Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
Page 1 of 1
பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
பஞ்சகவ்யம் மற்றும் பாடலுக்கு விளக்கம் வேண்டல்..
by கணேஷ்
மதிப்பிற்குரிய கணேஷ் மற்றும் அவரைப்போல் உண்மையான விளக்கம் வேண்டும் அனைவருக்கும் வணக்கங்கள்..
அரிவாட்டாயநாயனார்புராணம் - 916
பாடல் :
முன்புபோன் முதல்வனாரை யமுதுசெய் விக்க மூளும்
அன்புபோற் றூய செந்நெ லரிசிமா வடுமென் கீரை
துன்புபோ மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து போதப்
பின்புபோ மனைவியாரான் பெற்றவஞ் சேந்திச் சென்றார்.
எளிய பொருள் : முன்போல முதல்வரை அமுது
செய்விப்பதற்காக, மூண்டுமேன் மேல் எழும் அரவது அன்புபோலவே
தூயதாகிய செந்நெல்லரிசியினையும், மாவடுவினையும், மெல்லிய
செங்கீரையினையும் துன்பநீங்கிய மனத்தையுடைய தொண்டராகிய தாயனார்
கூடையில் வைத்துச் சுமந்து செல்ல, அவர் பின்பு செல்லும் திருமனைவியார்
ஆனைந்து என்னும் பஞ்சகவ்வியத்தை மட்கலத்திற் கொண்டு கையில்
ஏந்திச் சென்றார்.
இதில்
ஆன்பெற்ற அஞ்சு - பங்சகவ்வியம்
பஞ்சகவ்யம் என்பது வடமொழி. ("ஆனுற்ற வைந்து மமர்ந்தாய் போற்றி"
(ஐயாறு - திருத்தாண்டகம்) முதலிய தமிழ் மறைகள் காண்க.)
இவை பசுவினது பால் - தயிர் - நெய் - மூத்திரம் -
சாணம் என்பன.
இவற்றின் அளவும் சேர்க்கும் முறையும், உரிய பாவனை -
மந்திரம் - செய்கை முதலியனவும் சிவாகமங்களுட் கண்டு கொள்க.
சில நவீன ஆராய்ச்சியாளர் இவற்றில் பசு மூத்திரம், பசுச்சாணம்
என்ற இரண்டினையும் நீக்கி, மோரும் வெண்ணெயும் சேர்த்து ஐந்தாகக்
கணக்கிடவும் தொடங்கியுள்ளார். இது மிகத் திரிபுள்ளதோ ராராய்ச்சியாம்.
சிவாகமங்களின் பிராமணத்தை உடன்படாதார்க்கு ஆனைந்தின் விசாரம்
வேண்டுவதில்லை. இன்னாருடன் சிவாகம சித்தாந்தசைவர்க்கு விவகரிக்கும்
ஆகம அளவையின் றொடர்புமில்லையாகும்.
ஆகமப்படிக்குள்ள ஆட்சி காண விரும்புவோர் தொன்று
தொட்டுவரும் வழக்கும் காணலாம். இதுவேயுமன்றி, இதுபற்றி,
"இவனே திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்சகவ்யமாடியருள
நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்ணாமலை என்னும் நாழியால்
கோமூத்திரம் உழக்கும், கோமயம் ஆழாக்கும், பால் நாழி உழக்கும், தயிர்
நாழி உரியும், நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும் : என்ற
திருவண்ணாமலைக் கல்வெட்டுக் குறிப்பும் காண்க. (S. I. I. Vol. 8. 1937)
நெ. 66. P. 34. S. 10. இது இராசேந்திர சோழர் I உடைய 19-வது ஆண்டுக்
கல்வெட்டு. கி.பி. 1030. கல்வெட்டுத் துறை ஆராய்ச்சியாளர் திரு. K. V.
சுப்பிரமணிய ஐயர் "கொங்குமலர்" பத்திரிகைக்கு எடுத்து எழுதியுதவியது iv.
p/ 72.)
இந்தக் கல்வெட்டில் இவ்வைந்தும் இன்னின்னவாம் என்றுகூறி
அவற்றின் சேர்க்கையளவு முதலியனவும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனைந்து -
ஆன்பெற்ற அஞ்சு - என்றற்றொடக்கத்த திருவாக்குகளால் இவையைந்தும்
ஆனிடத்தினின்று தோன்றும் வெவ்வேறான பொருள்கள் என்பதறியப்படும்.
பால்திரிந்து வேறு பொருளாகிய தயிராதலும், தயிரைக் கடைந்து அல்லது
பாலைத்திரட்டி எடுக்கப்படும் வெண்ணெயை உருக்க நெய் என்றதோர் வேறு
பொருள் பெறுதலும் உணரப்படும். மோரும் வெண்ணெயும் அங்ஙனம் வேறு
தனிப்பொருள்களாகாமையும் கண்டு கொள்க. மருத்து நூல் முறையில்
பஞ்சகவ்விய நெய் முதலிய மருந்துகளுக்குக் கூட்டும் பொருள்கள்
இவ்வைந்துமே யாதலும், இவ்வாறல்லாது மோரும் வெண்ணெயும் சேர்ப்பின்
அவை பயன்றராமையும் பிறவும் காண்க.
இதில் ஒரு ஐயர் பெயர் வருவதாலேயே சிலர் இதைப் பொய் எனக் கூறக்கூடும் அதற்கு நாம் ஏதும் செய்யமுடியாது.
நீங்கள் கேட்ட பாடலுக்கு பொருளை அடுத்தபதிவில் தருகிறேன்
நன்றி.
by கணேஷ்
மதிப்பிற்குரிய கணேஷ் மற்றும் அவரைப்போல் உண்மையான விளக்கம் வேண்டும் அனைவருக்கும் வணக்கங்கள்..
அரிவாட்டாயநாயனார்புராணம் - 916
பாடல் :
முன்புபோன் முதல்வனாரை யமுதுசெய் விக்க மூளும்
அன்புபோற் றூய செந்நெ லரிசிமா வடுமென் கீரை
துன்புபோ மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து போதப்
பின்புபோ மனைவியாரான் பெற்றவஞ் சேந்திச் சென்றார்.
எளிய பொருள் : முன்போல முதல்வரை அமுது
செய்விப்பதற்காக, மூண்டுமேன் மேல் எழும் அரவது அன்புபோலவே
தூயதாகிய செந்நெல்லரிசியினையும், மாவடுவினையும், மெல்லிய
செங்கீரையினையும் துன்பநீங்கிய மனத்தையுடைய தொண்டராகிய தாயனார்
கூடையில் வைத்துச் சுமந்து செல்ல, அவர் பின்பு செல்லும் திருமனைவியார்
ஆனைந்து என்னும் பஞ்சகவ்வியத்தை மட்கலத்திற் கொண்டு கையில்
ஏந்திச் சென்றார்.
இதில்
ஆன்பெற்ற அஞ்சு - பங்சகவ்வியம்
பஞ்சகவ்யம் என்பது வடமொழி. ("ஆனுற்ற வைந்து மமர்ந்தாய் போற்றி"
(ஐயாறு - திருத்தாண்டகம்) முதலிய தமிழ் மறைகள் காண்க.)
இவை பசுவினது பால் - தயிர் - நெய் - மூத்திரம் -
சாணம் என்பன.
இவற்றின் அளவும் சேர்க்கும் முறையும், உரிய பாவனை -
மந்திரம் - செய்கை முதலியனவும் சிவாகமங்களுட் கண்டு கொள்க.
சில நவீன ஆராய்ச்சியாளர் இவற்றில் பசு மூத்திரம், பசுச்சாணம்
என்ற இரண்டினையும் நீக்கி, மோரும் வெண்ணெயும் சேர்த்து ஐந்தாகக்
கணக்கிடவும் தொடங்கியுள்ளார். இது மிகத் திரிபுள்ளதோ ராராய்ச்சியாம்.
சிவாகமங்களின் பிராமணத்தை உடன்படாதார்க்கு ஆனைந்தின் விசாரம்
வேண்டுவதில்லை. இன்னாருடன் சிவாகம சித்தாந்தசைவர்க்கு விவகரிக்கும்
ஆகம அளவையின் றொடர்புமில்லையாகும்.
ஆகமப்படிக்குள்ள ஆட்சி காண விரும்புவோர் தொன்று
தொட்டுவரும் வழக்கும் காணலாம். இதுவேயுமன்றி, இதுபற்றி,
"இவனே திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்சகவ்யமாடியருள
நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்ணாமலை என்னும் நாழியால்
கோமூத்திரம் உழக்கும், கோமயம் ஆழாக்கும், பால் நாழி உழக்கும், தயிர்
நாழி உரியும், நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும் : என்ற
திருவண்ணாமலைக் கல்வெட்டுக் குறிப்பும் காண்க. (S. I. I. Vol. 8. 1937)
நெ. 66. P. 34. S. 10. இது இராசேந்திர சோழர் I உடைய 19-வது ஆண்டுக்
கல்வெட்டு. கி.பி. 1030. கல்வெட்டுத் துறை ஆராய்ச்சியாளர் திரு. K. V.
சுப்பிரமணிய ஐயர் "கொங்குமலர்" பத்திரிகைக்கு எடுத்து எழுதியுதவியது iv.
p/ 72.)
இந்தக் கல்வெட்டில் இவ்வைந்தும் இன்னின்னவாம் என்றுகூறி
அவற்றின் சேர்க்கையளவு முதலியனவும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனைந்து -
ஆன்பெற்ற அஞ்சு - என்றற்றொடக்கத்த திருவாக்குகளால் இவையைந்தும்
ஆனிடத்தினின்று தோன்றும் வெவ்வேறான பொருள்கள் என்பதறியப்படும்.
பால்திரிந்து வேறு பொருளாகிய தயிராதலும், தயிரைக் கடைந்து அல்லது
பாலைத்திரட்டி எடுக்கப்படும் வெண்ணெயை உருக்க நெய் என்றதோர் வேறு
பொருள் பெறுதலும் உணரப்படும். மோரும் வெண்ணெயும் அங்ஙனம் வேறு
தனிப்பொருள்களாகாமையும் கண்டு கொள்க. மருத்து நூல் முறையில்
பஞ்சகவ்விய நெய் முதலிய மருந்துகளுக்குக் கூட்டும் பொருள்கள்
இவ்வைந்துமே யாதலும், இவ்வாறல்லாது மோரும் வெண்ணெயும் சேர்ப்பின்
அவை பயன்றராமையும் பிறவும் காண்க.
இதில் ஒரு ஐயர் பெயர் வருவதாலேயே சிலர் இதைப் பொய் எனக் கூறக்கூடும் அதற்கு நாம் ஏதும் செய்யமுடியாது.
நீங்கள் கேட்ட பாடலுக்கு பொருளை அடுத்தபதிவில் தருகிறேன்
நன்றி.
Similar topics
» உதவி - பெயர் விளக்கம் தேவை
» பஞ்சகவ்யம் மற்றும் பாடலுக்கு விளக்கம் வேண்டல்..
» முருகன் - ஒரு விளக்கம்
» திருநீறு விளக்கம்
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
» பஞ்சகவ்யம் மற்றும் பாடலுக்கு விளக்கம் வேண்டல்..
» முருகன் - ஒரு விளக்கம்
» திருநீறு விளக்கம்
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum