இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா

Go down

ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா  Empty ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா

Post by ஆனந்தபைரவர் Thu Dec 16, 2010 4:04 pm

ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா  Aadhi+nayaka+perumal+moolavar
அகிலம் போற்றும் அரங்கனின் ஆலயம், “ஸ்ரீரங்கம்” என்றும் “திருவரங்கம்” என்றும் “கோவில்” என்றும் “பெரிய கோவில்” என்றும் போற்றப்படும் பேராலயம். இம் மண்ணுலகையும், மேலுள்ள விண்ணுலகையும் சேர்த்து ஆளும் பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன். உலகமேத்தும் உத்தமன் உகந்து உறையும் உன்னத உறைவிடம். தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்கிறான் பரந்தாமன். பாற்கடலில் அறிதுயில் புரியும் புருஷோத்தமன் புவன மக்கள் வாழ அன்போடு தென்திசை நோக்கி, குடதிசை முடியை வைத்துத் துயில்கிறான். குழலழகன், வாயழகன், கண்ணழகன் என்று அழகின் வடிவானவன் நம்மை வசீகரிக்கும் வலை விரித்துத் துயில் கொள்கிறான்.

தனிச்சிறப்பு:
இப்புவனத்தில் இறைவன் இருப்பிடம் பல இருப்பினும், இத்திருவரங்கம் திருக்கோவிலுக்கே தனிச்சிறப்பாக. வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத விசேஷப் பெருமைகள் பல உள்ளன. நாபிக்கமலத்திலிருந்து நான்முகனைப் படைத்தான் நாராயணன் என்பது நாமறிந்ததாகும். படைக்கும் தொழிலில் பணி செய்யப் பணித்தான் பரந்தாமன். பயந்தான் பங்கயப்பூவிலுதித்த பிரம்மன். ‘நாராயணா! நாளும் உன்னைத் தொழுதேத்த என்னுடன் இருக்க வேண்டும்’ என்று வேண்டினான் சதுர்முகன். வேண்டியதெல்லாம் தரும் கோதில்என வள்ளல் மணிவண்ணன் வந்துதித்தான். தான் தோன்றியாக (ஸ்வயம் வ்யதமாக) அரவணையில் துயிலும் அழகனாக, அற்புதமாக வடிவெடுத்தான் வேதத்தின் பயனானவன். அவனே இன்று அரங்கத்தில் துயில் கொண்டிருப்பவன். ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரத்தில் முதல் திவ்யதேசம் திருவரங்கமே! அது மட்டுமா? அருந்தமிழ் தெய்வப்புலவர்களாய் ஆராத காதலுடையவர்களாய் அவதரித்த ஆழாவார்கள் அனைவரும் பாடும் பெருமாள் பெரிய கோவிலில் உறையும் பெரிய பெருமாள். உன்னதமான ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் உயர்ந்த தலைநகரமாய் விளங்குவது திருவரங்கம் பெரிய கோவில். ஆளவந்தார், பெரியநம்பி, இராமானுஜர், பிள்ளை லோகாசார்யர் முதலான பெரியவர்கள் பேரன்புடன் பேணிக்காத்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன்.

ஆழ்வார்கள்:
ஆழ்வார்கள் அரங்கன் அருளாலே அருளிய அருந்தமிழ்ப் பாசுரங்கள் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்று போற்றப்படுகிறது. பக்தியில் ஆழ்ந்தவர்கள் ஆகையால் அவர்கள் ஆழ்வார்கள். ஆராத காதலுடன் அருளியதால் அருந்தமிழ்ப் பாக்கள் அருளிச் செயலாயின. இவ்வாழ்வார்களால் பாடல் பெற்று பெருமான் உறையும் தேசம் திவ்ய தேசமானது. அதில் தலையாய திவ்யதேசம் திருவரங்கம். நாலாயிரம் பாடிய நான்மறையாளர்களில் நற்றலைவனாய் நிற்பவர் நம்மாழ்வார். ஆழ்வார் திருநகரியில் அவதரித்த மாறனிவர். சடகோபன் என்றும் பெயர் பெற்றவர்.

தமிழ்வேதம்:
வேதத்தின் சுவைப்பயனானவன், நன்கோதும் நால்வேதத்துள் உகந்து உறைபவனானவன். வேதம் வடமொழியில் மட்டும் இருப்பது கண்டு வருத்தமுற்றான். பெரியவர் முதல் பேதையர் வரை அறியும் பொருட்டு நானிலம் போற்றும் நம்மாழ்வார் மூலமாக நான்மறையைத் தமிழில் பாசுரத்தில் கொடுத்தான். நான்கு வேதங்களுக்கும் சமமான நற்றமிழ்ப் பாசுரங்களைக் கொடுத்து உகந்தான்.

ஸ்ரீவைகுண்ட ஏகாதசி உற்சவம்-அத்யயனோற்சவம்:
திருவரங்கம் பெரிய கோவிலில் தொன்று தொட்டு ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு விழா எடுப்பது உண்டு. மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடங்கி பத்து நாள்கள் பரம்பொருள் வடமொழி வேதத்தைக் கேட்டு மகிழ்வான். ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் ஒரு சமயம் திருவரங்கனிடத்தில் தமிழ் வேதத்திற்கும் விழா எடுக்க வேண்டும் என்று வேண்டினார். விரும்பிய வரத்தைக் கொடுக்கும் வித்தகன் வியந்து விடை கொடுத்தான். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து விழா எடுத்தான் வேல்கலியன் (திருமங்கை ஆழ்வார்). ஸ்ரீவைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாள்கள் இராப்பத்து என்று பெயர் பெற்றது. ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய கருவறையிலிருந்து சீரிய சிங்கமாக மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு சீரிய சிங்காசனத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து தமிழ்வேதமான திருவாய் மொழியைக் கேட்டு மகிழ்வான். 1102 பாசுரங்கள் அடங்கிய ஸாம வேத ஸாரமான திருவாய்மொழியை அனுதினமும் நூறு நூறு பாசுரங்களாகக் கேட்டான். அரையர் வம்சத்தவர்கள் கையில் தாளத்துடன் இசைக்க, இனிய ராகத்தில் செவிக்கினியதாக சேவித்து நிற்பார்கள். அது மட்டுமா? பாசுரத்தின் பொருளை நயமாக நடனமாடியும் காண்பித்து நிற்பார்கள்.

முத்தமிழ்ப் பெருவிழா
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்கிற முத்தமிழ் விழா இது. ஆமாம்! அருளிச்செயலை இயலாக அரையர் ஸ்வாமிகள் சொல்ல, கையில் தாளத்துடன் இசையைச் சேர்க்க, பொருளை நாடகமாக நடித்து அபிநயம் செய்வார்கள். அரங்கன் ஆர அமர்ந்து அருளிச்செயல் கேட்டு மகிழும் முப்பெரும் விழாவாக ஆக்கிக் கொடுத்தார் பைந்தமிழ்ப் பரகாலன். பின்பு வந்த ஆசார்யர்கள் திருவாய் மொழியுடன் மற்ற திவ்யப்ரபந்த பாசுரங்களையும் சேர்த்து முதல்பத்து நாள்கள் விழா எடுத்தார்கள். ஸ்ரீவைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாள்கள் பகல் பத்து என்று பெயர் கொடுத்தார்கள். பத்து தினங்களும் பரந்தாமனான எம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் வீற்றிருந்து இரண்டாயிரம் பாசுரங்களை அரையர் ஸ்வாமிகள் சேவிக்க, கேட்டு மகிழ்வான். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் சூழ்ந்து அமர்ந்து அனுபவிப்பார்கள்.

பெரிய திருநாள்:
திருவரங்கத்தில் எல்லாமே பெரிய என்கிற அடைமொழியுடன் கூடியது. கோவில்-பெரிய கோவில், பெருமாள்-பெரிய பெருமாள், பிராட்டியார்-பெரிய பிராட்டியார், மேளம்-பெரிய மேளம். இதே போல், இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாளையும் பெரிய திருநாள் என்று கொண்டாடுகிறார்கள். அமாவாசையன்று திருநெடுந்தாண்டகம் என்கிற திவ்யப்ரபந்தத்தோடு திருநாள் தொடங்கி, பிறகு பத்து நாள்கள் “பகல் பத்து” என்றும் அதன் பிறகு பத்து நாள்கள் “இராப் பத்து” என்றும் கடைசியாக மறுநாள் ஓராயிரம் பாசுரமான இயற்பா கேட்கும் நாள் என்று ஆக மொத்தம் 22 நாள்கள் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. நற்றமிழ் நூலான நாலாயிர திவ்யப்ரபந்தத்தை முத்தமிழின் துணை கொண்டு அனுபவிப்போம்! வாருங்கள். இந்தப் பெருவிழாவிற்குச் சென்று தீந்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு, கண்டு, அனுபவித்து இன்புறுவோம்.

நன்றி அம்மன் தர்சனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum