இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

5 posters

Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by Dheeran Sat Mar 24, 2012 3:02 am

நமது இந்துமதம் தர்மம் என்றே வழங்கப்பட்டு வந்தது . அதன் காரணமாகத்தான் வாழ்க்கையை நன்னெறிப்படுத்த விழையும் எந்த ஒரு முறைக்கும் அதன்பெயருடன் தர்மம் எனும் பெயரும் சேர்ந்து வழங்கலாயிற்று.
தர்மம் என்பது இவ்வுலகில் வாழும் ஜீவன் பரமனை அடையும்பொருட்டு மேற்கொள்ளவேண்டிய நெறி ஆகும். அன்நெறியைக் காட்டுபவை வேதங்கள்.
வேதங்கள் தனிப்பட்ட ஒரு இனத்துக்கோ நாட்டுக்கோ வழங்கப்பட்டதல்ல அது உலகின் ஜீவன்கள் அனைத்துக்கும் வழங்கப்பட்டது ஆகும் அவ்வேதங்களை நான்காகத் தொகுத்தவர் மகான் வியாசர்

அவ்வேதங்கள்

1) ரிக் வேதம்,
2) யஜுர் வேதம்
3) சாம வேதம்
4)அதர்வண வேதம்

ஆகியன

இவற்றில் அதர்வண வேதம் மந்திர பிரயோகம், எதிரிகளுக்கு மந்திரங்கள் மூலம் கேட்டுவிளைவிப்பது ஆகியவற்றிற்குப் பயன்படுவதால் அது ஆன்மிக நெறிக்கு ஒவ்வாதது என்று சிலரால் தள்ளப்பட்டு வேதம் மூன்று என்று கூறப்பட்டது. ஆனால் இவ்வாறு அதை ஒதுக்குவது முறையல்ல எவ்வாறென்றால் கத்தியானது நமக்கு பலவகையில் பயன் தரக்கூடியது, அது வீட்டில் காய்கறி வெட்டவும், ஒரு மருத்துவருக்கு உயிர்காக்கும் அறுவைசிகிச்சை செய்யவும், தீயவனுக்கு தீய செயல்புரியவும் பயன்படுகிறது. ஒரு தீயவனுக்கும் பயன்படுகிறது என்பதற்காக கத்தியை வேண்டாம் என்று ஒதுக்குவது அறிவுடைமை அல்ல.

வேதங்கள் கூறும் உண்மைகளைப் புரிந்துகொள்ள ஏற்பட்டவை தர்சனங்கள்.
வேதங்களே தர்சனங்களுக்கு பிரமாணமாகும். இந்த தர்சனங்கள் ஆறாகும்

அவை

1) நியாயம்
2) வைஷேஷிகம்
3) மீமாம்ஸம்
4) சாங்கியம்
5) யோகம்
6) வேதாந்தம்

இவை ஜீவன்கள் தம்மை உணரவும் ,உணர்ந்து மேன்மை அடையவும் ஏற்பட்டவை ஆகும். இவற்றில் யோகம் எனும் தர்சனத்தை புறமதங்களான (ரிக் வேதம் முதலான வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாதவை) சமணமும், பௌத்தமும் ஏற்றுக்கொள்கின்றன.

இதில் யோகம் என்பது வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ்ந்து எப்படி உயர்நிலையை அடைவது என்பது விளக்கப்பட்டுள்ளது. இது எட்டு அங்கங்களை உடையது. அவை,

1)இயமம்
2)நியமம்
3)ஆசனம்
4)பிராணாயாமம்
5)பிரத்யாகாரம்
6)தாரணை
7)தியானம்
8)ஸமாதி

ஆகியன (மேலும் விபரங்களுக்கு- யோகம் மற்றும் தியானம். )

இதில் இயமம்,நியமம், ஆகியன வாழ்க்கையில் உயர்வும் விடுதலையும் வேண்டும் ஜீவன் மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கங்களைக் கூறுகின்றன, அவ்வொழுக்கங்கள்தான் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகியன. ஆகவே அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்நான்கு உறுதிப் பொருள்களும் வேதங்களால் கூறப்பட்டவையே தவிர தாமே வேதங்கள் ஆகா.

இந்த வேதங்கள் எந்த ஒரு மனிதானாலும் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதுதான் " வேதம் அனாதி" என்பதன் பொருள். இறைவன் அனாதியானவன், இறைவன் வேதங்களாகவும் இருக்கிறான் எனவே வேதம் அனாதி. ஆகவே வேதம் அனாதி என்றால் அவை தாமாகவே பூமியில் முளைத்தன என்று அர்த்தம் ஆகாது. அப்படி தாமாகவே முளைத்து எழுந்தாலும் அது இறைவன் செயல் அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்.

பலமதங்களுக்கு பலவேதங்கள் உள்ளன அவை பல்வேறு மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்லது அவர்களுக்கு கடவுளால் சொல்லப்பட்டவையாகக் கருதப்படுகின்றன அவற்றில் பௌத்தவேதம் என்று சொல்லப்படுவதோ இஸ்லாமிய வேதமோ, கிருத்துவர்களின் வேதமோ எதுவுமே தமிழ்மொழியில் இயற்றப்பட்டவை அல்ல. இவ்வுண்மை அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவற்றின் தமிழாக்கம் மட்டுமே தமிழனுக்கு படிக்கக்கிடைத்துள்ளது. அவற்றில் சில கொடுந்தமிழிலும் (தமிழுக்கு நேர்ந்த கொடுமை), சில அரபு மொழியுடன் அதன் தமிழாக்கமாகவும் கிடைக்கின்றது அந்த புத்தகத்தை அரபுமொழி மூலம் இல்லாமல் வெளியிட முடியாது.

பிற மத வேதங்கள் மதத்துக்கொன்றாகத்தான் உள்ளதேதவிர மொழிக்கு ஒன்று என்று இல்லை. நம்முடைய நால்வேதங்களையும் தமிழில் மொழிபெயர்க்க யாரும் தடை போடவில்லை அவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டியது அறிஞர்களின் கடமை அவர்களுக்கு நமது வேண்டுகோளும் இதுவே.

தமிழர்களாகிய நமது வேதம் இறைவனால் பாடப்பட்டது. இறைவனால் பாடப்பட்ட வேதம் எதுவோ அதற்கும் நமக்கும்தான் தொடர்பு உண்டு.
என்ற கருத்து சிலருக்கு எழுந்துள்ளது. இக்கருத்தின் பொருள் நமது வேதம் இறைவனால் சொல்லப்பட்டது என்பதாகத்தான் இருக்கவேண்டும். அவர்களே திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்தான் தமிழருக்கு வேதம் அவற்றைத்தான் பன்னிரு திருமுறைகளிலும் அதன் ஆசிரியர்கள் வேதம் எனக் கூறி உள்ளனர் என்கின்றனர் அவ்வாறென்றால் திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இறைவனால் பாடப்பட்டவையா? திருவள்ளுவர் முதலானோர் அவற்றைப் பாடவில்லையா? எனும் வினா எழுகிறது. இது மிகவும் முறண்பட்டதாக உள்ளது. ஒருவேளை இறைவனால் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் திருக்குரானின் தமிழ் மொழியாக்கம்தான் தமிழரின் வேதம் என்று கூறவருகிறார்களோ? அவ்வாறு இருக்காது என நம்புவோம்.


“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”


எனும்பாடல் சுட்டுவதும் ரிக் வேதம் முதலான நால்வேதங்கள்தான்.

இங்கு வடமொழிக்கும் தமிழருக்கும் தொடர்பில்லை என்றும் வடமொழியில் உள்ளவைஎல்லாம் தமிழரைப்பார்த்து காப்பியடித்தவை என்றும் கூறுவது கூறுபவரின் கற்பனை வளத்தை நன்கு பிரதிபலிக்கிறது. தமிழன் அறிவாளிதான் அதற்காக மற்றவர்களெல்லாம் பாலிலிருந்து மோர்,தயிர், வெண்ணை,நெய்
கூட எடுக்கத்தெரியாதவர்கள் என்று சொல்வது மிகையாகப்படுகிறது.

பாரததேசத்தின் மக்கள் அனைவரும் (அரியன்,திராவிடன் எனும் பொய்யான இனப் பிரிவை எண்ணிப்பார்க்க) ஒரே இனம் என்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது ஆகவே சமஸ்கிருதம் அன்னியமொழியல்ல.

இன்னும் எழுத ஏராளம் உண்டு, நாம் அனைவ்ரும் நன்றாக சிந்தித்து உண்மையுணர்ந்து குழப்பமடையாமல் நல்வாழ்வுவாழ எம்பெருமான் அருள்புரிவானாக.







Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by கணேஷ் Tue Apr 03, 2012 12:26 am

சமஸ்கிருதமொழியில் உள்ள வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும், தமிழர்க்கு வேதங்கள் என்பது அறம், பொருள்,இன்பம்,வீடு, எனும்கருத்தையும், தமிழ் இலக்கிய்ங்களை ஒருக்கட்டுரையில் தவறாக மேற்கோள் காட்டியுள்ளதையும் மறுத்து இப்பதிவை வெளியிட்டுள்ளீர்கள் என எண்ணுகிறேன் அந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவற்றை உங்கள் பதிவில் குறிப்பிட்டு பிறகு மறுமொழி தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி இல்லாததால் பொதுவில் படிப்பவர்களுக்கு பதிவில் சிலபகுதிகள் தொடர்பற்றவையாகத் தோன்றும் . மற்றபடி நல்ல ஒரு பதிவைத் தந்துள்ளீர்கள் நன்றி.

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by நாரதர் Tue Apr 03, 2012 2:04 pm

அருமையான கருத்துக்கள் தொடருங்கள் தீரரே
நாரதர்
நாரதர்

Posts : 29
Join date : 11/05/2011
Age : 38

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by tmm_raj_ramesh Tue Apr 03, 2012 2:29 pm

தீரன் ஐயா.



கட்டுரைக்கு நன்றி.



ஒரே ஒரு சந்தேகம். மதத்திற்கும் மொழிக்கும் என்ன தொடர்பு?

மொழிக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?



இதை தெரிந்து கொண்டால் மட்டுமே வேதத்தையும் வேதத்தைப் படைத்த கடவுளையும் கடவுள் படைத்த தமிழனையும் அடையாளம் காண முடியும். சமஸ்கிருதம் தான் வேத மொழி என்றால் வேத மொழியை உணர மற்றொரு மொழி ஏன் தேவைப்படுகிறது. ?



கேள்விகள் அர்த்தமற்றவைஎன்றால் பதில் தேவையில்லை. மன்னிக்கவும்.



உங்களின் சமஸ்கிருத ஆதரவு தமிழில் தொடரட்டும். படிப்பதற்கும் ஆதரவு தருவதற்கும் நாங்கள் எப்பொழுதும் உங்கள் உடன் இருப்போம்.



நன்றி.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by Dheeran Mon Apr 23, 2012 5:12 pm

வணக்கம் நண்பரே,
உங்களது கேள்விகளுக்கு கீழ்க்காணும் பதிவையே பதிலாக இட்டுள்ளேன் நன்றி.

பதிவின் தலைப்பு : மொழியும் மதமும்.
http://www.tamilhindu.net/t2014-topic
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by Venkatesh A.S Thu Apr 26, 2012 1:57 am

என்னை பொறுத்தவரை மொழிகள் என்பது பூத கண்ணாடி (எம்பெருமானது பெருமையை உற்று நோக்கும்) போன்றது. அதில் சில வற்றில் உற்று நோக்கும் திறன் அதிகம் இருக்கும். சிலவற்றில் சற்று குறைவாக இருக்கும் எனலாம். சில பேர் அதில் உள்ள அதிர்வலைகளை மேற்கோள் காண்பிக்கிறார்கள். எது எப்படியோ அடிப்படை என்னவென்றால் எம்பெருமானது பெருமையை உணர வேண்டும். அதற்க்கு ஆதாரம் பக்தி மட்டுமே. பக்தி என்பது மழலை மொழி போன்றது. தாய் உள்ளம் கொண்ட எம்பெருமானுக்கு மழலை மொழி நன்றாகவே புரியும்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by Dheeran Wed May 02, 2012 6:51 pm

நன்றி திரு வெங்கடேஷ் A.S,

பகவானுக்கும்,பக்தனுக்கும் இடையில் மொழி என்பது ஒரு தடை அல்ல.

ஆனால் மொழி எனும் போர்வையில் அறிந்தோ அறியாமலோ நமது சமயத்தில் குழப்பம் ஏற்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டுமல்லவா நண்பரே. அதற்குத்தான் இந்தப்பதிவு.
நன்றி.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.  Empty Re: வேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum