இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்

2 posters

Go down

பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்  Empty பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்

Post by ஆனந்தபைரவர் Thu Nov 04, 2010 4:16 pm

தேஜோமயமான தெய்வீக நிலை கொண்ட மகா பெரியவாளின் அழகிய உருவத்தை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது!'

காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில், அவரது அருட்கடாட்சத்தை அனுபவித்த பூரிப்பில்... பால்பிரண்டன் எனும் ஐரோப்பியர் தமது நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது.

நம் முனிவர்கள், யோகிகள் மற்றும் மகான்களைச் சந்தித்து, ஆசி பெற்று, அவர்களுடனான தனது அனுபவங்களை எழுத இந்தியாவுக்கு வந்தார் பால் பிரண்டன். செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவரை வேங்கடரமணி என்பவர் உதவியுடன் தரிசித்தார். அப்போது, தான் அடைந்த பரமானந்தம்... தொடர்ந்து அன்றிரவே தமக்கு வாய்த்த அற்புத அனுபவம் குறித்து தமது புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார் பால் பிரண்டன்:

''மகா பெரியவாளை சந்தித்தது, எனது வாழ் நாளில் எனக்குக் கிடைத்த- என்றும் மறக்க முடி யாத தெய்வீக அனுபவம். குழந்தைப் பருவத்தில் இருந்தே கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிப் பெரியவரை விட்டுப் பிரிய எனக்கு மனமே வரவில்லை.

அனைத்தையும் துறந்தவர்; மிகப் பெரிய பீடாதிபதியாக இருந்தும் அகங்காரம் இன்றி, அமைதியாகவே இருந்தார். தமக்கு வழங்கப்படும் பொருட்களைப் பங்கிட்டு, தகுதியானவர்களுக்கு அவரே அளித்து விடுகிறார். அவரைச் சந்தித்த பிறகு, அன்று மாலை வரை செங்கல்பட்டையே சுற்றிச் சுற்றி வந்தேன். மீண்டும் ஒரு முறை மகா பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அங்குள்ள கோயில் ஒன்றில், பக்தர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் பெரியவாள். அங்கு சென்றேன். அப்போது, பெரியவாளது பிரகாசமான திருமேனியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்றாலும், ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே நிலையில் அவர் உபதேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கூட்டத் தில் இருந்தவர்களுக்கு வாழ்க்கை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் நம்பிக்கையு டன் இருந்தனர். அவர்களைப் பார்த்துப் பொறா மைப்பட்டேன். 'கடவுள் இருக்கிறார்' என்ற எண்ணம் அவர்களுக்கு திடமாக இருந்தது. மேடு- பள்ளம் நிறைந்த உலக வாழ்க்கையைப் பற்றியோ, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பூமியின் அழிவைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவே இல்லை.

பிறகு, நானும் நண்பர் வேங்கடரமணியும் சென்னைக் குத் திரும்பினோம். அப்போது வேங்கடரமணி, 'நீங்கள்தான் உண்மை யான அதிர்ஷ்டசாலி. ஏனெனில், ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருக்கு ஸ்வாமிகள் பேட்டியளித்தது இதுவே முதல் முறை. எனவே, தங்களுக்கு ஸ்வாமிகளின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாகக் கிடைத்துவிட்டது!' என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.

அன்று இரவு, தூக்கத்தில்... செங்கல் பட்டில் கண்ட அதே உருவத்தை மிகத் தெளிவாக மீண்டும் காணும் பாக்கியம் கிடைத்தது. என்னிடம் கருணையையும் அன்பையும் காட்டுவதற்காகவே அந்த உருவம் வந்ததாக அறிந்தேன். காஷாயம் (காவிஉடை) தரித்த அந்த உருவம், 'பணிவுடன் இரு. அனைத்தையும் அடைவாய்' என்பது போல் என் காதில் ஒலித்தது. பிறகு, அந்த உருவம் மறைந்தது. இதையடுத்து எனக்குள் ஓர் அமைதி; பெருமிதம்; மகிழ்ச்சி! தென்னிந்திய மக்களால் கடவுள் அவதாரமாக மதிக்கப்படும் காஞ்சி மகா பெரியவாளை சந்தித்த அனுபவத்தை அன்று இரவு முழுவதும் சிந்தித்தபடியே இருந்தேன்.''

பால் பிரண்டனுக்குக் கிடைத்த இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க காஞ்சி மகானை பிரார்த்திப்போம்!

நன்றி சக்தி விகடன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்  Empty Re: பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:54 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum