இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

2 posters

Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 2:59 pm

1. கடல் தாவு படலம்

கடவுள் வாழ்த்து

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!'

1. கடல் தாவு படலம்

துறக்க நாட்டை இலங்கை என்று அனுமன் ஐயுற்றுத் தெளிதல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;
'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான். 1

இலங்கையைக் கண்ட அனுமன் ஆர்த்தல்

கண்டனன், இலங்கை மூதூர்க் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியின் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும் எல்லாம்;
அண்டமும் திசைகள் எட்டும் அதிர, தோள் கொட்டி ஆர்த்தான். 2

அப்போது மயேந்திர மலையில் நிகழ்ந்த குழப்பம்

வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள்தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான. 3

புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சீயம் பொங்கி,
உகல் அருங் குருதி கக்கி, உள்ளுற நெரிந்த; ஊழின்,
அகல் இரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி,
பகல் ஒளி கரப்ப, வானை மறைத்தன, பறவை எல்லாம். 4

மொய் உறு செவிகள் தாவி முதுகு உற, முறை கால் தள்ள,
மை அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய, மெல்லென் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் பற்றி, பிளிறின-களி நல் யானை. 5

பொன் பிறழ் சிமயக் கோடு பொடியுற, பொறியும் சிந்த,
மின் பிறழ் குடுமிக் குன்றம் வெரிந் உற விரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா, கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கவ்வி, வல்லியம் இரிந்த மாதோ. 6

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்ந் நெரிந்து சிந்த,
தூக்குறு தோலர், வாளர், துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்குறு செருவில், நேர்ந்தார் தாள் அற வீச, தாவி,
மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர்-விஞ்சை வேந்தர். 7

தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு என, குமிழி, பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே! 8

தாது உகு நறு மென் சாந்தம், குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலன் தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி, அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த. 9

'கடல் உறு மத்து இது' என்ன, கார் வரை திரியும்காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த் தவர் விசும்பின் உற்றார்;
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி, முற்றா
உடல் உறு பாசம் வீசாது, உம்பர் செல்வாரை ஒத்தார். 10

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார். 11

ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண,
சீறிய மனத்தர், தெயவ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார், அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த பைங் கிளிக்கு இரங்குகின்றார். 12

தேவர் முதலோர் விடைதர அனுமன் கடலைக் கடக்க விரைதல்

இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
'வித்தக! சேறி' என்றார்; வீரனும், விரைவது ஆனான். 13

'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி' என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான். 14

காலை ஊன்றி எழுந்த போது மலையிலும் கடலிலும் நிகழ்ந்த மாறுதல்கள்

'இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்;
விலங்கவும் உளது அன்று' என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித் துணை அழுத்தலோடும்,
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ! 15

வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை
தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன். 16

ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்,
'நாயகன் பணி இது' என்னா, நளிர் கடல் இலங்கை, தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான. 17

இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்,
பசையுடை மரனும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக, தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த. 18

மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ! 19

கீண்டது வேலை நல் நீர்; கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி, 'அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான்!' எனக் கருத்துள் கொண்டான். 20

வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
'உய்தும் நாம் என்பது என்னே? உறு வலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம்' என்று அஞ்சி, மறுக்கம் உற்று, இரியல்போனார். 21

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற, சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய, ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று, இலங்கைமேல் தவழ்ந்த மாதோ. 22

வானில் செல்லும் அனுமனின் தோற்றம்

இடுக்கு உறு பொருள்கள் என் ஆம்? எண் திசை சுமந்த யானை,
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்குறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந் நாள்,
முடுக்குறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான். 23

கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்ச, செல்லும் மாருதி, மறம் உள் கூர,
'அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னம்' என்னா,
கண்ணுதல் ஒழியச் செல்லும் கைலைஅம் கிரியும் ஒத்தான். 25

மாணி ஆம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம், அறம் பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன்தன்னைக்
காணிய, விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான். 26

மழை கிழித்து உதிர, மீன்கள் மறி கடல் பாய, வானம்
குழைவுற, திசைகள் கீற, மேருவும் குலுங்க, கோட்டின்
முழையுடைக் கிரிகள் முற்ற, முடிக்குவான், முடிவுக் காலத்து
அழிவுறக் கடுக்கும் வேகத் தாதையும் அனையன் ஆனான். 27

தடக் கை நால்-ஐந்து பத்துத் தலைகளும் உடையான்தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவப் பயன் அறுதலோடும்,
கெடக் குறி ஆக, மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான். 28

புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும் மா நகர், மனுவின் வந்த
திறத் தகை இராமன் என்னும் சேவகற் பற்றி, செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான். 29

கேழ் உலாம் முழு நிலாவின் கிளர் ஒளி இருளைக் கீற,
பாழி மா மேரு நாண, விசும்பு உறப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அருங் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள், வட பால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான். 30

அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட,
குடல் எலாம் அவுணர் சிந்த, குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்ல, சேண் விசும்பு ஒதுங்க, தெய்வக்
கடல் எலாம் கலங்க, தாவும் கலுழனும் அனையன் ஆனான். 31

வாலை உயர்த்தி அனுமன் வானில் சென்ற காட்சி

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற, அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்றகாறும் சென்ற கூலத்தன், 'விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்' என்று வானவர் மருள, சென்றான். 32

வெளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால், வேதம் ஏய்க்கும்
அளி, துப்பின் அனுமன் என்று ஓர் அருந் துணை பெற்றதாயும்,
களித்துப்புன் தொழில்மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று,
ஒளித்து, பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே. 33

மேருவை முழுதும் சூழ்ந்து, மீதுற்ற வேக நாகம்,
கார் நிறத்து அண்ணல் ஏவ, கலுழன் வந்துற்ற காலை
சோர்வுறு மனத்தது ஆகி, சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ் வால். 34

அனுமனின் வேகமும், கைகளின் தோற்றமும்

குன்றோடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்,
சென்றுறு வேகத் திண் கால் எறிதர, தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடையத் தாக்கி, மாக் கடல் உற்ற மாதோ. 35

வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது, 'ஏகுவான்தன் கருத்து என்கொல்?' என்னும் கற்பால்;
'விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று' என்னா, இம்பர் நாடு இரிந்தது அன்றே. 36

'ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய' என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும்,
ஆசையை உற்ற வேலை கலங்க, அன்று, அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன, மீன்கள் எல்லாம். 37

பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக் கை, தள்ளா நிமிர்ச்சிய, தம்முள் ஒப்ப,
ஒருவு அருங் குணத்து வள்ளல் ஓர் உயிர்த் தம்பி என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்த, அவ் இரண்டு பாலும். 38
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:00 pm

கடலில் இருந்து எழுந்த மைந்நாகத்தை உந்திவிட்டு, அனுமன் செல்லுதல்

இந் நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை,
திந் நாக மாவில், செறி கீழ்த் திசைக் காவல் செய்யும்
கைந் நாகம், அந் நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற,
மைந் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே. 39

மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள் உத்தரியத்தை ஒப்ப,
தீயோர் உளர் ஆகியகால், அவர் தீமை தீர்ப்பான்,
மாயோன் மகரக் கடல் நின்று எழு மாண்பது ஆகி, 40

எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்
கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்?' எனா அயிர்த்தான். 41

'நீர் மேல் படரா, நெடுங் குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர் மேல் படராது' என, சிந்தை உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி, விண்ணோர்
ஊர் மேல் படர, கடிது, உம்பரின்மீது உயர்ந்தான். 42

மைந்நாகம் மானிட வடிவில் வந்து உரைத்தல்

உந்தா முன் உலைந்து, உயர் வேலை ஒளித்த குன்றம்,
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி, ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி,
'எந்தாய்! இது கேள்' என, இன்ன இசைத்தது அன்றே; 43

'வேற்றுப் புலத்தோன் அலென்; ஐய! "விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை" என்று, அரி வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப் பட நூறிய வேலையின், வேலை உய்த்து,
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. 44

'அன்னான் அருங் காதலன் ஆதலின், அன்பு தூண்ட,
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை,
பொன் ஆர் சிகரத்து, இறை ஆறினை போதி என்னா,
உன்னா உயர்ந்தேன் - உயர்விற்கும் உயர்ந்த தோளாய்! 45

'"கார் மேக வண்ணன் பணி பூண்டனன்; காலின் மைந்தன்,
தேர்வான் வருகின்றனன், சீதையை; தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி; இதில் பெறும் பேறு இல்" என்ன,
நீர் வேலையும் என்னை உரைத்தது - நீதி நின்றாய்! 46

விருந்து உண்டு செல்ல மைந்நாகம் வேண்டுதல்

'"நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்" என்று நாடி,
இற்றே, இறை எய்தினை, ஏய்த்தது கோடி, என்னால்;
பொன்-தார் அகல் மார்ப! தம் இல்லுழை வந்தபோதே,
உற்றார் செயல் மற்றும் உண்டோ ?' என, உற்று உரைத்தான். 47

மீண்டு வரும்போது விருந்து உண்பென் என கூறி அனுமன் அகல்தல்

உரைத்தான் உரையால், 'இவன் ஊறு இலன்' என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு விளங்க, வீரன்
சிரித்தான், அளவே; சிறிது அத் திசை செல்ல நோக்கி,
வரைத் தாள் நெடும் பொன் குடுமித் தலை, மாடு கண்டான். 48

'வருந்தேன்; அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும், என் ஆசை நிரப்பி அல்லால்;
பெருந் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன்; நுகர்ந்தேன்; இதன்மேல் இனி ஈவது என்னோ? 49

'முன்பில் சிறந்தார், இடை உள்ளவர், காதல் முற்றப்
பின்பில் சிறந்தார், குணம் நன்று; இது பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்கண் உண்டே? 50

'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றி, என் ஆற்றல் கொண்டே,
மீண்டால் நுகர்வென் நின் விருந்து' என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பின்பட, முன்பு போனான். 51

நீர் மாக் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா,
'பார் மேல் தவழ் சேவடி பாய் நடவாப் பதத்து, என்
தேர் மேல் குதிகொண்டவன், இத் திறன் சிந்தைசெய்தான்
ஆர்மேல்கொல்?' என்று எண்ணி, அருக்கனும் ஐயம் உற்றான். 52

சுரசை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்

மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ' என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
'கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்?' என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54

'தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின்' என்றாள். 55

'பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால்' எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56

'காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை' என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, 'ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு' என்றான். 57

அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58

நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; 'எம்மை
ஆண்டான் வலன்' என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59

விண்ணவர் ஆசியுடன் அனுமன் மேற்செல்லல்

மின்மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி,
தன் மேனியளாய், அவன், தாயினும் அன்பு தாழ,
'என் மேல் முடியாதன?' என்று, இனிது ஏத்தி நின்றாள்;
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து, போனான்- 60

கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர்; ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்ய, 61

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப,
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணைக் களி செஞ் செவிக் காது நுங்க. 62

வழியை அடைத்து நின்ற அங்காரதாரையை அனுமன் வினவல்

வெங் கார் நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்,
'இங்கு ஆர் கடத்திர் எனை?' என்னா, எழுந்தாள்,
அங்காரதாரை, பெரிது ஆலாலம் அன்னாள். 63

காதக் கடுங் குறி கணத்து இறுதி கண்ணாள்,
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப,
வேதக் கொழுஞ் சுடரை நாடி, நெடு மேல்நாள்,
ஓதத்தின் ஓடும் மதுகைகடவரை ஒத்தாள். 64

துண்டப் பிறைத் துணை எனச் சுடர் எயிற்றான்;
கண்டத்திடைக் கறையுடைக் கடவுள், கைம்மா
முண்டத்து உரித்த உரியால், முளரிவந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள். 65

நின்றாள் நிமிர்ந்து, அலை நெடுங் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப, முடி வான் முகடு வவ்வ;
அன்று, ஆய்திறத்தவன், 'அறத்தை அருளோடும்
தின்றாள் ஒருத்தி இவள்' என்பது தெரிந்தான். 66

பேழ் வாயகத்து அலது, பேர் உலகம் மூடும்
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான், அணுக்கன், அவள் ஆழ் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து, இனைய வாய்மொழி புகன்றான்: 67

'சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்,
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்;
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்;
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை?' என்றான். 68

'பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி; உற்றால்,
விண்பாலவர்க்கும், உயிர் வீடுறுதல் மெய்யே;
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்,
உண்பேன் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது' என்றாள். 69

அவள் உதரத்துள் புகுந்து, குடர் கொண்டு வான்வழி ஏகுதல்

திறந்தாள் எயிற்றை, அவள்; அண்ணல் இடை சென்றான்;
அறம்தான் அரற்றியது, அயர்ந்து அமரர் எய்த்தார்,
இறந்தான் எனக் கொடு; ஓர் இமைப்பு அதனின் முன்னம்,
பிறந்தான் என, பெரிய கோள் அரி பெயர்ந்தான். 70

கள் வாய் அரக்கி கதற, குடர் கணத்தில்
கொள், வார், தடக் கையன் விசும்பின்மிசை கொண்டான்;
முள் வாய் பொருப்பின் முழை எய்தி, மிக நொய்தின்,
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான். 71

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்,
ஏகா, அரக்கி குடர் கொண்டு, உடன் எழுந்தான்,
மா கால் விசைக்க, வடம் மண்ணில் உற, வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான். 72

ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து, மலர் வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனித் தலைவர் ஆசிகள் பகர்ந்தார். 73

மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறுகாறும்
கீண்டான்; இமைப்பினிடை மேரு கிரி கீழா
நீண்டான்; வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான்; அருக்கன் உயர் வானின் வழி போனான். 74

இராம நாமமே இடர்கள் திர்ப்பது என்று அவன் உறுதி பூணுதல்

'சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ?
முற்றா முடிந்த நெடு வானினிடை, முந்நீ-
ரில் தாவி, எற்று எனினும், யான் இனி இலங்கை
உற்றால், விலங்கும் இடையூறு' என, உணர்ந்தான். 75

'ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? "இராம!" என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்' என வலித்தான். 76

பவள மலையில் பாய்ந்து, அனுமன் இலங்கையை நோக்கல்

தசும்புடைக் கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா,
அசும்புடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பிடைச் செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசுஞ் சுடர்ச் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான். 77

மேக்குறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்குறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்கினுக்கு இடையூறு ஆகப் புயலொடு பொதிந்த வாடை
தாக்குற, தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே. 78

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான். 79

மிகைப் பாடல்கள்

சென்றனன், இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-திண் தோள்
வன் திறம் அனுமன் - வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி,
பொன் திணி சிகர கோடி மயேந்திரப் பொருப்பின் ஏறி,
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ?

இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன்
அமம திரு நகரைச் சூழ்ந்த அளக்கரைக் கடக்க, வீரன்,
சுமை பெறு சிகர கோடித் தொல் மயேந்திரத்தின், வெள்ளிச்
சிமையமேல் நின்ற தேவன் தன்மையின், சிறந்து நின்றான்.

[இவ்விரு பாடல்கள் இப் படலத்தின் முதற் செய்யுளாகிய 'ஆண்தகை ஆண்டு' எனத் துவங்கும் பாடலின் முன்னர்க் காணப்படுகின்றன. இவற்றோடு கிட்கிந்தா காண்டத்தின் மயேந்திரப் படலத்தின் இறுதியிலுள்ள நான்கு செய்யுட்களும் (26-29) வரிசை முறை மாறியும் ஒரு சுவடியில் உள்ளன.]


பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும்-
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும்-
அருஞ் சினம் அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி, அங்கம்
நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க, 7-1

நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல், ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க,
கால் ஆழ்ந்து அழுந்திக் கடல் புக்குழி, கச்சம் ஆகி,
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான, 40-1

தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல,
வள்ளல் கடலைக் கெட நீக்கி, மருந்து வவ்வி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க, 40-2

ஆன்று ஆழ் நெடு நீரிடை, ஆதியொடு அந்தம் ஆகித்
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட, முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும், முற்று உயிர் ஆய மற்றும்,
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் என்ன, 40-3

'இந் நீரின், என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி,
செந் நீர்மை செய்யேன்' என, சிந்தனை செய்து, நொய்தின்
அந் நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கி, தவம் முற்றி முளைத்தவாபோல், 40-4

பூவால் இடையூறு புகுந்து, பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட, வேலை குளித்த எல்லாம்
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந் நாள்,
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன, 40-5

நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம் பொன் ஏய்ந்த
பிறங்கும் சிகரம் படர் முன்றில்தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர, 40-6

கூன் சூல் முதிர் இப்பி குரைக்க, நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப, வயங்கு பளிங்கு முன்றில்,
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன் சூழ்வரும் அம் முழு வெண் மதி வீறு, கீற, 40-7

பல் ஆயிரம் ஆயிரம் காசுஇனம் பாடு இமைக்கும்
கல் ஆர் சிமயத் தடங் கைத்தலம் நீண்டு காட்டி,
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி, வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து, எழுகின்றது என்ன, 40-8

மனையில் பொலி மாக நெடுங் கொடி மாலை ஏய்ப்ப,
வினையின் திரள் வெள் அருவித் திரள் தூங்கி வீழ,
நினைவின் கடலூடு எழலோடும், உணர்ந்து நீங்காச்
சுனையில், பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள, 40-9

கொடு நாவலொடு இரண்டு குலப் பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடு நாள், பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப, 40-10

செவ் வான் கதிரும், குளிர் திங்களும், தேவர் வைகும்
வெவ் வேறு விமானமும், மீனொடு மேகம், மற்றும்,
எவ் வாய் உலகத்தவும், ஈண்டி இருந்த; தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெங் காலும் ஒத்தான். 51-1

வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் வாலின், விசும்பு நிரம்பு மெய்யன்,
கோள் ஒத்த பொன் மேனி; விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற, ஞாலம். 52-1

விண்ணோர் அது கண்டனர், உள்ளம் வியந்து மேல்மேல்
கண் ஓடிய நெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால். 52-2

பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல், பறையின்
விரவுக் குரல், சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம் உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால். 62-1

வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று, 'சயம் உண்டு' என இயம்ப,
தான் ஓர் பெருங் கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான், விரைந்து, கடிதே போகும் எல்லை, 62-2

நல் நகர் அதனை நோக்கி, நளினக் கைம் மறித்து, 'நாகர்
பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது, அம்மா!
அந் நகர் இதனின் நன்றேல், அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந் நகர் இருந்து வாழ்வான்? இது அதற்கு ஏது' என்றான். 79-1

'"மாண்டது ஓர் நலத்திற்று ஆம்" என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்;
வேண்டிய வேண்டின் எய்தி, வெறுப்பு இன்றி, விழைந்து துய்க்கும்
ஈண்ட அரும் போக இன்பம் ஈறு இலது யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்; அஃதே அரு மறைத் துணிவும் அம்மா! 79-2

'உட் புலம் எழு நூறு என்பர் ஓசனை; உலகம் மூன்றில்
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த என்றால்,
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும், நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே? காட்சியும் கரையிற்று ஆமே? 79-3

என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந் தோள் வீரன்
நின்றனன், நெடிய வெற்பின்; நினைப்ப அரும் இலங்கை மூதூர்
ஒன்றிய வடிவம் கண்டு, ஆங்கு, உளத்திடைப் பொறுக்கல்ஆற்றான்;
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான். 79-4


ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 2. ஊர் தேடு படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:01 pm

இலங்கையின் மாட்சி

'பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். 1

நாகாலயங்களொடு நாகர் உலகும், தம்
பாகு ஆர் மருங்கு துயில்வென்ன உயர் பண்பு;
ஆகாயம் அஞ்ச, அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற. 2

'மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி,
மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,
பாகு ஆய செஞ் சொலவர் வீசுபடு காரம். 3

'பஞ்சி ஊட்டிய பரட்டு, இசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. 4

'நான நாள் மலர்க் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த, தாள் ஆறுடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய,
வான யாறு தம் அரமியத் தலம்தொறும் மடுப்ப. 5

'குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய,
மழலை மென் மொழி, கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்,
சுழலும் நல் நெடுந் தட மணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவு அரு நிலைய, 6

'இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;
அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! 7

'மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நெடுந் திருநகர், தெய்வ மாத் தச்சன்
துணிவின் வந்தனன், தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள். 8

'மரம் அடங்கலும் கற்பகம்; மனை எலாம் கனகம்;
அரமடந்தையர் சிலதியர், அரக்கியர்க்கு; அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால். 9

'தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர்தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ? 10

'"போர் இயன்றன தோற்ற" என்று இகழ்தலின், புறம் போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியம் தனி ஐங் கரக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேவருமே, இந் நகர் தொகாத. 11

'வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது, இவ் ஊர்;
ஆழி அண்டத்தின் அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம். 12

'தழங்கு பேரியின் அரவமும், தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும், மூரி நீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலும்,
வழங்கு பேர் அருஞ் சதிகளும், வயின்தொறும் மறையும். 13

'மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தடந் தேர்இனம்அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடுந் துறக்கம், இந் நகர்க்கு, 14

'திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15

'தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறுஞ் சேறும்,
வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும், நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும், அவ் வேலை. 16

'தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத
தொய்யல் சிந்தையேம், யாவரை எவ்வகை துதிப்பேம்? 17

'நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடுங் காலும்,
வாரி வானமும், வழங்கல ஆகும், தம் வளர்ச்சி;
ஊரின் இந் நெடுங் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி? 18

'முன்னம் யாவரும், "இராவணன் முனியும் என்று எண்ணி,
பொன்னின் மா நகர் மீச் செலான் கதிர்" எனப் புகல்வார்-
கன்னி ஆரையின் ஒளியினில், கண் வழுக்குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். 19

'"தீய செய்குநர் தேவரால்; அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென்" என மதியா,
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் - கயிலையை எடுத்தான். 20

"கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!" 21

'கொண்ட வான் திரைக் குரை கடல் இடையதாய், குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று, இமைக்கின்ற எழிலால்,
பண்டு அரா-அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது, இவ் அணி நகர் அமைதி. 22

இலங்கை மாந்தரின் பெருமித செல்வ வாழ்வு

'பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள்; மற்று அவரினும் பலர் உளர், அமைதி
கூடுவாரிடை இன்னியம் கொட்டுவார்; முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார். 23

'வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார்; தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார். 24

'இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி,
உழையர் என்ன நின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்
விழையும் போகமே, இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்; நெஞ்சினால் நினையினும், மாசு என்று கொள்ளும். 25

'பொன்னின் மால் வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ் முறை உரைக்க,
பன்னி, நாள் பல பணி உழந்து, அரிதினின் படைத்தான் -
சொன்ன வானவர் தச்சன் ஆம், இந் நகர் துதிப்பான். 26

'மகர வீணையின், மந்தர கீதத்தின், மறைந்த,
சகர வேலையின் ஆர் கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின, முகிற் குலம் அனைத்தும். 27

'பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந் தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள்தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 28

'தேறல் மாந்தினர்; தேன் இசை மாந்தினர்; செவ் வாய்
ஊறல் மாந்தினர்; இன உரை மாந்தினர்; ஊடல்
கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர்-அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர். 29

'எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30

விளரிச் சொல்லியர் வாயினால், வேலையுள் மிடைந்த
பவளக் காடு எனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது-முழங்கு நீர் இலங்கை. 31

'"எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்றுகாறும்
கிழிந்திலது அண்டம்" என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா. 32

'காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ? மற்றுஓர்
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல். 33

'கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை; அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. 34

'கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த - காதல்
புன் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய,-ஓடை யானை. 35

'வள்ளி நுண் மருங்குல் என்ன, வானவர் மகளிர், உள்ளம்
தள்ளுற, பாணி தள்ளா நடம் புரி தடங் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர், தாம் வெள்குகின்றார்-
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார். 36

'ஒறுத்தலோ நிற்க; மற்று, ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கிமாரும், அரக்கரும், கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும், இவ் வீதி எல்லாம். 37

'வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலின மா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில், என்னே! ஆழியின் ஆழ்ந்தது உண்டோ ? 38

'விற் படை பெரிது என்கேனோ? வேற் படை மிகும் என்கேனோ?
மற் படை உடைத்து என்கேனோ? வாட் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ? - நாயகற்கு உரைக்கும் நாளில்.' 39

குறுகிய வடிவுடன் அனுமன் பவளக் குன்றில் தங்குதல்

என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி-
நின்றனன்; 'அரக்கர் வந்து நேரினும் நேர்வர்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குட கடல் குளிப்பதுஆனான். 40

செறிந்த பேரிருள்

எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்,
ஆய்வினை மனத்து இலான், அறிஞர் சொல் கொளான்,
வீவினை நினைக்கிலான், ஒருவன், மெய் இலான்,
தீவினை என, இருள் செறிந்தது எங்குமே. 41

கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்,
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை,
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என, பொலியும் பொற்பதே. 42

அணங்கு அரா அரசர் கோன், அளவு இல் ஆண்டு எலாம்,
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய் விடம்
உணங்கல் இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து,
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே, 43

வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை,
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்,
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே, 44

இருளிலும் அரக்கர் இயங்குதல்

அவ் வழி, அவ் இருள் பரந்த ஆயிடை,
எவ் வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்;
செவ் வழி மந்திரத் திசையர் ஆகையால்,
வெவ் வழி இருள் தர, மிதித்து, மீச்செல்வார். 45

இந்திரன் வள நகர்க்கு ஏகுவார்; எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார்; சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார்; அயில்
வெந் தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 46

பொன்னகர் மடந்தையர், விஞ்சைப் பூவையர்,
பன்னக வனிதையர், இயக்கர் பாவையர்,
முன்னின பணி முறை மாறி முந்துவார்,
மின் இனம் மிடைந்தென, விசும்பின் மீச்செல்வார். 47

தேவரும், அவுணரும், செங் கண் நாகரும்,
மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,
யாவரும், விசும்பு இருள் இரிய ஈண்டினார்,
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 48

சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர்,
'இத்துணைத் தாழ்த்தனம்; முனியும்' என்று, தம்
முத்தின் ஆரங்களும், முடியும், மாலையும்,
உத்தரீயங்களும், சரிய ஓடுவார். 49

நிலவின் பொலிவு

தீண்ட அருந் தீவினை தீக்கத் தீந்து போய்,
மாண்டு, அற உலர்ந்தது, மாருதிப் பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க, ஆயிடை,
ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 50

'வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம்' என்று ஏமுறா,
அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே. 51

கற்றை வெண் கவரிபோல், கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர, பொலிந்து தோன்றிற்றால்-
'இற்றது என் பகை' என, எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 52

தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால், திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்
சொரிந்ததே ஆம் என, துள்ளும் மீனொடும்
விரிந்தது, வெண் நிலா, மேலும் கீழுமே. 53

அருந் தவன் சுரபியே ஆதி வான்மிசை
விரிந்த பேர் உதயமா, மடி வெண் திங்களா,
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா,
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே. 54

எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில, மறித்தும் போகில,
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன் எலாம். 55

எல்லியின் நிமிர் இருட் குறையும், அவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும், கவ்வின;
புல்லிய பகை எனப் பொருவ போன்றன-
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம். 56

வீசுறு பசுங் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது,
காசு உறு கடி மதில் இலங்கைக் காவல் ஊர்த்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே. 57

இகழ்வு அரும் பெருங் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என, அனுமன் பற்றினால்,
அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை, அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே. 58
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:02 pm

மதிலின் மாண்பு கண்டு அனுமன் வியத்தல்

அவ் வழி, அனுமனும், அணுகலாம் வகை
எவ் வழி என்பதை, உணர்வின் எண்ணினான்;
செவ் வழி ஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்,
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 59

ஆழி அகழ் ஆக, அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளிகாறும் முகடு ஏறி,
கேழ் அரிய பொன் கொடு சமைத்த, கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா, மதிலை உற்றான். 60

'"கலங்கல் இல் கடுங் கதிர்கள், மீது கடிது ஏகா,
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி" எனின், அன்றால்;
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே,
விலங்கி அகல்கின்றன, விரைந்து' என, வியந்தான். 61

'தெவ் அளவு இலாத; இறை தேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண், அண்டம் இடை ஆக
எவ் அளவின் உண்டு வெளி! ஈறும் அது!' என்னா,
வெவ் வள அரக்கனை மனக் கொள வியந்தான். 62

மடங்கல் அரிஏறும் மத மால் களிறும் நாண
நடந்து, தனியே புகுதும் நம்பி, நனி மூதூர்-
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந் திசையின் வாய் அனைய - வாயில் எதிர் கண்டான். 63

'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைந்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ?' என நினைந்தான். 64

'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்,
ஊழின் முறை இன்றி, உடனே புகும்; இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்,
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை' என்றான். 65

வாயில் காவலை அனுமன் வியத்தல்

வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடை வீரர்,
கள்ள வினை வெவ் வலி அரக்கர், இரு கையும்
'முள் எயிறும் வாளும் உற, முன்னம் முறை நின்றார்;
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 66

சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
கால வரி வில், பகழி, கப்பணம், முசுண்டி,
கோல், கணையம், நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
பாலம், முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 67

அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும்
வெங் குசைய பாசம், முதல் வெய்ய பயில் கையர்;
செங் குருதி அன்ன செறி குஞ்சியர், சினத்தோர்,
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 68

அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்குஇனம் இருட்டினை விழுங்கி ஒளி கால,
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்,
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 69

'எவ் அமரர், எவ் அவுணர், ஏவர் உளர்,-என்னே!-
கவ்வை முது வாயிலின் நெடுங் கடை கடப்பார்?
தெவ்வர் இவர்; சேமம் இது; சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின், எனாய் விளையும்?' என்றான். 70

கருங் கடல் கடப்பது அரிது அன்று; நகர் காவற்
பெருங் கடல் கடப்பது அரிது; எண்ணம் இறை பேரின்,
அருங் கடன் முடிப்பது அரிது ஆம்; அமர் கிடைக்கின்,
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள்' என நினைத்தான். 71

அனுமன் மதில்மேல் தாவிச் செல்ல முயல்தல்

'வாயில் வழி சேறல் அரிது; அன்றியும், வலத்தோர்;
ஆயில், அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்;
காய் கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந் நகர் புக்கிடுவென்' என்று, ஓர் அயல் போனான். 72

இலங்கைமாதேவி அனுமனைத் தடுத்தல்

நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள்-போவதின் மேலே வழி நின்றாள்,
தூண் ஆம் என்னும் தோள் உடையானை,-சுடரோனைக்
காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள். 73

எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்;
முட்டிப் போரில், மூஉலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; சுமை இல்லாள்; 74

பாராநின்றாள், எண் திசைதோறும், 'பலர் அப்பால்
வாராநின்றாரோ?' என; மாரி மழையேபோல்
ஆராநின்றாள்; நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்; மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்; 75

வேல், வாள், சூலம், வெங் கதை, பாசம், விளி சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள்; வட குன்றம்
போல்வாள்; திங்கள்-போழின் எயிற்றாள்; புகை வாயில்
கால்வாள்; காணின், காலனும் உட்கும் கதம் மிக்காள். 76

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள்; அருள் இல்லாள்;
அம் சுவணத்தின் உத்தரியத்தாள்; அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்; 77

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள்; தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள்; அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பாடிக் களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்; 78

எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள்; அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்;-
'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா, நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக' என்றான். 79

'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என் ஆம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே;
போகாய்' என்றாள்-பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 80

அனுமனும் இலங்காதேவியும் உரையாடுதல்

களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள,
விளியா நின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்;
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு?' என்றான். 81

என்னாமுன்னம், '"ஏகு" என, ஏகாது, எதிர் மாற்றம்
சொன்னாயே? நீ யாவன் அடா? தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர், எய்தற்கு; அளி உற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்?' என்று, உற நக்காள். 82

நக்காளைக் கண்டு, ஐயன், மனத்து ஓர் நகை கொண்டான்;
'நக்காய்! நீ யார்? ஆர் சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏது ஆம்? ஓடலை?' என்றாள்; 'இனி, இவ் ஊர்
புக்கால் அன்றிப் போகலென்' என்றான், புகழ் கொண்டான். 83

இலங்காதேவியின் சிந்தனை

'வஞ்சம் கொண்டான்; வானரம் அல்லன்; வரு காலன்
துஞ்சும், கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்ணுதலைப்போல் நகுகின்றான்'
நெஞ்சம் கண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்; 84

இருவரும் பொருதல்

'கொல்வாம்; அன்றேல், கோளுறும் இவ் ஊர்' எனல் கொண்டாள்,
'வெல்வாய் நீயேல், வேறி' என, தன் விழிதோறும்,
வல் வாய்தோறும், வெங் கனல் பொங்க, மதி வானில்
செல்வாய்' என்னா, மூவிலைவேலைச் செல விட்டாள். 85

தடித்து ஆம் என்னத் தன் எதிர் செல்லும் தழல் வேலைக்
கடித்தான், நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்போல்,
ஒடித்தான் கையால்-உம்பர் உவப்ப, உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென,-எண்ணம் பிழையாதான். 86

இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றும் தெய்வப் பல் படை கொண்டே மலைவாளை
உற்று, கையால், ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான், பழி இல்லான். 87

வழங்கும் தெய்வப் பல் படை காணாள், மலைவான்மேல்,
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம் ஒச்சித்
தழங்கும் செந் தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். 88

அனுமன் அறைய இலங்கைமாதேவி மண்ணில் வீழ்தல்

அடியாமுன்னம், அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்; கொல்லின் பிழை' என்னா,
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான்; உயிரோடும்,
இடிஏறு உண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். 89

விழுந்தாள் நொந்தாள்; வெங் குருதிச் செம்புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார்தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாரையும், எல்லா உலகத்தும்,
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்: 90

இலங்கைமாதேவி தன் வரலாறு கூறல்

'ஐய! கேள்; வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி, இம் மூதூர் காப்பன்; இலங்கைமாதேவி என் பேர்;
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து, இந்தச் சிறுமை செய்தேன்;
"உய்தி" என்று, அளித்திஆயின், உணர்த்துவல் உண்மை' என்றாள். 91

'எத்தனை காலம் காப்பன், யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, "முரண் வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக் காய்ந்த அன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம், பின்னை, சிதைவது திண்ணம்" என்றான். 92

'அன்னதே முடிந்தது; ஐய, "அறம் வெல்லும்; பாவம் தோற்கும்"
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்து, அவள் இறைஞ்சிப் போனாள். 93

இலங்கையுள் அனுமன் புகுதல்

வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே; விளைவும் அஃது' என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -
சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94

இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்

வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ?' என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95

'மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, "மிகை" என விலங்கிப் போனான்;
இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா!' 96

'பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,
நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97

நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை

என்றனன் இயம்பி, 'வீதி ஏகுதல் இழுக்கம்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,
சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98

ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99

பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்கு
அரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100

அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்

ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101

கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,
ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102

'இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,
அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்குற முழங்கிற்று' என்று சேடியர் கன்னிமார்கள்,
மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103

சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104

திருத்திய பளிக்கு வேதி, தெள்ளிய வேல்கள் என்ன,
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105

கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106

வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,
அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்
கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107

புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்கு
நலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110

நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்
மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111

ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,
மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112

சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,
கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113

இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114

பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,
ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115

ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116

கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்
மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்
பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117

கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,
பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118

அனுமன் கும்பகருணனைக் காணுதல்

இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119

ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது; இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120

அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,
பன்னக அரசு என, பரவைதான் என,
துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,
உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121

முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்
தன் இயல் கதியொடு தழுவி, தாது உகு
மன் நெடுங் கற்பக வனத்து வைகிய
இன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122

வானவர் மகளிர் கால் வருட, மா மதி
ஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,
நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124

பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125

பகை என, மதியினைப் பகுத்து, பாடு உற
அகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126

தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்
புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127

இராவணனோ எனச் சினந்து பின் அவன் அல்லன் என அறிந்து அனுமன் சினம் தணிதல்

ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, 'அரக்கர்
கோ எனா நின்ற குணம்இலி இவன்' எனக் கொண்டான்;
கா வல் நாட்டங்கள் பொறி உக, கனல் எனக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்!' 128

குறுகி நோக்கி, மற்று, 'அவன் தலை ஒருபதும், குறித்த
இறுகு திண் புயம் இருபதும், இவற்கு இலை' என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங் கனலி,
அறிவு எனும் பெரும் பரவைஅம் புனலினால், அவித்தான். 129

பிற இடங்களில் தேடல்

அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக' என்று, அங்கை
கவித்து, 'நீங்கிடச் சில பகல்' என்பது கருதா,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 130

மாட கூடங்கள், மாளிகை ஒளிகை, மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன் - இராகவன் புகழ் எனும் நலத்தான். 131

மணி கொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் என, புகை என, கலக்கும்;
நுணுகும், வீங்கும்;-மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?-
அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும், அனுமன். 132

அனுமன் வீடணன் மாளிகை புகுதலும், அவன் நல்லன் எனத் தேர்ந்து செல்லுதல்

ஏந்தல், இவ் வகை, எவ் வழிமருங்கினும் எய்தி,
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேல் உளோர், கீழ் உளோர், விரும்பப்
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான். 133

'பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது' என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 134

உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;
'குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான்;
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒரு சிறைச் சென்றான்;
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடைப் புக்கான். 135

இந்திரசித்தின் வீரப் பொலிவை வியந்து மேலே போதல்

முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின் முன் செல்வான்,
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். 136

ஏதி ஏந்திய தடக் கையர், பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்,
காது வெஞ் சினக் களியினர், காவலைக் கடந்தான். 137

முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந்தனையான்
ஒக்க, நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன் - புகை புகா வாயிலும் புகுவான். 138

'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-
அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;
இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது' என உணர்ந்தான். 139

'இவனை இன் துணை உடைய போர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப் புகறல்?
சிவனை, நான்முகத்து ஒருவனை, திரு நெடுமால் ஆம்
அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? 140

என்று, கைம் மறித்து, 'இடை நின்று காலத்தை இகப்பது
அன்று; போவது' என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஒளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன், இந்திரசித்தினைத் தீர்ந்தான். 141

அக்கன் மாளிகை கடந்து போய், மேல், அதிகாயன்
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி,
தக்க மந்திரத் தலைவர் மா மனைகளும் தாவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் என, புகழோன். 142
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:05 pm

இடைநகர் அகழியைக் கண்ட அனுமனின் வியப்பு

இன்னர் ஆம் இரும் பெரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்,
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 143

தனிக் கடக் களிறு என ஒரு துணை இலான் தாய
'பனிக் கடல் பெருங் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்,
இனி, கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது' என்று, இசைத்தான் -
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன், அகழியைக் கண்டான். 144

'"பாழி நல் நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல்" பல பேர்,
ஊழிக்காலம் நின்று, உலகு எலாம் கல்லினும் உலவாது;
ஆழி வெஞ் சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும், இந் நகர் சுலாயகொலாம்' என, இசைத்தான். 145

ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
'தாய வேலையின் இரு மடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது' என்பது புகன்றான் -
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 146

இடைநகர் அகழியின் ஏற்றம்

மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழத்
தூக்கினாலன்ன தோயத்ததுஆய், துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை,
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ? 147

ஆனை மும் மதமும், பரி ஆழியும்,
மான மங்கையர் குங்கும வாரியும்,
நானம் ஆர்ந்த நறைக் குழல் ஆவியும்,
தேனும், ஆரமும், தேய்வையும், நாறுமால், 148

உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,
அன்னம், கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்,
கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,
சென்னம், காகம், குணாலம், சிலம்புமே. 149

நலத்த மாதர் நறை அகில், நாவியும்,
அலத்தகக் குழம்பும், செறிந்து, ஆடிய
இலக்கணக் களிறோடு, இள மெல் நடைக்
குலப் பிடிக்கும், ஓர் ஊடல் கொடுக்குமால். 150

நறவு நாறிய நாள் நறுந் தாமரை
துறைகள்தோறும் முகிழ்த்தன தோற்னுமால் -
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ? 151

பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும், வெள்ளமும், மெய் தெரியாது, மேல் -
தெளிந்த சிந்தையரும், சிறியார்களோடு
அளிந்தபோது, அறிதற்கு எளிது ஆவரோ? 152

நீலமே முதல் நல் மணி நித்திலம்,
மேல கீழ, பல் வேறு ஒளி வீசலால்,
'பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ?' என, காட்டுமே. 153

அகழியைக் கடந்து நகரினுள் அனுமன் தேடுதல்

அன்ன வேலை அகழியை, ஆர்கலி
என்னவே கடந்து, இஞ்சியும், பிற்பட,
துன்ன அருங் கடி மா நகர் துன்னினான்;
பின்னர் எய்திய தன்மையும், பேசுவாம்: 154

கரிய நாழிகை பாதியில், காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம் பதி,
ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். 155

இலங்கையில் நடு நிசி

வேரியும் அடங்கின; நெடுங் கடல் விளம்பும்,
பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள், கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். 156

இறங்கின, நிறம் கொள் பரி; ஏமம் உற எங்கும்
கறங்கின, மறம் கொள் எயில் காவலர் துடிக் கண்;
பிறங்கு இணர் நறுங் குழலர் அன்பர் பிரியாதோர்,
உறங்கினர், பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார். 157

வடம் தரு தடங் கொள் புய மைந்தர், கலவிப் போர்
கடந்தனர்; இடைந்தனர், களித்த மயில் போலும்
மடந்தையர் தடந் தன முகட்டிடை மயங்கிக்
கிடந்தனர்; நடந்தது, புணர்ச்சி தரு கேதம். 158

வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்;
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்,
தூம நறையின் துறை பயின்றிலர், துயின்றார். 159

பண் இமை அடைத்த, பல கள்-பொருநர் பாடல்;
விண் இமை அடைத்தென, விளைந்தது இருள்; வீணை
தண் இமை அடைத்தன; தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன; அடைத்தன கபாடம். 160

விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல், உணர்வு உண்டு அயல் உலாவ,
சொரிந்தன கருங் கண், வரு துள்ளி தரு வெள்ளம்;
எரிந்தன, பிரிந்தவர்தம் எஞ்சு தனி நெஞ்சம். 161

இளக்கர் இழுது எஞ்ச, விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்க அரிய ஆசை உற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம். 162

நித்தம் நியமத் தொழிலர் ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்த மத வெங் களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரிது என ஆம்? 163

அகநகரினுள் சென்று அனுமன் தேடுதல்

ஆய பொழுது, அம் மதில் அகத்து, அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவிப் போய்,
தீயவன் இருக்கை அயல், செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் - வினைப் பகையை வென்றான். 164

போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா,
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்,
நாரியர்க்கு உறைவு ஆம், இடம் நண்ணினான். 165

முயல் கருங் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்,
இயக்கர் மங்கையர், யாவரும் ஈண்டினார்,
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 166

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்,
இழைந்த நூலினும், இன் இளங்காலினும்,
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்-
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான். 167

இராவணனுக்கு உரிய இயக்க மாதர்களின் நிலைமை

அத்திரம் புரை யானை அரக்கன்மேல்
வைத்த சிந்தையர், வாங்கும் உயிர்ப்பிலர்,
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற,
சித்திரங்கள் என, இருந்தார் சிலர். 168

அள்ளல் வெஞ் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் - கண் முகிழ்த்து,
உள்ளம் இன்றி, உறங்குகின்றார் சிலர். 169

பழுது இல் மன்மதன் எய் கணை பல் முறை
உழுத கொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்,
'அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம்கொல்?' என்று, எண்ணுகின்றார் சிலர். 170

'ஆவது ஒன்று அருளாய்; எனது ஆவியைக்
கூவுகின்றிலை; கூறலை சென்று' எனா,
பாவை பேசுவதுபோல், கண் பனிப்பு உற,
பூவையோடும் புலம்புகின்றார் சிலர். 171

ஈரத் தென்றல் இழுக மெலிந்து, தம்
பாரக் கொங்கையைப் பார்த்தனர்; பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 172

நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில், பல் பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்,
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 173

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். 174

கவ்வு தீக் கணை, மேருவைக் கால் வளைத்து,
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து, தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு, குலாவுகின்றார் சிலர். 175

கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ், அம் கை நரம்பினால்
நாடி, நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 176

இராவணனின் உரிமை மகளிராம் அரக்கியரின் நிலைமை

இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்,
அனையவன் குலத்து ஆயிழையார் இடம்
நினைவின் எய்தினன் - நீதியின் எய்தினான். 177

எரி சுடர் மணியின் செங் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி, நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவும் நீங்க, ஆசையும் தாமுமே ஆய்,
ஒரு சிறை இருந்து, போன உள்ளத்தோடு ஊடுவாரும். 178

நகை எரிக் கற்றை நெற்றி நாவி தோய்ந்தனைய ஓதி,
புகை எனத் தும்பி சுற்ற, புது மலர்ப் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி,
மிகை ஒடுங்காத காம விம்மலின், வெதும்புவாரும். 179

சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக,
குவியும் மீன் ஆரம் ஆக, மின் கொடி மருங்குல் ஆக,
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர் மதி நெற்றி, ஆக, அந்தி வான் ஒக்கின்றாரும். 180

பானல் உண் கண்ணும் வண்ணப் படி முறை மாற, பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 181

உழை உழைப் பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம், தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி,
இழை தொடுத்து இலங்கும் மாடத்து, இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகு நீரால், மஞ்சனம் ஆடுவாரும். 182

'பன்னக அரசர் செங் கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான்; ஆம்' என, இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆக,
பொன் அணி பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 183

தென் நகு குடம், உள்-பாடல், சித்தியர் இசைப்ப, தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேண,
பொன்னகர்த் தரளப் பந்தர், கற்பகப் பொதும்பர், பொன்-தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் 184

ஆணியின் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வது ஓரார்,
வீணையும், குழலும், தம்தம் மிடறும், வேற்றுமையின் தீர்ந்த,
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உகப் பாடுவாரும். 185

தண்டலை வாழை அன்ன குறங்கிடை, அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோர, கூர்ங் கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச, குரவையில் குழறுவாரும். 186

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி,
பிச்சரின் பிதற்றி, அல்குல் பூந் துகில் கலாபம் பீறி,
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள, குழுக் கொண்டு ஈண்டி,
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 187

தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற, அறிவு தள்ளி,
பயிர் உற, 'தெய்வம் என் மேல் படிந்தது; பார்மின்!' என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர் நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து ஒடுங்குவாரும். 188

இத் திறத்து அரக்கிமார்கள் ஈர்-இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும், பத்திப் படர் நெடுந் தெருவும் பார்த்தான்;
சித்தியர் உறையும் மாடத் தெருவும் பின்னாகச் சென்றான்;
உத் திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 189

விஞ்சை மகளிரின் நிலை

வளர்ந்த காதலர், மகரிகை நெடு முடிஅரக்கனை வரக் காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறி,
களம் தவா நெடுங் கருவியில், கைகளில், செயிரியர், கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக, அலமரலுறுகின்றார். 190

'புரியும் நல் நெறி முனிவரும், புலவரும், புகல் இலாப் பொறைகூர,
எரியும் வெஞ் சினத்து இகல் அடு கொடுந் திறல் இராவணற்கு, எஞ் ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர்' என வயிர்த்து ஒரு பகை கொடு, பனித் திங்கள்
சொரியும் வெங் கதிர் துணை முலைக் குவை சுட, கொடிகளின் துடிக்கின்றார் 191

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலை முன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாட் கண்கள் சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார் 192

அனுமன் மண்டோ தரியைக் கண்டு, 'சீதையோ' என ஐயுற்று, தெளிதல்

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு-இரண்டு அமை கோடித்
தூய மாளிகை நெடுந் தெருத் துருவிப் போய், தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம். 193

கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாவினன், 'காரணம் கடை நின்றது;
உண்டு வேறு ஒரு சிறப்பு; எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது!' என, வியப்புற்றான். 194

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, ஆதியர், மலர்க் காமன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி தாம் தொட, சாமரை பணிமாற,
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர், காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக, நாசியில் கற்பக விரை நாற,- 195

'விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?'என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, 'ஏகு' என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-
'பழையம் யாம்' என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்? 196

இன்ன தன்மையின், எரி மணி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைப்புறத் துயில்வுறு தையலை, தகைவு இல்லான்,
'அன்னள் ஆகிய சானகி இவள்' என அயிர்த்து, அகத்து எழு வெந் தீ,
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்: 197

'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க;
அற்பு வான் தளை இற் பிறப்புஅதனொடும் இகந்து தன் அருந் தெய்வக்
கற்பு நீங்கிய கனங் குழை இவள் எனின், காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும்,இவ் இலங்கையும் அரக்கரும்,பொன்றுதும் இன்று'என்றான். 198

'மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள் மாறு கொண்டனள்; கூறின்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை' என்றான். 199

'இலக்கணங்களும் சில உள என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு' என்று, எடுத்து அறைகுவது, இவள் யாக்கை;
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇ, சில மாற்றங்கள் பறைகின்றாள்;
உலக்கும் இங்கு இவள் கணவனும்; அழிவும், இவ்வியன் நகர்க்கு உளது!' என்றான். 200

இராவணன் மனையுள் அனுமன் புகுதலும், தீக்குறி காணலும்

என்று உணர்ந்துநின்று ஏமுறும் நிலையினில், 'நிற்க இத் திறன்' என்னா,
பின்று சிந்தையன் பெயர்ந்தனன்; அம் மனை பிற்பட, பெரு மேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகைதன்னில்
சென்று புக்கனன், இராவணன் எடுப்பு அருங் கிரி எனத் திரள் தோளான். 201

நிலம் துடித்தன; நெடு வரை துடித்தன; நிருதர்தம் குல மாதர்
பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,
வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்
கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள். 202

புக்கு நின்று, தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திரு உள்ளம்
நெக்கு நின்றனன்; 'நீங்கும், அந்தோ இந்த நெடு நகர்த் திரு!' என்னா,
'எக் குலங்களின் யாவரே ஆயினும், இரு வினை எல்லோர்க்கும்
ஒக்கும்; ஊழ் முறை அல்லது, வலியது ஒன்று இல்' என, உணர்வுற்றான். 203

துயிலும் இராவணனைக் கண்ட அனுமன் சினந்து அவனைக் கொல்ல நினைத்தல்

நூல்-பெருங்கடல் நுணங்கிய கேள்வியன், நோக்கினன்; மறம் கூரும்
வேல்-பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்,
பால்-பெருங்கடல் பல் மணிப் பல் தலைப் பாப்புடைப் படர் வேலை
மால்-பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன், துயில்வானை- 204

குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட, இரவு எனும் பெயர் வீய,
முழை கொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்,
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி,முன்,துயில்வது ஓர் தகையானை- 205

ஆய பொன்-தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரித் திரள் இயக்கிட, சுழி படு பசுங் காற்றின்,
மீய கற்பகத் தேன்துளி விராயன வீழ்தொறும், நெடு மேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை- 206

குழந்தை வெண் மதிக் குடுமியின் நெடு வரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு, இடை கரந்தன, அனங்கன் வெங்கடுங் கணை பல பாய,
உழந்த வெஞ் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழந் தழும்பினுக்கு இடை இடையே, சில பசும் புண்கள் அசும்பு ஊற, 207

சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசுந் தென்றல்,
ஏந்து காம வெங் கனல் உயிர்த்து, இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற,
காந்தள் மெல் விரல் சனகிமேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட,
பாந்தள் நீங்கிய முழை என, குழைவுறு நெஞ்சு பாழ்பட்டானை- 208

கொண்ட பேர் ஊக்கம் மூள, திசைதொறும் குறித்து மேல்நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி, பேழ் வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும்
அண்டர் தம் புகழின் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை- 209

வெள்ளி வெண் சேக்கை வெந்து, பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்க,
கள் அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை- 210

தே இயல் நேமியானின், சிந்தை மெய்த் திருவின் ஏக,
பூ இயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை,
காவி அம் கண்ணிதன்பால் கண்ணிய காதல் நீரின்,
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை- 211

மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறு மனத்தன், 'வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ?' என்று, மயிர் புறம் பொடிக்கின்றானை- 212

மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூறுமேனும்,
குன்று ஒழித்து ஒரு மாக் குன்றின் அரிதின் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன்-தோள் மணந்து, அரு மயிலே அன்னார்,
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக, அரிய தோள் ஒழுக்கினானை- 213

தழுவா நின்ற கருங் கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்,
முழு வானவர்ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை- 214

தோடு உழுத தார் வண்டும், திசை யானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள,
கோடு உழுத மார்பானை, கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி,
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை- 215

கண்டனன்; காண்டலோடும், கருத்தின் முன் காலச் செந் தீ
விண்டன கண்கள்; கீண்டு வெடித்தன, கீழும் மேலும்;-
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்-
திண் தலை பத்தும், தோள்கள் இருபதும், தெரிய நோக்கி. 216

'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய், முடியேனே! 217

'நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்
பிடித்து, வாழ் அரக்கனார், யான் கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக!' 218

ஆய்ந்து பார்த்து, அனுமன் கோபம் தணிதல்

என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரனும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், 'நேமியோன் பணி அன்றால்;
ஒன்று ஊக்கி, ஒன்றுஇழைத்தல், உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்;
பின் தூக்கின், இது சாலப் பிழை பயக்கும்' எனப் பெயர்ந்தான். 219

ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர்எனினும்,
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ?-
மூலம் பார்க்குறின், உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்,
காலம் பார்த்து, இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 220

'இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடும் முடிந்திடுக;
"கற்றைப் பூங் குழலாளைச் சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது, ஒரு குரங்கு" என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக் குறை உண்டாம்' என, குறைந்தான் 221

அந் நிலையான், பெயர்த்த் உரைப்பான்; 'ஆய் வளைக் கை அணிஇழையார்
இந் நிலையானுடன் துயில்வார் உளர்அல்லர்; இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்!' 222

சீதையைக் காணாமையால் இலங்கையை அழித்து, தானும் மாள அனுமன் எண்ணுதல்

என்று எண்ணி, 'ஈண்டு இனி ஓர் பயன் இல்லை' என நினையா,
குன்று அன்ன தோளவன்தன் கோமனை பிற்பட, பெயர்ந்தான்;
நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்' என்ன, பொருமுவான். 223

'கொன்றானோ கற்பு அழியாக் குல மகளை? கொடுந் தொழிலால்
தின்றானோ? எப் புறத்தே செறிந்தானோ, சிறை? சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு, இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு, இக் கொடுந் துயரம் போகாதால். 224

'"கண்டு வரும்" என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக் கோன்,
"கொண்டு வரும்" என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இது வால்;
புண்டரிக நயனத்தான்பால், இனி, யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? 225

'"கண்ணிய நாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை;
விண் அடைதும்" என்றாரை ஆண்டு இருத்தி, விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்; இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால். 226

'ஏழு நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன் உயிர், யான் காணாத மற்று இல்லை;
ஊழியான் பெருந் தேவி ஒருத்தியுமே யான் காணேன்;
ஆழி தாய், இடர்-ஆழியிடையே வீழ்ந்து, அழிவேனோ? 227

'வல் அரக்கன்தனைப் பற்றி, வாயாறு குருதி உக,
கல் அரக்கும் கரதலத்தால், "காட்டு" என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும், இவ் ஊரும்,
மெல் அரக்கின் உருகி உக, வெந் தழலால் வேய்கேனோ? 228

'வானவரே முதலோரை வினவுவெனேல், வல் அரக்கன்-
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்,
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்? 229

'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, "இலங்கையில், அத்
திருவைக் கண்டனென்" என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்;
கரு வைக்கும் நெடு நகரைக் கடலிடையே கரையாதே,
உருவைக் கொண்டு, இன்னமும் நான், உளென் ஆகி உழல்கேனோ? 230

'"வடித்து ஆய் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறிய,
பிடித்தான் இவ் அடல் அரக்கன்" எனும் மாற்றம், பிழையாதால்;
எடுத்து ஆழி இலங்கையினை இருங் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற!' என்று உணர்வான். 231

தேடி அலைந்த அனுமன் ஒரு சோலையைக் காணல்

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232

மிகைப் பாடல்கள்

'அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று, அகல் வான்
கண்ட, அத் தனிக் கடி நகர் நெடு மனை; கதிர்கட்கு
உண்டு, அ(வ்) ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடின், தம் முன்
விண்ட வாய்ச் சிறு மின்மின் என்னவும் விளங்கா. 15-1

வானும் நிலனும் பெறுமாறு, இனி, மற்றும் உண்டோ -
கானும், பொழிலும், இவை செங் கனகத்தினாலும்,
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும், யாவும்
தேனும், மலரும், கனியும், தரச் செய்த செய்கை? 17-1

'ஊறு மிகவே உறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறு பிறிது இல்' என மதித்தான். 71-1

'கண்ட வனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல் செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே;
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்;
சண்டை கொடுத்தும் கொள்வன்' எனத் தான் சலம் உற்றாள். 84-1

ஆயவன் அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், 'முன்நாள்
மாய மா நகரம் தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம்
தூயவன் என்னை நோக்கி, "சுந்தரி! காப்பாய்" என்று, ஆங்கு,
ஏயினன், இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற, 91-1

இத் திறம் அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது,
'எத் திறம் இவர்தம் சீரை எண்ணுவது?' எனவே, அண்ணல்
உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். 118-1

கிடந்தனன், வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம் திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே. 121-1

குடம் தரும் செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தரு கரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர் இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன், அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். 127-1




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 3. காட்சிப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:07 pm

அசோகவனத்துள் அனுமன் புகுதல்

மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,
'தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.' 1

என்று, சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்;
அன்று, அ(வ்)வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த-
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். 2

சீதையின் துயர நிலை

வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென் மருங்குல்போல், வேறு உள அங்கமும் மெலிந்தாள். 3

துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;
வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;
மயில் இயல், குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள். 4

விழுதல், விம்முதல், மெய்உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழத்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். 5

தழைத்த பொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப்
புழைத்த போல, நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும், நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள்,
'மழைக்கண்' என்பது காரணக் குறி என வகுத்தாள். 6

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும், கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன்ன பிணியாள். 7

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினாள் தனை நினைதொறும், நெடுங் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து, ஒரு நிலை உறாத மென் துகிலாள். 8

'அரிது-போகவோ, விதி வலி கடத்தல்!' என்று அஞ்சி,
'பரிதிவானவன் குலத்தையும், பழியையும், பாரா,
சுருதி நாயகன், வரும் வரும்' என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள். 9

கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக் கவ்வி,
சுமமயுடைக் கற்றை, நிலத்திடைக் கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து, உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள். 10

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள். 11

கொல்லாது கொல்லும் நினைவுகள்

'கண்டிலன் கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்? உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்?' எனக் குழையா,
புண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள். 12

'மாண்டு போயினன் எருவைகட்கு அரசன்; மற்று உளரோ,
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள்? இப் பிறப்பில்
காண்டலோ அரிது' என்று, என்று, விம்முறும்; கலங்கும்;
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தாலென, மெலிவாள். 13

'என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?' என்று, என்று, முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர் பதைப்பாள். 14

'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்?' என்று அழுங்கும்;
'விருந்து கண்டபோது என் உறுமோ?' என்று விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு?' என்று மயங்கும்-
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். 15

'"வன்கண் வஞ்சனை அரக்கர், இத்துணைப் பகல் வையார்;
தின்பர்; என் இனிச் செயத்தக்கது?" என்று, தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன் பொறை எனத் தணிந்தானோ?
என்கொல் எண்ணுவேன்?' என்னும்-அங்கு, இராப் பகல் இல்லாள். 16

'பெற்ற தாயரும், தம்பியும், பெயர்த்தும் வந்து எய்தி,
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்களோ? குறித்துச்
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி, அந் நகர் துன்னான்,
உற்றது உண்டு' எனா, படர் உழந்து, உறாதன உறுவாள். 17

'முரன் எனத் தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பு இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்?' எனப் பொருமா,
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் எனக் கவல்வாள். 18

இராமனைப் பற்றிய பழைய நினைவுகள்

'தெவ் மடங்கிய சேண் நிலம்'-கேகயர்-
தம் மடந்தை-'உன் தம்பியது ஆம்' என,
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி, வெதும்புவாள். 19

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்,
'இந் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார் சிலை,
ஏங்கு மாத்திரத்து, இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள். 21

இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாயிரம் படை,
கன்னல் மூன்றில், களப் பட, கால் வளை
வில் நலம் புகழ்ந்து, ஏங்கி வெதும்புவாள். 22

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள். 23

மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை, கைகளின் நீக்கி, வேறு
உய்த்த போது, தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச் செய்தி மனக்கொள்வாள். 24

உரம் கொள் தே மலர்ச் சென்னி, உரிமை சால்
வரம் கொள் பொன் முடி, தம்பி வனைந்திலன்,
திரங்கு செஞ் சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி, இரங்குவாள். 25

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்,
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு, இறை
சிரித்த செய்கை நினைந்து, அழு செய்கையாள். 26

மழுவின் வானினன், மன்னரை மூ-எழு
பொழுதில் நூறி, புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில்
தழுவும் மேன்மை நினைந்து, உயிர் சாம்புவாள். 27

ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி, அது கண் பொடித்த நாள்,
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியைத் தன் தலைமேல் கொள்வாள். 28

வெவ் விராதனை மேவு அருந் தீவினை
வவ்வி, மாற்ற அருஞ் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னி, தன் ஆர் உயிர்
செவ்விராது, உணர்வு ஓய்ந்து, உடல் தேம்புவாள்,- 29

திரிசடை தவிர பிற காவல் அரக்கியர் துயில் கொள்ளுதல்

இருந்தனள்; திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல் அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும், துயில் நறைக் களி பொருந்தினார். 30

சீதை நல் நிமித்தம் பற்றி திரிசடையிடம் கூறல்

ஆயிடை, திரிசடை என்னும், அன்பினால்
தாயினும் இனியவள்தன்னை நோக்கினாள்,
'தூய நீ கேட்டி, என் துணைவி ஆம்' எனா,
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்; 31

'நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்
சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-
பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்
வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன். 32

'முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,
துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,
இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்
நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய். 33

'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்
துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே. 34

'நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்
எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;
"அஞ்சல்" என்று இரங்குவாய்! அடுப்பது யாது?' என்றாள். 35

திரிசடை நற்குறிப் பயன் உரைத்தல்

என்றலும், திரிசடை, 'இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று!' எனா, நயந்த சிந்தையாள்,
'உன் துணைக் கணவனை உறுதல் உண்மையால்;
அன்றியும், கேட்டி' என்று, அறைதல் மேயினாள்: 36

'உன் நிறம் பசப்பு அற, உயிர் உயிர்ப்புற,
இன் நிறத் தேன் இசை, இனிய நண்பினால்,-
மின் நிற மருங்குலாய்! - செவியில், மெல்லென,
பொன் நிறத் தும்பி வந்து, ஊதிப் போயதால். 37

'ஆயது தேரின், உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம்; என்
வாயது கேள்' என, மறித்தும் கூறுவாள்: 38

'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி! அனைய கண் அமைந்து நோக்கினேன்;
பயில்வன பழுது இல; பழுதின் நாடு என;
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்; 39

'எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,
அண்ணல் அவ் இராவணன், அரத்த ஆடையன்,
நண்ணினன், தென்புலம்-நவை இல் கற்பினாய்!' 40

'மக்களும், சுற்றமும், மற்றுளோர்களும்,
புக்கனர் அப் புலம்; போந்தது இல்லையால்;
சிக்கு அற நோக்கினென்; தீய, இன்னமும்
மிக்கன, கேட்க' என, விளம்பல் மேயினாள்: 41

'ஆண் தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில; பிறந்தவால், இனம் கொள் செஞ் சிதல்;
தூண்ட அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால், வான ஏறு எறிய, கீழை நாள். 42

'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்,
இடி என முழங்குமால், இரட்டல் இன்றியே;
தடியுடை முகிற்குலம் இன்றி, தா இல் வான்
வெடிபட அதிருமால்; உதிரும், மீன் எலாம். 43

'வில்-பகல் இன்றியே, இரவு விண்டு அற,
எல் பகல் எறித்துளது என்னத் தோன்றுமால்:
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால். 44

'திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால், இருள். 45

தோரணம் முறியுமால், துளங்கி; சூழி மால்
வாரணம் முறியுமால், வலத்த வாள் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால். 46

'விண் தொடர் மதியினைப் பிளந்து, மீன் எழும்;
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை;
தண்டொடு, திகிரி, வாள், தனு, என்று இன்னன,
மண்டு அமர் புரியுமால், ஆழி மாறு உற. 47

'மங்கையர் மங்கலத் தாலி, மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே,
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்,
இங்கு, இதின் அற்புதம், இன்னும் கேட்டியால்: 48

'மன்னவன் தேவி, அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும், பிறங்கி வீழ்ந்தன;
துன் அருஞ் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறிற்றால்;
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே. 49

என்றனள் இயம்பி, 'வேறு இன்னும் கேட்டியால்,
இன்று, இவண், இப்பொழுது, இயைந்தது ஓர் கனா:
வன் துணைக் கோள்அரி இரண்டு மாறு இலாக்
குன்றிடை உழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே. 50

'வரம்பு இலா மத கரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன; நெருக்கி நேர்ந்தன;
வரம்பு அறு பிணம்படக் கொன்ற; மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும், போயதால். 51

'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி, செய்யவள்,
நாயகன் திருமனைநின்று, நண்ணுதல்
மேயினள், வீடணன் கோயில்;-மென் சொலாய்! 52

'பொன் மனை புக்க அப் பொரு இல் போதினில்,
என்னை நீ உணர்த்தினை; முடிந்தது இல்' என,
'அன்னையே! அதன் குறை காண்' என்று, ஆயிழை,
'இன்னமும் துயில்க' என, இரு கை கூப்பினாள். 53

சீதையின் இருக்கையை அனுமன் காணுதல்

இவ் இடை, அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்,
அவ் இடை எய்தினன், அரிதின் நோக்குவான்,
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான். 54

அரக்கியர் துயிலுணர்ந்து சீதையைச் சுற்றி நிற்றல்

அவ் வயின் அரக்கியர் அறிவுற்று, 'அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செகுத்தது ஈது!' எனா,
எவ் வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்-
வெவ் அயில், மழு, எழு, சூல வெங் கையார். 55

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்,
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்,
பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர்,
துண்ணெனத் துயில் உணர்ந்து, எழுந்து சுற்றினார். 56

சீதை தேம்புதலும், மரத்தின்மேலிருந்து அனுமன் காணுதலும்

ஆயிடை, உரை அவிந்து, அழகன் தேவியும்,
நீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள்;
நாயகன் தூதனும், விரைவில் நண்ணினான்,
ஓய்விலன், உயர் மரப் பனையின் உம்பரான். 57

'அரக்கியர்; அயில் முதல் ஏந்தும் அங்கையர்;
நெருக்கிய குழுவினர்; துயிலும் நீங்கினர்;
இருக்குநர் பலர்; இதற்கு ஏது என்?' எனா,
பொருக்கென அவரிடைப் பொருந்த நோக்கினான். 58

விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என,
கரு நிறத்து அரக்கியர் குழுவில், கண்டனன்-
குரு நிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை. 59

'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்,
மடக் கொடிச் சீதையாம் மாதரேகொலாம்?
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெருந்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள். 60

அரக்கியர் நடுவில் இருப்பவள் சீதைதான் என அனுமன் அறிதல்

'எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில,
கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா! 61

மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்;
ஆவதே; ஐயம் இல்; அரவின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே. 62

அனுமனின் குதூகலம்

'வீடினதுஅன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென் கண்டனென்; தேவியே!' எனா,-
ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்; உலாவினன்;-உவகைத் தேன் உண்டான். 63

சீதையின் தூய்மை கண்டு அனுமன் வியத்தல்

'மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங் கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்ட கூந்தலாள் கற்பும், காதலும்
ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ ? 64

'புனை கழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்? 65

'தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர்; அறமும் ஈறு இன்றால்;
யாவது இங்கு இனிச் செயல் அரியது, எம்பிராற்கு?
ஆவ! என் அடிமையும் பிழைப்பு இன்றாம்அரோ. 66

'"கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்,
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதி வந்துறும்" என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனி வரம்பு இல் நாள் எலாம்! 67

'வெங் கனல் முழுகியும், புனலுள் வீக்கியும்,
நுங்குவ, அருந்துவ, நீக்கி, நோற்பவர்
எங்கு உளர்?-குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை
நங்கையர் மனத் தவம் நவிலற்பாலதோ? 68

'பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில, அவன் கமலக் கண்களே! 69

'முனிபவர் அரக்கியர், முறையின் நீங்கினார்;
இனியவள்தான் அலாது, யாரும் இல்லையால்;
தனிமையும், பெண்மையும், தவமும், இன்னதே!-
வனிதையர்க்கு ஆக, நல் அறத்தின் மாண்பு எலாம்! 70

'தருமமே காத்ததோ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ? 71

'செல்வமோ அது? அவர் தீமையோ இது?
அல்லினும் பகலினும் அமரர் ஆட் செய்வார்,
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை, அறத்தை மெய்ம்மையால்?' 72
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:08 pm

இராவணன் அங்கே தோன்றுதல்

என்று, இவை இனையன எண்ணி, வண்ண வான்
பொன் திணி நெடு மரப் பொதும்பர் புக்கு, அவண்
நின்றனன்; அவ் வழி நிகழ்ந்தது என் எனின்,
துன்று பூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான். 73

இராவணனின் பெருமிதத் தோற்றம்

சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க,
சகர நீர் வேலை தழுவிய கதிரின், தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப, கங்குலும் பகல்பட, வந்தான் 74

உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர, மேனகை வெள்ளடை உதவ,
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்ற,
கருப்புரச் சாந்தும், கலவையும், மலரும், கலந்து உமிழ் பரிமளகந்தம்,
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப; 75

நான நெய் விளக்கு நால்-இரு கோடி, நங்கையர் அங்கையில் ஏந்த,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க,
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப, கிண்கிணி கலையொடும் கலிப்ப,
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தென்னப் பற்பல மங்கையர் படர; 76

'அந்தரம் புகுந்தது உண்டு என,முனிவுற்று,அருந் துயில் நீங்கினான்;ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறுஞ் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ?' என்று, தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர், இமைப்பிலா நாட்டத்து யாவரும், உயிர்ப்பு அவிந்திருப்ப; 77

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்புற, பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ,
சூல் நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என,மார்பில் நூல்துளங்க; 78

தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக் கிம்புரி வலய மாச் சுடர்கள்
நாள்தொறும் சுடரும் கலி கெழு விசும்பில், நாளொடு கோளினை நக்க,
நாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொற்கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முகமலர் இரவினும் கிளர; 79

தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ;
மின் நிறக் கதிரின் சுற்றிய பசும் பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின; 80

சன்னவீரத்த கோவை வெண் தரளம், ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும், நாளும் ஒத்து, இடை இடை பொலிய;
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் மீப்படர் வெங் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும், இருவரைத் தவிர்வுற்று, உதித்தது ஓர் படி, ஒளி பரப்ப; 81

பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடிய, படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானை,
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடந் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின், நின்று அஞ்ச;82

அம் கயல் கருங் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர், விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர், முதலாம்,
குங்குமக் கொம்மைக் குவி முலை, கனிவாய், கோகிலம் துயர்ந்த மென் குதலை,
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க; 83

தொளை உறு புழை வேய்த் தூங்கு இசைக் கானம் துயலுறாது ஒரு நிலை தொடர,
இளையவர் மிடறும் இந் நிலை இசைப்ப, கின்னரர் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில்லரிப் பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி,
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும், அளப்ப; 84

அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த,
உன்னரும் பொன்னின், மணியினின் புனைந்த இழைக் குலம், மழைக் கருங் கடைக் கண்,
மின் இடை, செவ் வாய், குவி முலை, பணைத் தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப; 85

தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்,
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில், சில்லரிப் பாண்டிலில், முறையின்,
மந்தர கீதத்து இசைப் பதம் தொடர, வகை உறு கட்டளை வழாமல்,
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின் பாடலார், அருகு வந்து ஆட; 86

அந்தியில், அநங்கன், அழல்படத் துரந்த அயின்முகப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்தென்ன, வெண் மதிப் பசுங் கதிர் விரவ,
மந்த மாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வருதேன்
சிந்து நுண் துளியின் சீகரத் திவலை, உருக்கிய செம்பு எனத் தெறிப்ப; 87

இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும், இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும், குறு நகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செங் கடை ஈட்டம், மார்பினும் தோளினும், மலைய; 88

மாலையும், சாந்தும், கலவையும், பூணும், வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும், கொண்டு பின் தொடர,
பாலின் வெண் பரவைத் திரை கருங் கிரிமேல் பரந்தெனச் சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயல் இல்வெண் மதியின்,வெண்குடை மீதுறவிளங்க; 89

ஆர்கலி அகழி, அரு வரை, இலங்கை, அடி பெயர்த்து இடுதொறும் அழுந்த,
நேர்தரும் பரவைப் பிறழ் திரை, தவழ்ந்து நெடுந் தடந் திசைதொறும் நிமிர,
சார்தரும் கடுவின் எயிறுடைப் பகு வாய் அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை, முதுகு உளுக்குற்றனள் முரல; 90

கேடகத்தோடு, மழு, எழு, சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர் வாள், அயில், சிலை, குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர், தட வரை பொறுக்கும்
குடகத் தடக் கை, சுடு சினத்து, அடு போர், அரக்கியர் தலைதொறும், சுமப்ப; 91

விரிதளிர், முகை, பூ, கொம்பு, அடை, முதல், வேர் இவை எலாம், மணி, பொனால், விரிந்த
தரு உயர் சோலை திசைதொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ,
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்புறு சிந்தையான், கெடுத்தது
ஒரு மணி நேடும் பல் தலை அரவின், உழைதொறும், உழைதொறும், உலாவி; 92

இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன், அமைவுற நோக்கி,
'வினையமும் செயலும், மேல் விளை பொருளும், இவ் வழி விளங்கும்' என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன், வந்து அயல் மறைந்தே 93

ஆயிடை, அரக்கன் அரம்பையர் குழுவும், அல்லவும், வேறு அயல் அகல,
மேயினன், பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு, அவள், வெருவி,
போயின உயிரளாம் என நடுங்கி, பொறி வரி, எறுழ் வலி, புகைக் கண்,
காய் சின, உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என, கரைந்தாள் 94

மூவர் மனநிலை

கூசி ஆவி குலைவுறுவாளையும்,
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்,
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்-
ஊசல் ஆடி உளையும் உளத்தினான். 95

அனுமன் சானகியைத் தன் மனத்துள் வாழ்த்துதல்

'வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல் அறம்!' என்று உற வாழ்த்தினான்-
ஊழிதோறும் புதிது உறும் கீர்த்தியான். 96

இராவணன் சீதையை இரத்தல்

அவ் இடத்து அருகு எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்து எனக்கு இன் அருள் ஈவது?
நொவ் இடைக் குயிலே! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான். 97

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று, இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்,
ஆசைப்பாடும் அந் நானும் அடர்த்திட,
கூசிக் கூசி, இனையன கூறினான்: 98

'இன்று இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று, இறந்தபின் கூடுதியோ?-குழை
சென்று, இறங்கி, மறம் தரு செங் கணாய்! 99

'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்,
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது, எளிமையும் காண்டியோ? 100

'பூந் தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை; இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன், காடு கடந்து போய்,
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ? 101

'நோற்கின்றார்களும், நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும், பெறும் பயன் பார்த்தியேல்,
வார்க் குன்றா முலை! என் சொல், மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால். 102

'பொருளும், யாழும், விளரியும், பூவையும்,
மருள, நாளும், மழலை வழங்குவாய்!
தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின்
அருளும், மின் மருங்கும், அரிது ஆக்கியோ? 103

'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய;
வேண்டு நாள் வெறிதே விளிந்தால், இனி,
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ? 104

'இழவு, எனக்கு, உயிர்க்கு எய்தினும் எய்துக,
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்;
பழக நிற்புறும் பண்பு இவை, காமத்தோடு,
அழகினுக்கு, இனி யார் உளர் ஆவரே? 105

'பெண்மையும், அழகும், பிறழா மனத்
திண்மையும், முதல் யாவையும், செய்ய ஆய்,
கண்மையும் பொருந்தி, கருணைப் படா
வண்மை என்கொல், சனகரின் மடந்தையே! 106

'வீட்டும் காலத்து அலறிய மெய்க் குரல்
கேட்டும், காண்டற்கு இருத்திகொல்?- கிள்ளை! நீ-
நாட்டுங்கால், நெடு நல் அறத்தின் பயன்
ஊட்டும் காலத்து, இகழ்வது உறும்கொலோ? 107

'தக்கது என் உயிர் வீடு எனின், தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; "ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது" எனும் புகழ் போக்கி, வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ? 108

'தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தா இல் மூஉலகின் தனி நாயகம்
மேவுகின்றது, நுன்கண்; விலக்கினை;
ஏவர் ஏழையர் நின்னின், இலங்கிழாய்? 109

'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால்' எனா,
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்,
படியின் மேல் விழுந்தான், பழி பார்க்கலான். 110

சீதை சொன்ன வெய்ய மாற்றங்கள்

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவாமுன்னம்,
தீய்ந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன, கண்கள்; ஒன்றும் பரிந்திலள், உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல, வெய்ய, மாற்றங்கள் இனைய சொன்னாள்: 111

மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்,
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம், கற்பின்மேல் கண்டது உண்டோ ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி, துரும்பு!' எனக் கனன்று, சொன்னாள். 112

'மேருவை உருவல் வேண்டின், விண் பிளந்து ஏகல் வேண்டின்,
ஈர்-எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது; அறிந்து இருந்து, -அறிவு இலாதாய்!-
சீரியஅல்ல சொல்லி, தலை பத்தும் சிந்துவாயோ? 113

'அஞ்சினை ஆதலான், அன்று, ஆரியன் அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைந்து வந்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி; உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்தபோது, நோக்குமே நினது நாட்டம்? 114

'பத்து உள தலையும், தோளும், பல பல பகழி தூவி,
வித்தக வில்லினாற்கு, திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது, செருவில் ஏற்கும்
சத்தியை போலும்?'-மேல் நாள், சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்! 115

'தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளு நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய்; அன்றுஎனின், இறத்தி அன்றே?
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ ? 116

'பெற்றுடை வாளும் நாளும், பிறந்துடை உரனும், பின்னும்
மற்றுடை எவையும், தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று இடைந்து இறுதல் மெய்யே; -விளக்கின் முன் இருள் உண்டாமோ? 117

'குன்று நீ எடுத்த நாள், தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த மேரு,
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது, இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா! 118

'"மலை எடுத்து, எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன்" எனும் மாற்றம் நேரும் நீ,
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை;
தலை எடுத்து, இன்னமும், மகளிர்த் தாழ்தியோ? 119

'ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என,
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்,
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ? 120

சீதை நயமொழிகளாலும் அறநெறி காட்டுதல்

'வெஞ் சின அரக்கரை வீய்த்து வீயுமோ?
வஞ்சனை நீ செய, வள்ளல் சீற்றத்தால்,
எஞ்சல் இல் உலகு எலாம் எஞ்சும், எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறனும் சான்றுஅரோ! 121

'அங்கண் மா ஞாலமும், விசும்பும், அஞ்ச வாழ்
வெங்கணாய்!-புன் தொழில் விலக்கி மேற்கொளாய்;
செங் கண் மால், நான்முகன், சிவன், என்றே கொலாம்,
எங்கள் நாயகனையும் நினைந்தது?-ஏழை, நீ! 122

'"மானுயர் இவர்" என மனக் கொண்டாய்எனின்,
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் -
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்,
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால். 123

'இருவர் என்று இகழ்ந்தனை என்னின், யாண்டு எல்லை,
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்;
செரு வரும்காலை, என் மெய்ம்மை தேர்தியால்-
பொரு அருந் திரு இழந்து, அநாயம் பொன்றுவாய். 124

'பொற்கணான், தம்பி, என்று இனைய போர்த் தொழில்
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர், வேறு உளார்,
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்,
இற்கணார் இறந்திலர்; இறந்து நீங்கினார். 125

'பூவிலோன் ஆதியாக, புலன்கள் போம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர்தாமோ, நிலை நின்று வினையின் தீர்ந்தார்?
ஏவல் எவ் உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்! 126

'இப் பெருஞ் செல்வம் நின்கண் ஈந்த பேர் ஈசன், யாண்டும்
அப் பெருஞ் செல்வம் துய்ப்பான், நின்று மா தவத்தின் அன்றே?
ஒப்பு அருந் திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னி,
தப்புதி அறத்தை; ஏழாய்! தருமத்தைக் காமியாயோ? 127

'மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும், மாண்டார்,
அறம் திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்குடைப் பிணியின் தீர்ந்தார்,
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர், பிறர் யார்? சொல்லாய்! 128

'தென் தமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
"புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்; நோற்கிலெம்; புகுந்த போதே,
கொன்று அருள்; நின்னால் அன்னார் குறைவது சரதம்; கோவே!"
என்றனர்; யானே கேட்டேன்; நீ அதற்கு இயைவ செய்தாய். 129

'உன்னையும் கேட்டு, மற்று உன் ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை இவ் அரக்கர் சேனைப் பெருமையும், முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும் தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ? 130

'ஆயிரம் தடக்கையால் நின் ஐந் நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக் குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ?-நீதி நிலை அறிந்திலாத நீசா! 131

'கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்; களிக்கின்றோயை,
"அடுக்கும், ஈது அடாது" என்று, ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி, உன்னை
முடிக்குநர்; என்றபோது, முடிவு அன்றி முடிவது உண்டோ ?' 132

இராவணனின் சீற்றம்

என்று அறத் துறை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன; வெயில் விடு பகு வாய்
குன்று இறத் தெழித்து உரப்பின; குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது, சீற்றத்தின் தகைமை. 133

வளர்ந்த தாளினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன்; அனல் சொரி கண்ணினன்; 'இவளைப்
பிளந்து தின்பென்' என்று உடன்றனன்; பெயர்ந்தனன்; பெயரான்;
கிளர்ந்த சீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப. 134

இராவணனது நிலை கண்ட அனுமன் உளத்து எழுந்த சிந்தனை

அன்ன காலையில், அனுமனும், 'அருந்ததிக் கற்பின்,
என்னை ஆளுடை நாயகன், தேவியை, என் முன்,
சொன்ன நீசன், கை தொடுவதன்முன், துகைத்து உழக்கி,
பின்னை, நின்றது செய்குவென்' என்பது பிடித்தான். 135

'தனியன் நின்றனன்; தலை பத்தும் கடிது உகத் தாக்கி,
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி,
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்,
இனிதின்' என்பது நினைந்து, தன் கரம் பிசைந்திருந்தான். 136

சீற்றம் தணிந்த இராவணன் சீதையை நோக்கி மீண்டும் பேசுதல்

ஆண்டு, அ(வ்) வாள் அரக்கன் அகத்து, அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெந் தீ என முற்றிய சீற்றம்,
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற, நிலையின்
மீண்டு நின்று, ஒரு தன்மையால் இனையன விளம்பும்: 137

'கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக் கொல்கிலென்; குறித்துச் சொன்ன
சொல் உள; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
"ஒல்வது ஈது; ஒல்லாது ஈது" என்று, எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ ?
வெல்வதும் தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த, மேல்நாள். 138

'ஒன்று கேள், உரைக்க: "நிற்கு ஓர் உயிர் என உரியோன்தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின் உயிர் விடின், கூற்றம் கூடும்;
என்தன் ஆர் உயிரும் நீங்கும்" என்பதை இயைய எண்ணி,
அன்று நான் லஞ்சம் செய்தது; ஆர், எனக்கு அமரில் நேர்வார்? 139

'மான் என்பது அறிந்து போன மானிடர்ஆவார், மீண்டு,
யான் என்பது அறிந்தால் வாரார்; ஏழைமை, எண்ணி நோக்கல்;
தேன் என்பது அறிந்த சொல்லாய்! தேவர்தாம் யாவரே, எம்
கோன் என்பது அறிந்த பின்னை, திறம்புவார், குறையின் அல்லால்? 140

'வென்றோரும் இருக்க; யார்க்கும் மேலவர், விளிவு இலாதோர்,
என்றோரும் இருக்க; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய,
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன், யானே!
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ ? 141

'மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர் பழி பெற, பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டுக்
கூவி நின்று, ஏவல் கொள்வேன்; காணுதி-குதலைச் சொல்லாய்! 142

'சிற்றியல், சிறுமை ஆற்றல், சிறு தொழில், மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும்,
இற்றை, இப் பகலில், நொய்தின், இருவரை ஒரு கையாலே
பற்றினென்கொணரும் தன்மை காணுதி;-பழிப்பு இலாதாய்! 143
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:10 pm

இராவணன் சீதையை அச்சுறுத்திச் செல்லுதல்

'பதவிய மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின், உயிர்க் கொலைக்கு உரியர் அல்லர்;
சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய் திறன் நேர்ந்தது எண்ணின்,
இதன் நினக்கு ஈதே ஆகின், இயற்றுவல்; காண்டி! இன்னும், 144

'பள்ள நீர் அயோத்தி நண்ணி, பரதனே முதலினோர், ஆண்டு
உள்ளவர்தம்மை எல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேர்அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென், நின் உயிரும்; என்னை அறிந்திலை-குறைந்தநாளோய்!' 145

ஈது உரைத்து, அழன்று பொங்கி, எரி கதிர் வாளை நோக்கி,
'தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது;
ஆதலின், பின்னை, நீயே அறிந்தவாறு அறிதி' என்னா,
போது அரிக் கண்ணினாளை அகத்து வைத்து, உரப்பிப் போனான். 146

தீய அரக்கிமார்கள் சீதையை அதட்டுதல்

போயினன் அரக்கன்; பின்னை, பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி,
தீய வல் அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி, சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான், உடன்று மிக்கார். 147

முன் முன் நின்றார், கண் கனல் சிந்த முடுகுற்றார்;
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி,
'கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்து, குடர் ஆரத்
தின்மின்! தின்மின்!' என்று தெழித்தார், சிலர் எல்லாம். 148

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம் வல்லோன், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்?' என்றார், சிலர் எல்லாம். 149

'மண்ணில் தீய மானுயர் தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின் முதல் மாயும் பிணி செய்தாய்,
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி; பொது நோக்காது
எண்ணிக் காணாய், மெய்ம்மையும்' என்றார், சிலர் எல்லாம். 150

'புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ? உணர்வு இல்லாய்!
இக் கணம் இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி வாழா;
சிக்க உரைத்தேம்' என்று தெழித்தார், சிலர் எல்லாம். 151

திரிசடை சொல்லால் சீதை தேறுதல்

இன்னோரன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
'முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல், பிழை' என்றாள்,
'அன்னே, நன்று!' என்றாள்; அவர் எல்லாம் அமைவுற்றார். 152

அறிந்தார், அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல;
பிறிந்தார் சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்;
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார்;
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள். 153

மிகைப் பாடல்கள்

எயிலின் உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி,
மயல் அறத் தனி தேடிய மாருதி, வனசக்
குயில் இருந்த அச் சோலை கண்டு, இதயத்தில் குறித்தான். 1-1

அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத் தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து,
இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட, ஓர்
தஞ்சம் மற்று இலை; தான் ஒரு தனி இருந்து அயர்வாள். 2-1

கண்ணின் நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம் கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணை நோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து உயிர்க்கும்;
எண்ணும்; மாறு இலாப் பிணியினால் இவை இவை இயம்பும்; 10-1

'மாய மானின்பின் தொடர்ந்த நாள், "மாண்டனன்" என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன்
போய், அவன் செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்;
ஆயது இன்னது என்று அறிந்திலேன்' என்று என்றும் அயர்வாள். 16-1

இன்ன எண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கை துணை இன்றி, வேறு இலாள். 29-1

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள். 29-2

அன்னள் ஆய அருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில் மாருதியும் வர,
தன் இடம் துடித்து எய்துற, சானகி
என்னும் மங்கை, இனிது இருந்தாள்அரோ. 29-3

'தாட்சி இன்று' என், திரிசடையும், 'சாலவும்
மாட்சியின் அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய்! இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய். 32-1

மீட்டும், அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
'தோள் தடம் பொரு குழைத் தொண்டைத் தூய்மொழி!
கேட்டி; வெங் கடு எனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை; யாவரும் நடுக்கம் காண்டுமால். 53-1

வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள் வெம் பிலன் என, தொட்ட வாயினர். 55-1

ஒருபது கையினர், ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர், இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர்; விகட வேடத்தர்;
பருவரை என, முலை பலவும் நாற்றினர். 55-2

சிரம் ஒரு மூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒரு மூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார். 55-3

சூலம், வாள், சக்கரம், தோட்டி, தோமரம்,
கால வேல், கப்பணம், கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டனைய மேனியர்;
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார். 55-4

கரி, பரி, வேங்கை, மாக் கரடி, யாளி, பேய்,
அரி, நரி, நாய், என அணி முகத்தினர்;
வெரிந் உறு முகத்தினர்; விழிகள் மூன்றினர்;
புரிதரு கொடுமையர்; புகையும் வாயினர். 55-5

என்ன வாழ்த்திய மாருதி, 'ஈது நாம்
இன்னும் காண்டும்' என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும் அவ் இடத்து ஆயினான். 96-1

'இன்று நாளை அருளும் திருவருள்
என்று கொண்டு, இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனை கூடுதியோ? குழை
தின்று உறங்கி மறம் தவாச் செல்வியே! 99-1

என்றனன், எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி,
நி.....லத் தாவி நிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின் சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ, மெல்லச்
சென்று, அவன் தன்னைச் சார்ந்தாள், மயன் அருள் திலகம் அன்னாள். 145-1

பொருக்கென அவனி....க....கொடி முறுவல் பூப்ப,
அரக்கர் கோமகனை நோக்கி, 'ஆண்மை அன்று; அழகும் அன்றால்-
செருக்கு உறு தவத்தை, கற்பின் தெய்வத்தை, திருவை, இன்னே
வெருக் கொளச் செய்வது! ஐயா!' என, இவை விளம்பலுற்றாள்: 145-2

'செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார்,
வெம்மை உற்று உன்மேல் வீழ்வார், வெள்கியே நகை செய்து ஓத,
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே. 145-3

'புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ? என்றும் கொள்ளாய்!
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு' என, மதிப்பி ..........
......................................................................................... 145-4

'வாச மென் குழலினாரால், மண்ணினில், வானில், யார்க்கும்
நாசம் வந்து ஏன்று....... மறைகளே நலிலும் மாற்றம்,
பூசல் வண்டு உறையும் தாராய்! அறிந்தும் நீ, புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும்?............................ 145-5

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்; அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென்' என்னா, நகை இலா முகத்து, பேழ் வாய்,
வெஞ் சினத்து அரக்கிமார்க்கு, வேறுவேறு உணர்த்திப் போனான். 146-1

என்றார்; இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாறக்
கன்றாநின்றார், காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ? மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா!
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார்; 151-1

கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதான்
வெல்வான், நம்கோன்; தின்னுமின்; வம்!' என்பவர் மெய்யும்,
வல் வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்லாள்; நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள். 151-2

தீயோர் செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும், மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றே அன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச் சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். 153-1

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 4. உருக் காட்டு படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:15 pm

அனுமன் விஞ்சையால் அரக்கியர் உறங்குதல்

'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார்' என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார். 1

தூங்காத காவலர் தூங்குதல் கண்ட சீதையின் புலம்பல்

துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள், நெகுகின்றாள்;
அஞ்சா நின்றாள், பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால், இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர் உற்றாள். 2

'கரு மேகம், நெடுங் கடல், கா அனையான்
தருமே, தமியேன் எனது ஆர் உயிர் தான்?
உரும்ஏறு உமிழ் வெஞ் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய், வலியாய் வலியே! 3

'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ? 4

'தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனானுடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ? 5

'வாராது ஒழியான் எனும் வண்மையினால்,
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்;
தீராய் ஒரு நாள் வலி -சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே! 6

'தரு ஒன்றிய கான் அடைவாய்; "தவிர் நீ;
வருவென் சில நாளினில்; மா நகர்வாய்
இரு" என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ? 7

'பேணும் உணர்வே! உயிரே! பெரு நாள்
நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக்
காணும் துணையும் கழிவீர்அலிர்; நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ? 8

'முடியா முடி மன்னன் முடிந்திடவும்,
படி ஏழும் நெடுந் துயர் பாவிடவும்,
மடியா நெறி வந்து வளம் புகுதும்
கொடியார் வரும் என்று, குலாவுவதோ?' 9

சீதை உயிர் விடத் துணிதல்

என்று என்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்;
'ஒன்று என் உயிர் உண்டுஎனின், உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே, புகழ் பூணும்' எனா, 10

'பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன்,
அறை இருங் கழலவற் காணும் ஆசையால்;
நிறை இரும் பல் பகல், நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை, அப் புனிதன் தீண்டுமோ? 11

'உன்னினர் பிறர் என உணர்ந்தும், உய்ந்து, அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்,
மன் உயிர் காத்து, இருங் காலம் வைகினேன்;
என்னின், வேறு அரக்கியர், யாண்டையார்கொலோ? 12

'சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்;
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்றுஅரோ!
கற்புடை மடந்தையர், கதையில் தான் உளோர்,
இல் பிரிந்து உய்ந்தவர், யாவர் யான் அலால்? 13

'"பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது" என்று, உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்;
புறன் அலர், அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன்? 14

'எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன்,
அப் பொழுதே, உயிர் துறக்கும் ஆணையேன்;
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத, யான்,
துப்பு அழிந்து உய்வது, துறக்கம் துன்னவோ? 15

'அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்,
வன் பழி சுமக்கினும் சுமக்க; வான் உயர்,
துன்பு அழி, பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்;
என் பழி துடைப்பவர், என்னின் யாவரே? 16

'வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி, என்
மஞ்சனை வைது, "பின் வழிக் கொள்வாய்" எனா,
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும், உலகம் கொள்ளுமோ? 17

'வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ? 18

'வருந்தல் இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம் மடந்தையர் முன்பு, பேதையேன்,
'கருந் தனி முகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்
இருந்தவள், இவள்' என, ஏச நிற்பெனோ? 19

'அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற,
வில் பணி கொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள்,
"இல் புகத் தக்கலை" என்னில், யானுடைக்
கற்பினை, எப் பரிசு இழைத்துக் காட்டுகேன்? 20

மாதவிப் பொதும்பர் புக்க சீதையின் முன், அனுமன் தோன்றுதல்

'ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு' எனா,
'சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை' என்று, ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 21

கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா,
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான். 22

'இராமன் தூதன் யான்' என அனுமன் மொழிதல்

'அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்;
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர்; தவத்தை மேவலால்,
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன். 23

'ஈண்டு நீ இருந்ததை, இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன்; அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில; ஈது அலால், மாறு வேறு உண்டோ ? 24

'ஐயுறல்; உளது அடையாளம்; ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள;
கைஉறு நெல்லியங் கனியின் காண்டியால்;
நெய் உறு விளக்கு அனாய்! நினையல் வேறு' என்றான். 25

அனுமனைக் கண்டு தெளிந்த சீதை அவனைப் பற்றி வினவல்

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
'நின்றவன் நிருதன் அல்லன்; நெறி நின்று; பொறிகள் ஐந்தும்
வென்றவன்; அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்;
நன்று உணர்வு உரையன்; தூயன்; நவை இலன் போலும்!' என்னா, 26

'அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ?' 27

என நினைத்து, எய்த நோக்கி, 'இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்' என்னா, 'வீர! நீ யாவன்?' என்றாள். 28

அனுமன் தன் வரலாறு கூறல்

ஆய சொல் தலைமேல் கொண்ட அங்கையன், 'அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன், தொல்லைக்
காய் கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக்குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்றுஉளன், நவையின் தீர்ந்தான். 29

'மற்று, அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன்; தேவர் வேண்ட, வேலையை, விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய, அமுது எழ கடைந்த தோளான். 30

'அன்னவன்தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால் ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன்தனக்கு, நாயேன், மந்திரத்து உள்ளேன்; வானின்
நல் நெடுங் காலின் மைந்தன்; நாமமும் அனுமன் என்பேன். 31

'எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப; வேலை தனித் தனி கடக்கும் தாள;
குழுவின, உம்கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி,
வழு இல, செய்தற்கு ஒத்த - வானரம் வானின் நீண்ட. 32

'துப்பு உறு பரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப் புறம் தேடி நின்னை எதிர்ந்திலஎன்னின், அண்டத்து
அப் புறம் போயும் தேட, அவதியின் அமைந்து போன. 33

'புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்துதூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன்தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
"தென் திசைச் சேறி" என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? 34

'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ! 35

'ஆயவன் தன்மை நிற்க; அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர, அனையவன் விடுத்தான் என்னை,
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு' என்றனன், பழியை வென்றான் 36

அனுமன் இராமனின் வடிவழகை விவரித்தல்

எய்து அவன் உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
'உய்தல் வந்து உற்றதோ?' என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்,
'ஐய! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி?' என்றாள். 37

'படி உரைத்து, எடுத்துக் காட்டும் படித்து அன்று, படிவம்; பண்பில்
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும், முன்னர்;
துடிஇடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி' என்னா,
அடிமுதல் முடியின் காறும், அறிவுற அனுமன் சொல்வான். 38

'"சேயிதழ்த் தாமரை" என்று, சேண் உளோர்
ஏயினர்; அதன் துணை எளியது இல்லையால்,
நாயகன் திருஅடி குறித்து நாட்டுறின்;
பாய் திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால்! 39

'தளம் கெழு கற்பக முகிழும், தண் துறை
இளங் கொடிப் பவளமும் கிடக்க; என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர், உதிக்கும் சூரியன்
இளங் கதிர் ஒக்கினும் ஒக்கும்-ஏந்திழாய்! 40

'சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்து உளஅல்ல; மற்று இனி;
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில;
அறிகிலென், உகிர்க்கு, யான், உவமம் ஆவன. 41

'பொருந்தில நிலனொடு, போந்து கானிடை
வருந்தினஎனின், அது நூலை மாறு கொண்டு
இருந்தது; நின்றது, புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர; அஃது உரைக்கற்பாலதோ? 42

'தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு,
ஆம் கணைக்கு ஆவமோ, ஆவது? அன்னையே! 43

'அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும், பொற்புடை,
மறம் கிளர் மத கரிக் கரமும் நாணின,
குறங்கினுக்கு உவமை, இவ் உலகில் கூடுமோ? 44

'வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலஞ் சுழி என்றலும் புன்மை; பூவொடு
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர், இனி,
இலஞ்சியும் போலும்? வேறு உவமை யாண்டுஅரோ? 45

'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னின், பின்னை, அத்
திருவினின் திரு உளார் யாவர்? தெய்வமே! 46

'நீடுறு கீழ்த் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என, சிறிது கூறலாம்,
தோடு உறு மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள் தொடு தடக் கை; வேறு உவமை சாலுமே? 47

'பச்சிலைத் தாமரை பகல் கண்டால் எனக்
கைச் செறி முகிழ் உகிர், கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம்; அன்று எனின், ஐயம் நீக்குமே? 48

'திரண்டில; ஒளி இல; திருவின் சேர்வு இல;
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில; புகழ் இல; பொருப்பு என்று ஒன்று போன்று
இரண்டு இல; புயங்களுக்கு உவமம் ஏற்குமோ? 49

'"கடற் படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை" என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ-உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க, எங்களால்? 50

'அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்?
தண் மதி ஆம் என உரைக்கத் தக்கதோ,
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால்? 51

'"ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ் வாய்
நாரம் உண்டு அலர்ந்த, செங் கேழ் நளினம்" என்று உரைக்க நாணும்;
ஈரம் உண்டு, அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்,
மூரல் வெண் முறுவல் பூவாப் பவளமோ, மொழியற்பாற்றே? 52

'முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? 53

'எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா, வள்ளல் திரு மூக்கிற்கு; உவமை பின்னும் குணிப்பு ஆமோ? 54

'பனிக்க, சுரத்து, கரன் முதலோர் கவந்தப் படையும், பல் பேயும்,
தனிக் கைச் சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறனும்,
"இனிக் கட்டழிந்தது அரக்கர் குலம்" என்னும் சுருதி ஈர்-இரண்டும்,
குனிக்க, குனித்த புருவத்துக்கு உவமம், நீயே, கோடியால். 55

'வரு நாள் தோன்றும் தனி மறுவும், வளர்வும், தேய்வும், வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும், இறப்பும், பிறப்பும் ஒழிவுற்றால்,
இரு-நால் பகலின் இலங்கு மதி, அலங்கல் இருளின் எழில் நிழற் கீழ்ப்
பெரு நாள் நிற்பின், அவன் நெற்றிப் பெற்றித்து ஆகப் பெறும் மன்னோ! 56

'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? 57

'புல்லல் ஏற்ற திருமகளும், பூவும், பொருந்தப் புலி ஏழும்
எல்லை ஏற்ற நெடுஞ் செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும், அழியா நடையை, இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்த யானை வருந்தாதோ?' 58

இன்ன மொழிய, அம் மொழி கேட்டு, எரியின் இட்ட மெழுகு என்ன,
தன்னை அறியாது அயர்வாளை, தரையின் வணங்கி, 'நாயகனார்
சொன்ன குறி உண்டு; அடையாளச் சொல்லும் உளவால், அவை, தோகை
அன்ன நடையாய், கேட்க!' என, அறிவன் அறைவான் ஆயினான் 59

இராமன் உரைத்த அடையாள மொழிகளைச் சீதைக்கு அனுமன் கூறுதல்

'"நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி" என, அச் சொற்கு,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். 60

'"நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய். 61

'"எள் அரிய தேர் தரு சுமந்திரன்! இசைப்பாய்,
வள்ளல் மொழி வாசகம்; மனத் துயர் மறந்தாள்;
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள" என்னும்,
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி, பெயர்த்தும். 62

இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி

'"மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது" என, நேர்ந்தனன்' எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63

இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல், இ(ந்)நல் நுதலி செய்கை? 64

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்;
உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 66

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69

சீதை அனுமனை வாழ்த்துதல்

இத் தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள், விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென் குதலை தள்ள, 'உயிர் தந்தாய்!
உத்தம!' எனா, இனைய வாசகம் உரைத்தாள்: 70

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்,
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமைதானும் நல்கினை, இசையோடு' என்றாள். 71

'பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 72

இராம இலக்குவரைப் பற்றிச் சீதை வினாவ, அனுமன் விடை கூறல்

மீண்டு உரை விளம்பலுற்றாள், 'விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான், இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல, அறிந்தது?' என்றாள்;
தூண் திரள் தடந் தோளானும், உற்றது சொல்லலுற்றான்: 73

'உழைக் குலத் தீய மாய உருவு கொண்டு, உறுதல் செய்தான்,
மழைக் கரு நிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்;
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்ய, போய், வையம் சேர்வான்
அழைத்தது அவ் ஓசை; உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் 74

'"இக் குரல் இளவல் கேளாது ஒழிக" என, இறைவன் இட்டான்
மெய்க் குரல் சாபம்; பின்னை, விளைந்தது விதியின் வெம்மை;
"பொய்க் குரல் இன்று, பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்" என்பான்,
கைக் குரல் வரி வில்லானும், இளையவன் வரவு கண்டான். 75

'கண்ட பின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும், உற்றது புகலக் கேட்டான்;
வண்டு உறை சாலை வந்தான், நின் திரு வடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான்; இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ? 76

'தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? 77

'அந் நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன் இருங் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். 78

'வந்து, அவன் மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
"எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு" என, இலங்கை வேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. 79

'சீறி, "இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய் அம்பால்
நூறுவென்" என்று, கை வில் நோக்கியகாலை, நோக்கி,
"ஊறு ஒரு சிறியோன் செய்ய, முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி" என்று, தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி, 80

'"எவ் வழி ஏகியுற்றான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய், கூறுக!" என்ன, செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்,
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின் வீழ்ந்தார். 81

'அயர்த்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு,
செயத் தகு கடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்;
"கயத் தொழில் அரக்கன் தன்னை நாடி, நாம் காண்டும்" என்னா,
புயல் தொடு குடுமிக் குன்றும், கானமும், கடிது போனார். 82

'அவ் வழி, நின்னைக் காணாது, அயர்த்தவர் அரிதின் தேறி,
செவ்வழி நயனம், செல்லும் நெடு வழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ் வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கலுற்றான். 83

'கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்?
பொன் மொய்த்த தோளான், மயல் கொண்டு, புலன்கள் வேறாய்,
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான். 84

'"போது ஆயினபோது, உன் தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா, பவளக் கொடி அன்னவள்-தேடி, என்கண்
நீ தா; தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி!" என்னா,
கோதாவரியைச் சினம் கொண்டனன், கொண்டல் ஒப்பான். 85

'"குன்றே! கடிது ஓடினை, கோமளக் கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி; காட்டலைஎன்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உனுடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியா, கரி ஆக்க" என்றான். 86

'"பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ,
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண்!" என்னா,
நன் மான்களை நோக்கி, "நும் நாமமும் மாய்ப்பென் இன்றே,
வில் மாண் கொலை வாளியின்" என்று, வெகுண்டு நின்றான். 87

'வேறுற்ற மனத்தவன், இன்ன விளம்பி நோவ,
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று, உயிர் பெற்று, இயல்பும் சில தேறலுற்றான். 88

'வந்தான் இளையானொடு, வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங் குன்றினில்; தன் உயிர்க் காதலோனும்,
செந் தாமரைக் கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய. 89

'உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற, போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை, யாங்கள் காட்ட,
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான். 90

'தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை;
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே, அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணி கொண்டது; பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால் 91

'அயர்வு உற்று, அரிதின், தெளிந்து, அம் மலைக்கு அப் புறத்து ஓர்
உயர் பொன் கிரி உற்று உளன், வாலி என்று ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்று அவ் இராவணன் வாலிடைப் பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு, மால் கடல் தாவி வந்தான். 92

'ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்வயின், அவ் அரசு ஈந்தவன், "சுற்று சேனை
மேயான் வருவான்" என விட்டனன்; மேவுகாறும்
ஏயான், இருந்தான், இடைத் திங்கள் இரண்டு இரண்டும். 93

'பின் கூடிய சேனை பெருந் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவி,
தெற்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை' என்ன,
முன் கூடின கூறினன், காலம் ஓர் மூன்றும் வல்லான். 94

இராமனது நிலை எண்ணிய சீதையின் மன நிலை

அன்பினன் இவ் உரை உணர்த்த, ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்,
என்பு உற உருகினள்; இரங்கி ஏங்கினள்;
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 95

கடல் கடந்தது பற்றி சீதை வினவ அனுமன் விடையளித்தல்

நையுறு சிந்தையள், நயன் வாரியின்
தொய்யல் வெஞ் சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,
'ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எப் பரிசு? இயம்புவாய்!' என்றாள். 96

'சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால்' என்றான். 97

'இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்' என்றாள்-
முத்தினும், நிலவினும், முறுவல் முற்றினாள். 98

அனுமன் கடல் கடந்த தன் பேர் உருவைக் காட்டுதல்

சுட்டினன், நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர் தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான். 99

'செவ் வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான்,
வெவ் வழிப் பூதம் ஓர் ஐந்தின் மேலதோ?
அவ் வழித்து அன்று, எனின், அனுமன் பாலதோ?
எவ் வழித்து ஆகும்?' என்று எண்ணும் ஈட்டதே. 100

ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம்தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என, முன்னும் பின்னரும்,
தொத்தின தாரகை, மயிரின் சுற்று எலாம். 101

கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய,
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய,
குண்டலம் இரண்டும், அக் கோளின் மாச் சுடர்
மண்டலம் இரண்டொடும், மாறு கொண்டவே. 102

'ஏண் இலது ஒரு குரங்கு ஈது' என்று எண்ணலா
ஆணியை, அனுமனை, அமைய நோக்குவான்,
'சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று' எனா,
நாண் உறும் - உலகு எலாம் அளந்த நாயகன். 103

எண் திசை மருங்கினும், உலகம் யாவினும்,
தண்டல் இல் உயிர் எலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன், தானும், தன் கமலக் கண்களால். 104

எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின், இலங்கை ஆழ் கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம்தாம் எலாம். 105

பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்

வஞ்சிஅம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
'துஞ்சினர் அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
'அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய்' என்றாள். 106

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய்' என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள். 107

எளிய உருவு காட்டிய அனுமனைச் சீதை பாராட்டுதல்

ஆண்தகை அனுமனும், 'அருளது ஆம்' எனா,
மீண்டனன், விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள். 108

'இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய், எனினும், பயன் இன்றால்;
நடந்தாய் இடையே என்றாலும், நாண் ஆம் நினக்கு; நளிர் கடலைக்
கடந்தாய் என்றல் என் ஆகும்?-காற்றே அனைய கடுமையாய்! 109

ஆழி நெடுங் கை ஆண்தகைதன் அருளும், புகழும், அழிவு இன்றி,
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை ஆனாய்;-
பாழி நெடுந் தோள் வீரா!-நின் பெருமைக்கு ஏற்ப, பகை இலங்கை
ஏழு கடற்கும் அப் புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ? 110

'அறிவும் ஈதே, உரு ஈதே; ஆற்றல் ஈதே, ஐம் புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ, குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர்? 111

'மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே? நிருதர் என் ஆவர், நீயே எம் கோன் துணை என்றால்? 112

'மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன்,
பூண்டேன் எம் கோன் பொலங் கழலும்; புகழே அன்றி, புன் பழியும்
தீண்டேன்' என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள் 113

அனுமனின் பணிமொழி

அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், 'அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன் 114

வானரப் படையின் சிறப்பை அனுமன் எடுத்துரைத்தல்

'வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை? இவ் வேலைப்
பள்ளம், ஒரு கை நீர் அள்ளிக் குடிக்க, சாலும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ,
உள்ள துணையும் உளது ஆவது? அறிந்த பின்னும் உளது ஆமோ? 115

'வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடுஞ் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், காம்பன், கயவன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்பான்; 116

'தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ?' 117

மிகைப் பாடல்கள்

சுற்றிய கொடி ஒன்றைத் துணித்து, தூயள், ஓர்
பொன் தடங் கொம்பினில் பூட்டி, 'பூமியே!
நல் தவம் உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர் திருவடி மேவுவேன்' என்றாள். 21-1

என்று அருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக் கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின். 21-2

எய்தினள், பின்னும் எண்ணாத எண்ணி, 'ஈங்கு
உய் திறம் இல்லை!' என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய் தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில், தவத்தின் பெற்றியால், 21-3

தோன்றினன், தனது உருக் காண; தூயவன்,
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது,
ஆன்ற பேர் அன்பு கொண்டு, அறைதல்மேயினான்: 22-1

'நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்,
நீக்கினர் துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம் பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு, சார்ந்துளேன். 23-1

'நிலை பெற, அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல;
"அலவன், அது" என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ ? 43-1

'எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில் இணை உரு ஆய்,
தள்ளப்படாத தகை ஆகி, சார் கத்திரிகை வகை ஒழுகா,
அள்ளற் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின் வனப்பு அழித்த, மகரம் செறியாக் குழை' என்றான் 49-1

தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர்த் தம்பியோடும்,
நவம் தந்த குன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன் தனது ஆவி கவர்ந்து, ஒருக்காலும் நீங்காச்
சிவம் தந்து, மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான். 88-1

'சென்றேன் அடியேன், உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர் வருக்கம் உடன் அடைவது; அல்லாது, அரியின் கை
மன்றே கமழும் தொடை அன்றே, நிருதர் குழுவும் மாநகரும்?'
என்றேஇறைஞ்சி,பின்னரும்,ஒன்றுஇசைப்பான்உணர்ந்தான்,ஈறுஇல்லான். 117-1




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 5. சூடாமணிப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:17 pm

சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்

'உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம்' என்று உணர்வுகொண்டான். 1

'கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள் ஆய்!
வீட்டியிடும் மேல், அவனை வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என் பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடி தாழ்வென்; அது காண்டி; இது காலம்; 2

'பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன். 3

'அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன்பால்,
வெறுங் கை பெயரேன் - ஒருவராலும் விளியாதேன். 4

'"இலங்கையொடும் ஏகுதிகொல்" என்னினும், இடந்து, என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால். 5

'அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, "உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்" எனப் பகரின், என் அடிமை என் ஆம்? 6

'புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ?
"கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்" எனக் கழறுகேனோ? 7

'"இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக் குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க" என்னினும், அது இன்று புரிகின்றேன். 8

'இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந் துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல் புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால். 9

'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 10

அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்

ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
'ஆய தன்மை அரியது அன்றால்' என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்; 11

'அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால். 12

'வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம் அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய்! 13

'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ் சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என்பது என்? வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ? 14

'கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க, என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி, காகங்கள்
உண்டபோது அன்றி, யான் உளென் ஆவெனோ? 15

'வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல் அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ? 16

'பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? 17

'அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். 18

'வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், "ஆண்" எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19

'தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? "இமைப்பின்முன்
மாண்டு தீர்வென்" என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு, எழுந்து ஏகினன், கீழ்மையால். 20

'"மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின்,
தேவு வன் தலை சிந்துக நீ" என,
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு; எனது ஆர் உயிர் தந்ததால். 21

'அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும் மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான். 22

'ஆயது உண்மையின், நானும் - அது அன்று எனின்,
மாய்வென் மன்ற;-அறம் வழுவாது என்றும்,
நாயகன் வலி எண்ணியும், நானுடைத்
தூய்மை காட்டவும், இத்துணை தூங்கினேன். 23

'ஆண்டுநின்றும், அரக்கன் அகழ்ந்து கொண்டு,
ஈண்டு வைத்தது, இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது;
காண்டி, ஐய! நின் மெய் உணர் கண்களால். 24

'தீர்விலேன், இது ஒரு பகலும்; சிலை
வீரன் மேனியை மானும் இவ் வீங்கு நீர்
நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்,
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால். 25

'ஆதலான், அது காரியம் அன்று; ஐய!
வேத நாயகன்பால், இனி, மீண்டனை
போதல் காரியம்' என்றனள் பூவை; அக்
கோது இலானும், இனையன கூறினான்: 26

அனுமன் சீதையைப் புகழ்ந்து, 'இராமனிடம் யாது கூறவேண்டும்' என வினவல்

'நன்று! நன்று! இவ் உலகுடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்'
என்று சிந்தை களித்து, உவந்து, ஏத்தினான் -
நின்ற சங்கை இடரொடு நீங்கினான். 27

'இருளும் ஞாலம் இராவணனால்; இது
தெருளும், நீ இனிச் சில் பகல் தங்குறின்;
மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய்' என்று, அடியின் இறைஞ்சினான். 28

அனுமனிடம் சீதை மனம் கசந்து சொன்ன செய்திகள்

'இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ. 29

'"ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டு" என்று வேண்டுவாய். 30

'ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி: "மன் அருளால் எனைக்
காத்து இருந்த தனக்கே கடன், இடை
கோத்த வெஞ் சிறை வீடு" என்று கூறுவாய். 31

'"திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்கு வந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கை யாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால் கடன் செய்க" என்று செப்புவாய். 32

மாமியர்க்குச் சொன்ன செய்தி

'"சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்" எனும் இன்ன சொல்,
அறத்தின் நாயகன்பால்; அருள் இன்மையால்
மறக்கும்ஆயினும், நீ மறவேல், ஐயா! 33

மீண்டும் இராமனுக்குச் செய்தி சொல்லுதல்

'வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்" என்ற, செவ் வரம்
தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 34

'"ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும்,
மீண்டு வந்து பிறந்து, தன் மேனியைத்
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள், தொழுது" என்று விளம்புவாய். 35

'அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போதவும்,
விரசு கோலங்கள் காண விதி இலேன்;
உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன். 36

'தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும், அங்கு ஏகுவது அன்றியே,
என்னை நோக்கி, இங்கு, எங்ஙனம் எய்துமோ? 37

'எந்தை, யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை,
"சுந்தரத் தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு" என்பாய். 38

அனுமன் சீதையைத் தேற்றுதல்

இத் திறம் அனையவள் இயம்ப, 'இன்னமும்,
தத்துறல் ஒழிந்திலை, தையல் நீ!' எனா,
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை,
ஒத்தன, தெரிவுற உணர்த்தினான்அரோ: 39

'வீவாய், நீ இவண்; மெய் அஃதே?
ஓய்வான், இன் உயிர், உய்வானாம்!
போய், வான் அந்நகர் புக்கு அன்றோ?
வேய்வான் மௌலியும்? மெய் அன்றோ? 40

'கைத்து ஓடும் சிறை, கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்!
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்!
இத்தோடு ஒப்பது யாது உண்டே? 41

'நல்லோய்! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம், எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல, எம் கோனும்
வில்லோடும் செல வேண்டாவோ? 42

'நீந்தா இன்னலில் நீந்தாமே,
தேய்ந்து ஆறாத பெருஞ் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால், எம்மின் உயர்ந்தார் யார்? 43

'"நன்று ஆய் நல்வினை நல்லோரைத்
தின்றார் தம் குடர் பேய் தின்னக்
கொன்றால் அல்லது, கொள்ளேன் நாடு"
என்றானுக்கு, இவை ஏலாவோ? 44

'மாட்டாதார் சிறை வைத்தோயை,
"மீட்டாம்" என்கிலம் மீள்வாமேல்,
நாட்டார், நல்லவர், நல் நூலும்
கேட்டார், இவ் உரை கேட்பாரோ? 45

'"பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்,
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்,
மாண்டாள்" என்று, மனம் தேறி
மீண்டால், வீரம் விளங்காதோ? 46

'கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய்என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகு ஓர் ஏழும்
சுட்டாலும், தொலையா அன்றோ? 47

'முன்னே, கொல்வான் மூஉலகும்,
பொன்னே ஓங்கிய போர் வில்லான்,
என்னே! நின் நிலை ஈது என்றால்,
பின்னே, செம்மை பிடிப்பானோ? 48

'கோள் ஆனார் உயிர் கோளோடும்,
மூளா வெஞ் சினம், முற்று ஆகா;
மீளாவேல், அயல் வேறு உண்டோ ?
மாளாதோ புவி வானோடும்? 49

'தாழித் தண் கடல்தம்மோடும்,
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம், அன்று,
ஆழிக் கையவன் அம்பு, அம்மா!
ஊழித் தீ என உண்ணாவோ? 50

'"படுத்தான், வானவர் பற்றாரை;
தடுத்தான், தீவினை; தக்கோரை
எடுத்தான்; நல்வினை, எந் நாளும்
கொடுத்தான்" என்று, இசை கொள்ளாயோ? 51

'சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின், எல்லோரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ-
உன்னால் நல் அறம் உண்டானால்? 52

'புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய் குடையும்தோறும்,
ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ? 53

'ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென,
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி
தாழ் இருங் குருதியால், தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று, இரைப்பக் காண்டியால். 54

'சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலிஅம் கண்ணியர் அறுத்து நீத்தன,
வாலியும் கடப்ப அரு வனப்ப, வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்கக் காண்டியால். 55

'விண்ணின் நீளிய நெடுங் கழுதும், வெஞ் சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்,
புண்ணின் நீர்ப் புணரியில் படிந்து, பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால். 56

'கரம் பயில் முரசுஇனம் சுறங்க, கை தொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில, நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின், ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை முனிப்பக் காண்டியால். 57

'புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி
திரை உறு குருதி யாறு ஈர்ப்பச் செல்வன,
வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின,
கரை உறு நெடுங் கடல் தூர்ப்பக் காண்டியால். 58

'வினையுடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக,
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்,
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால்,
கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால். 59

'தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை, நுதி கொள் மூக்கினால்,
காக்கைகள் கவர்ந்து கொண்டு, உண்ணக் காண்டியால். 60

'மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி, வில்
கால் உறு கணை தடிந்து, இடுவ காண்டியால். 61

'நீர்த்து எழு கணை மழை வழங்க, நீல வான்
வேர்த்தது என்று இடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழு பொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால். 62

'நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு, ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறாக்
காலனும், வெறுத்து, உயிர் காலக் காண்டியால். 63

'அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால் முறை பிடித்து, மாலைய
கணம் கொடு குரக்குஇனம் குளிப்பக் காண்டியால். 64

'செப்புறல் என் பல? தெய்வ வாளிகள்,
இப் புறத்து அரக்கரை முருக்கி ஏகின,
முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்,
அப் புறத்து அரக்கரும் அவியக் காண்டியால். 65

'ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று; யான், விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பினும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ? 66

'"ஆவி உண்டு" என்னும் ஈது உண்டு; உன் ஆர் உயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்ட, தீய்ந்திலாப்
பூ இலை; தளிர் இலை; பொரிந்து வெந்திலாக்
கா இலை; கொடி இலை;-நெடிய கான் எலாம். 67

'சோகம் வந்து உறுவது, தெளிவு தோய்ந்து அன்றோ?
மேகம் வந்து இடித்து உரும்ஏறு வீழ்கினும்,
ஆகமும் புயங்களும் அழுந்த, ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும், உணர்வு நாறுமோ? 68

'மத்து உறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? 69

'"இந் நிலை உடையவள் தரிக்கும்" என்றியேல்,
பொய்ந் நிலை காண்டி; யான் புகன்ற யாவும், உன்
கைந் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்;
மெய்ந் நிலை உணர்ந்து, நீ விடைதந்து ஈ' என்றான். 70

'தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி! நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு, உவந்து இருத்தி, அன்னை! நீ. 71

'எண்ண அரும் பெரும் படை, நாளை, இந் நகர்
நண்ணிய பொழுது, அதன் நடுவண், நங்கை! நீ,
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என் நெடும் வெரிநில் காண்டியால். 72

'அங்கதன் தோள்மிசை, இளவல், அம் மலை
பொங்கு வெங்கதிர் எனப் பொலிய, போர்ப்படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி; தனிமை நீங்குவாய். 73

'குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே,
விராவு அரு நெடுஞ் சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன்' என்றனன். 74

அனுமன் உரையால் சீதை தேறி கூறல்

ஆக இம் மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்;
ஓகை கொண்ட் களிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
'போகை நன்று இவன்' என்பது, புந்தியின் வைத்தாள்;
தோகையும், சில வாசகம் இன்னன சொன்னாள்: 75

'சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன, கோமாற்கு
ஏறும்' என்று, இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்: 76

'நாகம் ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து, எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படை விட்டது, மெல்ல விரிப்பாய். 77

'"என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்?
மன்ன!" என்றலும், "மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர் ஆக" என அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை தொடர்ந்தோய்! 78

சீதை சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல்

என்று உரைத்த, 'இனிது இத்தனை பேர் அடையாளம்;
ஒன்று உணர்த்துவது இல்' என எண்ணி உணர்ந்தாள்,
தன் திருத் துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச் சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், 79

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா,
ஏங்கினாள்; அவ் அனுமனும், 'என்கொல் இது?' என்னா,
வீங்கினான்; வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும். 80

'மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்' என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம். 81

கூந்தல் மென் மழை கொள் முகில்மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது, மெல்லியல்தன் திருமேனி
சேந்தது, அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது, காட்டினள்; மாருதி கண்டான். 82

'சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை, நல்லோய்!
கோடி' என்று கொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள். 83

சூடாமணி பெற்ற அனுமன் விடைபெற்றுச் செல்லுதல்

தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால். 84

மிகைப் பாடல்கள்

'சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு, தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால்!
ஈண்டு யான் வரம் வேண்டினென், ஈறு இலாய்!' 31-1

என்று உரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ் சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறை நெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால். 38-1

'"கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ் இலங்கை" என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி! நீயும் கண்டு, இரங்கப் போதியால்.' 65-1

'"அங்கு, அது அஞ்சி, நடுங்கி, அயன் பதி அண்மி,
"இங்கு நின் வரவு என்னை" எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடு எண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய். 77-1

'இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில் நின்றவர் கண்டு, "இனி, அந்தோ!
எந்தைதன் சரண் அன்றி, ஒர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண் வீழ்க!" என உற்றதும் வைப்பாய். 77-2

'"ஐய நின் சரணம் சரண்!" என்று, அவன் அஞ்சி,
வையம் வந்து வணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
"வெய்யவன் கண் இரண்டொடு போக!" என, விட்ட
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய். 77-3

'"எந்தை, நின் சரணம் சரண்!" என்ற இதனால்,
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்று கொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க!" என, வைத்ததும் வைப்பாய். 77-4

'வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்;
நாக நம்பன் இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கிய வென்றியின், இன் சொல் பணிப்பாய். 77-5




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 6. பொழில் இறுத்த படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:22 pm

விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை

நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
'சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது' எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1

'ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 2

'வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 3

'கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 4

'மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்?' என்று முயல்கின்றான். 5

'இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 6

'வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன்.' 7

அசோக வனத்தை அனுமன் அழித்தல்

என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 8

முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 9

வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்க, சில நெக்க; 10

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11

அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த. 12

முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ. 13

விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார்,
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ. 14

பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ,
மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த;
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின்
தன் திரள் ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. 15

புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும்,
கள்ளும், முகையும், தளிர்களோடு இனிய காயும்,
வெள்ள நெடு வேலையிடை, மீன்இனம் விழுங்கித்
துள்ளின; மரன் பட, நெரிந்தன துடித்த. 16

தூவிய மலர்த்தொகை சுமந்து, திசைதோறும்,
பூவின் மணம் நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய, திரை ஆர்கவிகள் அம்மா! 17

இடந்த மணி வேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தன துரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவு என்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது, நல் நீர். 18

வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்,
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான. 19

எண் இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென் மழைபோல் இடை தழைந்தது; சலத்தால்,
அண்ணல் அனுமான், 'அடல் இராவணனது, அந் நாள்,
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம்' என, விதித்தான். 20

தேன் உறை துளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித் தரு விசும்பினிடை போவ,
மீன் முறை நெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன. 21

சாகம் நெடு மாப் பணை தழைத்தன; தனிப் போர்
நாகம் அனையான் எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடை இழிந்து, புனல் வாரும்
மேகம் எனல் ஆய-நெடு மா கடலின் வீழ்வ. 22

ஊனம் உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என,
தான கற்பகத் தண்டலை விண்தலம்
போன, புக்கன, முன் உறை பொன்னகர். 23

மணி கொள் குட்டிமம் மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த் தலம் சிந்தி, செய்ற்கு அரும்
பணி படுத்து, உயர் குன்றம் படுத்துஅரோ; 24

வேங்கை செற்று, மராமரம் வேர் பறித்து,
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்,
பாங்கர் சண்பகப் பத்தி பறித்து, அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே; 25

சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட,
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட,
முந்து அனங்க வசந்தன் முகம் கெட,
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே. 26

காமரம் களி வண்டு கலங்கிட,
மா மரங்கள் மடிந்தன, மண்ணொடு;
தாம், அரங்க அரங்கு, தகர்ந்து உக,
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே. 27

குழையும், கொம்பும், கொடியும், குயிற்குலம்
விழையும் தண் தளிர்ச் சூழலும், மென் மலர்ப்
புழையும், வாசப் பொதும்பும், பொலன் கொள் தேன்
மழையும், வண்டும், மயிலும், மடிந்தவே. 28

பவள மாக் கொடி வீசின, பல் மழை
துவளும் மின் என, சுற்றிட; சூழ் வரை,
திவளும் பொன் பணண மா மரம் சேர்ந்தன,
கவள் யானையின் ஓடையின் காந்தவே. 29

பறவை ஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக் குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்து எழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிகப் போயதே. 30

பாடலம் படர் கோங்கொடும், பண் இசைப்
பாடல் அம் பனி வண்டொடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள்இனம், பார்ப்பொடே. 31

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன;
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல்,
விண்தலம் புக நீள் மரம், வீழ்ந்தவே. 32

தாமரைத் தடம் பொய்கை, செஞ் சந்தனம்-
தாம் அரைத்தன ஒத்த; துகைத்தலின்,
காமரம் களி வண்டொடும், கள்ளொடும்,
காமர் அக் கடல் பூக் கடல் கண்டவே. 33

சிந்துவாரம் திசைதொறும் சென்றன,
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன;
தந்து, ஆரம், புதவொடு தாள் அற,
தம் துவாரம் துகள் பட, சாய்ந்தவே. 34

நந்தவானத்து நாள் மலர் நாறின,
நந்த, வானத்து நாள் மலர் நாறின;
சிந்து அ(வ்) வானம் திரிந்து உக, செம் மணி
சிந்த, வால் நந்து இரிந்த, திரைக் கடல்; 35

புல்லும் பொன் பணைப் பல் மணிப் பொன் மரம்,
'கொல்லும் இப்பொழுதே' எனும் கொள்கையால்,
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன, விண் உற வீசின. 36

ஆனைத் தானமும், ஆடல் அரங்கமும்,
பானத் தானமும், பாய் பரிப் பந்தியும்,
ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன-
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே. 37

மயக்கு இல் பொன் குல வல்லிகள், வாரி நேர்
இயக்குறத் திசைதோறும் எறிந்தன,
வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன,
புயல் கடல்தலை புக்கன போல்வன. 38

பெரிய மா மரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின், மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம் நெருப்பு எழ, நீறு எழ,
இரியல்போன, இலங்கையும் எங்கணும். 39

'"தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய்" என்று, காணுமேல், அரக்கன் காய்தல்
உண்டு' என வெருவினான்போல், ஒளித்தனன், உடுவின் கோமான். 40

காசு அறு மணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள்தோறும், ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். 41

கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து
உதறின, சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42

தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும் தொடுத்த புள்தம்
கூட்டொடும் துறக்கம் புக்க, குன்று எனக் குலவுத் திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்தன்னால்;
மீட்டு, அவன் கருணைசெய்தால்; பெறும் பதம் விளம்பலாமோ? 43

சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்

பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா! 44

கதிரவன் தோன்றுதல்

உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான். 45

வனத்தின் பொழில் அழித்து நின்ற அனுமனின் நிலை

தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். 46

அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் வினாவும், சீதையின் மறுமொழியும்

இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
'அன்னை! ஈது என்னை மேனி? யார்கொல்?' என்று, அச்சம் உற்றார்,
நன்னுதல்தன்னை நோக்கி, 'அறிதியோ நங்கை?' என்றார். 47

'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல் உண்டோ , நும்முடைச் சூழல் எல்லாம்?
ஆய மான் எய்த, அம்மான், இளையவன், "அரக்கர் செய்த
மாயம்" என்று உரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன். 48

அனுமன் வேள்வி மண்டபத்தை அழித்தல்

என்றனள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி,
குன்றமும், உலகும், வானும், கடல்களும், குலையப் போனார்;
நின்றது ஓர் சயித்தம் கண்டான்; 'நீக்குவன் இதனை' என்னா,
தன் தடக் கைகள் நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். 49

கண் கொள அரிது; மீது கார் கொள அரிது; திண் கால்
எண் கொள அரிது; இராவும் இருள் கொள அரிது; மாக
விண் கொள நிவந்த மேரு வெள்குற, வெதும்பி உள்ளம்
புண் கொள, உயர்ந்தது; இப் பார் பொறை கொள அரிது போலாம். 50

பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன,
அம் கை பத்து-இரட்டியான்தன் ஆணையால், அழகு மாணப்
பங்கயத்து ஒருவன் தானே, பசும் பொனால் படைத்தது அம்மா! 51

தூண் எலாம் சுடரும் காசு; சுற்று எலாம் முத்தம்; செம் பொன்
பேணல்ஆம் மணியின் பத்தி, பிடர் எலாம்; ஒளிகள் விம்ம,
சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கேயும்
பூணலாம்; எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே. 52

'வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன், வேரோடு
அள்ளினன்' என்னக் கேட்டான்; அத் தொழிற்கு இழிவு தோன்ற,
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல,
வள் உகிர்த் தடக் கைதன்னால் மண்நின்றும் வாங்கி, அண்ணல், 53

விட்டனன், இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்
பட்டன, பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர் வீரர், அம்மா!-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 54

சோலை காக்கும் பருவத் தேவர் இராவணனிடம் செய்தி தெரிவித்தல்

நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்; ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர். 55

அரி படு சீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின் வீழ்ந்தார்;
'கரி படு திசையின் நீண்ட காவலாய்! காவல் ஆற்றோம்!
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச,
எரி படு துகிலின், நொய்தின் இற்றது கடி கா' என்றார். 56

'சொல்லிட எளியது அன்றால்; சோலையை, காலின், கையின்,
புல்லொடு துகளும் இன்றி, பொடிபட நூறி, பொன்னால்
வில் இடு வேரம்தன்னை வேரொடு வாங்கி வீச,
சில் இடம் ஒழிய, தெய்வ இலங்கையும் சிதைந்தது' என்றார். 57

இராவணன் இகழ்ந்து நகுதலும், காவலர் அனுமன் செய்லை வியந்து கூறலும்

'ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே! நன்று இது! இராக்கதர் கொற்றம்! சொற்றல்
மூடரும் மொழியார்' என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58

தேவர்கள், பின்னும், 'மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக் குரங்கை, ஐய! காணுதி இன்னே' என்றார். 59

அனுமனின் ஆரவாரம்

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
'அண்டமும் பிளந்து விண்டது ஆம்' என, அனுமன் ஆர்த்தான். 60

மிகைப் பாடல்கள்

எனப் பதம் வணங்கி, அன்னார் இயம்பிய வார்த்தை கேளா,
கனக் குரல் உருமு வீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவு அழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர
சினத்து வாய் மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான். 57-1

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 7. கிங்கரர் வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:23 pm

அனுமனைப் பிடித்து வர இராவணன் ஆணையிடுதல்

அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி
வெருவரு முழக்கும், ஈசன் வில் இறும் ஒலியும், என்ன,
குரு மணி மகுட கோடி முடித் தலை குலுங்கும் வண்ணம்,
இருபது செவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த ஓசை. 1

புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
'வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி,
கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்' என்றான். 2

அரக்க வீரர் போருக்குச் செல்லுதல்

சூலம், வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி,
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். 3

'நானிலம்அதனில் உண்டு போர்' என நவிலின், அச் சொல்,
தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர், தெரிந்தும் என்னின்,
கானினும் பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி
வானினும் பெரியர்; மேனி மலையினும் பெரியர் மாதோ! 4

திருகுறும் சினத்து, தேவர், தானவர், என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார்; 'வசை ஆம், ஈது ஒர்
பொரு குறும்பு ஏன்று, வென்றி புணர்வது; பூ உண் வாழ்க்கை
ஒரு குறுங் குரங்கு!' என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்; 5

கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத்
தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை
எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக்
கொட்டிய பேரி என்ன, மழை என, குமுறும் சொல்லார்; 6

வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள், மற்றைத்
தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற
கூனல்வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும் கண்ணர்; 7

சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிசம், சங்கு,
முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல்,
பொன் கரக் குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம்,
வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன. 8

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்;
மின் நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்;
'என்?' என்றார்க்கு, 'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார்;
முன் நின்றார் முதுகு தீய, பின் நின்றார் முடுகுகின்றார். 9

வெய்துறு படையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்;
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர்; மடிக்கும் வாயர்;
கை பரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும்காலை,
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார். 10

'பனி உறு செயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா!
தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு!' என்கின்றார்;
'இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்?' என்று இரைத்துப் பொங்கி,
முனிவுறு மனத்தின் தாவி, முந்துற முடுகுகின்றார். 11

எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்,
சுற்றுறு கழலும், சங்கும், தெழி தெழித்து உரப்பும் சொல்லும்,
உற்று உடன்று ஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்
நல் திரைக் கடல்களோடு மழைகளை, நா அடக்க. 12

'தெரு இடம் இல்' என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும்,
புருவமும் சிலையும் கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர் முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும்,
'விரிவு இலது இலங்கை' என்று, வழி பெறார் விளிக்கின்றாரும். 13

வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும்,
தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள்படத் துகைக்கின்றாரும்,
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்,
கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும், 14

அனைவரும், மலை என நின்றார்; அளவு அறு படைகள் பயின்றார்;
அனைவரும், அமரின் உயர்ந்தார்; அகலிடம் நெளிய நடந்தார்;
அனைவரும், வரனின் அமைந்தார்; அசனியின் அணிகள் அணிந்தார்;
அனைவரும், அமரரை வென்றார்; அசுரரை உயிரை அயின்றார். 15

குறுகின கவசரும், மின்போல் குரை கழல் உரகரும், வன் போர்
முறுகின பொழுதின், உடைந்தார் முதுகிட, முறுவல் பயின்றார்;
இறுகின நிதியின் கிழவன் இசை கெட, அளகை எறிந்தார்;
தெறுகுநர் இன்மையின், வன் தோள், தினவுற உலகு திரிந்தார். 16

'வரைகளை இடறுமின்' என்றால், 'மறி கடல் பருகுமின்' என்றால்,
'இரவியை விழ விடும்' என்றால், 'எழு மழை பிழியுமின்' என்றால்,
'அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின்' என்றால்,
'தரையினை எடும், எடும்' என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார். 17

தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர்
மீளியின் இனம் என, வன் தாள் விரை புவி நிரை என, விண் தோய்
ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சார்,
வாளியின் விசைகொடு திண் கார் வரை வருவன என, வந்தார். 18

அனுமன் இருக்கும் பொழிலைக் கிங்கரர் சுற்றி வளைத்தல்

பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி மின்போல்
'தெறி தர, உரும் அதிர்கின்றார்; திசைதொறும் விசைகொடு சென்றார்
எறிதரு கடையும் வன் கால் இடறிட, உடுவின் இனம் போய்
மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார். 19

அரக்க வீரர் போருக்கு வருவது கண்டு அனுமன் உவத்தல்

வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு ஒலி, மண்பால்
உயிர் உலைவுற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை, விண் நோய்
கயிலையின்மலை என நின்றான்; அனையவர் வரு தொழில் கண்டான். 20

'இத இயல் இது' என, முந்தே இயைவுற இனிது தெரிந்தான்;
பத இயல் அறிவு பயத்தால், அதின் நல பயன் உளது உண்டோ?
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர்
உதவு இயல் இனிதின் உவந்தான்,-எவரினும் அதிகம் உயர்ந்தான். 21

வீரர்கள் படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால் அவர்களை எதிர்த்தல்

'இவன்! இவன்! இவன்!' என நின்றார்; 'இது!' என, முதலி எதிர்ந்தார்;-
பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்-
புவனியும், மலையும் விசும்பும், பொரு அரு நகரும், உடன் போர்த்
துவனியில் அதிர, விடம்போல் சுடர் விடு படைகள் துரந்தார். 22

மழைகளும், மறி கடலும், போய் மதம் அற முரசம் அறைந்தார்;
முழைகளின் இதழ்கள் திறந்தார்; முது புகை கதுவ முனிந்தார்;
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற, அடி இடுகின்றார்;
கழை தொடர் வனம் எரியுண்டாலென, எறி படைஞர் கலந்தார். 23

அறவனும் அதனை அறிந்தான்; அருகினில் அழகின் அமைந்தார்
இறவினின் உதவு நெடுந் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்;
உற வரு துணை என அன்றோ, உதவிய அதனை, உவந்தான்;
நிறை கடல் கடையும் நெடுந் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான். 24

பருவரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான். 25

அனுமனை எதிர்த்து, அரக்க வீரர் பலர் இறந்துபடுதல்

பறை புரை விழிகள் பறிந்தார்; படியிடை நெடிது படிந்தார்;
பிறை புரை எயிறும் இழந்தார்; பிடரொடு தலைகள் பிளந்தார்;
குறை உயிர் சிதற நெரிந்தார்; குடரொடு குருதி குழைந்தார்;-
முறை முறை படைகள் எறிந்தார்-முடை உடல் மறிய முறிந்தார். 26

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை, மயிர்கள் புகைந்தார்;
தொடையொடு முதுகு துணிந்தார்; சுழிபடு குருதி சொரிந்தார்;
படை இடை ஒடிய, நெடுந் தோள் பறி தர, வயிறு திறந்தார்;
இடை இடை, மலையின் விழுந்தார்-இகல் பொர முடுகி எழுந்தார். 27

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்;
விதைபடும் உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும் இழந்தார்;
கதையொடு முதிர மலைந்தார், கணை பொழி சிலையர் கலந்தார்,
உதைபட உரனும் நெரிந்தார்; உயிரொடு குருதி உமிழ்ந்தார். 28

அயல், அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை அளகை அடைந்தார்;
வியல் இடம் மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய மிடைந்தார்;
புயல் தொடு கடலின் விழுந்தார்; புடை புடை சிதைவொடு சென்றார்.
உயர்வுற விசையின் எறிந்தான்; உடலொடும் உலகு துறந்தார். 29

பற்றித் தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின்,
இற்ற வெஞ் சிறை வெற்புஇனம் ஆம் எனக் கிடந்தார்;
கொற்ற வாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச்
சுற்றி வீசலின், பம்பரம் ஆம் எனச் சுழன்றார். 30

வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத்
தோள்கள் இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்;
நாள்கள் இற்றன; இற்றன நகை எயிற்று ஈட்டம்;
தாள்கள் இற்றன; இற்றன படையுடைத் தடக் கை. 31

தெறித்த வன் தலை; தெறித்தன செறி சுடர்க் கவசம்;
தெறித்த பைங் கழல்; தெறித்தன சிலம்பொடு பொலந் தார்;
தெறித்த பல் மணி; தெறித்தன பெரும் பொறித் திறங்கள்;
தெறித்த குண்டலம்; தெறித்தன கண் மணி சிதறி. 32

உக்க பற் குவை; உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று;
உக்க முற்கரம்; உக்கன, முசுண்டிகள் உடைவுற்று;
உக்க சக்கரம்; உக்கன, உடல் திறந்து உயிர்கள்;
உக்க கப்பணம்; உக்கன, உயர் மணி மகுடம். 33

தாள்களால் பலர், தடக் கைகளால் பலர், தாக்கும்
தோள்களால் பலர், சுடர் விழியால் பலர், தொடரும்
கோள்களால் பலர், குத்துகளால் பலர், தம் தம்
வாள்களால் பலர், மரங்களினால் பலர்,-மடிந்தார். 34

ஈர்க்க, பட்டனர் சிலர்; சிலர் இடிப்புண்டு பட்டார்;
பேர்க்க, பட்டனர் சிலர்; சிலர் பிடியுண்டு பட்டார்;
ஆர்க்க, பட்டனர் சிலர்; சிலர் அடியுண்டு பட்டார்;
பார்க்க, பட்டனர் சிலர்; சிலர் பயமுண்டு பட்டார். 35

ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை-கறங்கு எனத் திரிவான். 36

முட்டினார் பட, முட்டினான்; முறை முறை முடுகிக்
கிட்டினார் பட, கிட்டினான்; கிரி என நெருங்கிக்
கட்டினார் பட, கட்டினான்; கைகளால் மெய்யில்
தட்டினார் பட, தட்டினான்-மலை எனத் தகுவான். 37

உறக்கினும் கொல்லும்; உணரினும் கொல்லும்; மால் விசும்பில்
பறக்கினும் கொல்லும்; படரினும் கொல்லும்; மின் படைக் கை,
நிறக் கருங் கழல், அரக்கர்கள் நெறிதொறும் பொறிகள்
பிறக்க நின்று எறி படைகளைத் தடக் கையால் பிசையும். 38

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப,
ஆறுபோல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு,
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை. 39

அனுமன் பெரும் போர் விளைத்தல்

கருது காலினும், கையினும், வாலினும் கட்டி,
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்;
நிருதர், எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்;
குருதி சாறு எனப் பாய்வது, குரை கடல் கூனின். 40

எடுத்து அரக்கரை எறிதலும், அவர் உடல் எற்ற,
கொடித் திண் மாளிகை இடிந்தன; மண்டபம் குலைந்த;
தடக் கை யானனகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த;
பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன, பெரிய. 41

தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
தம் தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
தம் தம் மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார்;-
எற்றி மாருதி தடக் கைகளால் விசைத்து எறிய. 42

ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி,
'வீடு நோக்கியே செல்க' என்று, சிலவரை விட்டான்;
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்;
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான். 43

தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி. 44

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்;-
தான், எலாரையும், மாருதி சாடுகை தவிரான்;-
மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர்-சுற்றி. 45

அரக்கர்களின் நடுவே அனுமன் விளங்கிய காட்சி

ஆக இச் செரு விளைவுறும் அமைதியின், அரக்கர்
மோகம் உற்றனர் ஆம் என, முறை முறை முனிந்தார்;
மாகம் முற்றவும், மாதிரம் முற்றவும், வளைந்தார்,
மேகம் ஒத்தனர்-மாருதி வெய்யவன் ஒத்தான். 46

அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப்
புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின் பொலிவின்,
மிடல் அயில் படை மின் என விலங்கலின், கலங்கும்
கடல் நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான். 47

கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ,
நிரை மணித் தலை நெரிந்து உக, சாய்ந்து உயிர் நீப்பார்,
சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள், தொடரும்
உரகர் ஒத்தனர்-அனுமனும் கலுழனே ஒத்தான். 48

மானம் உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த
மீனுடைக் கடல் உலகினின், உள எலாம் மிடைந்த
ஊன் அறக் கொன்று துகைக்கவும், ஒழிவு இலா நிருதர்
ஆனை ஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன். 49

அனுமன் விழுப் புண் பட்டு நிற்றல்

எய்த, எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின்
பொய்த, குத்தின, பொதுத்தன, துளைத்தன, போழ்ந்த,
கொய்த, சுற்றின, பற்றின, குடைந்தன, பொலிந்த
ஐயன் மல் பெரும் புயத்தன, புண் அளப்பு அரிதால். 50

விண்ணவர் அனுமனைப் புகழ்தல்

கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில் கணனும்,
வேர்க்க, வெஞ் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின், ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று அமரில். 51

தேவர் முதலியோர் பூமாரி பொழிதல்

மேவும் வெஞ் சினத்து அரக்கர்கள், முறை முறை, விசையால்
ஏவும் பல் படை, எத்தனை கோடிகள் எனினும்,
தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த
பூவும், புண்களும், தெரிந்தில, மாருதி புயத்தில். 52

அரக்க வீரர்கள் அழிவு

பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின்,
உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின்,
அயர்ந்து வீழ்ந்தனர், அழிந்தனர், அரக்கராய் உள்ளார்;
வெயர்த்திலன் மிசை; உயிர்த்திலன் - நல் அற வீரன். 53

எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ,
நஞ்சம் உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்;
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று,
எஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே? 54

கிங்கரர் மடிந்ததைக் காவலர் இராவணனுக்கு உணர்த்துதல்

வந்த கிங்கரர் 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார்;
நந்தவானத்து நாயகர் ஓடினர், நடுங்கி,
பிந்து காலினர், கையினர்; பெரும் பயம் பிடரின்
உந்த, ஆயிரம் பிணக் குவைமேல் விழுந்து உளைவார். 55

விரைவின் உற்றனர்; விம்மினர்; யாது ஒன்றும் விளம்பார்;
கரதலத்தினால், பட்டதும், கட்டுரைக்கின்றார்;
தரையில் நிற்கிலர்; திசைதொறும் நோக்கினர், சலிப்பார்;
அரசன், மற்றவர் அலக்கணே உரைத்திட, அறிந்தான். 56

இராவணன் வினாவும், காவலர் விடையும்

'இறந்து நீங்கினரோ? இன்று, என் ஆணையை இகழ்ந்து
துறந்து நீங்கினரோ? அன்றி, வெஞ் சமர் தொலைந்தார்
மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது?' என்று உரைத்தான் -
நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான். 57

'சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர்; செருக்களத்து அஞ்சினார் அலர்;
புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின், அவிந்தனர், குரங்கினால்' என்றார். 58

காவலர் உரையை நம்பாது, மீண்டும் இராவணன் வினவுதல்

ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத்
தேவரை நோக்கினான், நாணும் சிந்தையான்;
'யாவது என்று அறிந்திலிர் போலுமால்?' என்றான் -
மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான். 59

மீட்டு அவர் உரைத்திலர்; பயத்தின் விம்முவார்;
தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்,
'வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை,
கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்' என்றான். 60

'கண்களால் கண்டனம்' என்றனர் காவலர்

'கண்டனம், ஒருபுடை நின்று, கண்களால்;
தெண் திரைக் கடல் என வளைந்த சேனையை,
மண்டலம் திரிந்து, ஒரு மரத்தினால், உயிர்
உண்டது, அக் குரங்கு; இனம் ஒழிவது அன்று' என்றார்; 61

மிகைப் பாடல்கள்

ஓசையின் இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி,
'ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு போலாம்!
கூசிடாது இலங்கை புக்கு, இக் குல மலர்ச் சோலையோடு
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று!' என்ன நக்கான். 1-1

என்றலும், இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில் தோய,
சென்று அடி பணிந்து, 'மண்ணும் தேவரும் திசையும் உட்க,
வென்றி அன்று எனினும், வல்லே விரைந்து நாம் போகி, வீரக்
குன்று அன குரங்கைப் பற்றிக் கொணர்தும்' என்று இசைத்துப் போனார். 2-1

அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை பலவும் எறிந்தார்;
கதிகொடு சிலவர் தொடர்ந்தார்; கணை பலர் சிலைகள் பொழிந்தார்;
குதிகொடு சிலவர் எழுந்தே குறுகினர், கதைகொடு அறைந்தார்;
மதியொடு சிலவர் வளைந்தார்; மழு, அயில், சிலவர் எறிந்தார். 24-1

அனுமனும், அவர் விடு படையால், அவர் உடல் குருதிகள் எழவே,
சின அனல் எழ, ஒரு திணி மா மரம்அதில் உடல் சிதறிடவும்,
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல பொடிபடவும்,
தினவு உறு புயம் ஒடிபடவும், திசை திசை ஒரு தனி திரிவான். 24-2

உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்து வந்த மாப் பெரும் படை அரக்கர் எண்ணிலரைத்
தரைத்தலத்தின் இட்டு அரைத்து, ஒரு தமியன் நின்றது கண்டு,
உருத்து அவ் எண்பதினாயிர கோடியர் உடன்றார். 39-1

சினந்து மற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியது என, கரு மலை என, கடல் போல்-
அனந்தனும் தலை துளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற, வளைத்தனர்,-எண் திசை மருங்கும். 39-2

எடுத்து எறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
தொடுத்து எறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப் படையால்
அடித்து நின்றனர் சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
விடுத்து நின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ் செருவே. 39-3

ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
வளைந்து பொன் கிரிமேல் விழும் இடி என, மறவோர்
பொழிந்த பல் படை யாவையும் புயத்திடைப் பொடிபட்டு
அழுந்த, மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன். 39-4

'கட்டும்' என்றனர்; 'குரங்கு இது கடிய கைப் படையால்
வெட்டும்' என்றனர்; விழி வழி நெருப்பு உக, விறலோர்
கிட்டி நின்று அமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு, அவருடன் முனைந்தான். 39-5

தலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
நிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; நெருக்கிச்
சிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; வயப் போர்க்
கலை ஒடிந்திட அடித்தனன், அரக்கர்கள் கலங்க. 40-1

என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி,
கன்றிய பவழச் செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி,
ஒன்று உரையாடற்கு இல்லான், உடலமும் விழியும் சேப்ப,
நின்ற வாள் அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை. 61-1



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 8. சம்புமாலி வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:25 pm

அனுமனைப் பிணித்து வருமாறு சம்புமாலியை இராவணன் ஏவுதல்

கூம்பின கையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்,
பாம்பு இவர் தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா,
'வாம் பரித் தானையோடு வளளத்து, அதன் மறனை மாற்றி,
தாம்பினின் பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி' என்றான். 1

சம்புமாலி இராவணனை வணங்கி, போருக்குப் புறப்படுதல்

ஆயவன் வணங்கி, 'ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர்,
"நீ இது முடித்தி" என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி
ஏயினை; என்னப்பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?' என்னா,
போயினன், இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். 2

சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

தன்னுடைத் தானையோடும், தயமுகன், 'தருக' என்று ஏய
மன்னுடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின்
மின்னுடைப் பரவையோடும், வேறுளோர் சிறப்பின் விட்ட
பின்னுடை அனிகத்தோடும், பெயர்ந்தனன்,-பெரும் போர் பெற்றான். 3

உரும் ஒத்த முழக்கின், செங் கண், வெள் எயிற்று, ஓடை நெற்றி,
பருமித்த கிரியின் தோன்றும், வேழமும்-பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய, நேமி,
சொரி முத்த மாலை சூழும், துகிற்கொடி, தடந் தேர்-சுற்ற; 4

காற்றினை மருங்கில் கட்டி, கால் வகுத்து, உயிரும் கூட்டி,
கூற்றினை ஏற்றியன்ன குலப் பரி குழுவ; குன்றின்
தூற்றினின் எழுப்பி, ஆண்டு, தொகுத்தென, கழல் பைங் கண்ண
வேற்று இனப் புலிஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம். 5

தோமரம், உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி,
தாம் அரம் தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம்,
காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம்,
மா மரம், வலயம், வெங் கோல், முதலிய வயங்க மாதோ. 6

எத்திய அயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி,
குத்திய-திளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல்
பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவ போல,
சித்திரப் பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்வ; 7

பல்லியம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல, பொன் தேர்ச்
சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன் தாரும்
வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய்
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ; 8

மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற,
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன-
அன்னவன் சேனை செல்ல, ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர் தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. 9

ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்; அத் தேர்க்கு
ஏயின் இரட்டி யானை; யானையின் இரட்டி பாய் மா;
போயின பதாதி, சொன்ன புரவியின் இரட்டி போலாம்-
தீயவன் தடந் தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. 10

வில் மறைக் கிழவர்; நானா விஞ்சையர்; வரத்தின் மிக்கார்;
வன் மறக் கண்ணர்; ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்;
தொல் மறக் குலத்தர்; தூணி தூக்கிய புறத்தர்; மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர்-கடுந் தேர் ஆட்கள். 11

பொரு திசை யானை ஊரும் புனிதரைப் பொருவும் பொற்பர்;
சுரிபடைத் தொழிலும், மற்றை அங்குசத் தொழிலும், தொக்கார்;
நிருதியின் பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும் கண்ணர்;
பரிதியின் பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின் பாகர். 12

ஏர் கெழு கதியும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப்
போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில்,
தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும்
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார். 13

அந் நெடுந் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற,
பொன் நெடுந் தேரில் போனான் - பொருப்பிடை நெருப்பின் பொங்கி,
தன் நெடுங் கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம் மார்பில்
மின்னிட, வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன். 14

தோரண வாயில் மேல் ஏறி, அனுமன் ஆர்ப்பரித்தல்

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்தானும்,
'வந்திலர் அரக்கர்' என்னும் மனத்தினன், வழியை நோக்கி,
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து, நின்றான். 15

கேழ் இரு மணியும் பொன்னும், விசும்பு இருள் கிழித்து நீக்கும்,
ஊழ் இருங் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான்,
சூழ் இருங் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி,
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான். 16

செல்லொடு மேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத் தீர,
கல் அளைக் கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம், வீரன்
வில் என இடிக்க, விண்ணோர் நடுக்குற, வீரன் ஆர்த்தான். 17

நின்றன திசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு நீங்க,
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும்
குன்றமும் பிளக்க, வீரன் புயத்திடைக் கொட்டி ஆர்த்தான். 18

அனுமனை அணுக முடியாது அரக்க வீரர் தவித்தல்

அவ் வழி, அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின் ஆர்த்தார்;
செவ் வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம் தெற்றி,
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க,
'எவ் வழிச் சேறும்' என்றார்; தமர் உடம்பு இடறி வீழ்வார். 19

சம்புமாலி அணி வகுத்துவர, அனுமன் மகிழ்ந்து போருக்கு அமைந்து நிற்றல்

ஆண்டு நின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து, அனிகம்தன்னை,
மூண்டு இரு புடையும், முன்னும், முறை முறை முடுக ஏவி,
தூண்டினன், தானும் திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல்,
வேண்டியது எதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத் திண் தோள். 20

ஐயனும், அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக,
மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர்வாள் மொய்த்த
கைகளே கைகள் ஆக, கடைக் கூழை திரு வால் ஆக. 21

அரக்கர்கள் படை துகள் பட அனுமன் கடும் போர் செய்தல்

வயிர்கள் வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப்
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல்லியம் குமுற, பற்றி-
செயிர் கொள் வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர்,-படைகள் சிந்தி,
வெயில்கள்போல் ஒளிகள் வீச, வீரன் மேல் கடிது விட்டார். 22

கருங் கடல் அரக்கர்தம் படைக்கலம் கரத்தால்
பெருங் கடல் உறப் புடைத்து, இறுத்து, உக, பிசைந்தான்;
விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு, ஆண்டு
இருந்தவன், கிடந்தது ஓர் எழுத் தெரிந்து எடுத்தான். 23

இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்,
திரிந்தனன், புரிந்தனன், என நனி தெரியார்;
விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர், கலந்தார்,
பொருந்தினர், நெருங்கினர், களம் படப் புடைத்தான். 24

எறிந்தன, எய்தன, இடி உரும் என மேல்
செறிந்தன படைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,-
முறிந்தன தெறும் கரி; முடிந்தன தடந் தேர்;
மறிந்தன பரி நிரை-வலக் கையின் மலைந்தான். 25

நாற்படைகளும் அழிந்தொழிதல்

இழந்தன நெடுங் கொடி; இழந்தன இருங் கோடு;
இழந்தன நெடுங் கரம்; இழந்தன வியன் தாள்;
இழந்தன முழங்கு ஒலி; இழந்தன மதம் பாடு;
இழந்தன பெருங் கதம்-இருங் கவுள் யானை. 26

நெரிந்தன தடஞ் சுவர்; நெரிந்தன பெரும் பார்;
நெரிந்தன நுகம் புடை; நெரிந்தன அதன் கால்;
நெரிந்தன கொடிஞ்சிகள்; நெரிந்தன வியன் தார்;
நெரிந்தன கடும் பரி; நெரிந்தன நெடுந் தேர். 27

ஒடிந்தன; உருண்டன; உலந்தன; புலந்த;
இடிந்தன; எரிந்தன; நெரிந்தன; எழுந்த;
மடிந்தன; மறிந்தன; முறிந்தன; மலைபோல்,
படிந்தன; முடிந்தன; கிடந்தன-பரி மா. 28

வெகுண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்;
மருண்டனர், மயங்கினர், மறிந்தனர், இறந்தார்;
உருண்டனர், உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்;
சுருண்டனர், புரண்டார், தொலைந்தனர்;-மலைந்தார். 29

அனுமனின் போர் விநோதம்

கரிகொடு கரிகளைக் களப் படப் புடைத்தான்;
பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்;
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்;
நிரை மணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான். 30

மூளையும் உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய்
மீள் இருங் குழைபட, கரி விழுந்து அழுந்த,
தாளொடும் தலை உக, தட நெடுங் கிரிபோல்
தோளொடும் நிருதரை, வாளொடும்-துகைத்தான். 31

மல்லொடு மலை மலைத் தோளரை, வளை வாய்ப்
பல்லொடும், நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள்
வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும்
சொல்லொடும், உயிரொடும், நிலத்தொடும்,-துகைத்தான். 32

புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்;
சிகை நெடுஞ் சுடர் விடும் தேர்தொறும் சென்றான்;
தகை நெடுங் கரிதொறும், பரிதொறும், சரித்தான்;
நகை நெடும் படைதொறும், தலைதொறும், நடந்தான். 33

வென்றி வெம் புரவியின் வெரிநினும், விரவார்
மன்றல் அம் தார் அணி மார்பினும், மணித் தேர்
ஒன்றின்நின்று ஒன்றினும், உயர் மத மழை தாழ்
குன்றினும், -கடையுகத்து உரும் எனக் குதித்தான். 34

பிரிவு அரும் ஒரு பெருங் கோல் என, பெயரா
இருவினை துடைத்தவர் அறிவு என, எவர்க்கும்
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம் என, கறங்கு என,-திரிந்தான். 35

அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும் பொருள் நவை அறத் தெரிப்பான்,
மண்ணினும், விசும்பினும், மருங்கினும், வலித்தார்
கண்ணினும், மனத்தினும்,-தனித் தனி கலந்தான். 36

கொடித் தடந் தேரொடும் குரகதக் குழுவை
அடித்து, ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்;
இடித்து நின்று அதிர் கதத்து, எயிற்று வன் பொருப்பை,
பிடித்து, ஒரு தடக் கையின், உயிர் உகப் பிழிந்தான். 37

கறுத்து எழு நிறத்தினர், எயிற்றினர், கயிற்றார்,
செறுத்து எரி விழிப்பவர், சிகைக் கழு வலத்தார்,
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்,
ஒறுத்து, உருத்திரன் என, தனித் தனி உதைத்தான். 38

சக்கரம், தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள்,
மிக்கன தேர், பரி, குடை, கொடி, விரவி
உக்கன; குருதிஅம் பெருந் திரை உருட்டிப்
புக்கன கடலிடை, நெடுங் கரப் பூட்கை. 39

எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த-
முட்டின மலைகளை; முயங்கின திசையை;
ஒட்டின ஒன்றை ஒன்று; ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின, தலையொடு-தலைகள். 40

சேனையின் அழிவு கண்டு, சம்புமாலி சீற்றத்தோடு போருக்கு விரைதல்

கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்ற
வானே எய்த, தனியே நின்ற மத மால் வரை ஒப்பான்,
தேனே புரை கண் கனலே சொரிய, சீற்றம் செருக்கினான்,
தானே ஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான். 41

காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் களத்து உக்கார்;
ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெருங் கொள்ளைச்
சேற்றில் செல்லாத் தேரின் ஆழி ஆழும்; நிலை தேரா,
வீற்றுச் செல்லும் வெளியோ இல்லை; அளியன் விரைகின்றான். 42

தனித்து நின்ற சம்புமாலியிடம் அனுமன் இரக்கமுற்று மொழிதல்

'ஏதி ஒன்றால்; தேரும் அஃதால்; எளியோர் உயிர் கோடல்
நீதி அன்றால்; உடன் வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்!
சாதி; அன்றேல், பிறிது என் செய்தி? அவர் பின் தனி நின்றாய்!
போதி' என்றான் -பூத்த மரம்போல் புண்ணால் பொலிகின்றான். 43

சம்புமாலி சினந்து, பற்பல அம்பு எய்ய, அனுமன் எழுவால் தடுத்தல்

'நன்று, நன்று, உன் கருணை!' என்னா, நெருப்பு நக நக்கான்;
'பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை' என்னா,
வன் திண் சிலையின் வயிரக் காலால், வடித் திண் சுடர் வாளி,
ஒன்று, பத்து, நூறு, நூறாயிரமும், உதைப்பித்தான். 44

'செய்தி, செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங் கை திரிவோரை,
நொய்தின் வெல்வது அரிதோ?' என்னா, முறுவல் உக நக்கான்;
ஐயன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன,
எய்த எய்த பகழி எல்லாம், எழுவால் அகல்வித்தான். 45

அனுமன் கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்தல்

முற்ற முனிந்தான் நிருதன்; முனியா, முன்னும் பின்னும் சென்று,
உற்ற பகழி உறாது, முறியா உதிர்கின்றதை உன்னா,
சுற்றும் நெடுந் தேர் ஓட்டித் தொடர்ந்தான்; தொடரும் துறை காணான்;
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான். 46

சம்புமாலியை அனுமன் கொல்லுதல்

சலித்தான் ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச் சாடி,
ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு,
கலித்தான் சிலையைக் கையால் வாங்கி, கழுத்தினிடை இட்டு
வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ. 47

குதித்து, தேரும், கோல் கொள் ஆளும், பரியும், குழம்பு ஆக
மிதித்து, பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்;
கதித் துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு, களத்து அஞ்சி,
உதித்துப் புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர் ஓடினார். 48

பரிந்து புலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி,
விரிந்த குருதிப் பேராறு ஈர்த்து மனைகள்தொறும் வீச,
இரிந்தது இலங்கை; எழுந்தது அழுகை; 'இன்று, இங்கு, இவனாலே
சரிந்தது, அரக்கர் வலி' என்று எண்ணி, அறமும் தளிர்த்ததால். 49

சம்புமாலி இறந்த செய்தியைக் காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில்
விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார்;
நக்கான் அரக்கன்; 'நடுங்கல்' என்றான்; 'ஐய! நமர் எல்லாம்
உக்கார்; சம்புவாலி உலந்தான்; ஒன்றே குரங்கு' என்றார். 50

'யானே குரங்கைப் பிடிப்பேன்' என்று இராவணன் எழ, சேனைத் தலைவர் ஐவர் பேசுதல்

என்னும் அளவில், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான்,
உன்ன, உன்ன, உதிரக் குமிழி விழியூடு உமிழ்கின்றான்,
'சொன்ன குரங்கை, யானே பிடிப்பென், கடிது தொடர்ந்து' என்றான்,
அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார். 51

மிகைப் பாடல்கள்

அது கண்டு அரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி அறுநூறு
முதிரும் வயப் போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்;
புதையுண்டு உருவிப் புறம் போக, புழுங்கி அனுமன் பொடி எழும்பக்
குதிகொண்டு, அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதறக் குதித்தனனால் 45-1


Last edited by Admin on Thu Feb 03, 2011 3:36 pm; edited 1 time in total
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:28 pm

படைத் தலைவர் ஐவரும் தம்மை ஏவுமாறு வேண்ட, இராவணன் இசைதல்

'சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய்!
கலந்த போரில் நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்கப்
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை? 1

'இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன்
உலங்கின்மேல் உருத்தென்ன, நீ குரங்கின்மேல் உருக்கின்,
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் தன் பகலும்
குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளியங் குன்றம். 2

'உறுவது என்கொலோ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர், கேட்கிலர், பெயர்ந்தார்;
சிறுமை ஈது ஒப்பது யாது? நீ குரங்கின்மேல் செல்லின்,
முறுவல் பூக்கும் அன்றே, நின்ற மூவர்க்கும் முகங்கள்? 3

'அன்றியும், உனக்கு ஆள் இன்மை தோன்றுமால், அரச!
வென்றி இல்லவர் மெல்லியோர்தமைச் செல விட்டாய்;
நன்றி இன்று ஒன்று காண்டியேல், எமைச் செல நயத்தி'
என்று, கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான். 4

படைத் தலைவர்கள் ஆணைப்படி படைகள் திரளுதல்

உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்,
திலகம் மண் உற வணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்;
'அலகு இல் தேர், பரி, யானையோடு, அடைந்த போர் அரக்கர்,
தொலைவு இல் தானையைக் கதுமென வருக' எனச் சொன்னார். 5

'ஆனைமேல் முரசு அறைக' என, வள்ளுவர் அறைந்தார்;
பேன வேலையின் புடை பரந்தது, பெருஞ்சேனை;
சோனை மா மழை முகில் எனப் போர்ப் பணை துவைத்த;
மீன வான் இடு வில் எனப் படைக்கலம் மிடைந்த. 6

தானை மாக் கொடி, மழை பொதுத்து உயர் நெடுந் தாள,
மானம் மாற்ற அரு மாருதி முனிய, நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
வானயாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த. 7

விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று விளங்கச்
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர், சமையக்
கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப்
புரவி இட்ட; தேர் பூட்டின; பருமித்த பூட்கை. 8

ஆறு செய்தன ஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
சேறு செய்தன தேர்களின் சில்லி; அச் சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம்; மற்று அ(ந்) நீற்றை
வீறு செய்தன, அப் பரிக் கலின மா விலாழி. 9

வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
முழங்கு வெங் களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும்,
தழங்கு பல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி
முழங்கும் ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி. 10

ஆழித் தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப் பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய,
ஊழிக் காற்று அன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி,
பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. 11

கூய்த் தரும்தொறும், தரும்தொறும், தானை வெங் குழுவின்
நீத்தம், வந்து வந்து, இயங்கிடும் இடன் இன்றி நெருங்க,
காய்த்து அமைந்த வெங் கதிர்ப் படை, ஒன்று ஒன்று கதுவி,
தேய்த்து எழுந்தன, பொறிக் குலம், மழைக் குலம் தீய. 12

அரக்க வீரரை அவர்தம் சுற்றத்தார் தடுத்து இரங்குதல்

தொக்கது ஆம் படை, சுரி குழல் மடந்தையர், தொடிக் கை
மக்கள், தாயர், மற்று யாவரும் தடுத்தனர், மறுகி;
'ஒக்க ஏகுதும், குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர்
புக்கு மீண்டிலர்' என்று, அழுது இரங்கினர், புலம்பி. 13

பஞ்ச சேனாபதிகள் சேனையோடு செல்லுதல்

கை பரந்து எழு சேனைஅம் கடலிடைக் கலந்தார்;
செய்கைதாம் வரும் தேரிடைக் கதிர் எனச் செல்வார்-
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்,
ஐவரும், பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார். 14

முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள்
சிந்தி, அம்பு உறு கொடுஞ் சிலை உரும் எனத் தெறிப்பார்;
வந்து இயம்புறு முனிவர்க்கும், அமரர்க்கும், வலியார்;
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து, இயைந்தார். 15

வாசவன் வயக் குலிசமும், வருணன் வன் கயிறும்,
ஏசு இல் தென்திசைக்கிழவன் தன் எரி முனை எழுவும்,
ஈசன் வன் தனிச் சூலமும், என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வது ஓர் வடுச் செயா, நெடும் புயம் உடையார். 16

சூர் தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தொகை,
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெஞ் சிறகு, இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி,
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார். 17

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார்;
நின்ற வன் திசை நெடுங் களி யானையின் நெற்றி
மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர். 18

நீதி நெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப்
பதியொடும் பெருந் திருப் பறித்த பண்டை நாள்,
'விதி' என, அன்னவன் வெந்நிட்டு ஓடவே,
பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார். 19

இந்திரன் இசை இழந்து ஏகுவான், இகல்
தந்தி முன் கடாவினன் முடுக, தாம் அதன்
மந்தர வால் அடி பிடித்து, 'வல்லையேல்
உந்துதி, இனி' என, வலிந்த ஊற்றத்தார். 20

'பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி, நின்
கோல் நினைத்திலன்' என, உலகம் கூறலும்,
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்,
காலனை, காலினில், கையில், கட்டினார். 21

மலைகளை நகும் தட மார்பர்; மால் கடல்
அலைகளை நகும் நெடுந் தோளர்; அந்தகன்
கொலைகளை நகும் நெடுங் கொலையர்; கொல்லன் ஊது
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார். 22

தோல் கிளர் திசைதொறும் உலகைச் சுற்றிய
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்,
கால் கிளர்ந்து ஓங்கினும், காலம் கையுற
மால் கடல் கிளரினும், சரிக்கும் வன்மையார். 23

அரக்கர் படையை அனுமன் நோக்குதல்

இவ் வகை ஐவரும் எழுந்த தானையர்,
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கைஉற அணியும் கட்டினார்;
ஐயனும், அவர்நிலை, அமைய நோக்கினான். 24

அரக்கர்தம் ஆற்றலும், அளவு இல் சேனையின்
தருக்கும், அம் மாருதி தனிமைத் தன்மையும்,
போருக்கென நோக்கிய புரந்தராதியர்,
இரக்கமும், அவலமும், துளக்கும், எய்தினார். 25

'இற்றனர் அரக்கர் இப் பகலுளே' எனா,
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான்,
முற்றுறச் சுலாவிய முடிவு இல் தானையைச்
சுற்றுற நோக்கி, தன் தோளை நோக்கினான். 26

அனுமனைக் கண்ட அரக்க வீரரின் ஐயப்பாடு

'புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர்
வென்றது! விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றதால்!'
என்றனர், அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார். 27

அனுமன் பெரிய உருக் கொள்ளுதல்

ஆயிடை, அனுமனும், அமரர்கோன் நகர்
வாயில்நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
செயொளித் தோரணத்து உம்பர், சேண் நெடு
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான். 28

வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும், திருகினார் சினம்,
வாங்கிய சிலையினர், வழங்கினார் படை;
ஏங்கிய சங்குஇனம்; இடித்த பேரியே! 29

எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன
பொறிந்து எழு படைக்கலம், அரக்கர் போக்கினார்;
செறிந்தன மயிர்ப்புறம்; தினவு தீர்வுறச்
சொறிந்தனர் என இருந்து, ஐயன் தூங்கினான். 30

எழுவை ஏந்தி அனுமன் பொருதல்

உற்று, உடன்று, அரக்கரும், உருத்து உடற்றினர்;
செற்றுற நெருக்கினர்; 'செருக்கும் சிந்தையர்
மற்றையர் வரும் பரிசு, இவரை, வல் விரைந்து
எற்றுவென்' என, எழு, அனுமன் ஏந்தினான். 31

ஊக்கிய படைகளும், உருத்த வீரரும்,
தாக்கிய பரிகளும், தடுத்த தேர்களும்,
மேக்கு உயர் கொடியுடை மேக மாலைபோல்
தூக்கிய கரிகளும், புரள நூக்கினான். 32

அனுமன் செய்த அதிசயப் போர்

வார் மதக் கரிகளின் கோடு வாங்கி, மாத்
தேர் படப் புடைக்கும்; அத் தேரின் சில்லியால்,
வீரரை உருட்டும்; அவ் வீரர் வாளினால்,
தாருடைப் புரவியைத் துணியத் தாக்குமால். 33

இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள, எற்றுமால்;
இரண்டு மால் யானை கக இரண்டின் ஏந்தி, வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால். 34

மா இரு நெடு வரை வாங்கி, மண்ணில் இட்டு,
ஆயிரம்-தேர் பட அரைக்குமால்; அழித்து,
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து,
'ஏ' எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால். 35

உதைக்கும் வெங் கரிகளை; உழக்கும் தேர்களை;
மிதிக்கும் வன் புரவியை; தேய்க்கும் வீரரை;
மதிக்கும் வல் எழுவினால்; அரைக்கும் மண்ணிடை;
குதிக்கும் வன் தலையிடை; கடிக்கும்; குத்துமால். 36

விசையின் மான் தேர்களும், களிறும் விட்டு, அகல்
திசையும் ஆகாயமும் செறிய, சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும்,
பிசையுமால் அரக்கரை, பெருங் கரங்களால். 37

தீ உறு பொறியுடைச் செங் கண் வெங் கைமா,
மீ உற, தடக் கையால் வீரன் வீசுதோறு,
ஆய் பெருங் கொடியன, கடலின் ஆழ்வன,
பாயுடை நெடுங் கலம் படுவ போன்றவே. 38

தாரொடும், உருளொடும், தடக் கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன, கடலின் வீழ்வன,
வாரியின் எழும் சுடர்க் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன, புரவித் தேர்களே. 39

மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன,
ஆய் பெருந் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன,
ஓய்வில புரவி, வாய் உதிரம் கால்வன,
வாயிடை எரியுடை வடவை போன்றவை. 40

வரிந்து உற வல்லிதின் சுற்றி, வாலினால்
விரிந்து உற வீசலின், கடலின் வீழ்குநர்
திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி
அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார். 41

வீரன் வன் தடக் கையால் எடுத்து வீசிய
வார் மதக் கரியினின், தேரின், வாசியின்,
மூரி வெங் கடல் புகக் கடிதின் முந்தின,
ஊரின் வெங் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின. 42

பிறைக் குடை எயிற்றின, பிலத்தின் வாயின,
கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின,
உறைப் புறு படையின, உதிர்ந்த யாக்கைகள்,
மறைத்தன, மகர தோரணத்தை, வான் உற. 43

குன்று உள; மரம் உள; குலம் கொள் பேர் எழு
ஒன்று அல, பல உள; உயிர் உண்பான் உளன்;
அன்றினர் பலர் உளர்; ஐயன் கை உள;
பொன்றுவது அல்லது, புறத்துப் போவரோ? 44

முழு முதல், கண்ணுதல், முருகன் தாதை, கைம்
மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின், பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை, களம் படக் கொன்று நீக்கினான். 45

தானையின் அழிவு கண்டு, ஐவரும் அனுமனைப் பொருதல்

உலந்தது தானை; உவந்தனர் உம்பர்;
அலந்தலை உற்றது, அவ் ஆழி இலங்கை;
கலந்தது, அழும் குரலின் கடல் ஓதை;
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார். 46

ஈர்த்து எழு செம்புனல் எக்கர் இழுக்க,
தேர்த் துணை ஆழி அழுந்தினர், சென்றார்;
ஆர்த்தனர்; ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான். 47

எய்த கடுங் கணை யாவையும், எய்தா
நொய்து அகலும்படி, கைகளின் நூறா,
பொய்து அகடு ஒன்று பொருந்தி, நெடுந் தேர்
செய்த கடும் பொறி ஒன்று, சிதைத்தான். 48

உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான்,
முற்றின வீரனை, வானில் முனிந்தான்;
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்,
எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான். 49

ஐவருள் ஒருவன் அமரில் இறத்தல்

முறிந்தது மூரி வில்; அம் முறியேகொடு,
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான்;
அறிந்த மனத்தவன், அவ் எழுவே கொடு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான். 50

சேனைத் தலைவர் நால்வருடன் மாருதி செய்த கடும் போர்

ஒழிந்தவர்-நால்வரும், ஊழி உருத்த
கொழுந்துறு தீ என, வெய்துறு கொட்பர்,
பொழிந்தனர், வாளி; புகைந்தன கண்கள்;
விழுந்தன சோரி, அவ் வீரன் மணித் தோள். 51

ஆயிடை வீரனும், உள்ளம் அழன்றான்;
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்;
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான்;
தீயவர் அச் சிலையைப் பொடிசெய்தார். 52

நால்வருள் ஒருவன் மிதிபட்டு மாய்ந்தான்

தொடுத்த, தொடுத்த, சரங்கள் துரந்த;
அடுத்து, அகன் மார்பின் அழுந்தி, அகன்ற;
மிடல் தொழிலான், விடு தேரொடு நொய்தின்
எடுத்து, ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான். 53

ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது; ஓடி நிமிர்ந்தது; வேகம்
ஓய்ந்தது; வீழ்வதன்முன், உயர் பாரில்
பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான். 54

மதித்த களிற்றினில் வாள் அரிஏறு
கதித்தது பாய்வதுபோல், கதி கொண்டு
குதித்தனன்; மால் வரை மேனி குழம்ப
மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன். 55

எஞ்சிய மூவரும் முனைந்து பொருதல்

மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்;
தூண்டிய தேரர், சரங்கள் துரந்தார்;
வேண்டிய வெஞ் சமம் வேறு விளைப்பார்,
'யாண்டு இனி ஏகுதி?' என்று, எதிர் சென்றார். 56

இருவரைத் தேருடன் எடுத்து, மாருதி விண்ணில் வீசுதல்

திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்,
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச,
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில்
இரண்டை இரண்டு கையின்கொடு எழுந்தான். 57

தூக்கின பாய் பரி; சூதர் உலைந்தார்;
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார்;
ஆங்கு, அது கண்டு, அவர் போய் அகலாமுன்,
ஓங்கினன் மாருதி, ஒல்லையின் உற்றான். 58

விண்னில் உற்ற இருவரும், அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்;
ஆனவர் தூணியும், வாளும், அறுத்தான்;
ஏனைய வெம் படை இல்லவர், எஞ்சார்,
வானிடை நின்று, உயர் மல்லின் மலைந்தார். 59

வெள்ளை எயிற்றர், கறுத்து உயர் மெய்யர்,
பிள்ள விரித்த பெரும் பில வாயர்,
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்;
ஒள்ளிய வீரன், அருக்கனை ஒத்தான். 60

தாம்பு என வாலின் வரிந்து, உயர் தாளோடு
ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான்;
பாம்பு என நீங்கினர், பட்டனர் வீழ்ந்தார்-
ஆம்பல் நெடும் பகைபோல் அவன் நின்றான். 61

எஞ்சிய ஒருவனையும் அனுமன் ஒழித்தல்

நின்றனன் ஏனையன்; நின்றது கண்டான்;
குன்றிடை வாவுறு கோள் அரி போல,
மின் திரி வன் தலைமீது குதித்தான்;
பொன்றி, அவன், புவி, தேரொடு புக்கான். 62

வஞ்சமும் களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார்,
வெஞ் சின அரக்கர் ஐவர்; ஒருவனே!-வெல்லப்பட்டார்
அஞ்சு எலும் புலன்கள் ஒத்தார்; அவனும், நல் அறிவை ஒத்தான். 63

நெய் தலை உற்ற வேற் கை நிருதர், அச் செருவில் நேர்ந்தார்,
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை; உள்ளார்,
கை தலைப் பூசல் பொங்கக் கடுகினர்; காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை, அனைவரும் அமையக் கண்டார். 64

படைத் தலைவர் இறந்ததை காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

'இறுக்குறும், இன்னே நம்மை, குரங்கு' என இரங்கி ஏங்கி,
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி,
உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும்
சுறுக் கொள நோக்குவான்தன் செவித் தொளை தீய, சொன்னார். 65

'தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்; தாக்கப்
போனவர் தம்மில் மீண்டோ ம் யாம், அமர் புரிகிலாமை;
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி,
ஏனையர் இன்மை, சோம்பி இருந்தது, அக் குரங்கும்' என்றார். 66

மிகைப் பாடல்கள்

பண் மணிக் குல யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணிக் குலம் மழையிடை உரும் என ஒலிப்ப,
கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ; கதுப்பின்
தண் மணிக் குலம் மழை எழும் கதிர் எனத் தழைப்ப. 12-1

என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே,
'பொன்றுவிர் நீர், இது போது' என, அங்கு ஓர்
குன்று இரு கைக் கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்தது எனத் தனி ஆர்த்தான். 56-1

அப்பொழுது அங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ் சரம் வீசினர்; வீசி,
துப்புறு வெற்பு அதனைத் துகள் செய்தே,
மெய்ப்படு மாருதிமேல் சரம் விட்டார். 56-2

விட்ட சரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறு மா மரம் வாங்கித்
தொட்டு எறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட, வெய்யவர் பாணம் விடுத்தார். 56-3




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 10. அக்ககுமாரன் வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:29 pm

இராவணனிடம் அக்ககுமாரன் தன்னை அனுப்பவேண்டுதல்

கேட்டலும், வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி,
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற,
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை,
தாள்-துணை தொழுது, மைந்தன் தடுத்து, 'இடை தருதி' என்றான். 1

'முக்கணான் ஊர்தி அன்றேல், மூன்று உலகு அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி போலாம்!
இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின்; எந்தாய்! 2

'"அண்டர்கோன் தன்னைப் பற்றித் தருக" எனா, அடியேன் நிற்க,
கொண்டனை என்முன் தன்னைப் பணி என, நெஞ்சம் கோடல்
உண்டு; அது தீரும் அன்றே? உரன் இலாக் குரங்கு ஒன்றேனும்,
எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை' என்றான். 3

'கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு,
கைதவம் கண்ணி, ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான்,
எய்தினான், இமையா முக்கண் ஈசனே என்ற போதும்,
நொய்தினின் வென்று, பற்றித் தருகுவென், நொடியில் நுன்பால். 4

'தூண்டத் தூண் அகத்துத் தோன்றும் கோளரி, சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும், மலைதல் ஆற்றா;
அண்டத்தைக் கடந்து போகி அப் புறத்து அகலின், என்பால்
தண்டத்தை இடுதி அன்றே, நின்வயின் தந்திலேனேல்!' 5

அக்ககுமாரன் விடை பெற்றுப் போருக்குப் போதல்

என, இவை இயம்பி, 'ஈதி விடை' என, இறைஞ்சி நின்ற
வனை கழல் வயிரத் திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
'துனை பரித் தேர்மேல் ஏறிச் சேறி' என்று இனைய சொன்னான்;
புனை மலர்த் தாரினானும், போர் அணி அணிந்து போனான். 6

ஏறினன் என்ப மன்னோ, இந்திரன் இகலின் இட்ட,
நூறொடு நூறு பூண்ட நொறில் வயப் புரவி நோன் தேர்;
கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ;
ஊறின உரவுத் தானை, ஊழி பேர் கடலை ஒப்ப. 7

பொரு கடல் மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில், எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
உரு உறு மணலை எண்ணில், எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை நிரையை எண்ணில், எண்ணலாம் வாவும் வாசி. 8

ஆறு-இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி
வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர்,
ஏறிய தேரர், சூழ்ந்தார்-இறுதியின் யாவும் உண்பான்
சீறிய காலத் தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார். 9

மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள்,
தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள், பிறகும், தாதைக்கு
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்,
எந்திரத் தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம் வீரர். 10

தோமரம், உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம், தோட்டி,
ஏ மரு வரி வில், வேல், கோல், ஈட்டி, வாள், எழு, விட்டேறு,
மா மரம், வீசு பாசம், எழு முளை, வயிரத் தண்டு,
காமரு கணையம், குந்தம், கப்பணம், கால நேமி. 11

என்று, இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி,
மின் திரண்டனைய ஆகி, வெயிலொடு நிலவு வீச,
துன்று இருந் தூளி பொங்கித் துறுதலால், இறுதிசெல்லாப்
பொன் திணி உலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ! 12

காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல;
பாகு இயல் கிளவிச் செவ் வாய்ப் படை விழிப் பணைத்த வேய்த் தோள்
தோகையர் மனமும், தொக்க தும்பியும், தொடர்ந்து சுற்ற; 13

உழைக் குல நோக்கினார்கள், உலந்தவர்க்கு உரிய மாதர்,
அழைத்து அழு குரலின், வேலை அமலையின், அரவச் சேனை
தழைத்து எழும் ஒலியின், நானாப் பல் இயம் துவைக்கும் தா இல்
மழைக் குரல் இடியின், சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ! 14

வெயில், கரமணிகள் வீசும் விரி கதிர் விளங்க, வெய்ய
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக, அஃதும்,
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க, யாணர்,
உயிர்க்கு உலவு இரவும் அன்று, பகல் அன்று என்று உணர்வு தோன்ற; 15

ஓங்குஇருந் தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித்
தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத் துள்ள,
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப,
ஏங்கின காகம் ஆர்ப்ப, இருளில் விண் இடிப்ப மாதோ; 16

வெள்ள வெஞ் சேனை சூழ, விண் உளோர் வெருவி விம்ம,
உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன,
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும்
கள் அவிழ் அலங்கலானைக் காற்றின் சேய் வரவு கண்டான். 17

அக்ககுமாரனைக் கண்டு அனுமன் ஐயுற்று நோக்குதல்

'இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?' என்னா,
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்குச் சீயம்,
'வந்தனன்; முடிந்தது அன்றோ மனக் கருத்து?' என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்: 18

'எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல், யான் முன் நோற்ற
புண்ணியம் உளதாம்; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே;
நண்ணிய நானும் நின்றேன்; காலனும், நணுகி நின்றான்;
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென், கடிதின்' என்றான். 19

'பழி இலது உரு என்றாலும், பல் தலை அரக்கன் அல்லன்;
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்;
மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்;
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ, அஞ்சனக் குன்றம் அன்னான்?' 20

அனுமனை அக்ககுமாரன் எள்ளி நகைக்க, தேர்ப்பாகன், 'அது தகாது' எனல்

என்றவன், உவந்து, விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை,
வன் தொழில் அரக்கன் நோக்கி, வாள் எயிறு இலங்க நக்கான்;
'கொன்றது இக் குரங்கு போலாம், அரக்கர்தம் குழாத்தை!' என்றான். 21

அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி, 'ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா;
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால், மற்றும் உண்டோ ?
சொன்னது துணிவில் கொண்டு சேறி' என்று, உணரச் சொன்னான். 22

அக்ககுமாரனின் வஞ்சினம்

விடம் திரண்டனைய மெய்யான், அவ் உரை விளம்பக் கேளா,
'இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்;
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென், ஒழிவுறாமல்
கடந்து, பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென்' என்றான். 23

அரக்கர் படையை எதிர்ந்து அனுமன் பொருதல்

ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது; பொழிந்தது, அம்மா! பொரு படைப் பருவ மாரி;
வேர்த்தனர் திசை காப்பாளர்; சலித்தன விண்ணும் மண்ணும்;
தார்த் தனி வீரன், தானும் தனிமையும், அவர்மேல் சார்ந்தான். 24

எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும்
முறிந்தன; வீரன் மேனி முட்டின மூரி யானை
மறிந்தன; மடிந்த, தேரும், வாவும் மாக் குழுவும்; ஆவி
நெறிந்தன வரம்பு இல் யாக்கை, இலங்கை தன் நிலையின் பேர. 25

காய் எரி, முளி புல் கானில் கலந்தென, காற்றின் செம்மல்,
'ஏ' எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை;
போயவர் உயிரும் போகித் தென் புலம் படர்தல் பொய்யாது;
ஆயிர கோடி தூதர் உளர்கொலோ நமனுக்கு அம்மா? 26

வர உற்றார், வாராநின்றார், வந்தவர், வரம்பு இல் வெம் போர்
பொர உற்ற பொழுது, வீரன் மும் மடங்கு ஆற்றல் பொங்க
விரவிப் போய், கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்;
உரவுத் தோள் அரக்கர் எல்லாம், என்பு இலா உயிர்கள் ஒத்தார். 27

பிள்ளப்பட்டன நுதல் ஓடைக் கரி, பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல்,
அள்ளப்பட்டு அழி குருதிப் பொரு புனல் ஆறாக, படி சேறு ஆக,
'வள்ளப்பட்டன மகரக் கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர்
கொள்ளப்பட்டன உயிர்' என்னும்படி கொன்றான்-ஐம் புலன் வென்றானே! 28

'தேரே பட்டன' என்றார் சிலர்; சிலர், 'தெறு கண் செம் முக வயிரத் தோள்
பேரே பட்டன' என்றார்; சிலர் சிலர், 'பரியே பட்டன பெரிது' என்றார்;
'காரே பட்டன நுதல் ஓடைக் கட கரியே பட்டன கடிது' என்றார்;
நேரே பட்டவர் பட, மாடே, தனி, நில்லா உயிரொடு நின்றாரே. 29

ஆழிப் பொரு படை நிருதப் பெரு வலி அடலோர், ஆய்மகள் அடு பேழ் வாய்த்
தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி, தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்;
ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும், எறி வேல் இளையவர் இனம் ஆக,
ஊழிப் பெயர்வது ஓர் புனல் ஒத்தார்; அனல் ஒத்தான்; மாருதம் ஒத்தானே. 30

அக்ககுமாரனின் தேரையும் படைகளையும் அனுமன் அழித்தல்

கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர் குறைகின்றார், உடல் குலைகின்றார்;
பின்றா நின்றனர்; உதிரப் பெரு நதி பெருகாநின்றன; அருகு ஆரும்
நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு நேமித் தேரொடும், அவன் நேரே
சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான்; விழி எரிகின்றான் 31

உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்
கற்றோனும் முகம் எதிர் வைத்தான்; அது கண்டார் விண்ணவர்; கசிவுற்றார்;
'எற்றாம் மாருதி நிலை?' என்பார்; இனி 'இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம்; நல்லது பெற்றாம்' என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் 32

எய்தான், வாளிகள், எரி வாய் உமிழ்வன, ஈர்-ஏழ்; எதிர் அவை பார் சேரப்
பொய்தான், மணி எழு ஒன்றால்; அன்று, அது, பொடியாய் உதிர்வுற, வடி வாளி,
வெய்தாயின, பல விட்டான்; வீரனும், வேறு ஓர் படை இலன், மாறா வெங்
கைதானே பொரு படை ஆக, தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் 33

தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான்; அப் பொரு செறி திண் தேர்,
பாரில் சென்றது; பரி பட்டன; அவன் வரி வில் சிந்திய பகழிக் கோல்,
மார்பில் சென்றன சில; பொன் தோளிடை மறைவுற்றன சில; அறவோனும்,
நேரில் சென்று,அவன் வயிரக் குனிசிலைபற்றிக் கொண்டு,எதிர் உற நின்றான்.34

ஒரு கையால் அவன் வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும், உரவோனும்,
இரு கையால் எதிர் வலியாமுன்னம், அது இற்று ஓடியது; இவர் பொன் தோளின்,
சுரிகையால் அவன் உருவிக் குத்தலும், அதனை, சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால் இடை பிதிர்வித்தான், முறி பொறி ஓடும்படி பறியாவே. 35

ஆயுதம் இழந்த அக்ககுமாரன் அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

வாளாலே பொரல் உற்றான், இற்று அது மண் சேராமுனம், வயிரத் திண்
தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை தழுவிக் கோடலும், உடல் முற்றும்,
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட, மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று
மீளாவகை, புடை சுற்றிக்கொண்டது; பற்றிக் கொண்டனன் மேலானான். 36

பற்றிக் கொண்டவன், வடி வாள் என ஒளிர், பல் இற்று உக, நிமிர் படர் கையால்
எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன,
முற்றிக் குண்டலம் முதல் ஆம் மணி உக, முழை நால் அரவு இவர் குடர் நால,
கொற்றத் திண் சுவல், வயிரக் கைகொடு குத்தி, புடை ஒரு குதிகொண்டான் 37

நீத்து ஆய் ஓடின உதிரப் பெரு நதி நீராக, சிலை பாராக,
போய்த் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க, பொரும் உயிர் போகாமுன்,
மீத் தாம் நிமிர் சுடர் வயிரக் கைகொடு பிடியா, விண்ணொடு மண் காண,
தேய்த்தான்-ஊழியின் உலகு ஏழ்தேயினும்,ஒரு தன்புகழ் இறை தேயாதான். 38

எஞ்சிய படைகள் அஞ்சி ஓடுதல்

புண் தாழ் குருதியின் வெள்ளத்து, உயிர் கொடு புக்கார் சிலர்; சிலர் பொதி பேயின்
பண்டாரத்திடை இட்டார் தம் உடல்; பட்டார் சிலர்; சிலர் பயம் உந்த,
திண்டாடித் திசை அறியா மறுகினர்; செற்றார் சிலர்; சிலர் செலவு அற்றார்;
கண்டார் கண்டது ஓர்திசையே விசைகொடுகால்விட்டார்;படைகைவிட்டார்.39

மீன் ஆய், வேலையை உற்றார், சிலர்; சிலர் பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார்;
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர்; சிலர் நான்மறையவர் உரு ஆனார்;
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே, தம் குழல் வகிர்வுற்றார்
ஆனால் சிலர்; சிலர், 'ஐயா! நின் சரண்' என்றார்; நின்றவர் 'அரி' என்றார் 40

தம் தாரமும், உறு கிளையும், தமை எதிர் தழுவும்தொறும், 'நும தமர் அல்லேம்;
வந்தேம், வானவர்' என்று, ஏகினர் சிலர்; சிலர், 'மானுயர்' என, வாய் விட்டார்;
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள் ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்;
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல் குஞ்சியை இருள்வித்தார் 41

அரக்கிமாரின் அவலநிலை

குண்டலக் குழை முகக் குங்குமக் கொங்கையார்,
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே,
விண்டு, அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்,
அண்டம் உற்றுளது, அவ் ஊர் அழுத பேர் அமலையே! 42

கதிர் எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார்
எதிர் எழுந்து, அடி விழுந்து, அழுது சோர் இள நலார்
அதி நலம் கோதை சேர் ஓதியோடு, அன்று, அவ் ஊர்
உதிரமும் தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே! 43

தா இல் வெஞ் செரு நிலத்திடை, உலந்தவர்த(ம்)மேல்,
ஓவியம் புரை நலார் விழுதொறும், சிலர் உயிர்த்து,
ஏவு கண்களும் இமைத்திலர்களாம்; இது எலாம்
ஆவி ஒன்று, உடல் இரண்டு, ஆயதாலேகொலாம்? 44

ஓடினார், உயிர்கள் நாடு உடல்கள் போல்; உறுதியால்
வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள்வாய்,
நாடினார், மட நலார்; நவை இலா நண்பரைக்
கூடினார்; ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார். 45

தீட்டு வாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு அனாள்,
ஆட்டில்நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக்
கூட்டி, 'நின் ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை, நீ,
காட்டுவாயாதி' என்று, அழுது கை கூப்பினாள். 46

ஏந்தினாள் தலையை, ஓர் எழுத அருங் கொம்பு அனாள்;
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை,
'வேந்த! நீ அலசினாய்; விடுதியால் நடம்' எனா,
பூந் தளிர்க் கைகளான், மெய் உறப் புல்லினாள். 47

இராவணன் காலடியில் விழுந்து, மண்டோ தரி முதலியோர் அழுது புலம்புதல்

கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற,
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள்,
மயன் மகள்; வயிறு அலைத்து அலறி மாழ்கினாள். 48

தா அருந் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும், இடை விழுந்து இரங்கி ஏங்கினார்;
காவலன் கால்மிசை விழுந்து, காவல் மாத்
தேவரும் அழுதனர், களிக்கும் சிந்தையார். 49

மிகைப் பாடல்கள்

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது என்ன;
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணி முழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது அன்றே. 12-1

பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள் சுற்ற,
முத்தினில் கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற,
தத்திய பரிகள் தன்னின் சாமரை தழைப்ப,-போனான். 15-1

தீய வல் அரக்கர் தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம்
வாயின் வைத்து ஊத, வீரர் வழி இடம் பெறாது செல்ல,
காயும் வெங் களிறு, காலாள் கடும் பரி, கடுகிச் செல்ல,
நாயகன் தூதன் தானும் நோக்கினன்; நகையும் கொண்டான். 16-1

புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி, தேர், பொங்க,
கலித்தார்கள் உம்பர் ஓட, கடையுகத்து எறியும் காலின்
ஒலித்து, ஆழி உவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட-
வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 23-1

எடுத்தனன் எழு ஒன்று; அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்தப்
பொடித்தனன்; இரதம், வாசி, பொரு களிறு, இதனை எல்லாம்
முடித்தனன், நொடிப்பில்; பின்னும், மூசு போர் அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர் கோல, மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார். 24-1

செறி நாண் உரும் ஒலி கொண்டான்; ஒருபது திசைவாய் கிழிபட அழல்கின்றான்;
'இறுவாய், இது பொழுது' என்றான்; எரி கணை எழு கார் மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரயின் நிலை பொலியச் சினமொடு பொழிகின்றான்;
உறுமாருதி உடல் உகவெங்குருதிகள் ஒழியாது, அவனொடு மலைவுற்றான்.32-1

மலைபோல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர் கரம்அதில் எழுவால் முழுதையும் மண்டித் துகள் பட மடிவித்தான்;
புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கிப் பொரு சிலை விளைவித்தான் 32-2

'மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும் உடையான் மகன்' என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர், குதி கொண்டார்; உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார்;
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறித் திரை மிசை விழ ஓடித்
தேய்ந்தார் சிலர்; சிலர் பிடரில் குதியடி பட ஓடினர்; சிலர் செயல் அற்றார் 33-1

இன்னன நிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னிய சோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல, அவன் முன்பு கேட்டனன். 47-1

அவ் வகை கண்டவர் அமரர் யாவரும்,
'உய்வகை அரிது' என ஓடி, மன்னவன்
செல் அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப் பெரும் படை யாவும் மாய்ந்ததே. 47-2

ஈது மற்று இசைவுற, இது கண்டு ஏங்கியே,
மா துயரத்தொடு மறுகு நெஞ்சுடைத்
தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல் கேட்டு, உளம் துளங்கினான். 47-3

நாடினார்; நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ் வயின், வெருவி விண்ணவர்கள் தாம்
ஓடினார்; அரசன் மாட்டு அணுகி நின்று, உரை செய்வார்: 47-4

'"மைந்தனை மடித்தது குரங்கு" என்று ஓதவும்
வந்தது போலும், நம் வாழ்வு நன்று!' எனா,
சிந்தையின் அழன்று, எரி விழித்து, 'சென்று, நீர்
இந்திரன் பகைஞனைக் கொணருவீர்' என்றான். 49-1

என்றலும், ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்று அவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றிய திறங்களும் உரைத்து, 'நுத்தையும்
இன்று உனைக் கூவினன்' எனவும் சொல்லினார். 49-2



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 11. பாசப் படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:31 pm

இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்

அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை,
வெவ் விழி எரி உக, வெகுளி வீங்கினான் -
எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான். 1

அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட, எரி உயிர்த்து, ஒருவன் ஓங்கினான் -
புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான். 2

ஏறினன், விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு-இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்;
கூறின கூறின சொற்கள் கோத்தலால்,
பீறின நெடுந் திசை; பிளந்தது அண்டமே. 3

ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
வேர்த்து, உயிர் குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்;
'சீர்த்தது போரும்' என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். 4

தம்பியை உன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான்,
வம்பு இயல் சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்;
'கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது?' என்றான். 5

இந்திரசித்தை வந்து சூழ்ந்த படையின் பெருக்கம்

வேல் திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்;
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மதச் சிறு கண் யானை,
ஆறு-இரண்டு அஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. 6

இராவணன் மாளிகை சென்று, இந்திரசித்து அவனுடன் பேசுதல்

ஆய மாத் தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின்
'ஏ' எனும் அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான். 7

தாள் இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்;
வாள் இணை நெடுங் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
மீளிபோல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்: 8

'ஒன்று நீ உறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி,
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ!
"சென்று நீர் பொருதிர்" என்று, திறத் திறம் செலுத்தி, தேயக்
கொன்றனை நீயே அன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம்? 9

'கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்றுஇப்
பைங் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை,
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால், என்பார்தாம் எனும் தகையது ஆமே! 10

'திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்;
"அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காட்டி,
புக்கு இனி வென்றும்" என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ? 11

இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்

'ஆயினும், ஐய! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே,
"ஏ" எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும்
நீ இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி' என்னா,
போயினன் -அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான். 12

ஆழிஅம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செங் கண்
குழி வெங் கோப மாவும், துவன்றிய நிருதர் சேனை,
ஊழி வெங் கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை தீர்ப்பான். 13

சென்றனன் என்ப மன்னோ; திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன்,
அன்று அது கண்ட ஆழி அனுமனை, 'அமரின் ஆற்றல்
நன்று' என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார். 14

போர்க் களம் நோக்கிய இந்திரசித்தின் மன நிலை

இலை குலாம் பூணினானும், 'இரும் பிணக் குருதி ஈரத்து,
அலகு இல் வெம் படைகள் தெற்றி, அளவிடற்கு அரிய ஆகி,
மலைகளும், கடலும், யாறும், கானமும் பெற்று, மற்று ஓர்
உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெருங் களம்' என்று உன்னா, 15

வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்;
'அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே!
எப் படை கொண்டு வெல்வது, இராமன் வந்து எதிர்க்கின்?' என்றான். 16

கண் அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின் காப்பார்,
எண்ணல் ஆம் தகைமை இல்லார், இறந்து எதிர் கிடந்தார் தம்மை
மண்ணுளே நோக்கி நின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப்
புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால், புழுங்குகின்றான். 17

கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும்,
யானுடை எம்பி வீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம்,
மானிடர் இருவராலும், வானரம் ஒன்றினாலும்,
ஆனதே! உள என் வீரம் அழிகிற்றே அம்ம!' என்றான். 18

இறந்த தம்பியின் உடலைக் கண்டு, சோகமும் கோபமும் கொள்ளுதல்

நீப்புண்ட உதிர வாரி நெடுந் திரைப் புணரி தோன்ற,
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிணக் குவடு இடறிச் செல்வான்;
தேய்ப்புண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில்
காய்ப்புண்ட செம்பின் தோன்ற, கறுப்புண்ட மனத்தன், கண்டான். 19

தாருகன் குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம்
கூர் உகிர் கிளைத்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பின் தோன்ற,
தேர் உக, கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்கண்
நீர் உக, குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான். 20

'வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி, ஆவி
வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார்,
அவ் உலகத்து உளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா!
எவ் உலகத்தை உற்றாய், எம்மை நீத்து, எளிதின்? எந்தாய்!' 21

ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை,
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி,
தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துரந்தது அம்மா!-
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன. 22

இந்திரசித்தை நோக்கிய அனுமனின் சிந்தனை

ஈண்டு இவை நிகழ்வுழி, இரவி தேர் எனத்
தூண்டுறு தேரின்மேல் தோன்றும் தோன்றலை,
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின்,
ஆண் தகை வனை கழல் அனுமன், நோக்கினான். 23

'வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை
அன்றே முடுகிக் கடிது எய்த அழைத்தது அம்மா!
ஒன்றே, இனி வெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது
இன்றே சமையும்; இவன் இந்திரசித்து!' என்பான். 24

'கட்டு ஏறு, நறுங் கமழ் கண்ணி, இக் காளை என் கைப்
பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்;
"கெட்டேம்" என எண்ணி, இக் கேடு அருங் கற்பினாளை
விட்டு ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார். 25

'ஒன்றோ இதனால் வரும் ஊதியம்? ஒண்மையானைக்
கொன்றேன் எனின், இந்திரனும் துயர்க் கோளிம் நீங்கும்;
இன்றே, கடி கெட்டது, அரக்கர் இலங்கை; யானே
வென்றேன், அவ் இராவணன் தன்னையும், வேரொடு' என்றான். 26

அரக்கர் படையுடன் அனுமன் பொருதல்

அக் காலை, அரக்கரும், யானையும், தேரும், மாவும்,
முக் கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை.
மிக்கானும், வெகுண்டு, ஓர் மராமரம் கொண்டு மிக்கான். 27

உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ?
மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல்,
புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால்
வதையுண்டன யானை; மறிந்தன யானை, மண்மேல். 28

முடிந்த தேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று
இடிந்த தேர்க் குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று
ஒடிந்த தேர்க் குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப்
படிந்த தேர்க் குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில். 29

சிரன் நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள்
தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண்
உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற்
குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் - குதிரை. 30

பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந் தோள்
ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக்
கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், கரத்தால்
அடியுண்டார்களும், அச்சமுண்டார்களும்-அரக்கர். 31

வட்ட வெஞ் சிலை ஒட்டிய வாளியும், வயவர்
விட்ட விட்ட வெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த,
சுட்ட வல் இரும்பு அடைகலைச் சுடுகலாதது போல்,
பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த. 32

சிகை எழும் சுடர் வாளிகள், இராக்கதர் சேனை,
மிகை எழும் சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து,
புகை எழுந்தன, எரிந்தன, கரிந்தன போத,-
நகை எழுந்தன, குளிர்ந்தன, வான் உளோர் நாட்டம். 33

இந்திரசித்துக்கும் அனுமனுக்கும் பெரும் போர் நிகழ்தல்

தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப்
பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள்
வீரர் வீரனும், முறுவலும் வெகுளியும் வீங்க,
'வாரும், வாரும்' என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். 34

புரந்தரன் தலை பொதிர் எறிந்திட, புயல் வானில்
பரந்த பல் உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப,
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட, அரக்கன் வெஞ் சிலையை நாண் தெறித்தான். 35

ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம்
கீண்டதாம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய,
நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடுஞ் சிலையில்
பூண்ட நாண் இற, தன் நெடுந் தோள் புடைத்து ஆர்த்தான். 36

'நல்லை! நல்லை! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க நல்லார்
இல்லை! இல்லையால்! எறுழ் வலிக்கு யாரொடும் இகல
வல்லை! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள வாழ்நாட்கு
எல்லை! எல்லை!' என்று, இந்திரசித்துவும் இசைந்தான். 37

'நாளுக்கு எல்லையும், நிருதராய் உலகத்தை நலியும்
கோளுக்கு எல்லையும், கொடுந் தொழிற்கு எல்லையும், கொடியீர்!
வாளுக்கு எல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன்
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை' என்று அனுமனும் சொன்னான். 38

'இச் சிரத்தையைத் தொலைப்பென்' என்று, இந்திரன் பகைஞன்,
பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
வச்சிரத்தினும் வலியன, வயிர வான் கணைகள்,
அச் சிரத்தினும் மார்பினும் அழுத்தலும்-அனுமன். 39

குறிது வான் என்று குறைந்திலன், நெடுஞ் சினம் கொண்டான்,
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி,
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி,
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என, நிமிர்ந்தான். 40

பாகம் அல்லது கண்டிலன்; அனுமனனப் பார்த்தான்;
மாக வன் திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த
மேக நாதனும், மயங்கினனாம் என வியந்தான். 41

நீண்ட வீரனும், நெடுந் தடக் கைகளை நீட்டி,
ஈண்டு வெஞ் சரம் எய்தன எய்திடாவண்ணம்,
மீண்டு போய் விழ வீசி, ஆங்கு அவன் மிடல் தடந் தேர்
பூண்ட பேயொடு, சாரதி தரைப்பட, புடைத்தான். 42

ஊழிக் காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ,
பாழித் தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்;
ஆழிப் பல் படை அனையன, அளப்ப அருஞ் சரத்தால்,
வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான். 43

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா,
கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து,
பற்றி வன் கையால், பறித்து எழுந்து, உலகு எலாம் பல கால்
முற்றி வென்ற போர் மூரி வெஞ் சிலையினை, முறித்தான். 44

முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர்,
மறிந்து போரிடை வழிக் கொள்வான், வயிர வாட் படையால்
செறிந்த வான் பெரு மலைகளைச் சிறகு அறச் செயிரா
எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். 45

நூறு நூறு போர் வாளி, ஓர் தொடை கொடு, நொய்தின்,
மாறு இல் வெஞ் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்;
ஊறு, தன் நெடு மேனியில், பல பட, ஒல்கி,
ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான். 46

ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு, அறிவு அழிந்தார்;
பார்த்த மாருதி, தாரு ஒன்று அங்கையில் பற்றி,
தூர்த்த வாளிகள் துணிபட முறை முறை சுற்றி,
போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான். 47

பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும்,
தாரையின் நெடுங் கற்றைகள் சொரிவன தயங்க,
ஆர மால் வரை அருவியின் அழி கொழுங் குருதி
சோர நின்று, உடல் துளங்கினன் - அமரரைத் தொலைத்தான். 48

நின்று, போதம் வந்துறுத்தலும், நிறை பிறை எயிற்றைத்
தின்று, தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப,
குன்றுபோல் நெடு மாருதி ஆகமும் குலுங்க,
ஒன்று போல்வன, ஆயிரம் பகழி கோத்து உய்த்தான். 49

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப,
கைத்த சிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்;
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி,
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். 50

கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன்முன்னம்,
எண்ணின் மீச் சென்ற எறுழ் வலித் திறலுடை இகலோன்,
புண்ணின் மீச் சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப,
விண்ணின் மீச் சென்று, தேரொடும் பார்மிசை வீழ்ந்தான். 51

விழுந்து பார் அடையாமுனம், மின் எனும் எயிற்றான்,
எழுந்து, மா விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில்,
செழுந் திண் மா மணித் தேர்க் குலம் யாவையும் சிதைய
உழுந்து பேர்வதன்முன், நெடு மாருதி உதைத்தான். 52

இந்திரசித்து வேறு வழியின்றி அயன் படையை விடுத்தல்

ஏறு தேர் இலன்; எதிர் நிற்கும் உரன் இலன்; எரியின்,
சீறு வெஞ் சினம் திருகினன், அந்தரம் திரிவான்,
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின், விரிஞ்சன்
மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான். 53

பூவும், பூ நிற அயினியும், தீபமும், புகையும்,
தா இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்;
தேவு யாவையும், உலகமும், திருத்திய தெய்வக்
கோவில் நான்முகன் படைக்கலம் தடக் கையில் கொண்டான். 54

கொண்டு, கொற்ற வெஞ் சிலை நெடு நாணொடும் கூட்டி,
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி,
மண் துளங்கிட, மாதிரம் துளங்கிட, மதி தோய்
விண் துளங்கிட, மேருவும் துளங்கிட, விட்டான். 55

அயன் படைக்கு அடங்கிச் சாய்ந்த அனுமனின் அருகில் இந்திரசித்து வருதல்

தணிப்ப அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண்
பணிக் குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி,
துணிக்க உற்று, உயர் கலுழனும் துணுக்குற, சுற்றிப்
பிணித்தது, அப் பெரு மாருதி தோள்களைப் பிறங்க. 56

திண்ணென் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக,
அண்ணல் மாருதி, அன்று, தன் பின் சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும், கனக தோரணத்தொடும், கடை நாள்,
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்தென, சாய்ந்தான். 57

சாய்ந்த மாருதி, சதுமுகன் படை எனும் தன்மை
ஆய்ந்து, 'மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று' என எண்ணினன், கண் முகிழ்த்து இருந்தான்;
'ஓய்ந்தது ஆம் இவன் வலி' என, அரக்கன் வந்துற்றான். 58

அரக்கர் படை ஆரவாரித்தல்

உற்ற காலையின், உயிர்கொடி திசைதொறும் ஒதுங்கி
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்-
சுற்றும் வந்து, உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப்
பற்றி ஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால். 59

'குரக்கு நல் வலம் குறைந்தது' என்று, ஆவலம் கொட்டி
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர்,
அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன். 60

கறுத்த மாசுணம், கனக மா மேனியைக் கட்ட,
அறத்துக்கு ஆங்கு ஒரு தனித் துணை என நின்ற அனுமன்,
மறத்து, மாருதம் பொருத நாள், வாள் அரா அரசு
புறத்துச் சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான். 61

இலங்கை மக்களின் மகிழ்ச்சி

வந்து இரைந்தனர், மைந்தரும், மகளிரும்; மழைபோல்,
அந்தரத்தினும், விசும்பினும், திசைதொறும் ஆர்ப்பார்;
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின்,
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது, அவ் இலங்கை. 62

மிகைப் பாடல்கள்

பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் குடைகள் சுற்ற,
முத்தினின் சிவிகைதன்னை முகில் எனத் தேர்கள் சுற்ற,
மத்த வெங் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற,
தத்திய பரிகள் தன்னின் சாமரை பதைப்ப,-வந்தான். 12-1

சங்குகள் முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ,
வெங் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி,
தொங்கலின் குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத் தூர்க்க,
திங்களின் குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய, - வந்தான். 12-2

தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு வேறு
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல,
தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற
நாயகன் தூதன் தானும், நோக்கினன்; நகையும் கொண்டான். 12-3

செம் பொனின் தேரின் பாங்கர்ச் செங்குடைத் தொங்கற் காடும்,
உம்பரின் கொம்பர் ஒத்த, ஒரு பிடி நுசுப்பின், செவ்வாய்,
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச,
கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான். 12-4

தொங்கலின் காடு நூறாயிரம் என்பர்; தோகைப் பிச்சம்,
பங்கம் இல் பணிலம் பத்துப் பத்து நூறு ஆகும் என்பர்;
செங் குடை வெண்மை; நீலம், பச்சையோடு இனைய எல்லாம்
பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற. 12-5

தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர
வாய்களில் ஊத, மண்ணும் வானமும் மறுகிச் சோர,
'ஆயது முடிவு காலம்; கிளர்ந்தனர் அரக்கர்' என்று
வாய்களின் பேசி வானோர் மண்டினர், மலைதல் நோக்கி. 12-6

அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக் காடும்,
சரம் தரு சிலையின் காடும், தானவர் கடலும், இன்ன
நிரந்தரம் சங்கு தாரை நில மகள் முதுகை ஆற்றாள்;
'புரந்தரசித்து வந்தான்' என்றன, பொன்னின் சின்னம். 12-7

புலித் தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்னக்
கலித்து ஓடி, உம்பரொடும் ஓடின, காலன் அஞ்ச;
ஒலித்து ஆழி உலாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட,
வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 12-8

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க,
உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன, பூ இது என்ன;
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே. 12-9

எண்பனாதியிர கோடி இருஞ் சிலை
புண் பயில் வெஞ் சரம் பூட்டினர், ஒன்றோ?
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த;
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான். 12-10

பாறு எழு வாட் படை பத்திரு வெள்ளம்;
ஆறு இரு கோடியின் வேலின் அமைந்தார்;
கூறிடு வெள்ளம் மிடைந்தது குந்தம்;-
வீறுடை மாருதிமேல் வரு சேனை, 12-11

பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்;
சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த;
அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம்
வந்தன, மண்ணை அடித் துகள் மாய்ப்ப. 12-12

சங்கொடு தாரைகள், சச்சரி, சின்னம்,
எங்கும் இயம்பின; பேரி இடித்த;
வெங் குரலின் பறை விண்ணில் நிறைந்த;
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார். 12-13

பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்;
தேர்த் திரள் தேர்த் திரளே திசை எங்கும்;
கார்த் திரள் மேனியின் இன் கயம் எங்கும்;
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும். 12-14

நுகம் படு தேர் அவை நூற்று இரு கோடி;
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன,
அகம் படு காவில் அரக்கர்கள், இன்னம்
அகம்படி வீரர்கள் ஐ-இரு வெள்ளம். 12-15

வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்;
துள்ளிய வாட் படை சொல்லிட ஒண்ணா;
பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;-
கள்ள அரக்கனைச் சுற்றினர் காப்பார். 12-16

ஆய பெரும் படை செல்வது கண்டு
மாயம் மிகும் திறல் வானர வீரன்,
நாயகனைத் திசை நோக்கி நயத்தால்,
மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான். 12-17

ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை
ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டிச்
சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மைக்
கோழியின் ஒக்குறக் கூவிடுகின்றான். 12-18

மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி,
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு,
கார் அன மேனி அரக்கர்கள் காணா,
வாரிகளூடு மடுத்தன வாளி. 12-19

தூளி மிடைந்து, உருத் தோன்றல ஆகி,
யாளி அனானை அறிந்திலன் ஆகி,
சூழுற நோக்கினன், சோதனை பெற்றான்;
கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான். 12-20

இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச்
சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்;
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா,
சிந்தை உவந்து, சிரித்து உடன் நின்றான். 12-21

சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன்
முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி,
'வெந் திறலாய்! விரைவின் வருக!' என்றான்;
'இந்திரசித்து இவன்' என்பது இசைத்தான். 12-22

என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு,
குன்றம் எனும் புய வானர வீரன்,
'நன்று இது! நன்று இது!' என்ன நயந்தான்;
சென்று அணைவுற்றது அரக்கன சேனை; 12-23

ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க,
ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க,
ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி
ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான். 12-24

'சந்திரன் அருக்கனொடு தாரகை இனங்கள்
சிந்திட எழுந்து, திசை ஈண்ட, எதிர் செவ்வே
வந்த இவ் அரக்கர் குழு வன்மை இது என்றால்,
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும்' என்றான். 12-25

உடைந்த வல்இருள் நோற்று, பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள்
மிடைந்தன மிலைச்சியாங்கு, மெய் அணி பலவும் மின்ன,
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச,
அடைந்த, கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று என்ன, 12-26

என்றே, 'இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால்,
நன்றே மலர்மேல் உறை நான்முகன் ஆதி தேவர்,
"பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர் போற்றுதற்கு
நின்றே துயர் தீர நிறுத்தினன்" என்ப மன்னோ.' 24-1

எழுந்தான்; எழுந்த பொழுது, அங்கு அரக்கரும் எண் இல் கோடி
பொழிந்தார் படைகள்; அவை யாவையும் பொடிந்து சிந்திக்
கழிந்து ஓடிட, தன் கை மராமரம் கொண்டு வீசி,
செழுந் தார்ப் புயத்து அண்ணல் செறுத்து, உடன் மோதலுற்றான். 27-1

செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி,
மறித்து வெஞ் சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித் தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை மரத்தால். 33-1

புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப் பொறியின்
தகைந்து, மற்று அவர் உடல்களைத் தலைகளைச் சிதறி,
மிகும் திறல் கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்து அடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார். 33-2

எடுத்து நாண் ஒலி எழுப்பினன்; எண் திசைக் கரியும்
படித் தலங்களும் வெடி பட, பகிரண்டம் உடைய,
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம் கொண்டு
அடுத்து, அம் மாருதி அயர்ந்திட, அடு சரம் துரந்தான். 45-1
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 12. பிணி வீட்டு படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:35 pm

கட்டுப்பட்ட அனுமனைக் கண்ட அரக்கரின் நிலை

'எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;
கொய்யுமின் குடரினை; கூறு கூறுகள்
செய்யுமின்; மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;
உய்யுமேல், இல்லை நம் உயிர்' என்று ஓடுவார். 1

மைத் தடங் கண்ணியர், மைந்தர், யாவரும்,
பைத் தலை அரவு எனக் கனன்று, 'பைதலை
இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ?' எனா,
மொய்த்தனர்; கொலை செய்ய முயல்கின்றார், சிலர். 2

'நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ,
வச்சிர உடல்? மறி கடலின்வாய் மடுத்து,
உச்சியின் அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின்,
கிச்சிடை இடும்' எனக் கிளக்கின்றார் சிலர். 3

'எந்தையை எம்பியை, எம் முனோர்களைத்
தந்தனை போக' என, தடுக்கின்றார் பலர்;
'அந்தரத்து அமரர்தம் ஆணையால், இவன்
வந்தது' என்று, உயிர்கொள மறுகினார் பலர். 4

'ஒங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்; இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன் சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்' என்று அழும் மாதரார் பலர். 5

கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
அண்டம் உற்றது, நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது-
கண்டம் உற்றுள அருங் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர் உவகை கூரவே. 6

இலங்கையின் அழிவுகளை நோக்கிக்கொண்டே அனுமன் செல்லுதல்

வடியுடைக் கனல் படை வயவர், மால் கரி,
கொடியுடைத் தேர், பரி கொண்டு வீசலின்,
இடி படச் சிதைந்த மால் வரையின், இல் எலாம்
பொடிபடக் கிடந்தன கண்டு, போயினான். 7

வழியில் அனுமனைக் கண்ட அரக்கர்களின் நிலை

முயிறு அலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு தோள்
கயிறு அலைப்புண்டது கண்டும், காண்கிலாது,
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின், மயங்கினார் பலர். 8

ஆர்ப்பு உற அஞ்சினர்; அடங்கினார் பலர்;
போர்ப்புறச் செயலினைப் புகழ்கின்றார் பலர்;
பார்ப்புற, பார்ப்புற, பயத்தினால் பதைத்து,
ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார், பலர். 9

'காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர் சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்;
தேர்ந்து, உறு பொருள் பெற எண்ணி, செய்யுமின்;
வேந்து உறல் பழுது' என விளம்புவார், சிலர். 10

'ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி, அன்று, தன்
எளிவரவு; இன்று இதன் எண்ணம் வேறு' எனா,
'களி வரு சிந்தையால் காண்டி! நங்களைச்
சுளிகிலையாம்' எனத் தொழுகின்றார், சிலர். 11

அனுமனைச் சுற்றிய நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் அரக்கர்களின் தன்மை

பைங் கழல் அனுமனைப் பிணித்த பாந்தளை,
கிங்கரர், ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்-
ஐம்பதினாயிரர், அளவு இல் ஆற்றலர்.
மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார். 12

அனுமனின் நிலையைக் கண்டோரின் கருத்து

'திண் திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்,
தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான்,
மண்டு அமர் தொடங்கினன், வானரத்து உருக்
கொண்டனன், அந்தகன்கொல்?' என்றார் பலர். 13

அரமியத் தலம்தொறும், அம் பொன் மாளிகைத்
தரம் உறு நிலைதொறும், சாளரம்தொறும்,
முரசு எறி கடைதொறும், இரைத்து மொய்த்தனர்-
நிரை வளை மகளிரும், நிருத மைந்தரும். 14

'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்,
மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால்,
எயிலுடைத் திரு நகர் சிதைப்ப எய்தினன்,
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய்' என்பார், பலர். 15

அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர்,
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்,
கரும்பு இயல் சித்தியர், இயக்கர் கன்னியர்,
வரம்பு அறு சும்மையர், தலைமயங்கினார். 16

அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர், நெடு மழைக் கண்ணின் நீர்; அது,
விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ?
இரக்கமோ? அறத்தினது எளிமை எண்ணியோ? 17

அடங்கிச் செல்லும் அனுமனின் கருத்து

ஆண் தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்;
மீண்டிலன்; வேறலும் விரும்பலுற்றிலன்;
'ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன்' எனக் கருத்தின் எண்ணினான். 18

'எந்தையது அருளினும், இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும், சீதை, வானவர்,
தந்து உள வரத்தினும், தறுகண் பாசமும்
சிந்துவென்; அயர்வுறு சிந்தை சீரிதால்; 19

'வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து
அளவுறு முதியரும் அறிய, ஆணையால்
விளைவினை விளம்பினால், மிதிலை நாடியை,
இளகினன், என்வயின் ஈதல் ஏயுமால்; 20

'அல்லதூஉம், அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தெரிவுறும்; எண்ணும் தேறலாம்;
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து, உரை
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே; 21

'வாலிதன் இறுதியும், மரத்துக்கு உற்றதும்,
கூல வெஞ் சேனையின் குணிப்பு இலாமையும்,
மேலவன் காதலன் வலியும், மெய்ம்மையான்,
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால். 22

'ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும்
நீதியும் மனக் கொள நிறுவி, நின்றவும்
பாதியின் மேல்செல நூறி, பைப்பையப்
போதலே கருமம்' என்று, அனுமன் போயினான். 23

இந்திரசித்து அனுமனுடன், இராவணன் மாளிகைக்கு ஏகுதல்

கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்,
புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ,
விடை பிணிப்புண்டது போலும் வீரனை,
குடை கெழு மன்னன் இல், கொண்டு போயினான். 24

தூதுவர் நற்செய்தி சொல்ல, இராவணன் அவர்களுக்குப் பரிசு அளித்தல்

தூதுவர் ஓடினர்; தொழுது, தொல்லை நாள்
மாதிரம் கடந்தவற் குறுகி, 'மன்ன! நின்
காதலன் மரை மலர்க் கடவுள் வாளியால்,
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம்' என்றார். 25

கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின், யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்
நீட்டினன் - உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான். 26

குரங்கைக் கொல்லாது கொணர இராவணன் ஆணையிடல்

எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்,
புல்லுற மலர்ந்த கண் குமுதப் பூவினன்,
'ஒல்லையின் ஓடி, நீர் உரைத்து, என் ஆணையால்,
"கொல்லலை தருக" எனக் கூறுவீர்" என்றான். 27

அவ் உரை, தூதரும், ஆணையால், வரும்
தெவ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரை நிகழ்வுழி, இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்; 28

அனுமனுக்கு உற்றதைத் திரிசடை சீதைக்குக் கூறுதல்

'இறுத்தனன் கடி பொழில், எண்ணிலோர் பட
ஒறுத்தனள்' என்று கொண்டு உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள் சோர்வுற, வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள். 29

சீதை வருந்திப் புலம்புதல்

ஓவியம் புகையுண்டதுபோல், ஒளிர்
பூவின் மெல்லியல் மேனி பொடி உற,
பாவி வேடன் கைப் பார்ப்பு உற, பேதுறும்
தூவி அன்னம் அன்னாள், இவை சொல்லினாள்: 30

'உற்று உண்டாய விசும்பை உருவினாய்,
முற்றுண்டாய்; கலை யாவையும் முற்றுறக்
கற்றுண்டாய்; ஒரு கள்ள அரக்கனால்
பற்றுண்டாய்; இதுவோ அறப் பான்மையே? 31

'கடல் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை;
அடல் கடந்த திரள் புயத்து ஐய! நீ
இடர்கள் தந்தனை, வந்து இடர் மேலுமே? 32

'ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
"ஊழி காட்டுவேன்" என்று உரைத்தேன்; அது
வாழி காட்டும் என்று உண்டு; உன் வரைப் புயப்
பாழி காட்டி, அரும் பழி காட்டினாய். 33

'கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
"மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
கொண்டு மன்னவன் போம்" எனும் கொள்கையைத்
தண்டினாய்-எனக்கு ஆர் உயிர் தந்த நீ!' 34

ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
தேய, கன்று பிடியுறத் தீங்கு உறும்
தாயைப் போல, தளர்ந்து மயங்கினாள்-
தீயைச் சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள். 35

இந்திரசித்து அனுமனை இராவணனது அரண்மனையுள் கொண்டு சேர்த்தல்

பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன், மற்றை உலகு ஒரு மூன்றையும்
அருந் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த, அப் பெருங் கோயில் சென்று எய்தினான்; 36

இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி

தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன,
அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப,
வலம் கொள் தோளினான் மண்நின்றும் வான் உற எடுத்த,
பொலம் கொள் மா மணி, வெள்ளியங்குன்று எனப் பொலிய, 37

புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள் இல் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர்ப் பெருங் குறிகளும், புயங்களில் வயங்க, 38

துன்று செம் மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்ற,
நின்று திக்குற நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப,
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன, 39

மரகதக் கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க,
சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி,
உரகர்கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப, 40

குவித்த பல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப,
சவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க,
புவித் தடம் படர் மேருவைப் பொன் முடி என்னக்
கவித்து, மால் இருங் கருங் கடல் இருந்தது கடுப்ப, 41

சிந்து ராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய,
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப,
இந்து வெண்குடை நீழலில், தாரகை இனம் பூண்டு,
அந்தி வான் உடுத்து, அல்லு வீற்றிருந்ததாம் என்ன, 42

வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய
திண்மைக்கும், தனி உறையுளாம் முழு முகம், திசையில்
கண் வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற, 43

ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன,
நாகர் வாழ் இடம் முதல் என, நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற, 44

வானரங்களும், வானவர் இருவரும், மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்,
ஏனை நின்றவர் இருடியர் சிலர், ஒழிந்து யாரும்,
தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற, 45

கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட,
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும்
ஆடல் நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகைமேல், நகை விளங்க, 46

பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
மதம் பெய் வண்டு எனச் சனகிமேல் மனம் செல, மறுகி
வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழி நீர்
ததும்புவார், விழித் தாரை வேல், தோள்தொறும் தாக்க, 47

மாறு அளாவிய, மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறுஞ் சீகரத் தென்றல்,
ஊறு அளாவிய கடு என, உடலிடை நுழைய, 48

திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி,
வெங் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று, 49

இராவணனைக் கண்ணுற்ற மாருதியின் மன நிலை

இருந்த எண் திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்;
கருந் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்;
'திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,
உருந்து நஞ்சு போல்பவன்வயின் பாய்வென்' என்று உடன்றான். 50

'உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம்' என்று ஒழிந்தேன்;
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்;
திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி,
அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்' என்று அமைந்தான் 51

'தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர், கண்புலன் கதுவ,
பாவகாரி தன் முடித் தலை பறித்திலென்என்றால்,
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை?' என்றான். 52

'"மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட, முடித் தலை திசைதொறும் உருட்டி,
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
தேடி வந்தது, ஓர் குரங்கு" எனும் வாசகம் சிறிதோ? 53

'நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
காண்டல் வேண்டி, இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி,
மீண்ட போது உண்டு வசைப்பொருள்; வென்றிலேன்எனினும்,
மாண்ட போதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ?' 54

என்று, தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக,
குன்றின்மேல் எழு கோள் அரிஏறு என, குதியின்
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா-
நின்று, 'காரியம் அன்று' என, நீதியின் நினைந்தான். 55

'கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
வெல்லலாம் தரத்தனும் அல்லன்; மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ? 56

'என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்-
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்,
அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான்,
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ? 57

'"ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை,
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம்" என,
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால். 58

'"இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான்" என,
அம் கண் நாயகன்தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்-
பொங்கு வெஞ் செருவிடைப் பொழுது போக்கினால். 59

'ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந்
தூதன் ஆம் தன்மையே தூய்து' என்று, உன்னினான்;
வேத நாயகன் தனித் துணைவன், வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை, எய்தினான். 60

இராவணனிடம் இந்திரசித்து அனுமனைப் பற்றிக் கூறுதல்

தீட்டிய வாள் எனத் தெறு கண் தேவியர்
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்குக்
காட்டினன், அனுமனை-கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஒட்டினான். 61

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்-
தவனை உற்று, 'அரி உருவான ஆண்தகை,
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்,
இவன்' எனக் கூறி நின்று, இரு கை கூப்பினான். 62

இராவணன் அனுமனைச் சினந்து நோக்கி, 'நீ யார்?' என வினாவுதல்

நோக்கிய கண்களால் நொறில் கனல்-பொறி
தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள்,
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
வீக்கிய, அவனுடல் விசித்த பாம்பினே. 63

அன்ன ஓர் வெகுளியன், அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற,
'என் இவண் வரவு? நீ யாரை?' என்று, அவன்
தன்மையை வினாயினான்-கூற்றின் தன்மையான். 64

'நேமியோ? குலிசியோ? நெடுங் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ?-பொருது முற்றுவான்,
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்! 65

'நின்று அசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
தென் திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள், யாவன் நீ? 66

'அந்தணர் வேள்வியின் ஆக்கி, ஆணையின்
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
முந்து ஒரு மலருளோன், "இலங்கை முற்றுறச்
சிந்து" எனத் திருத்திய தெறு கண் தெய்வமோ? 67

'யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்?
ஆர் உனை விடுத்தவர்? அறிய, ஆணையால்
சோர்விலை சொல்லுதி' என்னச் சொல்லினான்-
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான். 68

அனுமனின் விடை

'சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்;
அல்லி அம் கமலமே அனைய செங் கண் ஓர்
வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன். 69

'அனையவன் யார்? என, அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும், மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன்; 70

'ஈட்டிய வலியும், மேல்நாள் இயற்றிய தவமும், யாணர்க்
கூட்டிய படையும், தேவர் கொடுத்த நல் வரமும், கொட்பும்,
தீட்டிய வாழ்வும், எய்தத் திருத்திய வாழ்வும் எல்லாம்,
நீட்டிய பகழி ஒன்றால், முதலொடு நீக்க நின்றான்; 71

'தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்; 72

'போதமும், பொருந்து கேள்விப் புரை அறு பயனும், பொய் தீர்
மா தவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும்,
யாது அவன் நினைந்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின்,
வேதமும் அறனும் சொல்லும் மெய் அறமூர்த்தி, வில்லோன்; 73

'காரணம் கேட்டிஆயின், கடை இலா மறையின்கண்ணும்,
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும், அன்னான்;
போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொது நின்று, "முதலே" என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்; 74

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும், கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி,
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு,-அயோத்தி வந்தான்; 75

'அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து, உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் - தன் பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். 76

'அன்னவற்கு அடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்;
நன்னுதல் தன்னைத் தேடி நாற் பெருந் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி-
தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென், தனியேன்' என்றான். 77

அனுமனிடம் இராவணன் வாலியின் நலனை உசாவுதல்

என்றலும், இலங்கை வேந்தன், எயிற்றினம் எழிலி நாப்பண்
மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை
நன்றுகொல்?' என்னலோடும், நாயகன் தூதன் நக்கான். 78

வாலி மடிந்த செய்தியை அனுமன் தெரிவித்தல்

'அஞ்சலை, அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே,
வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;
அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்' என்றான். 79

நடந்த நிகழ்ச்சிகள் குறித்து இராவணன் கேட்டல்

'என்னுடை ஈட்டினான், அவ் வாலியை எறுழ் வாய் அம்பால்
இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்?
அன்னவன் தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையை உரைசெய்க' என்ன, சமீரணன் தனயன் சொல்வான்: 80

நிகழ்ந்தனவற்றை அனுமன் விவரித்தல்

'தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள் கோமான்,
ஆவி ஒன்று ஆக நட்டான்; "அருந் துயர் துடைத்தி" என்ன,
ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன், உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான்; 81

'ஆயவன் தன்னொடு, ஆண்டு, திங்கள் ஓர் நான்கும் வைகி,
மேய வெஞ் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன்,
"போயினிர் நாடும்" என்ன, போந்தனம், புகுந்தது ஈது' என்று,
ஏயவன் தூதன் சொன்னான். இராவணன் இதனைச் சொல்வான்: 82

இராவணன் சுக்கிரீவன் முதலியோரது செய்கையை இகழ்தல்

'உம் குலத் தலைவன், தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியோனை
வெங் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள்-தொழில் மேற்கொண்டீரேல்,
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால்,
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ! 83

'தம்முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உரைக்கலுற்றது?
எம் முனைத் தூது வந்தாய்! இகல் புரி தன்மை என்னை?
நும்மினைக் கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி' என்றான். 84

அனுமன் இராவணனை நோக்கி உரைத்தல்

துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப்
புணர்த்து நோக்கி, 'பொது நின்ற நீதியை
உணர்த்தினால், அது உறும்' என, உன்ன அருங்
குணத்தினானும், இனையன கூறினான்: 85

'தூது வந்தது, சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன;
சாது என்று உணர்கிற்றியேல், தக்கன,
கோது இறந்தன, நின் வயின் கூறுவாம்: 86

'வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம்
சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்;
இறுதி உற்றுளது; ஆயினும், இன்னும் ஓர்
உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்! 87

'"போய் இற்றீர், நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்-
காயின் தீர்வு அருங் கேடு அருங் கற்பினாள்,
தீயின் தூயவளைத் துயர் செய்ததால். 88

'"இன்று வீந்தது; நாளை, சிறிது இறை
நின்று வீந்தது; அலால், நிறை நிற்குமோ?
ஒன்று வீந்தது, நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம், மிகுத்ததால். 89

'"தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது" எனும்
வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த
தூய்மை, தூயவள்தன்வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்! 90

'"திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்து, தம்தம் மதியின் மயங்கினார்,
இறந்து இறந்து, இழிந்து ஏறுவதே அலால்,
அறம் திறம்பினர், ஆர் உளர் ஆயினார்? 91

'"நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்,
ஈமத்தால் மறைந்தார், இள மாதர்பால்
காமத்தால் இறந்தார், களி வண்டு உறை
தாமத் தாரினர், எண்ணினும் சால்வரோ? 92

'"பொருளும், காமமும், என்று இவை போக்கி, வேறு
இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்,
அருளும், காதலின் தீர்தலும், அல்லது, ஓர்
தெருள் உண்டாம் என எண்ணலர் - சீரியோர். 93

'"இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி, நாளும் நகை உற, நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து, பழி படூஉம்
கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ? 94

'"ஓதநீர் உலகு ஆண்டவர், உன் துணைப்
போத நீதியர், ஆர் உளர் போயினார்?
வேத நீதி விதி வழி மேல்வரும்
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ? 95

'"வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்,
மறுப்பு உண்டாயபின், வாழ்கின்ற வாழ்வினின்,
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால், அது அழகு எனல் ஆகுமே. 96

'"பாரை ஞூறுவ பற் பல பொற் புயம்,
ஈர்-ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்,-
ஊரை ஞூறும் கடுங் கனல் உட்பொதி
சீரை ஞூறு, அவை-சேமம் செலுத்துமோ? 97

'"புரம் பிழைப்பு அருந் தீப் புகப் பொங்கியோன்,
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய
வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ? 98

'"ஈறு இல் நாண் உக, எஞ்சல் இல் நல் திரு
நூறி, நொய்தினை ஆகி, நுழைதியோ?-
வேறும், இன்னும் நகை ஆம் வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்! 99

'"பிறந்துளார், பிறவாத பெரும் பதம்
சிறந்துளார், மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்துளார், பிறர் யாரும், இராமனை
மறந்துளார் உளர் ஆகிலர்; வாய்மையால். 100

'"ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும்,
ஓது பல் கிளையும், உயிரும் பெற,
சீதையைத் தருக" என்று எனச் செப்பினான்,
சோதியான் மகன், நிற்கு' எனச் சொல்லினான். 101

தூதனாகிய நீ அரக்கரைக் கொன்றது ஏன் என இராவணன் வினவுதல்

என்றலும், 'இவை சொல்லியது, எற்கு, ஒரு
குன்றின் வாழும் குரங்குகொலாம்! இது
நன்று! நன்று!' என மா நகை செய்தனன் -
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான். 102

'குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும்,
இருக்க; நிற்க; நீ, என்கொல், அடா! இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்தபின்
அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்!' என்றான். 103

அனுமன் அளித்த விடை

'காட்டுவார் இன்மையால், கடி காவினை
வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை
வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உந்தன் -
மாட்டு வந்தது, காணும் மதியினால். 104

சினம் மிக்க இராவணன், 'அனுமனைக் கொல்மின்' என, வீடணன் தடுத்து உரைத்தல்

என்னும் மாத்திரத்து, ஈண்டு எரி நீண்டு உக,
மின்னும் வாள் எயிற்றின், சினம் வீங்கினான்;
'கொல்மின்' என்றனன்; கொல்லியர் சேர்தலும்,
'நில்மின்' என்றனன், வீடணன் நீதியான். 105

ஆண்டு, எழுந்து நின்று, அண்ணல் அரக்கனை,
நீண்ட கையன் வணங்கினன்; 'நீதியாய்,
மூண்ட கோபம் முறையது அன்றாம்' எனா,
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்: 106

'அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன், அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ: "இயம்பு தூது
வந்தனென்" என்ற பின்னும், கோறியோ, மறைகள் வல்லோய்? 107

'பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய் தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர்,
மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த
தூதரைக் கொன்றுளார்கள் யாவரே, தொல்லை நல்லோர்? 108

'பகைப் புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார்
மிகைப் புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப் புலக் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும்
நகைப் புலன் பிறிது ஒன்று உண்டோ ? நம் குலம் நவை இன்றாமே! 109

'முத் தலை எஃகன், மற்றை முராந்தகன், முனிவன், முன்னா
அத் தலை நம்மை நோனா அமரர்க்கும், நகையிற்றாமால்;
எத் தலை உலகும் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ,
இத் தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும், 110

'இளையவள்தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து,
"விளைவு உரை" என்று விட்டார், வீரர் ஆய், மெய்ம்மை ஓர்வார்;
களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி' என்று, அமையச் சொன்னான். 111

அனுமன் வாலைச் சுட்டு, பின் துரத்துமாறு இராவணன் ஆணையிடல்

'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே செய்தான் ஆனாலும்,
கொல்லல் பழுதே' - 'போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது' என்னா,
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார். 112

அயன் படையை இந்திரசித்து விடுவிக்க, அரக்கர்கள் கயிறுகளால் அனுமனைப் பிணித்தல்

ஆய காலத்து, அயன் படையோடு இருப்ப, ஆகாது அனல் இடுதல்;
தூய பாசம் எனைப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள்' என்னா,
மேய தெய்வப் படைக்கலத்தை மீட்டான், அமரர் போர் வென்றான்;
'ஏ' எனாமுன், இடைபுக்கு, தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார். 113

நாட்டின், நகரில், நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே-
வீட்டின் ஊசல், நெடும் பாசம் அற்ற; தேரும், விசி துறந்த;
மாட்டும் புரவி ஆயம் எலாம், மருவி வாங்கும் தொடை அழிந்த;
பூட்டும் வல்லி மூட்டோ டும் புரசை இழந்த, போர் யானை! 114

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 115

அகமகிழ்வுடன் அனுமன் அவர்க்கு அடங்கி, உடன்போதல்

'கடவுள்-படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார், தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி;
சுடுவிக்கின்றது, "இவ் ஊரைச் சுடுக" என்று உரைத்த துணிவு' என்று,
நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் - நவை அற்றான். 116

நொய்ய பாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். 117

அனுமன் வாலில் அரக்கர் தீயிடல்

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின்
போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடு வால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார், இழுது எண்ணெய்;
காந்து கடுந் தீக் கொளுத்தினார்; ஆர்த்தார், அண்டம் கடி கலங்க. 118

ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உரப் பாசம்,
பக்கம் பக்கம் இரு கூறு ஆய், நூறாயிரவர் பற்றினார்;
புக்க படைஞர் புடை காப்போர் புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்,
திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் 119

'அந்த நகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர்
சிந்த நூறி, சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின், காண வம்' என்று,
தம்தம் தெருவும், வாயில்தொறும், யாரும் அறியச் சாற்றினார். 120

செய்தி கேட்டுச் சானகி வருந்தி, 'சுடாதே' என எரியை வேண்டுதல்

ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார்போல்; அங்கோடு இங்கு
ஈர்த்தார்; முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார், எம் மருங்கும்
பார்த்தார்; ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்;
வேர்த்தாள்;உலந்தாள்;விம்மினாள்;விழுந்தாள்;அழுதாள்;வெய்து உயிர்த்தாள்.121

'தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும் கற்பு; அதனில்
தூயேன் என்னின், தொழுகின்றேன்,-எரியே!-அவனைச் சுடல்!' என்றாள். 122

அனல் குளிர்ந்தமை கண்டு அனுமன் மகிழ்தல்

வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின்,
ஒளித்த வெங் கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தன மயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால்,
குளிர்ந்தது, அக் குரிசில் வால், என்பு கூரவே. 123

மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய
கற்றை வெங் கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும்
முற்றுறு மும்மைச் செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. 124

அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக்
குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
சண்ட வெங் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல்
மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ. 125

வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி, வெந் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன் பாவை
கற்பினால் இயன்றது' என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான். 126

அரக்கர் காட்ட, இலங்கை நகர் முழுதும் அனுமன் காணுதல்

அற்றை அவ் இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப்
பெற்றிலன் எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை உறாமே,
மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மான,
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரிய, கண்டான். 127

அனுமன் விண்ணில் எழ, பற்றிச் சென்ற அரக்கர்கள் தோள் அற்று விழுதல்

முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில் சென்றான்,
'வழு உறு காலம் ஈது' என்று எண்ணினன், வலிதின் பற்றித்
தழ்வினன், இரண்டு நூறாயிரம் புயத் தடக் கை தாம்போடு
எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம். 128

விசும்பில் பொலிந்த அனுமனின் தோற்றம்

இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார்,
முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம்
பற்றிய கலுழன் என்ன, பொலிந்தனன் விசும்பின் ஓர்பால். 129

இலங்கையை எரியூட்ட அனுமன் தன் வாலை நகர்மீது நீட்டுதல்

துன்னவர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லையோனும்,
பன்னின பொருளும், நாண, 'பாதகர் இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி மடுப்பென்' என்னா,
பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப் போக விட்டான். 130

அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கைதன்னை,
எப் புறத்து அளவும் தீய, ஒரு கணத்து எரித்த கொட்பால்,
துப்பு உறழ் மேனி அண்ணல், மேரு வில் குழைய, தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது-அம் மூரிப் போர் வால். 131

வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல் மணியின், விஞ்சை
தெள்ளிய கடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த
தள்ள அரு மனைகள்தோறும், முறை முறை தாவிச் சென்றான்;
ஒள் எரியோடும், குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான். 132

இலங்கை நகரை எரியுண்ணுதல்

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான். 133

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:42 pm

மிகைப் பாடல்கள்

'நீரிடைக் கண் துயில் நெடிய நேமியும்,
தாருடைத் தனி மலர் உலகின் தாதையும்,
ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர்,
பாரிடைப் புகுந்தனர் பகைத்து' என்பார் பலர். 16-1

இனையன பற்பலர் இசைப்ப, வெந்திறல்
அனுமனை அமர்க் களம் நின்று, வஞ்சகர்
புனை திரு நகரிடைக் கொண்டு போதலை
நினையினர், நெடிதுற நெருக்கி நேர்ந்துளார். 16-2

நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்,
நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க, 45-1

ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண,
கூடினார் முகக் களி நறை ஒரு முகம் குடிப்ப,
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக,
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த, 46-1

தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த,
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல,
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில,
பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த, 46-2

'காந்தள் மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவது எங்ஙன்?' என்று ஒரு முகம் நினைய,
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க, 46-3

என்னக் கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்:
'என் ஒர் நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டி வந்தேன், உனைக் காணவே'. 103-1

தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு, 'இன்னே,
அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல்' என்னா,
செந் நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்-
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால். 130-1

உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம்
சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல,
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய; போர் வால்-
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் - சேணில் உய்த்தான். 131-2




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 13. இலங்கை எரியூட்டு படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:47 pm

மாளிகைகளில் தீப் பற்ற, நகர மாந்தர் பூசலிட்டு ஓடுதல்

கொடியைப் பற்றி, விதானம் கொளுத்தியே,
நெடிய தூணைத் தழுவி, நெடுஞ் சுவர்
முடியச் சுற்றி, முழுதும் முருக்கிற்றால்-
கடிய மா மனைதோறும் கடுங் கனல். 1

வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி, முழுதும் முருக்கலால்,-
ஊசலிட்டென ஓடி, உலைந்து உளை
பூசலிட்ட - இயல் புரம் எலாம். 2

வனிதையர் வருந்திய வகை

மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை,
பிணியின் செஞ் சுடர்க் கற்றை பெருக்கலால்,
திணி கொள் தீ உற்றது, உற்றில, தேர்கிலார்
அணி வளைக் கை நல்லார், அமைந்துளார். 3

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்,
போன திக்கு அறியாது புலம்பினார்-
தேன் அகத்த மலர் பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியார். 4

தலை முடியில் தீப் பற்றியதும் பற்றாததும் தெரியாமை

கூய், கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச் சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்த தன்மையினால், எரி இன்மையும்,
தீக் கொளுந்தினவும், தெரிகின்றிலார். 5

தீயும் புகையும் ஓங்கிப் பரவுதல்

இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்,
சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
புல்லிக் கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
கல்லி, தம் இயல்பு எய்தும் கருத்தர்போல். 6

ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடி
தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்த கரியவன் மேனியின்,
போய் எழுந்து பரந்தது-வெம் புகை. 7

நீலம் நின்ற நிறத்தன, கீழ் நிலை
மாலின் வெஞ் சின யானையை மானுவ;
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன, தோல் எலாம். 8

மீது இமம் கலந்தாலன்ன வெம் புகை,
சோதி மங்கலத் தீயொடு சுற்றலால்,
மேதி மங்குலின் வீழ் புனல், வீழ் மட
ஓதிமங்களின், மாதர் ஒதுங்கினார். 9

பொடித்து எழுந்த பெரும் பொறி போவன
இடிக் குலங்களின் வீழ்தலும், எங்கணும்
வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம்
துடித்து, வெந்து, புலர்ந்து, உயிர் சோர்ந்தவால். 10

பருகு தீ மடுத்து, உள்ளுறப் பற்றலால்,
அருகு நீடிய ஆடகத் தாரைகள்
உருகி, வேலையின் ஊடு புக்கு உற்றன,
திருகு பொன் நெடுந் தண்டின் திரண்டவால். 11

உரையின் முந்து உலகு உண்ணும் எரிஅதால்,
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடுஞ் சோலையும் நிற்குமோ?
தரையும் வெந்தது, பொன் எனும் தன்மையால். 12

கல்லினும் வலிதாம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது, இமையவர் நாடு; இயல்
வல்லி கோலி நிவந்தன; மா மணிச்
சில்லியோடும் திரண்டன, தேர் எலாம். 13

பேய மன்றினில் நின்று, பிறங்கு எரி,
மாயர் உண்ட நறவு மடுத்ததால்;
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால்,
தீயர்; அன்றியும், தீமையும் செய்வரால். 14

தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல,
வழு இல் வேலை உலையின் மறுகின;
எழு கொழுஞ் சுடர்க் கற்றை சென்று எய்தலால்,
குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே. 15

பூக் கரிந்து, முறிபொறி ஆய், அடை
நாக் கரிந்து, சினை நறுஞ் சாம்பர் ஆய்,
மீக் கரிந்து நெடும் பணை, வேர் உறக்
காக் கரிந்து, கருங் கரி ஆனவே. 16

தளை கொளுத்திய தாவு எரி, தாமணி
முளை கொளுத்தி, முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த, உலந்து உலைவு உற்றன-
வளை குளப்பின் மணி நிற வாசியே. 17

அரக்கரும் அரக்கியரும் உற்ற அவலம்

எழுந்து பொன் தலத்து ஏறலின், நீள் புகைக்
கொழுந்து சுற்ற, உயிர்ப்பு இலர், கோளும் உற
அழுந்து பட்டுளர் ஒத்து, அயர்ந்தார், அழல்
விழுந்து முற்றினர்-கூற்றை விழுங்குவார். 18

கோசிகத் துகில் உற்ற கொழுங் கனல்
தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா,
வாச மைக் குழல் பற்ற மயங்கினார்-
பாசிழைப் பரவைப் படர் அல்குலார். 19

நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண, நிருதர்,
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்,
புலவியின் கரை கண்டவர், அமுது உகப் புணரும்
கலவியின் சுரை கண்டிலர், மண்டினர் கடல்மேல். 20

பஞ்சரத்தொடு, பசு நிறக் கிளி வெந்து பதைப்ப,
அஞ்சனக் கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப,
குஞ்சரத்து அன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால்,
மஞ்சிடைப் புகும் மின் என, புகையிடை மறைந்தார். 21

வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடைப் போவார்,
கரை இல் நுண் புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத்
திரையினுள் பொலி சித்திரப் பாவையின் செயலார். 22

நந்தனவனங்கள் முதலியன வெந்தொழிந்த காட்சி

அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
புகர் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப,
பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள். 23

மினல் பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி,
நினைவு அரும் பெருந் திசை உற விரிகின்ற நிலையால்,
சினைப் பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
கனல் பரந்தவும், தெரிகில -கற்பகக் கானம். 24

மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம், மா மலை நெடுந் தலைதொறும் மயங்கிப்
பூளை வீய்ந்தன்ன போவன, புணரியில் புனல் மீன்
மீள, யாவையும் தெரிந்தில, முகில் கணம் விசைப்ப. 25

மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
ஒக்க வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ;
பக்க வேலையின் படியது, பாற்கடல்; முடிவில்
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா. 26

கனலுக்குப் பயந்து கடலில் வீழ்தல்

கரிந்து சிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல் கதுவ,
உரிந்த மெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார்,
விரிந்த கூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தானும்
எரிந்து வேகின்ற ஒத்தது, எறி திரைப் பரவை. 27

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
அருங் கையால் பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற,
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறுக் கொள நீங்கிக்
கருங் கடல்தலை வீழ்ந்தனர், அரக்கியர், கதறி. 28

ஆயுதசாலையில் படைக்கலத் திரள்கள் அழிதல்

வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய்
எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகி,
தொல்லை நல் நிலை தொடர்ந்த, பேர் உணர்வு அன்ன தொழிலால்
சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள். 29

எரி பற்ற, யானைகள் ஓடுதல்

செய் தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி,
நொய்தின், இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினில் முறுக்கி,
கை எடுத்து அழைத்து ஓடின - ஓடை வெங் களி மா. 30

பறவைகள் கடலில் விழுந்து மாய்தல்

வெருளும் வெம் புகைப் படலையின் மேற்செல வெருவி,
இருளும் வெங் கடல் விழுந்தன, எழுந்தில, பறவை;
மருளின் மீன் கணம் விழுங்கிட, உலந்தன-மனத்து ஓர்
அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் அனைய. 31

இராவணன் மனையில் தீப் பற்றுதல்

நீரை வற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
தாருவைச் சுட்டு, மலைகளைத் தழல்செய்து, தனி மா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெங் கனல்போல்,
ஊரை முற்றுவித்து, இராவணன் மனை புக்கது - உயர் தீ. 32

வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப்
போன போன திக்கு அறிகிலர், அனைவரும் போனார்;
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைந்தார். 33

நாவியும், நறுங் கலவையும், கற்பகம் நக்க
பூவும், ஆரமும், அகிலும், என்று இனையன புகைய,
தேவு தேன் மழை செறி பெருங் குலம் எனத் திசையின்
பாவைமார் நறுங் குழல்களும், பரிமளம் கமழ்ந்த. 34

சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்-
ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும். 35

பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலைக் கோயில்,
நின்று சுற்று எரி பருகிட, நெகிழ்வுற உருகி,
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த. 36

இராவணன் முதலியோர் வெளியேற, இலங்கையை எரியுண்ணல்

அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும்
வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 37

இலங்கை எரியுற்ற காரணத்தை இராவணன் வினவுதல்

ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி,
'ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ ?
பாழித் தீச் சுட வெந்தது என், நகர்?' எனப் பகர்ந்தான். 38

'குரங்கு சுட்டது' என்று அரக்கர் மொழிய, இராவணன் சினந்து சிரித்தல்

கரங்கள் கூப்பினர், தம் கிளை திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர்: 'இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ஈது' என்றலும், இராவணன் கொதித்தான். 39

'இன்று புன் தொழில் குரங்குதன் வலியினால், இலங்கை
நின்று வெந்து, மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று! நன்று! போர் வலி' என, இராவணன் நக்கான். 40

'நெருப்பையும், குரங்கையும் பற்றுமின்' என்று இராவணன் ஆணையிடல்

'உண்ட நெருப்பைக்
கண்டனர் பற்றிக்
கொண்டு அணைக' என்றான் -
அண்டரை வென்றான். 41

'உற்று அகலா முன்,
செற்ற குரங்கைப்
பற்றுமின்' என்றான் -
முற்றும் முனிந்தான். 42

அனுமனைப் பிடிக்க வீரர்கள் விரைதல்

சார் அயல் நின்றார்,
வீரர் விரைந்தார்;
'நேருதும்' என்றார்;
தேரினர் சென்றார். 43

எல்லை இகந்தார்
வில்லர்; வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர், தொடர்ந்தார். 44

நீர் கெழு வேலை நிமிர்ந்தார்;
தார்கெழு தானை சமைந்தார்;-
போர் கெழு மாலை புனைந்தார்
ஓர் எழு வீரர் - உயர்ந்தார். 45

விண்ணினை, வேலை விளிம்பு ஆர்
மண்ணினை, ஓடி வளைந்தார்;
அண்ணலை நாடி அணைந்தார்;
கண்ணினின் வேறு அயல் கண்டார். 46

அரக்கர்கள் தன்னைச் சூழ்தல் கண்டு, அனுமனும் அவர்களுடன் போரிடல்

'பற்றுதிர்! பற்றுதிர்!' என்பார்;
'எற்றுதிர்! எற்றுதிர்!' என்பார்;
முற்றினர், முற்றும் முனிந்தார்;
கற்று உணர் மாருதி கண்டான். 47

ஏல்கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
கால்கொடு கைகொடு, கார்போல்,
வேல்கொடு கோலினர்; வெந் தீ
வால்கொடு தானும் வளைந்தான். 48

அனுமனுடன் போரிட்டு அரக்கர் பலர் மடிதல்

பாதவம் ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின் வளைத்தான்;
மோதினன்; மோத, முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார். 49

நூறிட மாருதி, நொந்தார்
ஊறிட, ஊன் இடு புண்ணீர்,
சேறு இட, ஊர் அடு செந் தீ
ஆறிட, ஓடினது ஆறாய். 50

தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர், எதிர்ந்தார்;
காற்றின் மகன், கலை கற்றான்,
கூற்றினும் மும்மடி கொன்றான். 51

மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர்; அல்லார்,
பைம் புனல் வேலை படிந்தார். 52

தோய்த்தனன் வால்; அது தோயக்
காய்ச்சின வேலைகலந்தார்,
போய்ச் சிலர் பொன்றினர் போனார்
'ஏச்சு' என, மைந்தர் எதிர்ந்தார். 53

சுற்றினன் தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்;
எற்றினன் மாருதி; எற்ற,
உற்று எழுவோரும் உலந்தார். 54

அனுமன் சீதையின் பாதங்களை வணங்கி, இலங்கைவிட்டு மீளுதல்

விட்டு உயர் விஞ்சையர், 'வெந் தீ
வட்ட முலைத் திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும்
சுட்டிலது' என்பது சொன்னார். 55

வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்;
வெந் திறல் வீரன் வியந்தான்;
'உய்ந்தனென்' என்ன, உயர்ந்தான்,
பைந்தொடி தாள்கள் பணிந்தான். 56

பார்த்தனள், சானகி, பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்
'வார்த்தை என்?' 'வந்தனை' என்னா,
போர்த் தொழில் மாருதி போனான். 57

'தெள்ளிய மாருதி சென்றான்;
கள்ள அரக்கர்கள் கண்டால்,
எள்ளுவர், பற்றுவர்' என்னா,
ஒள் எரியோனும் ஒளித்தான். 58

மிகைப் பாடல்கள்

தெய்வ நாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதி வாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம்.
['கொடியைப் பற்றி' என்ற பாட்டின் முன், இப் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது.]

ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார்,
'கானில் ஓடும் நெடும் புனல் காண்' எனா,
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்,
வேனில் ஓடு அருந் தேரிடை வீழ்ந்தனர். 15-1

தேன் அவாம் பொழில் தீப் பட, சிந்திய
சோனை மா மலர்த் தும்பி, 'தொடர்ந்து, அயல்
போன தீச் சுடர் புண்டரிகத் தடங்
கானம் ஆம்' என, வீழ்ந்து, கரிந்தவே. 15-2

'நல் கடன் இது; நம் உயிர் நாயகர்
மற்கடம் தெற மாண்டனர்; வாழ்வு இலம்;
இல் கடந்து இனி ஏகலம் யாம்' எனா,
வில் கடந்த நுதல் சிலர் வீடினார். 15-3

கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருகின;
சோர் ஒழுக்கம் அறாமையின், துன்று பொன்
வேர் விடுப்பது போன்றன, விண் எலாம். 16-1

நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்று உற
உருக்க, மெய்யின் அமுதம் உகுத்தலால்,
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்அரோ. 16-2

பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்,
கருகி முற்றும் எரிந்து, எழு கார் மழை,
அருகு சுற்றும் இருந்தையதாய், அதின்
உருகு பொன் - திரள் ஒத்தனன், ஒண் கதிர். 16-3

தேர் எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன; எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன; எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன; எரிந்தன அரக்கர்தம் உடலம். 31-1

எரிந்த மாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்;
எரிந்த பூந் துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மா மணிப் பந்தர்கள்; எரிந்தது கடி கா;
எரிந்த சாமரை; எரிந்தது வெண் குடைத் தொகுதி. 31-2

ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;
தேடு அரும் மணிச் சிவிகையோடு அருந் திறல் அரக்கர்
வீடு எரிந்தன; எரிந்திடாது இருந்தது என், வினவில்? 31-3

இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி
புனைய, மாருதி நோக்கினன், இன்னன புகல்வான்;
'வனையும் என் உருத் துவசம் நீ பெறுக' என, மகிழ்வோடு
அனையன் நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான். 31-4

'தா இல் மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின், தமக்கே
மேவும், அத் துயர்' எனும் பொருள் மெய்யுற, மேல்நாள்
தேவர்தம் பதிக்கு இராவணன் இட்ட செந் தழல் போல்,
ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ? 37-1

மற்று ஒரு கோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடி உடன்றார்;
கற்று உறு மாருதி காய்ந்தே,
சுற்றினன் வால்கொடு, தூங்க, 52-1

உற்றவர் யாரும் உலந்தார்;
மற்று அதுபோதினில் வானோர்
வெற்றி கொள் மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார். 54-1

'வன் திறல் மாருதி கேண்மோ!
நின்றிடின், நீ பழுது; இன்றே
சென்றிடுவாய்!' என, தேவர்
ஒன்றிய வானில் உரைத்தார். 54-2

விண்ணவர் ஓதிய மெய்ம்மை
எண்ணி, 'இராமனை இன்றே
கண்ணுறலே கடன்' என்று, ஆங்கு
அண்ணலும் அவ் வயின் மீண்டான். 54-3

வாலிதின் ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகை மாய்த்தே,
மேல் கதி மேவுறும் மேலோர்
போல், வய மாருதி போனான். 57-1



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty 14. திருவடி தொழுத படலம்

Post by ஆனந்தபைரவர் Thu Feb 03, 2011 3:51 pm

வான் வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல்

'நீங்குவென் விரைவின்' என்னும் நினைவினன், மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்,
வீங்கினன், உலகை எல்லாம் விழுங்கினன் என்ன; வீரன்
பூங் கழல் தொழுது வாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான். 1

மைந்நாகம் என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
கைந் நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை,
பைந் நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்,
கொய்ந் நாகம் நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான். 2

வானர வீரர் அனுமனைக் கண்டு மகிழ்தல்

போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர் மன்னோ,
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா! 3

அழுதனர் சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித்
தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி
முழுதுற விழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும்
தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி. 4

'தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி,
மேல் முறை வைத்தேம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம்' என்று,
தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார். 5

அனுமன் உடலில் புண்கள் கண்டு, வானரர் வருந்துதல்

தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கைதம்மில்,
வாள்களின், வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்,
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண
ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார். 6

அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி, சீதை கூறிய ஆசியைத் தெரிவித்தல்

வாலி காதலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து, பின்னை, கடன்முறை, கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்து, 'இவண் இருந்தோர்க்கு எல்லாம்,
ஞால நாயகன் தன் தேவி சொல்லினள், நன்மை' என்றான். 7

அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல்

என்றலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித் தாழா-
நின்றனர், உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்,
'சென்றது முதலா, வந்தது இறுதியாச் செப்பற்பாலை,
வன் திறல் உரவோய்!' என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்: 8

ஆண் தகை தேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி,
பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில்
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி
மீண்டதும், விளம்பான் - தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி. 9

கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானரர், அடுத்து செய்வது குறித்து அனுமனை வினவுதல்

'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத,
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட,
தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்?' என்றார். 10

அனுமன் சொற்படி, யாவரும் இராமனைக் காண விரைதல்

'யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை;
சேவகன் தேவி தன்னைக் கண்டமை விரைவின் செப்பி,
ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்;
போவது புலமை' என்ன, பொருக்கென எழுந்து போனார். 11

வானர வீரரின் உரைப்படி, இராமனிடத்திற்கு அனுமன் முந்திச் செல்லுதல்

'ஏத நாள் இறந்த; சால வருந்தினது இருந்த சேனை;
ஆதலால் விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தலைமகன் மெலிவு தீரப்
போது நீ முன்னர்' என்றார்; 'நன்று' என அனுமன் போனான். 12

முத் தலை எஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி,
வித்தகத் தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை,
அத் தலை அறிந்த எல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு
இத் தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். 13

சுக்கிரீவன் தேற்ற, இராமன் தேறுதல்

கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்,
சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான்
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,
சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். 14

'தண்டல் இல் நெடுந் திசை மூன்றும் தாயினர்,
கண்டிலர் மடந்தையை' என்னும் கட்டுரை,
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும், உளன்,
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான். 15

ஆரியன், அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,
'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம்' என,
சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லுவான்: 16

சுக்கிரீவனை நோக்கி, இராமன் துயருடன் பேசுதல்

'குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ?
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை?-பெற்றியோய்! 17

'மாண்டனள் அவள்; "இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின், விளிதல் நன்று" எனா,
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ?
தேண்டினர், இன்னமும் திரிகின்றார் கொலோ? 18

'கண்டனர் அரக்கரை, கறுவு கைம்மிக,
மண்டு அமர் தொடங்கினார், வஞ்சர் மாயையால்
விண்தலம்அதனில் மேயினர்கொல்? வேறு இலாத்
தண்டல் இல் நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ? 19

'"கூறின நாள், அவர் இருக்கை கூடலம்;
ஏறல் அஞ்சுதும்" என, இன்ப துன்பங்கள்
ஆறினர், அருந் தவம் அயர்கின்றார்கொலோ?
வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்!' என்றான். 20

அனுமன் இராமனை அடைந்து, சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்துதல்

என்புழி, அனுமனும், இரவி என்பவன்
தென் புறத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக் கை அப் பொரு இல் வீரனும்,
அன்புறு சிந்தையன், அமைய நோக்கினான். 21

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22

அனுமனின் குறிப்பினால் செய்தி உணர்ந்த இராமனின் மகிழ்ச்சி

திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;
'வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' எனக்
கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான். 23

ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா,
ஓங்கிய உணர்வினால், விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்; மலர்க் கண்கள் விம்மின;
நீங்கியது அருந் துயர்; காதல் நீண்டதே. 24

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்' என்று, அனுமன் பன்னுவான்: 25

'உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் -
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-
என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி' என்பான்: 26

'பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;
என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

'உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்? 28

'விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். 29

'கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக் குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்
பண்ணினும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ? 30

'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,
காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல். 31

'மண்ணொடும் கொண்டு போனான் - வான் உயர் கற்பினாள்தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த
கண் அகன் கமலத்து அண்ணல், "கருத்திலாள்-தொடுத்தல் கண்ணின்,
எண் அருங் கூறாய் மாய்தி" என்றது ஓர் மொழி உண்டு என்பார். 32

'தீண்டிலன் என்னும் வாய்மை-திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது; அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால், உணர்தி மன்னோ! 33

'சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்
பாகத்தாள், இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும்,
ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள். 34

'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,
பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,
அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35

'அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி,
தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள், அத் தமியள் அம்மா! 36

'தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி,
ஐய! யான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து நங்கை
வெய்து உரை சொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டுவிட்டான். 37

'ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய
தூய நல் அறனும், என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப,
போயினன், அரக்கிமாரை, "சொல்லுமின் பொதுவின்" என்று, ஆங்கு
ஏயினன்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார். 38

'அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக
உன்னினள்; கொடி ஒன்று ஏந்தி, கொம்பொடும் உறைப்பச் சுற்றி,
தன் மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து, நாயேன்,
பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற போழ்தில், 39

'"வஞ்சனை அரக்கர் செய்கை இது" என மனக்கொண்டேயும்,
"அஞ்சன வண்ணத்தான்தன் பெயர் உரைத்து, அளியை, என்பால்
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம்" என்று உவந்து சொன்னாள் -
மஞ்சு என, வன் மென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். 40

'அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய்! 41

'ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்து
உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. 42

'வாங்கிய ஆழிதன்னை, "வஞ்சர் ஊர் வந்ததாம்" என்று,
ஆங்கு உயர் மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி,
ஏங்கினள் இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி
வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள். 43

'அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின் அடுத்த எல்லாம்
சொல் முறை அறியச் சொல்லி, "தோகை! நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே, இத்துணை தாழ்த்தது" என்றே,
மன்ன! நின் வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள். 44

'இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்;
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்;
"திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி வைத்தாள். 45

சீதை தந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்

'வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள் ஆர,
வித்தக! காண்டி!' என்று, கொடுத்தனன் - வேத நல் நூல்
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான். 46

சூடாமணி பெற்ற இராமனது நிலை

பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே - கை புக்க மணியின் காட்சி! 47

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்? 48

மேலே செய்வன குறித்து இராமன் விரைதல்

ஆண்டையின், அருக்கன் மைந்தன், 'ஐய! கேள், அரிவை நம்பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள்' என்றலும், 'காலம் தாழ,
ஈண்டு, இனும் இருத்தி போலாம்' என்றனன்; என்றலோடும்,
தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான். 49

சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல்

'எழுக, வெம் படைகள்!' என்றான்; 'ஏ' எனும் அளவில், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி,
பொழி திரை அன்ன வேலை புடை பரந்தென்னப் பொங்கி,
வழுவல் இல் வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே! 50

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோன்
பேர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத,
வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார். 51

பன்னிரு நாளில் அனைவரும் தென் கடல் சேர்தல்

அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்,
நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,
இந் நெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்,
பன்னிரு பகலில் சென்று, தென் திசைப் பரவை கண்டார். 52

மிகைப் பாடல்கள்

போயினர் களிப்பினோடும், புங்கவன் சிலையின்நின்றும்
ஏயின பகழி என்ன எழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க் கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை,
ஆயின வீரரும் போய், மதுவனம் அதில் இறுத்தார். 11-1

'"ஏத நாள் இறந்த சால" என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து
ஆதலான், உணர்வு தீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள் உணவும்' என்ன,
'போதும் நாம், வாலி சேய்பால்' என்று, உடன் எழுந்து போனார். 11-2

அங்கதன் தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி,
'கொங்கு தங்கு அலங்கல் மார்ப! நின்னுடைக் குரக்குச் சேனை,
வெங் கதம் ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்கு அளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம்' என்றான். 11-3

'நன்று' என, அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து,
சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே,
ஒன்றின் முன் ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம்
தின்று தின்று உவகை கூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே. 11-4

ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார். 11-5

இன்னன நிகழும் காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடுஞ் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி,
'மன் நெடுங் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர்,
என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி' என்ன. 11-6

'முனியுமால் எம்மை, எம் கோன்' என்று, அவர் மொழிந்து போந்து,
'கனியும் மா மதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண;
இனி எம்மால் செயல் இன்று' என்னா, ததிமுகற்கு இயம்பினாரே. 11-7

கேட்டவன், 'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?
காட்டிர்' என்று எழுந்தான்; அன்னார், 'வாலி சேய் முதல கற்றோர்
ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால்,
மாட்டின, கவியின் தானை, மதுவளர் உலவை ஈட்டம்'. 11-8

'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம்; கொடுமை கூறி;
கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்!' என்னலோடும்,
'தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும்.' 11-9

என உரைத்து, அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டு கோடி
கனை குரல் கவியின் சேனை 'கல்' எனக் கலந்து புல்ல,
புனை மதுச் சோலை புக்கான்; மது நுகர் புனிதச் சேனை,
அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த. 11-10

'இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணைதன்னைச்
சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே?
மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே. 11-11

'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ' என்னா,
கதுமென வாலி சேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை;
அதுதனைப் புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன், தடக்கைதன்னால். 11-12

குத்தினன் என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி,
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன், மதுவனத்தைச்
செற்றனன்மேலே ஏவிச் சிரித்தனன், ததிமுகன் தான்;
'இற்றனன், வாலி சேய்' என்று இமையவர் இயம்பும்காலை, 11-13

ஏற்று ஒரு கையால் குன்றை இருந்துகள் ஆக்கி, மைந்தன்
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன,
கூற்றின் வாய் உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு
மேல் திசை உற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான். 11-14

வாய் வழிக் குருதி சோர, மணிக் கையால் மலங்க மோதி,
'போய் மொழி, கதிரோன் மைந்தற்கு' என்று, அவன் தன்னைப் போக்கி,
தீ எழும் வெகுளி பொங்க, 'மற்று அவன் சேனைதன்னை,
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர், கட்டி' என்றான். 11-15

பிடித்தனர்; கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும்
இடித்தனர், அசனி அஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி;
துடித்தனர், உடலம் சோர்ந்தார்; 'சொல்லும் போய், நீரும்' என்னா,
விடுத்தனன், வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை, 11-16

அலை புனல் குடையுமா போல், மதுக் குடைந்து ஆடி, தம்தம்
தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே,
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால்
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே. 11-17

'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க!' எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசை மருங்கினும் ஏவி, நாயகன் -
தேற்றினன் இருந்தனன் - கதிரின் செம்மலே. 12-1

'நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்,
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்,
'வாக்கில் தூய அனுமன் வரும்' எனா,
போக்கிப் போக்கி, உயிர்க்கும் பொருமலான். 14-1

என்று உரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்,
வன் திறல் ததிமுகன் வானரேசன் முன்,
தன் தலை பொழிதரு குருதிதன்னொடும்,
குன்று எனப் பணிந்தனன், இரு கை கூப்பியே. 19-1

எழுந்து நின்று, 'ஐய! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம் அடைய' என்றலும்,
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே,
'மொழிந்திடு, அங்கு யார் அது முடித்துளோர்?' என, 19-2

'நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
போல் உயர் சாம்பனும், புணரி போர்த்தென
மேல் எழு சேனையும், விரைவின் வந்து உறா,
சால்புடை மதுவனம் தனை அழிப்பவே. 19-3

தகைந்த அச் சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்து உரைத்து, இயைந்தனன் வாலி செய்; மனக்கு
உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே, 19-4

'இமைத்தல் முன், "வாலி சேய், எழில் கொள் யாக்கையைச்
சமைத்தி" என்று எறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல் என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர் பதைப்ப, "நீ கூறு போய்" என்றான். 19-5

'இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ?'
என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன் உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும்
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான் அரோ. 19-6

ஏம்பலோடு எழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணை அமலனை வணங்கி, '"பைந்தொடி
மேம்படு கற்பினள்" என்னும் மெய்ம்மையைத்
தாம் புகன்றிட்டது, இச் சலம்' என்று ஓதினான். 19-7

'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால், அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக! இனி அவலம் தீர்க' என்றான். 19-8

'வந்தனர் தென் திசை வாவினார்' என,
புந்தி நொந்து, 'என்னைகொல் புகலற் பாலர்?' என்று,
எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே, 19-9

'யார் அவண் இறுத்தவர், இயம்புவாய்?' என,
'மாருதி, வாலி சேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார்.' 19-10

என்று, அவன் உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே,
'ஒன்று உனக்கு உணர்த்துவது உளது; வாலி சேய்,
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.' 19-11

'கொற்றவன் பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசை எலாம் துருவி, தோகையைப்
பற்றிய பகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ? 19-12

'அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல் தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய்!
ஒன்றும் நீ உணரலை; உறுதி வேண்டு மேல்,
சென்று, அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு' என்றான். 19-13

என்ற அந் ததிமுகன் தன்னை, 'ஏனைய
வன் திறல் அரசு இளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனை என் பேசற் பாற்று நீ;
இன்று போய், அவன் அடி ஏத்துவாய்' என்றான். 19-14

வணங்கிய சென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கிய சிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி, அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்துஅரோ. 19-15

கண்டனன் வாலி சேய்; கறுவு கைம்மிக,
'விண்டவன், நம் எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும் உயிர்' என்ன, உன்னினான்;
'தொண்டு' என, ததிமுகன், தொழுது தோன்றினான். 19-16

'போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க!' எனா,
வீழ்ந்தனன் அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப் பற்றி, மெய் தழீஇக்கொண்டு, 'உம்மை யான்
சூழ்ந்ததும் பொறுக்க!' எனா, முகமன் சொல்லினான். 19-17

'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர் துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்' என, தொழுது, முன் அனுமன் போயினான். 19-18

'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்;
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்'
என்றுகொண்டு, யாவரும், 'எழுந்து போதலே
நன்று' என, ஏகினார், நவைக்கண் நீங்கினார். 19-19

இப்புறத்து இராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி, 'வந்துற்ற தானையர்;
தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது
அப்புறத்து என்பரோ? அறைதியால்!' என்றான். 19-20

வனை கருங் குழலியைப் பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும் அண்ணலுக்கு அறியக் கூறுவான்: 23-1

'மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே? 35-1

'அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!-
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற
மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும், உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும்.' 35-2

ஆயிடை, கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர், வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை;
போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் மொம்மல்தன்னால்,
சேயிரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார். 47-1

நீலனை நெடிது நோக்கி, நேமியான் பணிப்பான்: 'நம்தம்-
பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,
சால்புற முன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.' 49-1

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி,
'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி' என்னா,
தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்;
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்: 49-2

'நீ இனி என் தன் தோள்மேல் ஏறுதி, நிமல!' என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,
நாயகற்கு இளைய கோவும், 'நன்று' என அவன்தன் தோள்மேல்
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது அன்றே. 49-3

கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப, காலின்
அருள் தரு குமரன் தோள்மேல், அங்கதன் அலங்கல் தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில் தங்கும்
தெருள் தரு புலவர் வாழ்த்திச் சிந்தினர், தெய்வப் பொற் பூ. 49-4

'வையகம் அதனில் மாக்கள் மயங்குவர், வய வெஞ் சேனை
எய்திடின்' என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி, கிழங்கு, தேன், என்று இனையன பெறுதற்கு ஒத்த
செய்ய மால் வரையே ஆறாச் சென்றது, தகைப்பு இல் சேனை. 49-5


ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by ராகவா Sat Sep 14, 2013 3:55 am

பகிற்வுக்கு மிக்க நன்றி...
இன்னும் தொடருங்கள்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்  Empty Re: கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum