Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மனோன்மணி அன்னை
2 posters
Page 1 of 1
மனோன்மணி அன்னை
மனோன்மணி
என்ன சுந்தரம் பிள்ளையின் காவியம் நினைவிற்கு வருகிறதா ? இல்லை இவள் அன்னை மனோன்மணி...
மனோன்மணி = மனங்களை தட்டி எழுப்புபவள்.
ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கிப் பரம்பொருளை அடைவதற்கு வழிகாட்டுபவள்.ஆக இந்து முறையில் தெய்வ வரிசையில் பெண் வடிவில் விளங்கும் சக்தி இவள். அன்னை பல இடங்களில் இந்த திருநாமத்தில் அருள் வெள்ளம் வழங்குகிறாள். திருவாரூர் நாயகியாம் கமலாம்பிகையின் உற்சவர் நாமமும் மனோன்மணி அம்மை தான் .. கமலாம்பிகயே யோகத்தின் வடிவம் .ஆக அவள் உற்சவரும் யோக வடிவினள். மேலும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி( வைணவ மரபில் தோதாத்ரி சீவரமங்கை) தலத்திற்கு அருகில் இருக்கும் வடக்கு விஜய நாராயணம் தலத்திலும் அன்னை மனோன்மணி சமேத மனோன்மணீஸ்வரர் ஆலயம் உண்டு.
சரி இந்த மனோன்மணி அன்னை எதற்கு ? அவளின் வேலை என்ன?
மனித மனம் இயல்பாகவே அலை பாயும் தனிமை கொண்டது அல்லவா? மனம் ஒன்றி நாம் இறைவனோடு பொருந்தி இருந்தாலும் பல நேரங்களில் நம் மனம் மீண்டும் அதை விட்டு விலகி விடுகிறது . இப்படி மனம் பல இடங்களில் வைராக்கியத்தை இழக்கும் போது அதை மீட்டு நமக்கு தரும் அன்னை இவள்.
அது மட்டுமா ? சாக்த மரபில்( பெண் தெய்வ வழிபாட்டில்) அன்னையின் அழகை வருணிக்கும் போது பெண்மையின் அடையாளங்கள் பற்றி சொல்ல படும் . அந்த நேரத்தில் மனம் கிளர்ச்சி அடையக் கூடாது.
அவ்வாறு மனித மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை மாற்றி மனதுக்கு இதம் அளிப்பவளாக விளங்குகிறாள் அன்னை.
இதே எண்ணத்தில் தான் அபிராமி பட்டரும் தன்னுடைய ஐந்தாம் பாடலிலும்
பொருந்திய முப்புரை செப்புரை செய்யின், புணர்முலையால்
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோன்மணி , வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
இங்கே அன்னையின் திரு மார்புகளை பற்றி சொன்ன அபிராமி பட்டர் மனித மனத்தை சீர் செய்யவே அன்னையின் திருநாமத்தை பொருத்தி இருக்கிறார்.
மேலும் அந்த பாடலின் திரண்ட பொருளிலும் நஞ்சை அமுதாக்கிய பதம் வரும். ஆக நம்முடைய மனதில் தோன்றும் நஞ்சை (தீய எண்ணங்களை ) அமுதாக்கும் ( நல்லவையாக ) மாற்றும் அன்னை என்பதும் திண்ணமாய் விளங்கும்.
மேலும் குண்டலினி தவ முறையிலும் மனோன்மணி தவம் வரும் . அங்கேயும் ஒரு மணியின் ஒளியை கேட்க செய்து தவம பூர்த்தி ஆகும் . அந்த பொழுதில் நம் மனதில் நினைப்பவை உடனயே நடக்குமாம்.
ஆக மனோன்மணி என்பவள் மனதை சீர் செய்து மனித மனம் நேராக இருக்க வழி வகுப்பவள்.
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....
அடியேன்
சந்தனக் கண்ணன்
Re: மனோன்மணி அன்னை
மிக அழகான பொருள் பொதிந்த கட்டுரை தொடராக எழுதுங்கள்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Similar topics
» இறைவனின் அருளிள் அசைக்க முடியாத நம்பிக்கை வை - அன்னை
» யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
» மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை
» உங்களால் ஆகாத செயலும் உண்டோ? - அன்னை
» யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
» மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை
» உங்களால் ஆகாத செயலும் உண்டோ? - அன்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum