Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கொல்லங்குடி வெட்டுடையார் காளி
+2
Venkatesh A.S
ஆனந்தபைரவர்
6 posters
Page 1 of 1
கொல்லங்குடி வெட்டுடையார் காளி
மனிதர்களாய்ப் பிறக்கும் பிறப்பை அரிய பிறவியாக அறிந்து கொள்ளாமல் நம்மில் பலர் அநீதி புரிவது, அடுத்தவர்க்கு தீங்கிழைப்பது, நம்பியவர்களைக் கைவிடுவது, துரோகம் செய்வது, ஏமாற்றுவது போன்ற பல தீயசெயல்களைச் செய்து வருகின்றனர்.
சமூகத்தில் கொலை, கற்பழிப்பு, களவு போன்றவை சகஜமாகிவிட்டன. குற்றம் புரிந்தவர்களையோ, நம்மை ஏமாற்றுபவர்களையோ தட்டிக் கேட்பதற்கும் தண்டனை கொடுப்பதற் கும், நீதி வழங்குவதற்கும் நாம் என்ன செய்கிறோம்?
நீதிமன்றத்துக்குப் போகிறோம்; வழக்கு தொடுக்கிறோம்; நீதி கேட்கி றோம். அங்கே எப்போது நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. அங்கே சந்தர்ப்ப சாட்சியங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. நிரபராதி தண்டனை பெறுவதும், குற்றவாளி விடுதலை ஆவதும் பல வழக்குகளில் நடந்து வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
பணம் எனும் சக்தியால் நியாயத்தை விலைக்கு வாங்கி அநியாயத்தை நிலவ விடும் அவலமும் நடைபெற்று வருகிறது. ஆனால் பணத்தினாலோ... வேறு எந்த சக்தியாலோ தப்பிக்க முடியாத வகை யில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வும், திருத்தவும் செய்யும் சக்தி கொல்லங் குடியில் கோவில் கொண்டிருக்கிறது!
நாணயம் தவறி தவறு செய்பவர் களுக்கு நாணயத்தாலேயே தண்டனை கொடுத்து, தவறு செய்தவர்களைத் திருத்தும் தெய்வம்தான் வெட்டுடையார் காளியம்மன்.
அம்மனிடம் நமக்கு நேரிட்ட தீங்குகளையும், அவை யாரால் நேரிட்டன என்பது பற்றியும் நாம் முறையிட வேண்டும். அப்படி முறையிட் டதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக குற்றவாளிகளைத் தட்டிக் கேட்பவள் இந்த காளியம்மன்.
காசு வெட்டிப்போட்டு நியாயம் கேட்கும் இவ்வாலய வழிபாட்டு முறையை விவரித் தார் ஆலய அர்ச்சகர்களில் ஒருவரான புஷ்பராஜ்...
அம்மனின் பூஜைத் தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன்மீது நம் கையை வைத்தபடி, நம்மை துன்பப் படுத்தியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பூசாரி சொல்வது போல் நாம் அதைத் திரும்பக் கூற வேண்டும். பூசாரி தெளிவாக அம்மனிடம் எடுத்துக் கூறுவதை நாமும் வாய்விட்டு உரக்க குரல் கொடுத்து அம்மனிடம் முறையீடு செய்ய வேண்டும்.
அதன்பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அம்மன் சந்நிதிக்குப் பின் புறம் செல்ல வேண்டும். அங்கே ஒரு சிறிய பீடத்தில் நிறைய வெட்டுப்பட்ட நாணயங்கள் குவிந்துள்ளன. காசுகளை வெட்டுவதற்காக இரும்பு சுத்தியல்கள் இருக்கின்றன. வெட்டுப் பட்ட நாணயங்கள் இருக்கும் பீடத்தைச் சுற்றி ஈட்டிகள் வேலிபோல அமைந்துள்ளன.
சுத்தியால் நாணயத்தை ஓங்கி அடித்து வெட்டுப்படச் செய்து, நம் புகார்களையும் கோரிக்கை களையும் மனதில் நினைத் துக்கொண்டே நாணயத்தை அங்கே வைத்துவிட வேண்டும். அதன்பின் நமது வேண்டு தல்கள், நமக்கு தீமை செய்தோ ரின் பெயர்கள் ஆகியவற்றை எழுதி ஈட்டியில் செருகி, அதன்மீது எலுமிச்சம் பழம் ஒன்றைக் குத்தி வைத்துவிட்டு மறுபடி யும் அம்மனை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் கோவிலில் உள்ள "சோனையா' எனும் காவல் தெய்வத்திடம் முறையிட வேண்டும்.
வெட்டுடையார் காளியம்மனும், சோனையா தெய்வமும் இணைந்து நம் துன்பங்களைக் களைவார்கள். அத்துன்பங்களுக்குக் காரண மானவர்களைத் தண்டிப்பார்கள்.
இனி அம்மனின் திருக்கோலக் காட்சி யைக் காண்போமா?
தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அம்மன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி. நம் கண்களுக்கு தெய்வீக ஒளியாகக் காட்சி அளிக்கும் காளியம்மன், நம்மைப் பாதுகாக்க எட்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.
அம்மனுக்கு முன்பு வெள்ளியாலான செங்கோல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி அங்கு தரிசனத்திற்கு வந்த பக்தை சுமதி,""ஒரு தம்பதியர் தங்களுக்கு வேண்டிய ஒருவருக்கு அவசரத் தேவை என்று கேட்ட போது மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். தங்கள் கஷ்டம் நிவர்த்தி ஆனதும் அந்தத் தொகையைத் திரும்பக் கொடுத்து விடுவதாக வாக்கு கொடுத்தார் பணம் வாங்கியவர்.
அந்தத் தம்பதியரிடம் பெற்ற தொகையின் மூலம் அவர் கஷ்டம் நீங்கி, நல்ல நிலைக்கு வந்துள்ளார். ஆனால் அவசரத்திற்கு வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை. எனவே காலம் கடத்தினார்.
எந்த எழுத்து மூலமும் உறுதி வாங்கிக் கொள்ளாமல், வாய் வார்த் தையை நம்பிக் கொடுத்தபடியால், தெய்வமே கதி என வெட்டுடை யார் காளியம்மன் கோவிலுக்கு வந்து நாணயத்தை வெட்டிப் போட்டு வேண்டுதல் செய்தனர். இவர்களது வேண்டுதல் அம்மனின் அருளால் பலித்தது. பணமும் திரும்பக் கிடைத்தது. தங்கள் கஷ்டங்கள் நீங்கி முன்னுக்கு வந்துள்ளனர். தங்கள் முறையீட்டிற்கு வெகு விரை வாகப் பலன் கொடுத்த வெட்டுடையார் காளியம்மனுக்கு வெள்ளியாலான செங்கோலை காணிக்கையாகக் கொடுத்துள் ளனர். அவர்கள் கொடுத்த செங்கோல் அம்மனுக்கு முன்பு அழகாகக் காணப்படுகிறது.
நீதி கேட்டு இந்தக் காளியம் மனிடம் சென்றால் மிகச் சீரான தீர்ப்பு கொடுப்பாள் என்பதை நிரூபணம் செய்யும் வண்ணம் நிகழ்ந்தது மேலே கூறிய உண் மைச் சம்பவம். இது அம்மனின் திருவிளையாடல்களில் ஒன்று'' என்று கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பு தவறாக இருக்கலாம். ஆனால் இந்த அம்மனின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும். நாணயம் வெட்டிப் போட்ட நாற்பத்தெட்டு நாட்க ளில் நம் பிரச்சினை தீரும்.
முன்பு இக்கோவில் ஈச்சந்தூர் எனும் காடாக இருந்ததாகவும், நாணயங்கள் வெட்டிப் போடும் இடம்தான் அம்மனைக் கண்டெ டுத்த இடம் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது.
கோவிலில் வெட்டுவார் அய்யனார்தான் முதலில் பிரதிஷ்டை ஆனவர். வேளார் எனும் குலத்து வாரிசுகள்தான் இங்கே அம்மனுக்கு பூஜைப்பணி செய்யும் பூசாரிகள்.
அனைத்து மதத்தினரும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து பலன் அடைகின்றனர்.
பண மோசடி, சொத்து அபகரித்தல், தொழிலுக்கு நேரிடும் இடையூறுகள் போன்றவற்றுக்கு நீதி கேட்டால் தீர்ப்பு வழங்குவார் வெட்டுடையார் காளியம்மன்.
நம் மனதை வருத்துபவர்களை வருந்தச் செய்து திருத்துபவள் இந்தக் காளியம்மன்.
பங்குனி மாதம் பத்து நாட்கள் அம்மனுக்கு இங்கு விமரிசையாகத் திருவிழா நடைபெறும்.
நாணயம் தவறியவர்களுக்கு நாணயத்தாலேயே தண்டனை கொடுக்கும் வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
இங்கு காலையில் வெட்டுடையார் அய்யனார்மீதும், மாலை வேளையில் அம்மன்மீதும் சூரிய ஒளி விழுவது அற்புதமான காட்சியாகும். ஆடிப்பெருக்கு அன்று அம்மன் சந்நிதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடைபெறும்.
வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதை! துடிப்பான தெய்வம்! அம்மனை வேண்டிக்கொண்டால் துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
மிகவும் நன்று. இக்காலத்திர்க்கு வேண்டிய தகவல்.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
ஆறு ஆண்டிற்கு முன்பாக, எனக்கு பணமோசடி செய்டவருக்காக சென்று காசினை வெட்டி போட்டு வந்தேன். எனது பணம் கிடைக்கவில்லை. நீதியும் கிடைக்க வில்லை.
mravi- Posts : 15
Join date : 11/07/2011
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
இந்த காலத்தில் நீதி கூட சுலபமாக கிடைப்பதில்லை. இருந்தாலும் நாம் நம்பிக்கையை தளர விடக்கூடாது. காலத்தின் கட்டாயத்தையும், காளியின் விளையாட்டையும் காளிதாசருக்கே (மகா கவி) தெரிய வில்லையே!
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
அம்மன் அங்கு இருப்பதோ உண்மைதான். ஆனால் அங்குள்ள பூசாரிகள் நாம் பிரார்தனை செய்யும்போது நாம் கொடுக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டும், நாம் கடிதம் எழுதிவைப்பதை படித்துவிட்டு நமது வீட்டு வரைக்கும் வந்து பூஜை செய்கிறோம், அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகிறோம் என்றும் சில ஆயிரங்களையும் வாங்கி செல்கின்றனர். ஆனால் எந்த பூஜையோ, பரிகாரமோ இவர்கள் செய்வதில்லை, நாம் அம்மனின் மேல் உள்ள நம்பிக்கையால் இந்த பூசாரிகள் சொல்லுவதை கேட்டுத்தான் ஆகவேண்டி உள்ளது. நாம் யாரால் பதிக்கப்பட்டோமோ அவர்களிடமும் நமது தகவல்களை தெரிவித்துவிடுகின்றனர். ஆகையால் உங்கள் குறைகளை அம்மனிடம் மட்டுமே மனதிற்குள் வேண்டிவிட்டு வாருங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம். நமது மீது எந்த தவறும் இல்லையெனில் அம்மன் உறுதியாக நமக்கு பாதுகாப்பு அளித்து நம்மை காப்பாற்றுவார். அங்குள்ள பூசாரிகளை நம்ப வேண்டாம்.
ramalakshmi- Posts : 3
Join date : 16/01/2012
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
என்ன வேதனையான விஷயம்! இப்படி பூசாரிகள் நடந்து கொள்வது மிகவும் வருந்த தக்கது. இந்த நவீன அரிவியல் உலகில் சாதாரண மனிதர்களே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர், அந்த வரிசையில் இவர்களும் சேர வேண்டுமா? என்னை பொறுத்தவரை தற்போதைய கால கட்டத்தில் கடவுளை எங்கும் தேட வேண்டிய தில்லை, நமக்குள்ளேயே தேட வேண்டும். ஒவ்வொருவரும் மனசாட்சிபடி நடக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. ஏனெனில் எல்லோருக்கும் ஆசை என்பது பேராசையாக மாறி விட்டது. அதன்படி பேராசை அதன் விளைவை காட்டியே தீரும். திக்கற்றவர்களுக்கு தெய்வம் மட்டுமே துணை.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: கொல்லங்குடி வெட்டுடையார் காளி
ஒரு முறை இக்கோவிலுக்குச் சென்றுள்ளேன். சக்தி வாய்ந்த தெய்வம். சாதரண நாட்களில் கூட கூட்டம் அதிகமாக இருக்கும்.
Similar topics
» வெட்டுடையார் காளி
» அய்யன் காளி :இந்து சமுதாய சிற்பி
» காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil
» அய்யன் காளி :இந்து சமுதாய சிற்பி
» காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum