இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டி பெருமாள்!-சாரதாசுப்பிரமணியன்

Go down

அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டி பெருமாள்!-சாரதாசுப்பிரமணியன் Empty அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டி பெருமாள்!-சாரதாசுப்பிரமணியன்

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 4:34 pm

நகரேஷி காஞ்சி என்ற சொல்லுக்கு ஈடாக காஞ்சிபுரம் முழுக்கவே சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் அமைந்துள்ளன. பெருமாள் கோவிலான வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் அத்திமரத்தால் ஆன வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே வழங்குவர். அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காண திமிலோகப்படும். மக்கள் எல்லாரும் அத்திவரதர், அத்திவரதர் என்றே பேசிக் கொண்டு இருப்பர். பெருமானின் உடல் உஷ்ணத்தைக் காக்கவே நீருக்கு அடியில் உள்ளார் என்றும், அவர் அத்திமரத்தினால் ஆன சிலா ரூபம் சூடுதாங்க முடியாது, அதனால்தான் அவர் நீருக்கடியில் இருக்கிறார் என்றும் கூறுவர். திப்புசுல்தான் படையெடுப்பின் போது ஸ்வாமியை பின்னப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி பாதுகாப்பு கருதி அவரைக் குளத்தில் வைத்து விட்டார்கள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் அவரைக் காண ரொம்ப வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம் கோழிகுத்தி. இங்கு அத்திமரமே பெருமாளாக விஸ்வரூபக் காட்சியளிக்கும் ஒரே ஆலயம் வானமுட்டிப் பெருமாள் ஆலயம். பேருக்கு ஏற்றாற் போல் எம்பெருமான் விஸ்வரூபமாக சுமார் 14 அடி உயர அத்திமரக் காட்சி பார்க்கப் பார்க்கப் பரவசம். இக்கிராமத்தின் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பதே ஆகும். இந்தப் பெருமாள் ஆலயத்தின் ஸ்தல வரலாறு என்னவென்று பார்ப்போமா?

பிப்பலர் என்ற மகரிஷி சருமநோயால் மிகவும் அவதிப்பட்டார். ஒரு நாள் பெருமாள் அவர் கனவில் தோன்றி “போன ஜன்மத்தில் நீ ஒரு ஹத்தி (கொலை) செய்து இருக்கிறாய். அதனால் இந்த அவஸ்தை. அதற்குப் பரிகாரமாக காவிரிக் கரையோரமாக உன் யாத்திரையைத் தொடங்கு மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்கசகாயர் உனக்கு வழி காட்டுவார்” என்று கூறி மறைந்துவிட்டார். அதன்படியே பிப்பல மகரிஷி தன் யாத்திரையைத் தொடங்கி மூவலூரை அடைந்தார். அங்கு மார்கசகாயேஸ்வரரையும் நந்தி எம்பெருமானையும் வழிபட்டார். பிப்பலரின் இறை பக்தியை மெச்சிய ஈஸ்வரன் அவருக்கு வடக்கு பக்கமாக வழி காட்டினார். பிப்பலரும் வடபால் சென்றார். காவிரியில் நீராடி கோழிக்குத்தி கிராமத்திற்கு வந்தார் அங்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருந்த அத்திமரத்தில் பெருமான் காட்சி தந்தார். அவரைச் சேவித்தவுடன் பிப்பலரின் சருமநோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. ஹத்தி (கொலை) வடபால் கோடி காட்டியதால் கோடி ஹத்தி பாபங்கள் நீங்கும் இடம் கோடி ஹத்தி என்றாகி, அது நாளடைவில் திரிந்து கோழிகுத்தி ஆகிவிட்டது. நோய் நீங்கப்பெற்ற பிப்பலர் அந்த ஸ்தலத்திலேயே தங்கி தவமியற்றினார். இதனால் இங்குள்ள தீர்த்த புஷ்கரணியை பிப்பல மகரிஷி தீர்த்தம் என்றே கூறுகின்றனர். இதில் நீராடினால் நீண்ட நாள்கள் உடலை வாட்டும் நோய்கள் உடனே நீங்கிவிடும் என்பது திண்ணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இப்படி பிப்பல மகரிஷிக்குக் காட்சி கொடுத்து நோய் நீக்கியதைக் கேள்வியுற்ற சோழ அரசன், தான் போர்க் காலங்களில் எதிரிப் படைகளைக் கொன்ற பாபத்தைப் போக்குவதற்கு பிராயச்சித்தம் தேடி, கோழிக்குத்தி பெருமானைச் சேவிக்க வந்தான். அங்கு பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இயற்றியதின் பேரில் பெருமான் அரசனுக்கு அத்தி மரத்தில் விஸ்வரூபக் காட்சிக் கொடுத்தார். நீண்ட நெடுந் தோற்றமாக வான்வரை காட்சி கொடுத்ததால் எம்பெருமானுக்கு வானமுட்டிப்பெருமாள் என்ற திருநாமம் அமைந்தது. பிறகு அரசன், காட்சி கொடுத்த பெருமானுக்கு அத்திமரத்திலேயே சிலாரூபம் செய்யப் பல கைத்தேர்ந்த சிற்பிகளை வரவழைத்து அத்திமரத்திலேயே சிலையை வடித்தான். 14 அடி உயரம் சிலையே அந்தக் காட்சி கொடுத்த அத்திமரத்திலே செய்தான். நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, அபயம் ஆகியவற்றுடன் அரசர் தன் செங்கோலையும் இறைவனிடமே கொடுக்க அதனுடனேயே அருள் பாலிக்கிறார் அத்திமரப்பெருமாள். அஜந்தா வர்ணம் என்ற இயற்கை வண்ணங்கள் மரத்திற்கு தீட்டப்பெற்று பெருமாளின் அழகு சொல்லி மாளாது. அப்பேர்ப்பட்ட திவ்ய தரிசனம். அரசன் ஏழு பிராகாரங்களுடன் கோவில் எழுப்பியுள்ளதாக கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தற்போது எஞ்சியுள்ளது ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே.

தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை. அதனால் பெருமாள் தம் வலப்பக்க மார்பில் தாயாரை இருத்தியுள்ளார். இடப் பக்கத்தில் பூதேவியின் சிலை தனியாக உள்ளது. அத்திமரமே பெருமாளாக ஆனதால் வேர்பாகமானது அப்படியே பாதாரவிந்தமாக உள்ளது. இங்கு வேர்கள் தான் பெருமானின் திருப்பாதம். இதைப் போன்று வேர் உள்ள பாதங்களை வேறெங்கும் காண முடியாது. இந்த ஸ்தலம் சனி தோஷ நிவர்த்தி ஸ்தலம். இதனை இங்குள்ள கல்வெட்டில் வடிக்கப்பட்ட ஸ்லோகம் விவரிக்கிறது.ஓம் கோணஸ்த விஸ்கலே பப்ரு
க்ருஷ்ணோ ரௌத்ரார்ந்த கோயம்
சௌரீ-சனைச்சரமந்த பிப்பலாதேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருந்தாயய: படேத்
சனைச்சர கிருதா பீடந கதாசித் பவிஷ்யதி


இதன் பொருள்: ஒரு தமிழ் வருடத்திற்குள்ள 51 வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 10 பிராமணர்களுக்குத் தலைக்கு தீர்த்தமாட எண்ணெயும், உணவுப் பொருள்களும் 5விதமான காய்களும் அதில் ஒன்று இலை வகையாகவும் உணவிட வேண்டும். அப்படி செய்தால் சனிதோஷம் நிவர்த்தியாகும். இப்பெருமானை பக்தப்பிரியர், பக்தப்பிரியத்தாழ்வார் என்றும் குறிப்பிட்டுள்ளது. தாயார் நாமம் ஸ்ரீதயா லக்ஷ்மி. பக்தர்களின் துயரை உடனே நீக்கும் தயா குணமுடையவள். இங்கு யோகநரசிம்மருக்குத் தனி சந்நிதி உள்ளது. பிரதோஷ காலங்களில் இவருக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

மதுரை, நெல்லை, திருஅனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் சப்தஸ்வரத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஸ. ரி. க. ம. த. நி என்ற த்வனி கேட்கும். இந்த ஸ்தலத்தில் மூன்றடி உயரத்தில் ஆஞ்சனேயர் தம் வாலைச் சுருட்டி தலைமேல் வைத்து அதில் மணியையும் தொங்கவிட்டபடி காட்சி தருவது அபூர்வம். இவரின் சிலையை ஒவ்வோர் இடத்தில் தட்டினால் ஸ. ரி. க. ம. ப. த. நி என்ற ஸப்த ஸ்வரங்கள் ஒலிக்கும். அதனால் இவரின் திருநாமம் ஸப்தஸ்வர ஆஞ்சனேயர். ஸங்கீதத்தில் நல்ல தேர்ச்சி, ஞானம், புகழ் பெற இவரை வழிபடுதல் அவசியமாகும்.அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டி பெருமாள்!-சாரதாசுப்பிரமணியன் Pipalar

நன்றி அம்மன் தரிசனம் அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டி பெருமாள்!-சாரதாசுப்பிரமணியன் Vanamutti
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum