இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-விபூதி யோகம்

Go down

 ஸ்ரீமத் பகவத்கீதை-விபூதி யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-விபூதி யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:47 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத தஷமோ அத்யாய:।

விபூதி யோகம்



ஸ்ரீபகவாநுவாச।
பூய ஏவ மஹாபாஹோ ஷ்ருணு மே பரமம் வச:।
யத்தே அஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா॥ 10.1 ॥



ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:।
அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:॥ 10.2 ॥



யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே॥ 10.3 ॥



புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம:।
ஸுகம் து:கம் பவோ அபாவோ பயம் சாபயமேவ ச॥ 10.4 ॥



அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஷோ அயஷ:।
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:॥ 10.5 ॥



மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா।
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:॥ 10.6 ॥



ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:।
ஸோ அவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஷய:॥ 10.7 ॥



அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே।
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:॥ 10.8 ॥



மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்।
கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச॥ 10.9 ॥



தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்।
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே॥ 10.10 ॥



தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:।
நாஷயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா॥ 10.11 ॥



அர்ஜுந உவாச।
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்।
புருஷம் ஷாஷ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்॥ 10.12 ॥



ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா।
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே॥ 10.13 ॥



ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஷவ।
ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:॥ 10.14 ॥



ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம।
பூதபாவந பூதேஷ தேவதேவ ஜகத்பதே॥ 10.15 ॥



வக்துமர்ஹஸ்யஷேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:।
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி॥ 10.16 ॥



கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்।
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ அஸி பகவந்மயா॥ 10.17 ॥



விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந।
பூய: கதய த்ருப்திர்ஹி ஷ்ருண்வதோ நாஸ்தி மே அம்ருதம்॥ 10.18 ॥



ஸ்ரீபகவாநுவாச।
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:।
ப்ராதாந்யத: குருஷ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே॥ 10.19 ॥



அஹமாத்மா குடாகேஷ ஸர்வபூதாஷயஸ்தித:।
அஹமாதிஷ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச॥ 10.20 ॥



ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஷுமாந்।
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஷஷீ॥ 10.21 ॥



வேதாநாம் ஸாமவேதோ அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:।
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா॥ 10.22 ॥



ருத்ராணாம் ஷங்கரஷ்சாஸ்மி வித்தேஷோ யக்ஷரக்ஷஸாம்।
வஸூநாம் பாவகஷ்சாஸ்மி மேரு: ஷிகரிணாமஹம்॥ 10.23 ॥



புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்।
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர:॥ 10.24 ॥



மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்।
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:॥ 10.25 ॥



அஷ்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:।
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி:॥ 10.26 ॥



உச்சை:ஷ்ரவஸமஷ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்।
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்॥ 10.27 ॥



ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்।
ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி:॥ 10.28 ॥



அநந்தஷ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்।
பித்ருணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம்॥ 10.29 ॥



ப்ரஹ்லாதஷ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்।
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோ அஹம் வைநதேயஷ்ச பக்ஷிணாம்॥ 10.30 ॥



பவந: பவதாமஸ்மி ராம: ஷஸ்த்ரப்ருதாமஹம்।
ஜஷாணாம் மகரஷ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ॥ 10.31 ॥



ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யம் சைவாஹமர்ஜுந।
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம்॥ 10.32 ॥



அக்ஷராணாமகாரோ அஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச।
அஹமேவாக்ஷய: காலோ தாதா அஹம் விஷ்வதோமுக:॥ 10.33 ॥



ம்ருத்யு: ஸர்வஹரஷ்சாஹமுத்பவஷ்ச பவிஷ்யதாம்।
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா॥ 10.34 ॥



ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்।
மாஸாநாம் மார்கஷீர்ஷோ அஹம்ருதூநாம் குஸுமாகர:॥ 10.35 ॥



த்யுதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்।
ஜயோ அஸ்மி வ்யவஸாயோ அஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்॥ 10.36 ॥



வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோ அஸ்மி பாண்டவாநாம் தநம்ஜய:।
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஷநா கவி:॥ 10.37 ॥



தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்।
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்॥ 10.38 ॥



யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந।
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்॥ 10.39 ॥



நாந்தோ அஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரம்தப।
ஏஷ தூத்தேஷத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா॥ 10.40 ॥



யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா।
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ஷஸம்பவம்॥ 10.41 ॥



அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந।
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஷேந ஸ்திதோ ஜகத்॥ 10.42 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விபூதியோகோ நாம தஷமோ அத்யாய:॥ 10 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விபூதி யோகம்' எனப் பெயர் படைத்த பத்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.


பகவான்: பலவானே, உனக்கு பேரானந்தம் தரக்கூடிய - உன் நலம் கருதி நான் கூறப்போகும் விஷயங்களைக் கேட்பாயாக.

நானே முதற்காரணம் என்பதால், தேவர்களோ, முனிவர்களோ எனது வைபவங்களை அறியார்.

என்னை லோகங்களுக்கெல்லாம் இறைவனாகவும், ஆதியாகவும், பிறவாதவனாகவும் அறிபவன் - மனிதருள் மயக்கமற்றவன் ஆவான். அவன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, வாய்மை, புலனடக்கம், அமைதி, இன்ப துன்பங்கள், பிறப்பு, இறப்பு, அச்சம், அஞ்சாமை, அகிம்சை, சமநோக்கு, திருப்தி, தவம், தானம், புகழ், இகழ் அனைத்தும் என்னாலேயே உண்டாக்கப்படுகின்றன.

மஹரிஷிகள் எழுவர், அவர்களுக்கு முந்தைய முனிவர் நால்வர், மற்றும் மனுக்களும் எனது மனதிலிருந்து உதித்தவராவர். ஜீவராசிகள் அனைவரும் அவர்களிடமிருந்தே தோன்றினர்.

(மஹரிஷிகள்: வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், கச்யபர், பரத்வாஜர். முனிவர்கள் : ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர். மனுக்கள்: 14 பேர்)

எனது வைபவங்களை அறிபவன், சந்தேகமின்றி எனக்கு பக்தித் தொண்டாற்றுகிறான். அனைத்துக்கும் நானே உற்பத்தி மூலமாவேன். அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதையறிந்த அறிஞர்கள் இதயபூர்வமாக எனது தொண்டில் ஈடுபடுகின்றனர்.

தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னிலேயே உள்ளன. எனக்காக வாழும் அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றிப் பேசுவதிலும், உபதேசித்துக் கொள்வதிலும் பெரும் திருப்தியும், ஆனந்தமும் கொள்கின்றனர்.

என்மேல் பக்தி கொண்டு அன்புடன் என்னை வழிபடுவோருக்கு, என்னை அடைவதற்கான வழியை வழங்குகிறேன். கருணையுடன் அவர்கள் இதயத்திலிருந்தபடி, அங்கிருக்கும் அறியாமை இருளை, ஞான தீபத்தால் போக்குகிறேன்.

அர்ஜூனன்: நீரே பரப்பிரம்மம், இறுதியான புகலிடமும், தூய்மைப்படுத்துபவரும், மெய்ப்பொருளும், நித்தியமான பரம புருஷருமாவீர்; ஆதிதேவர், பிறப்பற்ற மூலபுருஷர், எங்கும் நிறைந்த அழகு. உம்மைக் குறித்து நாரதர், கணாதர், தேவலர், வியாசர் போன்ற பெரு முனிவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர். இப்போது நீரே அதைக் கூறுகின்றீர், கேசவா, நீர் கூறிய அனைத்தையும் உண்மையென அப்படியே ஏற்கிறேன். தேவர்களோ, அசுரர்களோ உமது இயல்பை அறிவதில்லை.

அகில நாயகா, பரத புருஷரே, தேவாதிதேவா, ஆதிமூலமே, உமது சுயசக்தியால் உம்மை உள்ளபடி அறிகிறீர்.

எத்தகைய மகிமைகளால் நீர் எங்கும் நிறைந்திருக்கிறீரோ, அவற்றை எனக்கு விவரிப்பீராக. நான் உம்மை எங்கனம் தியானிப்பது? எவ்வுருவில் உம்மை நினைப்பது? ஜனார்த்தனா, இதனை மீண்டும் கூறுவீராக. அமுதமாகிய உமது சொற்களைக் கேட்பதில் நான் சலிப்படைவதே இல்லை.

பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்கள் எல்லையற்றவை. அவற்றில் சிலவற்றைக் கூறுகிறேன்.

குடாகேசா (அயர்வை வென்றவன்), எல்லா ஜீவர்களின் இதயத்திலும் நான் ஆன்மாவாய் உள்ளேன். உயிர்களின் ஆரம்பம், இடை, இறுதியும் நானே. ஆதித்யர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளில் நானே சூரியன். வாயு தேவதைகளுள் நானே மரீசி. நட்சத்திரங்களுள் சந்திரன் நான். வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு நான்.

ருத்திரர்களுள் நானே சங்கரன். யட்ச ராட்சசர்களில் நிதிக் காப்பாளனான குபேரன் நான். வசுக்களில் நெருப்பு நான். சிகரங்களில் மேரு. புரோகிதர்களில் பிருஹஸ்பதி. படைத்தலைவர்களுள் முருகன் நான். நீர் நிலைகளில் சமுத்திரம். பெரு முனிவர்களில் பிருகு நான். சப்தங்களில் ஓம் நான். யாகங்களில் புனித நாம ஜபம் நான். அசையாதவற்றுள் இமயமாக இருக்கிறேன்.

மரங்களில் நான் ஆலமரம். தேவ முனிவர்களில் நாரதன். கந்தர்வரில் நான் சித்ரரதன். சித்தர்களில் கபிலமுனி நான். குதிரைகளில் அமிர்தத்தில் தோன்றிய உச்சைச்சிரவஸ். பட்டத்து யானைகளில் ஐராவதம் நான். மனிதருள் மன்னன் நான். ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான். பசுக்களில் சுரபி நான். இனவிருத்தியாளருள் காதற்கடவுள் மன்மதன் நான். சர்ப்பங்களில் வாசுகி நான். தெய்வீக நாகங்களில் நான் அனந்தன். நீர்வாழ் தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அர்யமா. நீதிபதிகளில் யமன் நான்.

அசுரர்களில் பெரும் பக்தரான பிரஹலாதன் நான். அடக்கி ஆளுபவற்றுள் நான் காலம். விலங்குகளுள் சிம்மம் நான். பறவைகளில் கருடன் நான். தூய்மைப்படுத்துபவற்றுள் காற்று நான். ஆயுதம் ஏந்துவோரில் நான் ராமனாகவும், மீன்களில் மகரமாகவும், நதிகளில் கங்கையாகவும் நான் உள்ளேன். படைப்புகளில் ஆதி, அந்தம், நடுவாக இருக்கிறேன். அனுபவ அறிவில் ஆன்ம அறிவாக நான் உள்ளேன். விவாதிப்போரில் முடிவான உண்மையாக இருக்கிறேன்.

எழுத்துக்களில் அகரம் நான். கூட்டுச்சொற்களில் இரு சொல் நானே. தீராக்காலமும் நானே. படைப்போரில் பிரம்மனாக இருக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். இனியும் உண்டாகக்கூடிய உற்பத்தியாளனும் நான். பெண்களில் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, பொறுமை நான்.

மந்திரங்களில் பிருஹத் ஸாமம் நான். கவிதைகளில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவ காலங்களில் வசந்த காலம். வஞ்சகரில் சூது நான். ஒளிர்வனவற்றில் தேஜஸ் நான். நானே வெற்றியும், தீரச்செயலும், வலிமையும் ஆவேன். விருஷ்ணி குலத்தில் வாசுதேவன் நான். பாண்டவர்களில் அர்ஜூனன் நான். முனிவர்களில் வியாசர் நான். சிந்தனையாளர்களில் உஷநா. தண்டிப்பவற்றுள் செங்கோல் நான். வெற்றியை வேண்டுவோரிடம் நீதி நான். ரகசியங்களில் மெளனம் நான். ஞானிகளின் ஞானம் நானே.

இருப்பவைகள் அனைத்திற்கும் உற்பத்தி விதை நானே. அசையும், அசையா எவையும் நானின்றி இல்லை. எதிரிகளை வெல்பவனே, எனது வைபவங்களுக்கு எல்லையில்லை. அவற்றுள் சில உதாரணங்களையே இப்போது கூறினேன். அழகும், மகிமையும், வலிமையும் பொருந்திய எதுவாயினும் அவை எனது தேஜஸின் ஒரு சிறு பொறியிலிருந்தே வந்தவையாகும். ஒரு சிறு பின்னப் பகுதியால் நான் பிரபஞ்சம் முழுவதையும் தாங்குகிறேன்.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum