இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஈகோவை விரட்டி, இதயத்தை வலுவாக்கும் தங்கமலர்- தாமரைப்பூ! - சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா

Go down

ஈகோவை விரட்டி, இதயத்தை வலுவாக்கும் தங்கமலர்- தாமரைப்பூ! - சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா Empty ஈகோவை விரட்டி, இதயத்தை வலுவாக்கும் தங்கமலர்- தாமரைப்பூ! - சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா

Post by ஆனந்தபைரவர் Fri Feb 18, 2011 10:21 pm

ஈகோவை விரட்டி, இதயத்தை வலுவாக்கும் தங்கமலர்- தாமரைப்பூ! - சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா P041

பிறவி- அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அது ஒரு பெருங்கடல் என்றாலும், ஒருநாள் நாம் கரை சேர இயலும். அதற்காக நாம் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கி, அடுத்த பிறவி யைத் தொடர ஆரம்பித்துவிடுவோம். பிறவாமை என்பதே இறையம்சம் பொருந்தியது. பிறவாமை என்பதே இறையொடு கலத்தல் என்பதாம். மானுட ஆன்மா பிறவிச் சூழலில் சுழன்று சுழன்று, பிற ஆன்மாக்களுக்கு படிப்பினையாகி, கடைசியில் பாடமாகிறது.

எனவே, நம் எல்லாருடைய எண்ணமும் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவதே. ஆனால், அது யாருக்கு எளிதில் கிட்டும் என்பதை இறையே தீர்மானிக்கும்.

இங்கு உங்களுக்காக ஒரு கதை சொல்ல விழைகிறேன். ஒரு காலத்தில் பார்வதியுடன் சிவ பெருமான் எழுந்தருளியிருந்தார். அப்போது உமாதேவியார் சிவபெருமானின் தத்துவ நிலையை தனக்கு விளக்க வேண்டினாள். அப்பொழுது சிவன், ""தேவி, நாம் எந்த நியதிகளுக்கும் உட்பட்டவர்களல்ல. நமக்கு பெயர் கிடையாது. தனிப்பட்ட குணமோ செயலோ உருவமோ எதுவுமே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறோம். நம்மை இயக்குவது அந்த மகாசக்திதான்'' என்றார்.

இதனைக் கேட்ட பார்வதிதேவிக்கு பெரும் மகிழ்ச்சி. "சிவபெருமானே சக்தியால்தான் சகலமும் இயங்குகிறது' என்கிறாரே என நினைத்து, "சக்தியின்றி சிவனில்லை' என்று முடிவு செய்தாள். சக்தி- சிவனை விட்டுத் தனித்து நின்றாள். அதன் காரணமாக இந்த உலகம் இயக்கமின்றித் தடுமாறியது.
இதைக் கண்ணுற்ற அம்பிகை சிவனை வணங்கி, ""எம்பெருமானே, எல்லாம் நீரே என உணரப் பெற்றேன். கருணை புரிந்தருள்க'' என வேண்ட, அப்பொழுது சிவபெருமான் பார்வதிதேவியைப் பார்த்து, ""உலகம் இயக்கமற்று நின்ற பாவம் உன்னையே சாரும். அந்த பாவம் நீங்க யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்'' என்று கட்டளையிட்டார். பார்வதிதேவியாரும் சங்கு வடிவில் தாமரை மலர்மீது அமர்ந்து யமுனை நதியில் தவமிருந்து கொண்டிருந்தாள்.

அத்தருணத்தில், ஒரு மகாமக நாளில் பிரஜாதிபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். உடனே சங்கு பெண்ணுருவாய் மாறியது. சங்கு வடிவில் பார்வதிதேவியாரே வந்துள்ளாள் என்பதை உணர்ந்த பிரஜாதிபதி, அம்பிகைக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. அம்பிகை மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசி மகம் பெருமை பெறுகிறது.

தன்முனைப்பு நீங்கி பிறவிப் பெருங்கடலில் பிறவாமை பெற இயலாவிட்டாலும், வரும் மாசி மகத்தில் தேவி உறைந்த தாமரையை மருந்தாக்கி நல்ல உடல்நலம் பெற முனைவோம்.

இதயத்தை வலுவாக்கும் தாமரை...

இயற்கை நமக்களித்திருக்கும் மலர்கள் எல்லாமே கவர்ச்சி யையும் அழகையும் மென்மை யையும் தன்னகத்தே கொண்டுள்ளன. சித்தம் வளர்த்த சித்தர்கள் மலர் களைக் கொண்டு நிறைய மருந்துகளைச் செய்துள் ளனர். மலர்கள் மன மகிழ்ச்சிக்கு வித்திடும் இயற்கையின் அற்புதமாகும்.

ஆணவம், அகங்காரம்- அதாவது தன்முனைப்பு எனப்படும் "ஈகோ'- இவையே கொடிய நோய்களுக்கான வாசல் என்பதை மறந்துவிடாதீர்கள். நமது உடம்பின் பிரதான உறுப்பு களான மூளை, கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை நோயுறச் செய்வது இந்த தன்முனைப்பே யாகும்.

ஒருவருடைய தன்முனைப்பு அவருடைய பிறவிச் சூழல் மற்றும் நடைமுறைப் பழக் கங்களாலேயே மிகுதியாக்கப்படுகிறது.

இதனால் பல்வேறு வியாதிகள் உண்டாகி விடுகின்றன. இங்கு, இதயம் சார்ந்த நோய்களுக்கு தாமரைப் பூ எப்படி மருந்தாகிறது என்பதை சற்று காண்போம்.

தாமரைப்பூ- 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 100 கிராம் எடுத்து திப்பித்திப்பியாய் தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் 10 கிராம் அளவு எடுத்து தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தேநீர் அருந்துவதுபோல் தினசரி அருந்தி வந்தால் இதயம் வலுவடையும்.

தாமரைப்பூ 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், வால்மிளகு, வாய்விளங்கம் ஆகியவை வகைக்கு 25 கிராம் எடுத்து தூள் செய்து கொண்டு, காலை- மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இதயவலி, படபடப்பு போன்றவை தீரும்.

தாமரைப்பூ, வாழைப் பூ ஆகிய இரண்டையும் 50 கிராம் அளவில் எடுத்து கசாயமிட்டு சாப்பிட்டு வந்தால் இதய வீக்கம் தணியும்.

ரத்த அழுத்தம் குணமாக...

ரத்தத்தைச் சுத்தி செய்வதிலும், ரத்தத்தில் மிகுந்துள்ள கொழுப்புகளை சீராக்கி நல்ல உடல்நலம் தருவதிலும் தாமரைக்கு நிகரான மலர் வேறெதுவும் இல்லையென்றே சொல்ல லாம். ரத்த அழுத்தத்தால் உண்டாகும் பலவீனம், படபடப்பு, மன உளைச்சல், வேண்டாத பயம், சிறுநீரகம் சார்ந்த சில குறைபாடுகள் போன்ற அனைத்தையும் சரி செய்யும் குணத்தை தாமரைப்பூ தன்னகத்தே பெற்றுள்ளது.

தாமரைப்பூ, துளசி ஆகியவற்றை சம அளவு எடுத்து கசாயமிட்டு, காலை- மாலை இருவேளையும் 200 மி.லி. அளவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வரும்.

தாமரைப்பூ 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், சோம்பு ஆகியவை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் வேளைக்கு ஐந்து கிராம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

தாமரைப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ ஆகிய மூன்றையும் உலர்த்தி வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொண்டு, இவற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்யவும். இதைக் கசாயமிட்டு சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட ரத்த அழுத்த நோய்களும் குணமாகும்.

உடல் வலுவடைய...

உடல் உறுதி பெற, தேகம் வலுவாய்- வளமையாய்- இளமையாய்- அழகாய் ஜொலிக்க தாமரையே வழிகாட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். தாமரையை மருந்தாக்கி, தாமரைப்பூ லேகியம், தாமரைப் பூ சூரணம், தாமரைப்பூ தேநீர்- இப்படி நிறைய மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன. ஆயுர்வேத முறைப் படி தயார் செய்யப்பட்ட "அரவிந்தாஸவம்' என்ற மருந்து உலகப் பிரசித்தி பெற்ற ஒப்பற்ற மருந்தாகும். இதனை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த அனைத்து நோய்களும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுவதைக் காண்பீர்கள். பிற மருத்துவமுறை மருந்துகளை உங்கள் நோய்க்காக தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், மறக்காமல் நீங்கள் உண்ண வேண்டிய ஒப்பற்ற மருந்து அரவிந் தாஸவம் ஆகும். இம்மருந்து தாமரையைப் பிரதானமாகக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

தன்முனைப்பு அகல தாமரைப்பூ தேநீர்...

தாமரைப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, துளசி, நன்னாரி, மருதம் பட்டை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொண்டு, இவற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் சர்க்கரை சேர்த்து சுவையாக அருந்தவும்.

இதனால் மனம் தெளிவு பெறும். ரத்த அழுத்தம் சீராகும். இதயம் வலுவடையும். தேகம் மினுமினுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிற தேநீர், காபிக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்திப் பழக்கப்படுத்துங்கள். சக்தியின் அம்சம், ஆற்றல் பெற்று சகலமும் பெறுவீர்கள்.

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum