இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

5 posters

Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by சாமி Tue Apr 10, 2012 8:26 am

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு


இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by ஹரி ஓம் Tue Apr 10, 2012 5:42 pm

நல்ல விளக்கமுடன் கூடிய பதிவு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by சேயோன் Wed Apr 11, 2012 8:15 am

சாமி wrote:
பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

அற்புதமான விளக்கம். நன்றி

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by svelan74 Wed Apr 11, 2012 11:11 am

திரு சாமி அவர்களுக்கு,

1. சைவ சமயக்குரவர்களான நாயன்மார்கள் நமசிவய என்று பாடவில்லையே?

2. நீங்கள் கூறுகின்ற இவ்விளக்கம் சைவ மடாதிபதிகள் ஆய்ந்து ஏற்றுக் கொண்டதா? சான்றுகளை தர முடியுமா? மூலஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமானை கந்தழி என விளிப்பார்கள் என்கிறீர்கள்...சான்று தரமாட்டேன் என்கிறீர்கள். ஆதாரமற்ற செய்திகளை பகிர்கிறீர்களோ என்ற ஐயம் வருகிறது.

3. வடமொழியின் படியும் நம: சிவாய என வருவது சந்தியில் நமசிவாய என வருமே. இதில் எப்படி ஆறாவது எழுத்து வரும்? ஐந்தெழுத்து(பஞ்சாக்ஷரம்) என்று தானே சொல்லப்பட்டது. ஒரே வார்த்தை என்று எங்கும் சொல்லவில்லையே?

4. மேலும், நீங்கள் கூறும் நமசிவய என்பதில் சிவபெருமானைப் பற்றியே வரவில்லையே? ஆனால் சமயகுரவர்கள் மற்றும் சைவமடாதிபதிகள் எடுத்துச்சொல்லும் விளக்கத்தில் சிவபெருமானுக்காக, சிவபெருமானை வணங்குகிறேன், சிவனின் பொருட்டு-எனக்காக இல்லை என்று சிவபெருமானைக் நேரிடையாக குறிப்பதாக இருக்கிறது. உங்களின் பதிவு ஆதாரமற்றதாகவும், குழப்பமாகவும் உள்ளது. உங்களின் உள்-எண்ணம் உண்மையை ஆராய்வதாக தெரியவில்லை. இப்படி தான் சைவச் சமயத்தை போற்றுகிறாரே என்று மறைமலை அடிகளை படித்தேன். ஆனால் அவர் சைவராகவே வாழவில்லை ..அதாவது அடிப்படை தகுதியாக உள்ள திருநீறு பூசும் வழக்கம் கூட இல்லாதவராக இருந்திருக்கிறார் (அவரின் ஒரு புகைப்படம் கூட திருநீறு அணிந்து காணப்படவில்லை) என்று தெரிய அவருடைய நோக்கம் வேறானது என தெளிந்தேன். அந்த சந்தேகம் உங்களின் ஆதாரமற்ற/சான்றுகளற்ற பதிவுகளை கண்டாலும் வருகிறது.

ஆதாரமற்ற/ஆராய்ச்சியுமற்ற செய்திகளை இங்கிருக்கும் சேயோன் ஆதரிக்கலாம்/ரசிக்கலாம்..பரம்பொருளான சேயோன் மன்னிக்க மாட்டார்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by சாமி Wed Apr 11, 2012 1:40 pm

svelan74 wrote:
ஆதாரமற்ற/ஆராய்ச்சியுமற்ற செய்திகளை இங்கிருக்கும் சேயோன் ஆதரிக்கலாம்/ரசிக்கலாம்..பரம்பொருளான சேயோன் மன்னிக்க மாட்டார்.
செந்தில்

வணக்கம் நண்பர் செந்தில்,
கேள்வி கேட்பதில் இருவகை உண்டு. ஒன்று தனது அறியாமையை போக்கிக் கொள்வதற்காக . மற்றொரு வகை கருத்துச் சொல்ல வந்தவரை ஏதாவது சொல்லி உண்மைக் கருத்துகளை வெளிவரவிடாமல் தடுப்பதற்காக.

என்னைப் பொறுத்தவரை அனைவரும் எனது சகோதரர்கள்தான். எனக்கு ஆரிய திராவிட பாகுபாடு கிடையாது. கருத்துக்களைத்தான் இங்கு எதிர்க்கிறேனே தவிர, ஆட்களைக் கிடையாது. என்னுடைய பதிவுகள் குறிப்பிட்ட சிலருக்காகவும் அல்ல. கைதட்டல் வாங்குவதற்காகவும் அல்ல.

இப்போது நீங்கள் கேட்ட கேள்வியில் இருந்து நான் தெரிந்து கொண்டது... நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்பதே. தமிழ் திருமுறைகளை காலையில் எழுந்து குளித்து வெண்ணீறு பூசி பக்தி சிரத்தையுடன் படியுங்கள். பரம்பொருள் சேயோன் வழிகாட்டுவார்.

உண்மைக் கருத்துக்களை சொல்வதற்கு நான் என்றும் தயங்கியது இல்லை. இது பரம்பொருளான சேயோன் எனக்கு இட்ட பணியாகத்தான் நினைக்கிறேன்.

பெரியவரான மறைமலை அடிகளைப்பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களுக்கு வயதும் போதாது அறிவும் போதாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அறிவை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

நன்றி, அன்புடன்,
சாமி


சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by svelan74 Wed Apr 11, 2012 7:07 pm

திரு சாமி அவர்களுக்கு,

நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள்..உண்மை கருத்துக்களை வெளிக்கொணர்வதற்காக என்கிறீர்கள். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் இடவில்லை. சான்றுகளும் தரவில்லை. எங்கேயிருந்தோ எடுத்து பதிவு(பேஸ்ட்) செய்யத்தான் செய்கிறேன்...ஆதாரமும் கிடையாது..சான்றும் எனக்கு தெரியாது என்று சொல்லியிருந்தால் நான் என்னுடைய நேரத்தையோ இங்குள்ளவர்கள் நேரத்தையோ தங்களுக்கு பதில் பதிவுகள் செய்து வீணாக்கியிருக்க மாட்டேன்.

சுந்தரர் திருப்பாண்டிக்கொடுமுடி பதிகத்தில் பாடியதை இங்கே நான் பதிகிறேன். நாயன்மார்கள் நமசிவய என்று பாடவில்லை என்பதற்கு ஒரு சான்று இது. இதற்கு தங்களுடைய நேரிடையான பதில் என்ன?

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

நானும் தனிமனித தாக்குதலை வெறுப்பவன். இந்துக்களும் குறிப்பாக தமிழர்களும் நம்முள்ளே அர்த்தமற்ற பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? தற்போது இருக்கின்ற பகைகளும்/பிரிவுகளும்/குழப்பங்களுமே போதும் என்ற எண்ணத்தை கொண்டவன் நான். மறைமலை அடிகளைப் பற்றிய என்னுடைய நேரிடையான விமர்சனத்திற்கு தங்களால் பதில் கூறமுடியுமா? வயதுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பது சைவத்தில் நிரூபணம் ஆன ஒன்று என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

செந்தில்


svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by பத்மநாபன் Sun Apr 15, 2012 9:00 am

சாமி wrote:மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

அருமையான விளக்கம். இந்தப் பதிவைப்பற்றிய விமரிசனங்கள் ஏதோ உள்நோக்கத்துடன் சொல்பவையாகவே உள்ளன. மேலும் விளக்கங்களைத்தாருங்கள். நன்றி
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Empty Re: நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum