இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்

2 posters

Go down

ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்  Empty ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்

Post by ஆனந்தபைரவர் Mon Nov 07, 2011 4:30 pm


ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்  Shreehanumanth101-11-11
விஜயலட்சுமி சுப்பிரமணியம்

கேசரி என்ற வானர வீரனுக்கும் அஞ்சனா தேவிக்கும் வாயு பகவானின் அனுக்கிரகத்தால் பிறந்தவன் அனுமன். அதனால் அனுமனுக்கு ஆஞ்சனேயன் என்ற பெயர் ஏற்பட்டது. மார்கழி மாதம், அமாவாசை திதி மூல நட்சத் திரத்தன்று அனுமன் பிறந்ததால் அந்நாள் தென்னாட்டில் அனுமத் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதப் பௌர்ணமி நாளான சித்திரா பௌர்ணமி நாளன்றும்; வட நாட்டில் வைசாக பௌர்ணமியை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை அன்றும்; கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீராம நவமி முதல் ஒரு வாரம் வரையிலும் ஆஞ்சனேய ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆஞ்சனேயன், ஆந்திராவில் ஆஞ்சனேயலு, கர்நாடகாவில் அனுமந்தையா, மகாராஷ்டிரத்தில் மாருதி, வடநாட்டில் மகா வீரர் என்று அனுமன் அழைக்கப்படுகிறார்.

ஈரோடு மாவட்டம், தாராபுரம் ஒரு கால கட்டத்தில் கொங்குச் சோழர்களின் தலை நகராக விளங்கிய பெருமையைக் கொண்டது. சோழர் ஆட்சியில் ராஜராஜபுரம் என்ற பெயர் இருந்தது என்றும்; அதுவே தாராபுரம் என ஆயிற்று என்றும் சொல்லப்படுவதுண்டு. நவரத்தின பிரதீக க்ஷேத்ராவளிகள் எனப்படும் ஒன்பது தலைசிறந்த மத்வத் தலங்களில் தமிழ்நாட்டில் ஸ்ரீமுஷ்ணம், திருக்கோவிலூர், தாராபுரம் ஆகிய மூன்றும் உள்ளன. துவைத மத ஸ்தாபகரான ஸ்ரீ மத்வாச்சாரியார் ஆஞ்ச னேயரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இந்த மகானின் பரம்பரையில் வந்தவர்தான் மந்திரா லய மகான் ஸ்ரீமத் ராகவேந்திர சுவாமிகள். இவருடைய முன் அவதாரமாகக் கருதப்படுபவர் 15-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த மத்வ மத ஞானியான ஸ்ரீ மத் வியாசராய தீர்த்தர். (1447-1539). இவர் விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் வாழ்ந்து வந்த தலை சிறந்த தத்துவ ஞானி. துவைத சம்பிரதாயக் கருத்துகளையும் கொள்கைகளையும் பல இடங் களில் நிலைநாட்டி சந்திரகிரியிலும், திருப்பதி யிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீவியாச ராஜர். இவருக்கு 14 முறை அனுமன் தரிசனம் தந்ததாக ஐதீகம். ஸ்ரீ வியாசராஜர் தன்னுடைய வாழ்நாளில் 732 தலங்களில் அனுமன் சிலை களைப் பிரதிஷ்டை செய்த பெருமைக்குரியவர். இவர் பிரதிஷ்டை செய்த அனுமன் ஆலயங் களில் அனுமன் சிலைகளில் தலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வாலில் மூன்று மணிகள் கட்டப்பட்டிருக்கும். வலக்கையை உயர்த்தி இடக்கையில் சௌகந்திக மலரோடு அனுமன் காட்சியளித்தால் அது வியாசராயப் பிரதிஷ்டை என்று அறிந்துகொள்ளலாம்.



வியாசராயர் பிரதிஷ்டை செய்த 732 சிலைகளில், 89-ஆவது மூர்த்தியாகக் கருதப் படுகிறவர்தான் தாராபுரம் காடு ஸ்ரீஹனுமந்த ராய சுவாமி. இங்கு மூலவர் எட்டடி உயரமும் ஆறடி அகலமும் கொண்டு மிகப் பிரம்மாண்ட மாகக் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்திகளான ராமர், சீதை, அனுமன் கருவறையிலேயே எழுந் தருளியுள்ளனர். முதலில் ஸ்ரீ ராமருக்கு வழி பாடு செய்த பின்னரே அனுமனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

இங்கு கருவறையில் அருள்புரியும் அனுமனின் வால் வலக்கை வழியாகச் சென்று தலையைச் சுற்றி வந்து இடது தோளில் முடிகிறது. வாலின் முடிவில் மூன்று மணிகள் தொங்கவிடப்பட்டுள் ளன. இடுப்பில் சலங்கைகள், கத்தி, கழுத்தில் சாளக்கிராம மாலைகள், வலது கை அபயம், இடது கை சௌகந்திக மலர் என்னும் கோலத் தில் அனுமன் இங்கு சேவை சாதிக்கிறார். முகம் வடகிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகத்தின் இருபுறங்களிலும் சங்கு, சக்கரம் உள்ளன. இரண்டு பாதங்களும் ஒரே திசை (வடக்கு) நோக்கி உள்ளன.

இப்பகுதி ஒருகாலத்தில் காட்டுப் பிரதேச மாக இருந்ததால் காடு என்ற அடைமொழி ஏற்பட்டு, இந்த அனுமன் காடு அனுமன் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படு கிறது. இந்த ஆலயத்தில் மூலவரின் கருவறைக்கு மேல் விமானம் இல்லை. பக்தர் ஒருவரின் கனவில் வந்து இந்த அமைப்பிலேயே தான் இருக்க விரும்புவதாக அறிவித்ததை அடுத்து இப்படி இருக்கிறதாம்.

இந்த ஆலயத்தில் லட்சுமி நரசிம்மர், சீதா ராமர், ஜயதீர்த்தர் பிருந்தாவனம், ஸ்ரீ ராகவேந் திரர் பிருந்தாவனம் போன்ற தனிச் சந்நிதிகள் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக பவானி கூடுதுறையில் லட்சுமி நரசிம்மர் சிலை கண்டெடுக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப் பட்டதாக ஐதீகம். அழகிய படிக்கட்டுகளுடன் கூடிய தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம் என்று அழைக் கப்படுகிறது. ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி பிரம்மோற்ச வமாகக் கொண்டாடப்படுவது இங்கு சிறப்பு.



1810-ல் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த வெள்ளையருக்கு ஏற்பட்ட ராஜப் பிளவை கட்டி நோய் இந்த காடு ஸ்ரீஅனுமன் அருளால் பூரண குணம் அடைந்ததாம். அவரே இந்த ஆலயச் சுவர்களைக் கட்டியதாகச் செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது. வேண்டுதல் நிறைவேற உற்சவக் காலங்களில் பக்தர்கள் தினமும் வஸ்திரங்களைக் கொடிமரத்தில் கட்டி விட்டு, உற்சவ முடிவில் திரும்ப பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். ஸ்ரீ காடு அனுமனை மனதார வேண்டிக் கொண்டால், மணப்பேறு, மகப்பேறு, வேலை வாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, மனநலம், உடல்நலம் ஆகியவற்றை அவர் அள்ளித் தருவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம், வடைமாலை, வெற்றிலை மாலை போன்ற வழி பாடுகளையும் செய்கின்றனர். இந்த ஆலயத்தில் கோசாலை ஒன்று அமைக்கப்பட்டு பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்கள் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்துவிட்டு ஆலய தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

ஸ்ரீ காடு அனுமந்தராய சுவாமி ஆலயம் கோவை- மதுரை சாலையில், தாராபுரம் நகருக்கு வெளியே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், பிரதான சாலையையொட்டி அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் காடு அனுமனைத் தரிசித்துவிட்டே செல்கின்றனர். கோவையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும்; பழநியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருப்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் தாராபுரம் அமைந்துள்ளது.

நன்றி நக்கீரன் ஓம் மாத இதழ்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்  Empty Re: ஸ்ரீ அனுமந்தராயன் கோவில் -விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum