இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!

Go down

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Empty விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!

Post by sriramanandaguruji Sun Jun 26, 2011 8:31 am

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! New+and+old+genaration+%25281%2529
நெடு நாட்களாக முடிவே இல்லாமல் மனிதனுக்கு தேவையானது விஞ்ஞானமா மெஞ்ஞானமா என்ற விவாதம் நடந்து வருகிறது

ஆன்மிக வாதிகள் தங்களது வாதமே சரி என சண்டை போடுகிறார்கள்



அறிவியல் வாதிகளோ தாங்கள் தான் உலகத்தின் உண்மையான மேய்ப்பர்கள் என்று மார் தட்டுகிறார்கள்



மனிதனுக்கு உண்மை தேவை எது அறிவியலா? ஆன்மிகமா?




கத்தரி வெய்யில் சுட்டெரிக்கிறது. உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது.

வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது.



ஆன்ம நேயம், ஜீவ காருண்யம் என்று எல்லாம் பேசுகின்ற ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை.



மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது



தவிர கடவுளா வந்து கனப்பு சட்டியில் நெருப்பு வைக்கிறார் என்று நமது மனம் பல நேரங்களில் நினைத்து தடுமாறுகிறது.


காலராவை ஒழித்தது விஞ்ஞானம். கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம்.


கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம்.


இத்தனையும் தந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் போற்றுவதை விட்டுவிட்டு



ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்?


அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும்

வெப்பத்தில் வியர்க்கிறது. வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது.



காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும். ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.



குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது. நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது.


கம்பளி குளிரை தடுக்கலாம். நோயை தடுக்காது.



எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம்
மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும்.



ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது. அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிக்காட்டும்.



நிரந்தரமான சந்தோஷம் தான் ஆன்மிகத்தின் இறுதி நோக்கம்.



நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லை.



மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.



எல்லா துறைகளிலும் விஞ்ஞான மயமாகி கொண்டிருப்பது தான். மனிதன் மனதிலுள்ள கருணை நதி வற்றி போனதற்கு காரணமாகும்.



அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல.



எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே கருத்தாகும்.



ஒரு வகையில் சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான்.



மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம். அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும்.



சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி. இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறான் ஆன்மிகவாதி.



அறிவியல் வாதியோ பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறான்.



சொல்லுகின்ற முறையில் தான் வார்த்தையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.



அதாவது மெஞ்ஞானி உண்மைகளை தத்துவங்களாக பேசுகிறான்.



விஞ்ஞானி அதே உண்மைகளையே பௌதிகமாக பேசுகிறான்.

மனிதனுக்கு அவனுடைய சுகத்திற்கு அறிவும் வேண்டும். உணர்வும் வேண்டும்.



விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.



ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம் ஆன்மிகமா? விஞ்ஞானமா? என்பது புரியும்.





soruce http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_26.html



கேள்வி பதில்கள் படிக்க இங்கு செல்லவும் விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! New_button









விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum