இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!

Go down

ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Empty ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!

Post by ஆனந்தபைரவர் Wed Aug 04, 2010 3:34 pm

ச.நாகராஜன்

ஒலிக்கு மகிமை உண்டா?

ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா? ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?

மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?

க்ளாட்னி ப்ளேட்ஸ்

ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!

க்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!

நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு

மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.

காவராண்ட் ஆராய்ச்சி

இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.

ஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின் அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன் இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக் கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும ஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள் துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின!

சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு மேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை அதிகம்!

நாஸாவின் கண்டுபிடிப்பு

ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!

கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.

மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்

இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.

எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள் பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.

ஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும் புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.

காயத்ரி மந்திர மகிமை

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார். வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது!

க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி. மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.


சென்ற இதழில் க்ளாட்னி ஆராய்ந்து வியந்த ஒலி மகத்துவத்தைப் பார்த்தோம். அவர் வழியில் வந்த ஹான்ஸ் ஜென்னி ஆராய்ந்து கண்ட மந்திரங்களின் மகத்துவத்தை இனி படிக்கலாம்..

ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி


ஸ்விட்சர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார்.

பத்தாண்டு காலம் க்ளிசெரின், பாதரஸம், ஜெல், பவுடர், இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார்.

குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு இவர் அதிசயித்தார். ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ஹிந்து மதம் சித்தரிக்கும் வெவ்வேறு மண்டலங்களை அதாவது யந்திரங்கள் மேல் இவர் கவனம் திரும்பியது.

மந்திரங்களும் யந்திரங்களும்

வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. இதே போல ஒவ்வொரு யந்திரமும் ஒரு வித ஜியாமெட்ரி உருவமாக அமைக்கப்படுவதோடு குறிப்பிட்ட யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு சக்தி ஊட்டப்படுகிறது.ஹான்ஸ் ஜென்னி குறிப்பிட்ட மந்திரம் ஒன்றை உச்சரிக்கச் செய்த போது குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் வந்ததைப் பார்த்து பிரமித்துப் போனார்.

ஓம் எனும் மந்திரமும் ஸ்ரீ யந்திர அமைப்பும்

தலையாய மந்திரமான ஓம் என்பதை உச்சரிக்கச் செய்தார். ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது

நவீன உடலியல் இரசாயன வல்லுநர்கள், வானியல்-இயற்பியல் விஞ்ஞானிகள் மற்றும் ஹிந்து யோகிகள் நம்முடைய உடல்கள் அணுத்துகள் அதிர்வுகளின் அமைப்புகளே (system of vibrations) என்று ஒரு மனதாக ஒப்புக்கொண்டுள்ளனர். நம்முடைய உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு திசுவும், உறுப்பும் வெவ்வேறு அதிர்வெண்களுக்குத் தக்கபடி இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது. இதை சுருக்கமாக சொல்லப் போனால் நம்முடைய உடலே உண்மையில் ஒலி அலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது.


எல்லாம் அதிர்வு மயம்

உடலே அதிர்வுகளின் கூட்டு என்னும் போது நம்மைச் சுற்றி உள்ள ஒலிகள் நம்மைப் பாதிக்காமல் இருக்குமா?. ஆனால் எப்படி என்ற கேள்வி எழுகிறது. எதிரொலி கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஒத்த அதிர்வுகளைக் கொண்டுள்ளவை ஒன்றுக்கொன்று ஆதரவாக இயங்கும் என்பதை அனைவரும் அறிவர். நம்முடைய உடல் இயல்பாக அதிக ஓய்வுடன் இருக்கும் நிலையில் வினாடிக்கு 7.8 முதல் 8 சைக்கிள் (cycle) வரை அதிர்வுகளைக் கொண்டுள்ளது.

ஆல்பா மூளை அலைகளும் ஓய்வான நிலையில் வினாடிக்கு 8 சைக்கிள் அதிர்வுகளையே கொண்டுள்ளன. பூமி கூட வினாடிக்கு 8 சைக்கிள் என்ற அளவிலேயே அதிர்கிறது. உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரின் நரம்பு மண்டலமும் இந்த அதிர்வெண்ணுக்கு இயைபுடையதாகவே உள்ளது.

இதையெல்லாம் ஏராளமான பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்த டாக்டர் ஹான்ஸ் ஜென்னி அதிர்வெண்ணின் ஸ்தாயி அல்லது சுருதி மிகவும் அதிக அளவில் இருந்தால் ஜியாமட்ரி வடிவங்கள் சிக்கலானதாக உள்ளன என்று கண்டறிந்தார்.

ரகசிய சாஸ்திரங்கள்

இந்த அடிப்படையில் ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது என்று ஆகிறது. அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தேவைக்குத் தக்கபடி யந்திரங்களை ஒலியின் அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் அமைத்தனர்.

யாக சாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட திசையில் அமைக்கப்படுவது மரபு. டேவிட்டின் நட்சத்திரம், பிரமிட், ஸ்ரீ சக்கரம் போன்ற ரகசிய சாஸ்திர அமைப்புகள் எல்லா நாகரிகங்களிலும் இருந்து வருவது ஆச்சரியப்படும் விஷயம் அல்லவா?

புதிய ஒலி இயல்

ஹான்ஸ் ஜென்னி தனது இயலை cymatics என்று குறிப்பிட்டார் இந்தச் சொல் கிரேக்க வார்த்தையான kyma (அலை என்று பொருள்படும்) என்பதிலிருந்து உருவானது. ஆகவே, cymatics என்ற சொல் எப்படி ஒலி அதிர்வுகள் பல்வேறு வடிவங்களை உருவாக்குகின்றன, அவை எப்படிப்பட்ட செல்வாக்கை இதர அமைப்புகளின் மீது ஏற்படுத்துகின்றன என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறலாம். தான் உருவாக்கிய கருவிக்கு அவர் டோனோஸ்கோப் (tonoscope) என்று பெயரிட்டார்.

சமஸ்கிருத மொழியின் ஆற்றல்

தனது சோதனைகளில் சம்ஸ்கிருத மற்றும் ஹிப்ரூ உயிர் எழுத்துக்களை உச்சரித்தபோது (தகட்டின் மீதுள்ள) மணல் அந்த எழுத்து வடிவை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார்! ஆனால் பின்னாளில் தோன்றிய மொழிகளில் இந்தச் சிறப்பை அவர் காணவில்லை. இது எப்படி சாத்தியம்?. இந்த மொழிகள் தெய்வீக மொழிகளா? அவைகளின் ஒலிச் சேர்க்கைகள், ஒலிகள் அவை கூறும் பொருளை உருவாக்க வல்லவையா? பௌதிக உலகில் தனது செல்வாக்கை இந்த மொழிகளின் ஒலி அலைகள் ஏற்படுத்துகின்றனவா? இவை கூறும் ஸ்தோத்திரங்கள் அதில் சொல்லி இருப்பது போல மனித நோய்களைக் குணப்படுத்துமா? இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகள் அவருக்கு எழுந்தன!

திரவம் பூசப்பட்ட ஒரு தகடை அதிர்வுக்குள்ளாக்கி அவர் சாய்த்தார். புவி ஈர்ப்பு விசை கொள்கையின் படி அந்தத் திரவம் தகடிலிருந்து கீழே வடிந்து விழவில்லை. மாறாக வெவ்வேறு வடிவங்களைக் காண்பிக்க ஆரம்பித்தது. அதிர்வது நிறுத்தப்பட்டவுடன் திரவம் கீழே வடிய ஆரம்பித்தது! மீண்டும் தகடை அதிர்வுக்குள்ளாக்கினால் திரவம் வடிவது நின்றது. இந்தச் சோதனையின் மூலம் அதிர்வுகள் புவி ஈர்ப்பு விசையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை என்பதை அவர் உணர்ந்து அறிவித்தார்.

1972 -அவர் இறந்த வருடம் அவரது நூலின் இரண்டாம் பாகம் வெளி வந்தது.

ஹான்ஸ் ஜென்னியின் புகைப்படங்கள்

அவரது சோதனையின் போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் வெளி வரவே உலகமே பரபரப்புக்குள்ளானது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டு என்றும் மனிதனின் பரிணாமமே இந்த அதிர்வின் அடிப்படையில் எழுந்ததுதான் என்றும் அவர் தன் முடிவைத் தெரிவித்தார். ஓம் என்ற மந்திரத்தின் உயர்ந்த தன்மையை அவர் விளக்கி உலகை வியப்பில் ஆழ்த்தினார். மனித காதுகளை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் ஒலி அதிர்வுகளின் நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிய முடியும் என்று அவர் அறிவித்தார்!

டாக்டர் பீட்டரின் ஒலி சிகிச்சை

பிரிட்டிஷ் மருத்துவரான டாக்டர் பீட்டர் கை மானர்ஸ் ஆங்கில மருத்துவ முறைக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இல்லாததைக் கண்டு மனம் வெதும்பி மாற்று மருத்துவ முறைகள் உண்டா என்று நாடு நாடாக அலைந்து திரிந்து தேடலானார். அவர் ஹான்ஸ் ஜென்னியைச் சந்திக்க நேர்ந்தது. ஒலி சிகிச்சை முறை அவரைக் கவர்ந்தது. அதில் தன் ஆராய்ச்சி மனதைச் செலுத்தினார். தனது சைமாடிக் அப்ளிகேடர் (cymatic applicator) மூலமாக உலகெங்கும் ஒலியால் இப்போது சிகிச்சை செய்து வருகிறார். ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

ஆக, க்ளாட்னியின் ஆராய்ச்சி ஹான்ஸ் ஜென்னியைக் கவர்ந்து ஒரு புதிய ஒலி இயலையே உருவாக்க, இன்றைய நவீன விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்து வருகின்றனர்.

வேத மந்திரங்களின் ஒலி ரகசியத்தை ஆராயப் புகுந்துள்ள விஞ்ஞானிகள் இன்னும் எத்தனை பௌதிக ரகசியங்களைக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?!

காலம்தான் பதில் சொல்லும்!

(நன்றி : ஞான ஆலயம்)
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum