Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சிவனின் சினத்தால் அழிந்து விஷ்ணுவின் சக்கரத்தால் பூத்த அம்மன்
Page 1 of 1
சிவனின் சினத்தால் அழிந்து விஷ்ணுவின் சக்கரத்தால் பூத்த அம்மன்
மன்னியூர் இறை சென்னியூர் பிறை
அன்னியூர் தனில் மண்ணு சோதியே'
என்று நால்வருள் ஒருவரான திருஞான சம்பந்தர் போற்றிப் பாடிய தலம் அன்னியூர். இங்கு இராமநாதீஸ்வரர், வரதராஜப் பெருமாள், விநாயகர், பிடாரியம்மன், திரௌபதி அம்மன், அரிஹரபுத்திர அய்யனார் உள்ளிட்ட தெய் வங்களுக்கெல்லாம் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஊரில் கோவில் கொண்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்தான் அமைச்சாரம்மன்.
இந்த அம்மன் பார்வதி தேவியின் மறு உருவமே என்கிறார்கள். எப்படி? மகாவிஷ்ணு இப்பூவுலகில் பல அவதாரங்கள் எடுத்ததைப் போல சிவபெருமானும் தனது திருவிளையாடல் களை நிகழ்த்திக் காட்டினார். அதன் ஒரு பகுதியே இந்த அமைச்சாரம்மன்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானுக்கு மனைவி ஆனார். தட்சன் பலவிதமான பராக்கிரமங்களைக் கொண்டவன். இறைவனான சிவ பெருமானைவிட தானே உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் கர்வமும் உடைய வன். சிவபெருமான் தனது மருமகனாக இருந்தும் அவருக்கு மதிப்பளிப்பது இல்லை. தான் என்ற அகம்பாவம் தட்சனிடம் மேலோங்கி இருந்த காலகட்டம்.
அப்போது தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான். இந்த யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைத்தான். உலகிலுள்ள அனைத்து சித்தர்கள், அரசர்கள், பெரும்புலவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தான். இப்படி எல்லாருக்கும் அழைப்பு விடுத்து யாகத்தை நடத்த தட்சன் ஏற்பாடு செய்தபோதும், தனது மருமகனான சிவ பெருமானையும் மகள் பார்வதியையும் அழைக்க வில்லை. இவ்விஷயம் தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் எட்டியது. இறைவனை அழைக்காமல்- மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நாம் மட்டும் எப்படிச் செல்ல முடியும் என்ற விவாதம் எழுந்தது. உடனே தேவ சபை கூடியது. சிவ பெருமானை அழைக்காதது பற்றி விவாதித்தனர். இறுதியாக பிரம்ம தேவன் உட்பட யாருமே தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்வ தில்லை என முடிவெடுத்தனர்.
ஆனால் தட்சன் யாகம் ஆரம்பித்த வுடன், "தட்சன் சிவபெருமானைவிட செல்வாக்கு படைத்தவன்- முன்கோபக் காரன். நாம் யாகத்தில் கலந்து கொள்ளா விட்டால் நம்மைப் பழி வாங்கி விடுவானோ என்று பயந்து, பிரம்மன் உட்பட தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஒவ்வொரு வராக நழுவிச் சென்று தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் பார்வதி தேவி தனது தகப்பன் நடத்தும் யாகத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, பிறந்த வீட்டுப் பாசம் காரணமாக அந்த யாகத் தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்தாள். தனது கணவரான சிவபெருமானிடம் உத்தரவு கேட்டாள்.
""நம்மை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நீ செல்லக்கூடாது'' என்று சிவபெருமான் தடுத்தார். பெருமானின் கட்டளையையும் மீறி பிறந்த வீட்டின் பெருமையை எண்ணி பார்வதி தேவி தகப்பன் தட்சன் நடத்தும் யாகத்திற்குச் சென்றாள்.
அதனால் மனம் வருந்திய பார்வதிதேவி, தீயில் வீழ்ந்து உயிர் துறந்தாள். இதை அறிந்த சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு தட்சனின் யாகத்தை அழித்ததோடு, இறந்து கிடந்த பார்வதியின் உடலைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் உக்கிரத்தால் உலகங்கள் யாவும் அதிர்ந்தன. இந்த நிலை நீடித்தால் அனைத்து உலகங்களும் அழிவது உறுதி என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைய, அவர் தனது சக்ராயுதத்தால் பார்வதி தேவியின் உடலை அறுத்து பூமியில் வீழ்த்தினார். அப்படி பார்வதி தேவியின் உடற் பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்கள் எனப்பட்டன. அவ்வகையில் 51 சக்தி பீடங்கள் இருப்பதாகச் சொல்வர்.
கிரேதா யுகத்தில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் மேற்படி சம்பவத்தின் அடிப்படையைக் கொண்டே அமைச் சாரம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. அதாவது அம்மனின் சாறும் (ரத்தம்) உடல் பாகமும் விழுந்த இடத்தில் கோவில் கொண்ட அம்மன் என்பதால், இந்த அன்னை அமைச் சாரம்மன் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
""மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மனை வந்து தரிசித்து அருள் பெறுங்கள்'' என்று மனமுருகிச் சொல்கிறார்கள்- இவ்வூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கலியபெருமாள், வேங்கடேசன், அன்னியூர் சிவா உள்ளிட்ட பக்தர்கள்.
நன்றி நக்கீரன்
அன்னியூர் தனில் மண்ணு சோதியே'
என்று நால்வருள் ஒருவரான திருஞான சம்பந்தர் போற்றிப் பாடிய தலம் அன்னியூர். இங்கு இராமநாதீஸ்வரர், வரதராஜப் பெருமாள், விநாயகர், பிடாரியம்மன், திரௌபதி அம்மன், அரிஹரபுத்திர அய்யனார் உள்ளிட்ட தெய் வங்களுக்கெல்லாம் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஊரில் கோவில் கொண்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்தான் அமைச்சாரம்மன்.
இந்த அம்மன் பார்வதி தேவியின் மறு உருவமே என்கிறார்கள். எப்படி? மகாவிஷ்ணு இப்பூவுலகில் பல அவதாரங்கள் எடுத்ததைப் போல சிவபெருமானும் தனது திருவிளையாடல் களை நிகழ்த்திக் காட்டினார். அதன் ஒரு பகுதியே இந்த அமைச்சாரம்மன்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானுக்கு மனைவி ஆனார். தட்சன் பலவிதமான பராக்கிரமங்களைக் கொண்டவன். இறைவனான சிவ பெருமானைவிட தானே உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் கர்வமும் உடைய வன். சிவபெருமான் தனது மருமகனாக இருந்தும் அவருக்கு மதிப்பளிப்பது இல்லை. தான் என்ற அகம்பாவம் தட்சனிடம் மேலோங்கி இருந்த காலகட்டம்.
அப்போது தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான். இந்த யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைத்தான். உலகிலுள்ள அனைத்து சித்தர்கள், அரசர்கள், பெரும்புலவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தான். இப்படி எல்லாருக்கும் அழைப்பு விடுத்து யாகத்தை நடத்த தட்சன் ஏற்பாடு செய்தபோதும், தனது மருமகனான சிவ பெருமானையும் மகள் பார்வதியையும் அழைக்க வில்லை. இவ்விஷயம் தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் எட்டியது. இறைவனை அழைக்காமல்- மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நாம் மட்டும் எப்படிச் செல்ல முடியும் என்ற விவாதம் எழுந்தது. உடனே தேவ சபை கூடியது. சிவ பெருமானை அழைக்காதது பற்றி விவாதித்தனர். இறுதியாக பிரம்ம தேவன் உட்பட யாருமே தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்வ தில்லை என முடிவெடுத்தனர்.
ஆனால் தட்சன் யாகம் ஆரம்பித்த வுடன், "தட்சன் சிவபெருமானைவிட செல்வாக்கு படைத்தவன்- முன்கோபக் காரன். நாம் யாகத்தில் கலந்து கொள்ளா விட்டால் நம்மைப் பழி வாங்கி விடுவானோ என்று பயந்து, பிரம்மன் உட்பட தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஒவ்வொரு வராக நழுவிச் சென்று தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் பார்வதி தேவி தனது தகப்பன் நடத்தும் யாகத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, பிறந்த வீட்டுப் பாசம் காரணமாக அந்த யாகத் தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்தாள். தனது கணவரான சிவபெருமானிடம் உத்தரவு கேட்டாள்.
""நம்மை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நீ செல்லக்கூடாது'' என்று சிவபெருமான் தடுத்தார். பெருமானின் கட்டளையையும் மீறி பிறந்த வீட்டின் பெருமையை எண்ணி பார்வதி தேவி தகப்பன் தட்சன் நடத்தும் யாகத்திற்குச் சென்றாள்.
அதனால் மனம் வருந்திய பார்வதிதேவி, தீயில் வீழ்ந்து உயிர் துறந்தாள். இதை அறிந்த சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு தட்சனின் யாகத்தை அழித்ததோடு, இறந்து கிடந்த பார்வதியின் உடலைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் உக்கிரத்தால் உலகங்கள் யாவும் அதிர்ந்தன. இந்த நிலை நீடித்தால் அனைத்து உலகங்களும் அழிவது உறுதி என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைய, அவர் தனது சக்ராயுதத்தால் பார்வதி தேவியின் உடலை அறுத்து பூமியில் வீழ்த்தினார். அப்படி பார்வதி தேவியின் உடற் பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்கள் எனப்பட்டன. அவ்வகையில் 51 சக்தி பீடங்கள் இருப்பதாகச் சொல்வர்.
கிரேதா யுகத்தில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் மேற்படி சம்பவத்தின் அடிப்படையைக் கொண்டே அமைச் சாரம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. அதாவது அம்மனின் சாறும் (ரத்தம்) உடல் பாகமும் விழுந்த இடத்தில் கோவில் கொண்ட அம்மன் என்பதால், இந்த அன்னை அமைச் சாரம்மன் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
""மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மனை வந்து தரிசித்து அருள் பெறுங்கள்'' என்று மனமுருகிச் சொல்கிறார்கள்- இவ்வூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கலியபெருமாள், வேங்கடேசன், அன்னியூர் சிவா உள்ளிட்ட பக்தர்கள்.
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum