இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

5 posters

Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by agnilingam Sat May 28, 2011 11:38 pm

பகவான், ஆதி என்கிற தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. தம்பதியரிடையே இருந்த ஒரு ஒப்பந்தத்தால், குழந்தையை மைலாப்பூரில் அம்மன் சன்னதியில் விட்டுவிட்டு, தம்பதியர் காசி யாத்திரை சென்றனர். இந்த குழந்தைக்கு முன்னே, அவ்வை, உப்பை, அதிகமான், கடலார், வள்ளியம்மை என பிறந்த குழந்தைகளையும் அந்த அந்த இடத்தில விட்டுவிட்டு தேசாடனம் சென்றனர்.

கோவில் இலுப்பை மரத்தின் அடியில் வளர்ந்த குழந்தை, அதன் பூவில் இருந்த தேனை குடித்து, பூர்வ ஜென்ம வாசனையால், சிகை வைத்து, சதுர்வேதமும் கற்று இருக்கையில், குழந்தை இல்லாத பெண் ஒருத்தி தனக்கு ஒரு புத்திர சந்ததியை அம்பாளிடம் வேண்ட, அம்பாளும் கனவில் வந்து தன் கோவிலில் வளர்ந்து வரும் குழந்தையை எடுத்து வளர்க்குமாறு ஆசீர்வதித்தாள். அம்பாளே குழந்தைக்கு "திருவள்ளுவர்" என பெயர் சூட்டினாள்.

திருவள்ளுவர் வளர்ந்துவருகையில் தந்தை வழி உறவினர்கள் "யார் பெற்ற பிள்ளையோ. இவர்கள் வளர்க்கிறார்கள் என குறை கூற, இதனை உணர்ந்த திருவள்ளவர், தன் தாய் தந்தைக்கு சமாதானம் கூறி, அவர்களை விட்டு விலகி சென்று ஊருக்கு வெளிய ஒரு பனை மரத்தின் கீழ் அமர்ந்து தவத்தில் இருக்கலானார்.
அந்த பனை மரத்தின் நிழல் திருவள்ளுவர் இருந்த இடம் விட்டு ஒருபோதும் விலகாதது கண்டு ஊர்மக்கள் இவரை கடவுளாக துதிக்க, திருவள்ளுவர் அவ்விடத்தை விட்டு அகன்று திருமூலர், போகர் சித்தர்கள் வாழ்ந்த மலைக்கு சென்று அங்கேயே வாழ்ந்து வரலானார்.

திருமூலர் சித்தர், திருவள்ளுவரிடம் " வள்ளுவரே! பூர்வ ஜென்மத்தில் நந்தி எனக்கு அனுக்ரகம் செயும்போது அங்கிருந்தீர்! உலகத்தாருக்கு சித்தி முக்தி அருளும்படிக்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் தமிழில் அருளி செய்யிக்கும்படி வேண்டினார்.

அந்த நேரத்தில், ஒரு வேளாளன் விலை நிலத்தை அழித்துவந்த ஒரு வேதாளத்தை கட்டுபடுத்துமாறு சித்தர்களிடம் சொல்ல, அவர்களும் திருவள்ளுவரிடம் சொல்லுமாறு திருப்பிவிட, வள்ளுவனார் விபூதியில் பஞ்சட்சரம் ஜபம் செய்து வேதாளத்தை செயலிழக்க செய்ய, மிக மகிழ்ந்த வேளாளன் தன் மகள் வாசுகியை மணந்துகொள்ளுமாறு வள்ளுவரிடம் கூற, அவரோ, "அந்த பெண் நான் கொடுக்கும் மணலை அன்னமாக்கி எனக்கிடுமானால் விவாகம்செய்து கொள்கிறேன்" என்றார். வாசுகியும் அப்படியே சம்மதித்து சமைத்து படைத்தாள்.

கற்றறிந்தோர் வள்ளுவரின் பெருமை கண்டு அவரிடம், அவர் கற்ற நூல்களை திரட்டி, அவர் பெயரில் ஒரு நூல் எழுத வேன்டினர். அப்படி உருவானதே "திருக்குறள்". இதை வைத்து மதுரை தமிழ் சங்கத்தை வெல்லலாம் என யோசனை கூற, வள்ளுவனாரும் சம்மதித்து முறைக்கு கிளம்பி போனார்.

போகும் வழியில் அவ்வை, இடைக்காடர் சித்தர் போன்றவர்களை கண்டு தான் செல்லும் விஷயத்தை சொல்ல, இடைக்காடரும், நக்கீரர் தம்மை அவமதித்து விளக்கியதை கூறி, தானும் வருகிறேன் என்று கூறி, அவர்கள் மதுரையை அடைந்து, சொக்கநாதர் சுவாமியை தரிசனம் செய்து, தமிழ் சங்கத்தில், மன்னர், புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார். மனம் மகிழ்ந்த மன்னவர், திருவள்ளுவரை கௌரவித்து, திருக்குறளை தமிழ் சங்கத்தின் நூலாக அறிவித்தார்.

சந்தோஷமாக பொற்தாமரை குளத்தை நோக்கி நடந்த வள்ளுவர் குழாம், நிறையபேர் எழுதிய பாக்களில் குற்றம் கண்டுபிடித்து வாழ்ந்துவந்த புலவர்களை சந்திக்க வேண்டிவந்தது. "வள்ளுவரே! நீர் பாடிய குறளை ஒப்புகொள்ள ஐயம் ஒன்று உள்ளது. நாங்கள் உட்கார்ந்திருக்கும் இந்த பலகை தெள்ளிய தமிழுக்கு மட்டும் இடம்கொடுக்கும். இந்த பலகை உங்கள் பாக்களை ஒப்புகொள்ளுமானால், நாங்களும் சம்மதிக்கிறோம்" என கூறினர்.

வள்ளுவர் உடனே திருக்குறளை அந்த பலகையில் வைக்க, இறை அருளால், அதில் ஏற்கனவே இருந்த சுவடிகள் எல்லாம் சுருங்கி உரு தெரியாமல் போக, மீதம் இருந்த பாக்கள் விலகி திருக்குறளுக்கு இடம் கொடுக்க, பலகையில் இருந்த புலவர்கள் அனைவரும் பொற்தாமரை குளத்துக்குள் தூக்கி எறியப்பட்டனர். திருவள்ளுவரின் தவ வலிமை உணர்ந்த அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இப்படி இருக்கையில், ஒரு பெரியவர் வள்ளுவரை நோக்கி, துறவறம் பெரியதா? இல்லறம் பெரியதா? என்று வினவ, வள்ளுவரும் பதில் சொல்லாமல், கிணற்றில் நீர் இறைத்துகொண்டிருந்த வாசுகியை அழைக்க, அவளும் பாதி தூரம் உயர்த்திய குடத்தை அப்படியே விட்டு வர, அது அந்தரத்தில் நின்றது. மறுநாள், வாசுகி நாயனாருக்கு பழைய சோறை பரிமாற, "எனக்கு, சாதம் சுடுகிறது" என வள்ளுவர் கூற வாசுகியும் விசிறி கொண்டு வீசினாள். இவற்றை கண்ட பெரியவர், இப்படி ஒரு மனைவி அமைந்தால் இல்லறமே பெரிது என தீர்மானித்து பதிலேதும் பேசாமல் சென்றுவிட்டார்.

வாசுகி மோக்ஷம் அடையும் போது வள்ளுவரை நோக்கி "என்னை மணம் செய்ததுமுதல் தினமும் உண்ணும்போது ஒரு ஊசியும் தண்ணீரும் எதுத்து வைக்க சொல்வீர்களே? எதற்கு என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை? என்றாள். "அன்னம் புறத்து சிதறினால் எடுத்து சுத்தம் செய்யவே என்றார்". வாசுகியும் சந்தேகம் நீங்கி மோக்ஷம் அடைந்தார்!

தன் மோக்ஷ நேரம் நெருங்குவதை அறிந்த வள்ளுவர் "நாம் பரிபூரணமான பின்பு நமது தேகத்தை புரிகட்டி இழுத்து ஊருக்கு புறத்தில் புதரில் போட்டுவிடு" என எலேலசிங்கரிடம் கூறிவிட்டு பூரணமடைந்தார். அவர் வள்ளுவரின் உடலை ஒரு பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய நினைக்க, உடனே, வள்ளுவர் கண் திறந்து பார்த்து "நான் சொன்ன சொல்லை கடவாதே" என்று அனுக்ரஹித்து மறுபடியும் பூரணம் அடைந்தார். எலேலசின்கரும் அவர் ஆணைப்படி செய்திட, திருமேனியிலிருந்து சிதறிய தசைகளை காகம் முதலானவை உண்டு, பொன் நிறமாக மாறியதை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். பின்னர் அவர் திருமேனி இருந்தவிடத்தில், ஒரு ஆலயம் எடுப்பித்து பூசித்து வந்தார்கள். திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.

agnilingam

Posts : 14
Join date : 28/05/2011

Back to top Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty Re: திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by ஆனந்தபைரவர் Mon May 30, 2011 11:09 am

அற்புதம் நண்பா தங்கள் படைப்புகளை படிக்க ஆர்வம் கொடுள்ளேன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty Re: திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by Shanmugam Sat Dec 17, 2011 2:34 pm

மைலாப்பூரில் திருவள்ளுவ பெருமானுக்கு தனி கோவில் உள்ளது...
அன்பர்கள் சென்று தரிசிக்கலாம்
திருவள்ளுவர் கோவில் தெரு,
மைலாப்பூரில்
சென்னை - 4.
திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுததில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது..

Shanmugam

Posts : 2
Join date : 16/03/2011

Back to top Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty Re: திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by ஹரி ஓம் Wed Dec 19, 2012 6:48 pm

மீண்டும் உங்கள் பதிவின் மூலம் நினைவு கூர்ந்து கொண்டேன். நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty Re: திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by ராகவா Thu Sep 12, 2013 5:34 am

Admin wrote:அற்புதம்  நண்பா தங்கள் படைப்புகளை படிக்க ஆர்வம் கொடுள்ளேன்  
அப்படியா....நானும்தான்...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்! Empty Re: திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum