இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம்

2 posters

Go down

சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம் Empty சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம்

Post by ஆனந்தபைரவர் Wed Jan 12, 2011 12:38 pm

சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம் Agni-Veerapathirarபொதுவாக கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி சாமிமுன் வழிபடுவதைத் பார்த்திருப்போம். ஆனால் தட்டில் விளக்குகளை ஏற்றி அதனை உச்சந்தலையில் வைத்து வழிபடும் ஆலயம் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆம்! அதுதான் அக்னி வீரபத்திரர் ஆலயம்.

யார் இந்த அக்னி வீரபத்திரர்?

1. நாம் திருவிளையாடல் திரைப்படம் பார்த்திருப்போம்! "சக்தியில்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தியில்லை" எனும் தர்க்கம் சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெறுமல்லவா?

என்ன காரணம்?

பார்வதியின் தந்தையான தட்சன் சிவபெருமானை அழைக்காமல், அவரை அவமதித்து ஒரு மாபெரும் யாகம் வளர்ப்பார். அந்த யாகத்திற்கு, போய்த்தான் தீரவேண்டும் என்று அடம் பிடிப்பார் பார்வதி தேவி. “என்னை மதிக்காமல் அவமதிப்பதற்காகவே நடத்தப்படும் அந்த யாகத்திற்கு போக்கூடாது” என்று தடுத்து, அந்த யாகம் செய்யும் தட்சனை அழிப்பதற்காக, தானே தனது அம்சமாகிய ஒருவரை அனுப்புவார் சிவபெருமான். அவர்தான் இந்த “அக்னி வீரபத்திரர்”.

சிவனின் அம்சமாகிய அக்னி வீரபத்திரர் தட்சனை அழித்துவிடுவார். அதனால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் அதாவது கொலைப்பழி பாவம் பிடித்து விடும். இந்த தோஷத்தைப் போக்குவதற்காக வீரபத்திரர் (சிவபெருமான்) பூலோகத்தில் வந்து சிவபூஜை செய்யவேண்டும். சிவபெருமான் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் கழற்றி ஒரு நதியில் வீசவேண்டும். அவ்வாறு வீசப்பட்ட ஆபரணங்கள் எந்த இடத்தில் கரை ஒதுங்குகிறதோ அந்த இடத்தில் சிவபூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று மகரிஷிகள் சிவபெருமானிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறே சிவபெருமான், வீசப்பட்ட நகைகள் கரை ஒதுங்கிய இடத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்வார். அந்த இடத்தில் இன்று வீரபத்திரர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஆலயம் நாகபட்டினம் பஸ் நிலையம் அருகில் உள்ளது.

2. கும்பகோணம் மகாமக குளத்தருகே இருந்த வீர சைவ மடத்தில் தமிழ்ப் புலவரான ஒட்டக்கூத்தர் தங்கியிருந்தார். அவர் அருகில் தாராசுரம் ஆலயத்தில் உள்ள வீரபத்திரரை தினமும் சென்று வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அந்த வீர சைவ மடத்தின் வழியே தேவாரப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஒருவர் சென்றார். அவரிடம் ஒட்டக்கூத்தர், அந்தப் பாடலுக்கு விளக்கம் கேட்டார். அதற்கு அவர் தெரியவில்லையென்று கூற, ஆத்திரமடைந்த ஒட்டக்கூத்தர் அவரை அடித்து விட்டார், அடி தாங்காமல் அந்த மனிதர் இறந்தும் விட்டார். இதனைக்கண்டதும், ஊரார் மற்றும் இறந்துபோன அந்த நபரின் உறவினர்களும் ஒட்டக்கூத்தரை தேடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் ஒட்டக்கூத்தர் நடந்த சம்பவத்தை மன்னன் ராஜராஜ சோழனிடம் முறையிட்டார். நற்புலவரை இழக்கக்கூடாது என்று நினைத்த மன்னன், ஒட்டக்கூத்தரை ஒரு மறைவிடத்தில் மறைந்திருக்கச்செய்து, தன் மகனைப் பல்லக்கில் அமர வைத்து, வந்த ஊராரிடம் இவர்தான் அடித்தவர் எனக் காட்டினார். பல்லக்கில் இருந்த இளவரசனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஒட்டக்கூத்தர் தானே வெளியில் வந்து, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, "எனக்கு தண்டனை கொடுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை, நான் தினமும் தாராசுரம் வீரபத்திர சுவாமியை வணங்குவது வழக்கம், ஆனால் இன்று என்னால் வணங்க முடியவில்லை, அவரை மட்டும் ஒருமுறை தரிசித்துவிட்டு வர அனுமதி கொடுங்கள்" என்றார். பொதுமக்கள் ஒப்புக்கொண்டனர்.

ஒட்டக்கூத்தர் தாராசுரம் வீரபத்திரரை தரிசித்துவிட்டு, அருகிலுள்ள மோட்சாளம்மன் சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டார். பொதுமக்களும் விடுவதாக இல்லை, இரவு முழுவதும் வெளியில் காத்திருந்தனர். கலங்கிய ஒட்டக்கூத்தர், தன்னைக் காக்கும்படி மோட்சாளம்மனிடம் மனம் உருகி வேண்டினார். அம்பாள் அவருக்குக் காட்சி தந்து, "உனது மானசீக, இஷ்ட தெய்வமான வீரபத்திரர் தட்ச யாகத்தை வென்றது பற்றி பரணி பாடு, வீரபத்திரர் உன்னைக் கட்டாயம் காத்தருள்வார்" என்று கூறி மறைந்தார். ஒட்டக்கூத்தர், வீரபத்திரர் பற்றி "தக்கயாகப்பரணி" பாடினார். மறுநாள் காலை, தான் எழுதிய அந்தப் பாடலை சன்னல் வழியாக பொதுமக்களிடம் கொடுத்தார். அதனைப் படித்த பொதுமக்கள் ஒரு வழியாகக் கோபம் குறைந்து, அவரை மன்னித்து, அந்தப் பாடலுக்காகப் பாராட்டிவிட்டுச் சென்றனர். பிறகு அந்தப் பாடல்கள் முறையாக அரங்கேற்றம் செய்யப்பட்டன.

3. மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டிய மன்னனுக்கு குழந்தையில்லை. அவனது மனைவி காஞ்சனமாலை பார்வதியின் பக்தை ஆவாள். அவளுக்கு அருள் செய்வதற்காக ‘மீனாட்சி’ என்ற பெயரில் அம்பிகை அவர்கள் இல்லத்தில் அவதரித்தாள். உலகையே வென்ற மீனாட்சி, கைலாயத்தில் சிவனைக் கண்டாள். தனது மணாளன் அவரே என உணர்ந்தாள். அவளை மணந்து கொள்வதற்காக சிவன், கைலாயத்தில் இருந்து மதுரை வந்தார். அனைத்து தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் மதுரைக்கு வந்து விட்டனர். தனது திருமணத்திற்கு பாதுகாப்பாக முனீஸ்வரர், ஜடாமுனி போன்ற காவல் தெய்வங்களை சிவபெருமான், திசைக்கு ஒருவராக நிறுத்தி வைத்தார். தென்திசைக்கு தனது அம்சமான வீரபத்திரரை நிறுத்தினார்.

பிற்காலத்தில் கர்நாடகாவில் வசித்த வீரபத்திரர் பக்தர்கள் சிலர், மதுரை வந்தனர். அவர்கள், மதுரையில் அக்னி வீரபத்திரர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

சூரகுடி அருள்மிகு அக்னி வீரபத்திரர்

ஸ்தல புராணம் : மதுரையிலிருந்து தென்திசைக்கு வந்து காவல் செய்த அக்னி வீரபத்திரர் இங்கு சூரகுடியில் இருந்த ஸ்தல விருட்சமான வாவரச மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறியதாக வரலாறு. வீரபத்திரர் கம்பீரமாக நின்று காவல் காத்து குடியிருந்த இடமாதலால் இந்த இடத்திற்கு சூரகுடி என்றும் பெயர் ஏற்பட்டது.

கடந்த தலைமுறைவரை இந்த இடத்தில் அக்னி வீரபத்திரருக்கு கோயில் கட்ட முயற்சித்து அது நடைபெறவில்லை. காரணம் ஒவ்வொரு தலைமுறையிலும், கோயில் கட்டுவதற்காக முயலும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மாத்திரம் வீரபத்திரர் பலமுறை கனவில் வந்து “எனக்கு, கட்டிடமோ, சிலையோ,கோயிலோ தேவையில்லை. இங்குள்ள ஸ்தல விருட்சமான வாவரச மரத்தில்தான் நான் குடியிருப்பேன். எனக்கு கோயில் எப்பொழுது கட்டவேண்டும் என்று நான் கூறுகிறோனோ அப்போது, ஸ்தல விருட்சம் இருந்த இடத்தில்தான் கட்டவேண்டும் என்று கூறியதாக அறியப்பட்டது. ஆனால் ஊர்மக்கள் இதனை நம்பாமல் பலமுறை கோயில் கட்ட முயற்சித்தும் நடைபெறவில்லை. மென்மேலும் சோதனைகள் ஏற்பட்ட விசயம் ஊரறிந்த உண்மை. மிகவும் சக்தி வாய்ந்த இந்த வீரபத்திரரின் வாக்குகளை அவமதித்தவர்கள், கோயில் கட்ட முழு முயற்சி எடுத்தவர்கள் ஊரிலேயே வசிக்க முடியாமல், வெளியூரில் வசிக்கும்படியான பல சோதனைகள் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கிருந்த ஸ்தல விருட்சம் சாய்ந்து, பட்டுவிடுகிற சூழ்நிலையில் திடீரென அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தின் நபரின் கனவில் அக்னி வீரபத்திரர் தோன்றி, "இந்த இடத்தில் நீ இப்போது கோயில் கட்டத் தொடங்கு" என்று உத்தரவிட்டார். ஆனால் கனவு கண்ட நபர் சாமி கும்பிடாத சுத்த நாத்திகவாதியாக இருந்தும் இந்த விசயத்தை ஊர் மக்கள் முன் கொண்டுவந்து கோயில் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

[அவருடைய வாரிசில் ஒருவர், எந்தச் சன்னதிப்பக்கமும் எட்டிக்கூடப் பார்க்காத, நாத்திகனாய்.... சென்னையில் பணியிலிருந்த முப்பது வயதே நிரம்பிய அஇளைஞனை வேலையிலிருந்து ஓய்வளித்து, சூரகுடிக்கு "அக்னி வீரபத்திரர்" மகிமையால் வரவழைத்து அந்த இளைஞனுடைய]

சூரகுடி கிராமத்து மக்கள் மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்களின், முன் முயற்சியில் இன்று சக்தி வாய்ந்த சிவபெருமானின் அம்சமான "அக்னி வீரபத்திரர்" ஆலயம் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கையில் சூலாயுதத்துடன் தட்சனை வதம் செய்யும் கம்பீரத் தோற்றத்துடன் கண்கொள்ளாக் காட்சியளிக்கும் "சூரகுடி அக்னி வீரபத்திரர்" ஆலய கும்பாபிஷேகம் வரும் ஆவணி மாதம் 14-ம் தேதி, (ஆகஸ்ட் 30) ஞாயிறு காலை 07.30-9.00 மணியளவில் நடைபெற இருக்கிறது.

பக்தகோடிகள் அனைவரும் தவறாமல் வருகை தந்து அக்னி வீரபத்திரரின் ஆசியைப் பெற்றுச்செல்ல வேண்டுமாய் சூரகுடி கிராமத்தார்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!

சிறப்பம்சம்

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம், பௌர்ணமி, சிவராத்திரி நாட்கள் வீரபத்திரருக்கு விசேடமான நாட்களாகும்.

வீரபத்திரருக்கு ராஜராயுடு அதாவது ‘அனைவருக்கும் தலைவன்’மற்றும் ருத்ரபாலகர் என்ற பெயர்களும் உண்டு.

வேண்டுதல் பலன்

உயர் பதவி, தலைமைப் பொறுப்பு, வீடு, கட்டிடம் கட்டுவதில் தடங்கல், விளைச்சலில் குறைவு, நிலபுலப் பிரச்சினைகள், பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டுபவர்கள், மனக்குழப்பம், மரண பயம், திருமணம் தள்ளிப்போதல், குடும்பத்திற்குள் தகராறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நினைத்த காரியம் நிவர்த்தியடைதல், கிரக தோஷம், பயந்த சுபாவம், புத்தி சுவாதீனம் உள்ளவர்கள், அம்மை, தோல் வியாதி உள்ளவர்கள் வேண்டிக்கொள்ளலாம். வெற்றி நிச்சயம்.

பிரார்த்தனை

வீரபத்திரருக்கு வழக்கமான அர்ச்சனை, வெற்றிலை, தேங்காய் வைத்து படைத்து அந்த தேங்காய்த் தண்ணீரைப் பருகியும், அதனை உடலில் தேய்த்தும், ஒன்பது நெய் விளக்கை ஏற்றி ஒரு தட்டில் வைத்து அதைத் தலைமீது சுமந்து பூஜை முடியும்வரை, கவனம் சிதறாமல் முழு மனதுடன் ஒரே எண்ணத்தில் மனமுருகி வேண்டிக்கொண்டால் கைமேல் பலன் கிட்டும் என்பது உறுதி.

நன்றி அதிகாலை.காம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம் Empty Re: சிவகங்கை மாவட்டம் : சூரகுடி "அக்னி வீரபத்திரர்" ஆலய ஸ்தல புராணம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:42 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum