இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-ஞாநவிஜ்ஞாந யோகம்

Go down

 ஸ்ரீமத் பகவத்கீதை-ஞாநவிஜ்ஞாந யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-ஞாநவிஜ்ஞாந யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:42 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத ஸப்தமோ அத்ய।

ஞாநவிஜ்ஞாந யோகம்



ஸ்ரீபகவாநுவாச।
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய:।
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு॥ 7.1 ॥



ஜ்ஞாநம் தே அஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத:।
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே॥ 7.2 ॥



மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித்யததி ஸித்தயே।
யததாமபி ஸித்தாநாம் கஷ்சிந்மாம் வேத்தி தத்த்வத:॥ 7.3 ॥



பூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச।
அஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥ 7.4 ॥



அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥ 7.5 ॥



ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥ 7.6 ॥



மத்த: பரதரம் நாந்யத்கிம்சிதஸ்தி தநம்ஜய।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ॥ 7.7 ॥



ரஸோ அஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ:।
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஷப்த: கே பௌருஷம் ந்ருஷு॥ 7.8 ॥



புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஷ்சாஸ்மி விபாவஸௌ।
ஜீவநம் ஸர்வபூதேஷு தபஷ்சாஸ்மி தபஸ்விஷு॥ 7.9 ॥



பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்।
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்॥ 7.10 ॥



பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம்।
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ அஸ்மி பரதர்ஷப॥ 7.11 ।



யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே।
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி॥ 7.12 ॥



த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்।
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்॥ 7.13 ॥



தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா।
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே॥ 7.14 ॥



ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:।
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஷ்ரிதா:॥ 7.15 ॥



சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுந।
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥ 7.16 ॥



தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥ 7.17 ॥



உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥



பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:॥ 7.19 ॥



காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥



யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஷ்ரத்தயார்சிதுமிச்சதி।
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்॥ 7.21 ॥



ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே।
லபதே ச தத: காமாந்மயைவ: விஹிதாந்ஹிதாந்॥ 7.22 ॥



அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம்।
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி॥ 7.23 ॥



அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:।
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்॥ 7.24 ॥



நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥



வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந।
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஷ்சந॥ 7.26 ॥



இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத।
ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரம்தப॥ 7.27 ॥



யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்।
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:॥ 7.28 ॥



ஜராமரணமோக்ஷாய மாமாஷ்ரித்ய யதந்தி யே।
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்॥ 7.29 ॥



ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:।
ப்ரயாணகாலே அபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ:॥ 7.30 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞாநவிஜ்ஞாநயோகோ நாம ஸப்தமோ அத்யாய:॥ 7 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞாநவிஜ்ஞாந யோகம்' எனப் பெயர் படைத்த ஏழாவது அத்தியாயம் நிறைவுற்றது.


பார்த்தனே, என் உணர்வில், என் மீது பற்றுடன் யோகத்தைப் பயில்வதால் சந்தேகமின்றி என்னை அறியலாம்.

இப்போது நான் தெரிவிப்பதை நீ அறிந்து கொண்டால், இனி எதையும் நீ அறிய வேண்டியதில்லை. அத்தகைய நுட்பமான அறிவை முழுமையாகக் கூறுகிறேன் கேள்.

கோடியில் ஒருவனே பக்குவமடைய முயல்கிறான். அவர்களுள்ளும், யாரோ ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் - இவை எட்டும் எனது பிரிந்த கீழான இயற்கையாகும்.

கீழான இயற்கையுடன் போராடியபடி, இவ்வுலகத்தைத் தாங்கும் எனது மேலான இயற்கை உயிரினங்கள் இருக்கின்றன.

இவ்விரு இயற்கைகளுக்கும் தோற்றத்திற்கான மூலமாகவும், பிரளயத்தின்போது ஒடுங்கும் இருப்பிடமாகவும் நான் இருக்கிறேன்.

என்னிலும் மேலான உண்மையில்லை. நூலின் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல் எல்லாம் எனைச் சார்ந்துள்ளன.

நானே நீரின் சுவை, சூரிய சந்திரரின் ஒளி, வேத மந்திரங்களின் பிரணவம் (ஓம்). வானில் சப்தமாகவும், மனிதருள் திறனாகவும் உள்ளேன்.

நிலத்தின் வாசனை நான்; நெருப்பின் வெப்பம் நான்; உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.

எல்லா உயிரினங்களின் மூலவிதை நானே. அறிஞர்களின் அறிவும், பலவான்களின் பலமும் நானே.

பரதர்களின் தலைவா, பலவீனர்களைக் காக்கும் பலவான்களின் பற்றும், பற்றற்றவர்களது பலமும் நானே, அறநெறிகளுக்கு உட்பட்ட காமமும் நானே.

சத்வ, ரஜோ, தமோ எனும் முக்குணங்களுக்குட்பட்ட எதுவாயினும் எல்லாமே எனது சக்தியிலிருந்து உண்டானவை. ஒருவிதத்தில் நானே எல்லாமே எனினும், நான் குணங்களுக்கு உட்பட்டவனல்ல.

முக்குணங்களால் மயக்கப்பட்டிருப்பதால், எல்லையற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட என்னை உலகம் அறியாதிருக்கிறது.

முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.

அறிவில்லாத மூடர்கள், அறிவில் கடைத்தரமானவர்கள், அறிவு திசை மாறியவர்கள் மற்றும் ஆன்ம அறிவே இல்லாதவர்கள் (நாத்திகர்) என நால்வித தீயோர் என்னைச் சரணடைவதில்லை.

நால்வித நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர் - துன்பம் தாங்காதோர், வினாவுடையவர், பொருளாசை கொண்டவர், இறைவனைத் தேடுபவர்.

இவர்களில் தூய பக்தித் தொண்டாற்றும் முழு ஞானம் உடையவன் சிறந்தவனாவான். நான் அவனுக்கு பிரியமானவன். அவனும் எனக்கு மிகப்பிரியமானவன்.

இவர்கள் நல்லோராயினும் என்னைக் குறித்த அறிவில் நிற்பவனை என்னிலேயே வாழ்பவனாக நான் கருதுகிறேன். எனது தொண்டில் ஈடுபட்டு அவன் என்னையே அடைகிறான்.

பல பிறவிகளுக்குப் பின்னரே உண்மையான அறிவாளி, காரணங்களுக்கெல்லாம் முதற்காரணமாக என்னை அறிந்து, என்னைச் சரணடைகிறான். அத்தகு சிறப்புடையவன் மிக அரிதானவன்.

ஆசைகளால் அலைபாயும் மனதினர் தேவர்களுக்குச் சரணடைந்து தமது இயல்புகளுக்கேற்ப வழிபாட்டு முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். எல்லோரது இதயத்துள்ளும் நான் பரமாத்வாக இருப்பதால், அவர்களின் நம்பிக்கையையும் நானே உறுதியாக்குகிறேன். அத்தகு நம்பிக்கையுடன் அவன் தேவர்களிடம் பலன் பெற்றுச் செல்கிறான். அப்பலன்கள் உண்மையில் என்னால் வழங்கப்படுபவையே.

குறைமதியாரே தேவரை வழிபடுவர். தேவர்கள் மூலம் அவர்கள் பெறும் நன்மைகளும் எல்லைக்குட்பட்டவை; தற்காலிகமானவை. தேவர்களை வழிபடுவோர் தேவரை அடைவர். என் பக்தர்களே என்னுலகை அடைவர்.

அறிவற்றவர்கள், எனக்கு உருவமில்லாததாகவும், குறிப்பிட்ட உருவத்துடன் வந்து போவதாகவும் எண்ணுகின்றனர். மூடத்தனத்தினால் எனது மேலான இயல்புகளையும், நித்தியத் தன்மையினையும் அறியாதிருக்கின்றனர்.

குறைமதியோருக்கு நான் தோன்றுவதே இல்லை. எனது யோக சக்தியால் அவர்களுக்கு நான் மறைக்கப்பட்டுள்ளேன். மயங்கிய நிலையில் இருப்போர் பிறவாத, இறவாத என்னை அறிவதில்லை.

நான் நடந்தவை, நடப்பவை, நடக்கப் போவற்றையெல்லாம் அறிவேன். எல்லா ஜீவன்களையும் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.

பிறவி பெற்ற காலம் முதல், ஜீவர்கள் இருமைகளுக்கு ஆட்பட்டு மயங்கியுள்ளனர்.

முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நற்செயல்களில் ஈடுபட்டு எவர்களது பாபம் முழுதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதோ, இருமை மயக்கத்திலிருந்து எவர் விடுபட்டுள்ளனரோ அவர்களே எனது தொண்டில் உறுதியுடன் ஈடுபடுவர்.

முதுமை, மரணத்திலிருந்து விடுபட முயலும் அறிவுடையோர் எனக்கு பக்தித் தொண்டு புரிகின்றனர். சரியான அறிவைப் பெற்றுள்ளதால் அவர்கள் பிரம்ம உணர்வுடையவர் ஆவர்.

என்னையே பரம் புருஷராக, ஜடத் தோற்றங்களை ஆளும் நபராக, தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாக, யக்ஞபதியாக (யாகங்களின் இறைவனாக) என்னை உணர்ந்தவன், இறுதிக்காலத்திலும் என்னை அறியலாம்.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum