இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பகவத்கீதை முதன்முதலில் உபதேசிக்கப்பட்டது சூரியனுக்கே- பா.சி. ராமச்சந்திரன்

Go down

பகவத்கீதை முதன்முதலில் உபதேசிக்கப்பட்டது சூரியனுக்கே- பா.சி. ராமச்சந்திரன்  Empty பகவத்கீதை முதன்முதலில் உபதேசிக்கப்பட்டது சூரியனுக்கே- பா.சி. ராமச்சந்திரன்

Post by ஆனந்தபைரவர் Sun Feb 27, 2011 2:24 pm

ராமாயணமும் மகாபாரதமும் பாரத தேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றைக் கதை என்றோ, காப்பியம் என்றோ சொல்லா மல், வடமொழியில் இதிஹாசம் என்று சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வால்மீகியும் வியாசரும் எழுதிய இவை உண்மையாக நம் தேசத்தில் நடந்தவை. "இதி- ஹாசம்' என்றால் "இது நடந்தது' என்று ஒரு பொருள் உண்டு. வால்மீகிக்கும் வியாசருக்கும் பின்னால் வந்தவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தின் நடைமுறையைக் கொண்டு சில மாற்றங் களை மூலக் கதையைச் சிதைக்காமல் சிறப்பாக எழுதித் தொகுத்தார்கள்.

ராமனை ஆரம்பம் முதல் இறுதி வரை கடவுளாகவே கருதினார் வால்மீகி. ஆனால் கம்பனோ ராமன் அவதார புருஷன் என்றாலும், ஆரம்பத்தில் மானுடனாகவே கருதி முடிவில் கடவுளாக்குகிறார். இப்படி சில வேற்றுமைகள் காலத்திற்கேற்பவும், எழுதியவர்களின் சிறந்த கற்பனைக்கு ஏற்பவும் நமது காவியங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன. ஆனால் கருத்து ஒன்றுதான். "தர்மம் நிலைபெற வேண்டும்' என்பான் ராமன்; "அதர்மம் அழிய வேண்டும்' என்பான் கிருஷ்ணன். இவை இரண்டினுடைய பொருளும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகள் வேறு.

ராமனுடைய வழியைப் பின்பற்ற வேண்டும்; கிருஷ்ணனுடைய பேச்சைக் கேட்க வேண்டும். இதுதான் சாரம்.

பித்ருவாக்ய பரிபாலனம் என்னும் தாய்- தந்தை சொல் கேளல், அனைவரையும் சகோதரனாக ஏற்றல் (உதாரணம்- குகன், சுக்ரீவன், விபீடணன்), மனையாளேயானாலும் மற்றவரால் குறை சொல்லப்பட்டால் அவள் மாசற்றவள் என்பதை உணர்த்த தீக்குளிக்க வைப்பது என்பவை ராமனுடைய தர்மம். தாத்தா பீஷ்மர், குலகுரு கிருபர், ஆசிரியர் துரோணர், சகோதரர்களான துரியோதனாதியர்கள் அனைவரும் அதர்மத்தின் பக்கம் நின்றதால், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றான் கிருஷ்ணன்.

முடிவில் இரு காவியங்களும் தர்மத்தை நிலைநாட்டவே எழுதப்பட்டு இன்றளவும் பேசப்படுகின்றன. ஆனால் மகாபாரதத் திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. புல்லையும் புண்ணாக்கையும் தின்று வாழும் பசு, தன் குருதியால் நல்ல பாலைத் தருகிறது.

அந்தப் பாலிலிருந்து தயிர் கடைகிறோம்; தயிரிலிருந்து வெண்ணெ யும், அதிலிருந்து நெய்யையும் பெறுகிறோம். அதேபோல் மகாபாரதம் எனும் இதிகாசத்திலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நூலையும்; பகவத்கீதை எனும் அதி அற்புதமான கடவுளின் வாக்கினையும்; பின்னர் விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் நாம் படிக்க நேர்கிறது. இது மகாபாரதத்தின் கதைப்போக்கில் தானாகவே நிகழும் ஓர் அற்புதம். குறிப்பாக பகவத் கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுட வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும். இந்த பகவத் கீதை மகாபாரதத்தில் வெகுவாகச் சொல்லப்பட்டாலும், பகவானான மகாவிஷ்ணு வால் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரால் சூரிய பகவானுக்கு இது போதிக்கப்பட்டது. பின்னர் சூரிய பகவானின் சீடர்கள் மூலம் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டது.

"இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்'

என்பது சுலோகம். இதில் விவஸ்வான் என்பது சூரிய தேவனைக் குறிக்கும். "பகவானே இந்த கீதையை சூரியன் மூலமாக மனித குலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இஷ்வாகுவிற்கும் உபதேசம் செய்தனர்' என்கிறார் கிருஷ்ணர். இதில் இஷ்வாகு என்பவர் ஸ்ரீ ராமனுக்கு மூதாதையர் ஆவார்.



இப்படி சில யுகங்களில் ஓதப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட பகவத் கீதை பல காலங் களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாலும், உண்மையான கருத்துகள் சிதைவுண்டதாலும் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாக கிருஷ்ண பரமாத்மாவே கூறுகிறார். இதுவே கடைசியில் இன்று வரை நிலைத்துக் கொண்டிருக்கிறது. இன்றுகூட பகவத் கீதையின் சரியான உள்ளர்த்தம் உணராத பண்டிதர்களும் நம்மிடையே உண்டு.

ஒருசமயம் ஷீரடி சாய்பாபாவின் காலை வலி தீர வருடிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தார் மகா பண்டிதரான ஒரு பிராமணர். அவருடைய கண்கள் மூடியிருந் தாலும், வாய் ஏதோ சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. ""என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார் பாபா.

""பாபா... நான் பகவத் கீதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...'' என்றார் அந்தப் பண்டிதர். உடனே பாபா அந்த சுலோகத்தைச் சொல்லி, ""இதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். அந்தப் பண்டித ருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார்.
""சரி; அதற்குப் பொருள் கூறு'' என்றார் பாபா. பண்டிதரும் கூறினார்.

""தவறு.. தவறு... நீ சொன்ன பதில் தவறு. அது தான் உண்மையான பதில் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஸ்ரீ வியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க மாட்டார்'' என்று சொல்லி, சரியான பொருளைக் கூறி அந்த வேத பண்டிதரை மேலும் வியக்க வைத்தார் பாபா.

அப்படித்தான் சூரிய பகவானுக்கு ஆதிகாலத் தில் உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை பலரால் கற்கப்பட்டாலும், பல சமயங்களில் சரியான பதில் சொல்லப்படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது முறையாக அர்ஜுனன் மூலமாக நமக்கு உபதேசித்தார்.

இதை நவீன யுகத்தில் Information Sharing என்கிறார்கள். இப்படி ஒரு விஷயம் யுக யுகாந்தரமாய் நம்மிடையே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

உங்களுடைய நண்பர் ஒருவரைக் கூப்பிடுங்கள். நீங்கள் சொல்வதை அவரைக் கவனமாகக் கேட்கச் சொல்லுங்கள். உங்கள் பெயர், பிறந்த ஊர், உங்கள் பெற்றோர் பெயர், உங்கள் படிப்பு, நீங்கள் பணிபுரியும் அலுவலகம், உங்கள் மனைவி, குழந்தைகள் பெயர், நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயர்- இவ்வளவையும் அவரிடம் சொல்லிவிட்டு, இதை அப்படியே அவரை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். நிச்சயம் மேற்கண்டவற்றில் இரண்டு மூன்று விஷயங்களை அவரால் திரும்பச் சொல்ல முடியாது. இதுதான் ஒய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நட்ஹழ்ண்ய்ஞ். இதேபோல அவர் உங்களிடம் சொல்லியிருந் தாலும் நீங்களும் சிலவற்றை மறந்திருப்பீர்கள்.

இதேபோல்தான் விவஸ்வான் என்ற பெயருடைய சூரிய பகவானுக்கு ஸ்ரீ கிருஷ்ண ரால் சொல்லப்பட்ட பகவத் கீதை பலரால் கற்கப்பட்டு சரியான பொருள் சில சமயங்களில் சிதைக்கப்பட்டதால், மீண்டும் ஒருமுறை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் ஸ்ரீ கிருஷ் ணர். இதுவே கீதை பிறந்த கதை!

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum