந்த பச்சை நிற சேலையும் நல்லதங்காளின் தாலிகொடியும் அவன் அண்ணனின் கைக்கு சென்றது அதனால் தான் நடந்த்தெல்லாம் உண்மை என்று நம்புகிறான்.

அன்று நல்ல தங்காள் அனுப்பி வைத்த பச்சை சேலையை அண்ணன் நல்லதம்பி தன் தங்கை நல்லதங்காளின் உடம்பில் போர்த்தி அடக்கம் செய்தான் என்கிறது நல்லதங்காள் கதைபாடல்.

அண்ணன் தங்கை பாசத்தின் அடையாளமாக நல்லதங்காள் நல்லதம்பி உறவு இன்றும் கிராமத்து மக்களால் போற்றபடுகிறது
நல்லதங்காள் இறந்த ஆண்டு ஈஸ்வர ஆண்டும் என்றும் 60ஆண்டுகளுக்கு பின்பு ஈஸ்வர ஆண்டு வரும் இன்றும் நம்புகிறவர்கள் நல்லதங்காளுக்கு அவள் அண்ணன் நல்லதம்பிக்கும் இடையேஉள்ள பச்சை சேலையின் உறவை பின்பற்றிதான் இந்த ஈஸ்வர ஆண்டான 1998 ம் ஆண்டு அண்ணன்மார்கள் தங்கை மார்களுக்கு பச்சை சேலை எடுத்துக் கொடுத்தார்கள்


நன்றி செம்புலம் வலைத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum