Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மதுரை வீரன் - மணா
Page 1 of 1
மதுரை வீரன் - மணா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகும்போது கவனித்து இருக்கிறீர்களா? கீழச்சித்திரை வீதியில் அம்மன் சன்னதியின் நுழை வாசலுக்கு அருகில் எளிமையானபடி அமைந்திருக்கிறது மதுரை வீரன் கோயில். எதிரே சிற்பங்களுக்குப் பிரசித்தி பெற்ற புது மண்டபம்.
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் இந்தக் கோயிலுக்கு முன், சாலை ஓரத்திலேயே பொங்கல் வைக்கிறார்கள். இரும்பு கேட்டைத் தாண்டிப் போனால், சற்று இருளில் தெரியும் மிதமான வெளிச்சத்திற்கிடையில் விறைப்புடன் ‘மதுரை வீரன்’. ஓங்கிய வலது கையில் நீண்ட வாள், இன்னொரு கையில் சுக்கு மாந்தடி, கழுத்தில் எலுமிச்சம் பழமாலை, ஒரு புறம் வெள்ளையம்மாள். இன்னொரு புறம் பொம்மி. இடுப்பில் வேட்டியை இறுகக் கட்டி, தலையில் சாய்ந்த கிரீடத்துடன் காட்சியளிக்கும் மதுரை வீரனுக்குப் பின்னால் நானூறு வருஷங்களுக்கு முந்தைய கதை.
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.
நானூறு வருஷங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் மதுரைவீரன் கதை இன்னும் கதைப்பாடலாக மதுரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு வீரன், மதுரைவீரனாகி, பொம்மியும், வெள்ளையம்மாளும் தெய்வங்களாக வணங்கப்பட்டிருகிறார்கள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் எடுத்து வளர்க்கப்பட்டாலும், அன்றைக்குக் கலப்பு மணத்துக்கு இருந்த எதிர்ப்புக்கான சாட்சியமாக நிற்கிறது மதுரை வீரன் கோயில்.
மதுரை மீனாட்சி கோயில் அருகேயுள்ள மதுரை வீரன் கோயிலுக்கு சாதிப்பாரபட்சமில்லாமல் பலரும் வந்து வழிபடுகிறார்கள். அர்ச்சனை, அபிஷேகம் எதுவும் இங்கே கிடையாது. தீபாராதனை மட்டும் காட்டுகிறார்கள். செவ்வாய், வெள்ளியன்று விசேஷமாகக் கூட்டம் கூடுகிறது. மகா சிவராத்திரியன்று பல பகுதிகளிலிருந்தும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்து அலை மோதுகிறது.
வீரன்சாமிக்கு முன்னால், பதினெட்டாம் படிகள், பக்கத்தில் விதவிதமான வாட்கள், அரிவாள்கள்.
மதுரையிலுள்ள பழமையான தெய்வங்களில் ஒன்றான மதுரை வீரனுக்கு மஞ்சணக்காரத் தெரு, பந்தடி தெருக்களில் இன்னும் நான்கு கோயில்கள் இருக்கின்றன. மதுரை வீரனைக் குலதெய்வமாக வழிபடுகிறவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்.
இன்னும் மதுரையிலுள்ள பழங்காலத்துச் சுவடிகளில் அம்மானை என்கிற பெயரில் மதுரை வீரன் கதை சிற்றிலக்கியமாக நீடிக்கிறது.
திருடர் பயத்தை ஒழித்து வீரனைப் பற்றிப் புகழ்பாடும் வாய்மொழிப் பாடல்கள் நானூறு வருஷகால இடைவெளியைத் தாண்டி இப்போதும் கேட்கின்றன.
நெற்றிப் பொட்டு; முறுக்கிய மீசை; ஓங்கிய கை என்று உக்கிரத்துடன் நிற்கிறார் மதுரை வீரன். பக்கத்தில், சாதி பார்க்காத காதலைச் சொன்னபடி பொம்மி, வெள்ளையம்மாளின் வடிவங்கள்.
வீரனுக்கும் வீரத்துக்கும் எப்போதுதான் மதிப்பில்லாமல் போயிருக்கிறது?
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் இந்தக் கோயிலுக்கு முன், சாலை ஓரத்திலேயே பொங்கல் வைக்கிறார்கள். இரும்பு கேட்டைத் தாண்டிப் போனால், சற்று இருளில் தெரியும் மிதமான வெளிச்சத்திற்கிடையில் விறைப்புடன் ‘மதுரை வீரன்’. ஓங்கிய வலது கையில் நீண்ட வாள், இன்னொரு கையில் சுக்கு மாந்தடி, கழுத்தில் எலுமிச்சம் பழமாலை, ஒரு புறம் வெள்ளையம்மாள். இன்னொரு புறம் பொம்மி. இடுப்பில் வேட்டியை இறுகக் கட்டி, தலையில் சாய்ந்த கிரீடத்துடன் காட்சியளிக்கும் மதுரை வீரனுக்குப் பின்னால் நானூறு வருஷங்களுக்கு முந்தைய கதை.
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.
நானூறு வருஷங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் மதுரைவீரன் கதை இன்னும் கதைப்பாடலாக மதுரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு வீரன், மதுரைவீரனாகி, பொம்மியும், வெள்ளையம்மாளும் தெய்வங்களாக வணங்கப்பட்டிருகிறார்கள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் எடுத்து வளர்க்கப்பட்டாலும், அன்றைக்குக் கலப்பு மணத்துக்கு இருந்த எதிர்ப்புக்கான சாட்சியமாக நிற்கிறது மதுரை வீரன் கோயில்.
மதுரை மீனாட்சி கோயில் அருகேயுள்ள மதுரை வீரன் கோயிலுக்கு சாதிப்பாரபட்சமில்லாமல் பலரும் வந்து வழிபடுகிறார்கள். அர்ச்சனை, அபிஷேகம் எதுவும் இங்கே கிடையாது. தீபாராதனை மட்டும் காட்டுகிறார்கள். செவ்வாய், வெள்ளியன்று விசேஷமாகக் கூட்டம் கூடுகிறது. மகா சிவராத்திரியன்று பல பகுதிகளிலிருந்தும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்து அலை மோதுகிறது.
வீரன்சாமிக்கு முன்னால், பதினெட்டாம் படிகள், பக்கத்தில் விதவிதமான வாட்கள், அரிவாள்கள்.
மதுரையிலுள்ள பழமையான தெய்வங்களில் ஒன்றான மதுரை வீரனுக்கு மஞ்சணக்காரத் தெரு, பந்தடி தெருக்களில் இன்னும் நான்கு கோயில்கள் இருக்கின்றன. மதுரை வீரனைக் குலதெய்வமாக வழிபடுகிறவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்.
இன்னும் மதுரையிலுள்ள பழங்காலத்துச் சுவடிகளில் அம்மானை என்கிற பெயரில் மதுரை வீரன் கதை சிற்றிலக்கியமாக நீடிக்கிறது.
திருடர் பயத்தை ஒழித்து வீரனைப் பற்றிப் புகழ்பாடும் வாய்மொழிப் பாடல்கள் நானூறு வருஷகால இடைவெளியைத் தாண்டி இப்போதும் கேட்கின்றன.
நெற்றிப் பொட்டு; முறுக்கிய மீசை; ஓங்கிய கை என்று உக்கிரத்துடன் நிற்கிறார் மதுரை வீரன். பக்கத்தில், சாதி பார்க்காத காதலைச் சொன்னபடி பொம்மி, வெள்ளையம்மாளின் வடிவங்கள்.
வீரனுக்கும் வீரத்துக்கும் எப்போதுதான் மதிப்பில்லாமல் போயிருக்கிறது?
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum