இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தன்னையே சிலை வடித்த திருப்பூவனம் சிவன் - விசாலம்

2 posters

Go down

தன்னையே சிலை வடித்த திருப்பூவனம் சிவன் - விசாலம் Empty தன்னையே சிலை வடித்த திருப்பூவனம் சிவன் - விசாலம்

Post by ஆனந்தபைரவர் Fri Jan 21, 2011 1:06 pm

நந்தனாரின் சிவதரிசனத்திற்காக நந்திதேவர் நகர்ந்து வழிவிட்ட கதை நமக்கெல்லாம் தெரியும். அதே போல, திருஞானசம்பந்தருக்காவும் ஒரு முறை நந்தி விலகி சிவதரிசனத்திற்கு வழி வகுத்தது. இந்தக் கோயில் மதுரையிலிருந்து 18 கிமீ தூரத்தில் ராமேஸ்வரம் போகும் நெடுஞ்சாலையில் இருக்கிறது. இதில் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் இருந்து அருள் பாலிக்கிறார். இந்த புஷ்பவனேஸ்வரர் வந்த கதையே வேறு.

திருப்பூவனம் என்னும் ஊரில் பொன்னனையாள் என்ற ஒரு நடனமாது இருந்தாள். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் சிவனையே மனதில் நிலைநிறுத்தி பூஜித்து வந்தாள். அந்த திருப்பூவனத்தில் பூவனநாதர் கோயில் இருந்தது. சுற்றிலும் பூக்களால் நிரம்பி மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் ஸ்தலமாக அது இருந்தது. அந்த சிவனுக்கு பொன்னனையாள் முழுவதும் பொன்னால் அலங்கரிக்கவும், தங்கத்தினாலேயே சிலை அமைக்கவும் விரும்பினாள். அவள் நடனம் ஆடும்போதெல்லாம் அந்த சிவனையே நினைத்து ஆடுவாள். தினமும் அந்த பரமேஸ்வரனிடம் ”உன்னை தங்க விக்ரமாகவே காண விரும்புகிறேன். எனக்கு அந்த பாக்கியம் தருவாயா? என்னிடமோ அந்த அளவு செல்வம் இல்லை. எப்படி நான் உன் சிலையைத் தங்கத்தில் செய்யப் போகிறேன். இருந்தாலும் நான் விடுவதாயில்லை. என் பொருள் எல்லாம் உனக்கே அர்ப்பணம்" என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

ஆனாலும், அவளால் அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. சாப்பாடு தூக்கம் இல்லாமல் சதா இந்த சிந்தனையிலேயே இருந்து தன் இயலாமைக்காக வருத்தப்பட்டாள். பார்த்தார் பரமேஸ்வரன். தன் பக்தையின் இந்த நிலை அவரையும் கண்கலங்க வைத்தது. அவளுடைய பக்தியில் அவர் நெகிழ்ந்தார். சும்மா இருப்பாரா? மாறுவேஷம்தான் அவருக்குக் கை வந்த கலையாயிற்றே! பிட்டுக்கு மண் சுமந்தவர் ஆயிற்றே!

அவளுக்கு உதவ ஒரு சித்தர் போல வந்து கதவைத் தட்டினார். கதவைத் திறந்தாள் பொன்னனையாள்.

"நான் ஒரு சித்தன். உனக்கு உதவ வந்தேன்"

அப்படியே அவர் காலில் விழுந்த நடனமாது, "வாருங்கள், அமருங்கள். நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்றாள்.

"உன் கஷ்டம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானின் சிலையை எப்படித் தங்கமாக்குவது என மனம் ஏங்குகிறாய் இல்லையா?

"ஆமாம், சித்த புருஷரே! எனக்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”

"ஆம்! அதற்குத்தானே வந்திருக்கிறேன். எனக்குப் பித்தளை, ஈயம், செம்பு போன்றவைகளை ரசவாதம் செய்து தங்கமாக ஆக்கும் கலை தெரியும். உன்னிடம் இருக்கும் எல்லா பாத்திரங்களையும் தந்தால் எல்லாவற்றையும் தங்கமாக மாற்றி சிலையும் வடிக்கிறேன்"

"ஆஹா! என்ன பாக்கியம்! எல்லாம் அந்த சிவனருள்" என்று சொல்லியபடியே எல்லாப் பாத்திரங்களையும் அவரிடம் கொடுத்தாள்.

பரமேஸ்வரன் தன்னுடைய உருவத்தைத் தானே பொன்னால் வடித்தார். பக்தர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாரே! பிரம்படி வாங்கிய ஈஸ்வரனாயிற்றே!

விக்ரஹம் தயாரானது. அதன் ஒளியும் அழகும் விவரிக்க முடியாத பேரழகு. பார்த்தாள் பொன்னனையாள். ஆனந்தக் கண்ணீர் மல்க அதை அப்படியே அணைத்துக் கொண்டாள். ஆனந்த நடனம் ஆடினாள். அந்த விக்ரஹத்தைக் கொஞ்சினாள். கன்னத்தை தன் கைகளால் தடவி ஒரு கிள்ளு.. கிள்ளினாள். கோயிலில் தங்கச் சிலை அமர்ந்தது. இன்றும் கோயில் உற்சவ விக்ரஹத்தில் பொன்னனையாள் கிள்ளிய நகக்குறி இருக்கிறதாம்!

விட்ட இடத்திலிருந்து தொடருவோம். திருஞானசம்பந்தர் இந்த இடத்தை மிதித்ததுமே அங்கு ஓடும் வைகை ஆற்று மணல் முழுவதும் சிவலிங்கங்களாகத் தெரிந்தன. "அப்பா பரமேஸ்வரா! இது என்ன சோதனை? உன் மேல் கால் வைத்து நடந்து எப்படிக் கோயிலுக்கு வருவேன்? எனக்கு இங்கிருந்தே உன் தரிசனம் கிடைக்கட்டும். அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்" என்று கெஞ்சினார். உடனே புஷ்பவனேஸ்வர் காட்சி அளித்தார். இங்கும் நந்தி தேவன் சரியாகப் பார்க்க முடியாமல் மறைக்க வருந்தினார் சம்பந்தர். பரமேஸ்வரன் நந்திதேவனை சற்று ஒதுங்கி அமரும்படி பணித்தார். அவரும் நகர்ந்து கொண்டார்.

இந்தக் கோயிலில் நந்தி சற்று ஒதுங்கி இருப்பதைக் காணலாம். முன்பு திருப்பூவனம் என்று இருந்த பெயர், இப்போது திருப்புவனம் என்று ஆகி இருக்கிறது.

இந்தக் கோயிலின் பெருமை இன்னொரு சந்தர்ப்பத்திலும் தெரிய வருகிறது. தர்மயக்ஞன் என்ற அரசனின் தந்தை மரணம் அடைந்தார். அரசன் தன் தந்தையின் அஸ்தியை வடநாட்டில் கரைத்துப் பின் ஒரு கலசத்தில் ராமேஸ்வரத்திலும் கரைக்க எடுத்து வந்தார். அவருடன் சில பணியாட்களும்
வந்தனர். நடுவில் சற்று இளைப்பாற இந்தத் திருப்பூவனம் கோயிலுக்கு அருகில் அவர்கள் தங்கினார்கள். இரவில் ஒரு பணியாளன் அந்தக் கலசத்தைத் திறந்து பார்த்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அந்தக் கலசத்தில் அஸ்திக்குப் பதில் மலர்கள் இருந்தன. அப்படியே பிரமித்துப் போய் மூடி வைத்து விட்டான். இதை அரசனிடம் கூறவும் இல்லை.

மறுநாள் அவர்கள் பிரயாணம் தொடர ராமேஸ்வரமும் வந்தது. அங்கு அரசர் அந்தக் கலசத்தைத் திறக்க அதில் அஸ்தி இருந்தது. அப்போது அந்தப் பணியாளன் தான் திருப்பூவனத்தில் கண்ட காட்சியைச் சொன்னான். உடனே அரசர் இது உண்மையாக இருக்குமோ என்று திரும்பவும் அந்தக் கலசத்தை எடுத்துக் கொண்டு திருப்புவனம் வந்தார். அங்கு அதைத் திறந்து பார்க்க, திரும்பவும் அதில் மலர்கள் இருந்தனவாம். இது செவி வழி கேட்ட செய்தியாகக் கூறப்படுகிறது.

அன்றைய தினத்திலிருந்து அந்த இடம் மூதாதையர்களுக்குக் காரியங்கள் செய்யவும், திதி செய்யவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் திதி கொடுத்தால் மூதாதையர்கள் முக்தி அடைகிறார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

நன்றி நிலச்சாரல்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

தன்னையே சிலை வடித்த திருப்பூவனம் சிவன் - விசாலம் Empty Re: தன்னையே சிலை வடித்த திருப்பூவனம் சிவன் - விசாலம்

Post by ராகவா Sun Aug 17, 2014 6:12 pm

மிகவும் நன்றிகள் ...உங்கள் பகிர்விற்கு பாராட்டுக்கள்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum