இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

Go down

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு  Empty நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

Post by ஆனந்தபைரவர் Thu Dec 09, 2010 10:26 pm

அன்னியர் என்று சொன்னால் பாரத தேசத்திற்கு வெளியே வாழும் அமெரிக்கர் கள், பிரிட்டிஷார் மற்றும் ஐரோப்பிய நாட்டினர், மத்திய கிழக்கு நாடுகளிலும், இமயமலைக்கு வடபுறத்தில் வாழ்வோரை யும், கிழக்கே வங்கக் கடலைத் தாண்டி வாழும் மக்களையும்தான் அன்னியர் என்று சொல்கிறோம். அவர்களில் பலர் கிறிஸ்துவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும், பௌத்த மதத்தையும் சார்ந்த மக்களாவர். குறிப்பாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளில் இராமாயணம் குறித்த பல செய்திகள் காணப்படுகின்றன. மக்களின் பெயர்களும் இந்து சமயத்தினரின் பெயர் களைப் போல் இருப்பது மிகவும் வியப்பான தொரு செய்தியாகும்.

அன்னிய மதங்கள் என்று சொல்லும் போது, குறிப்பாக கிறிஸ்துவமும் இஸ்லாமும் தான் நமக்கு உடனே தெரிகிறது. இவ்விரு மதங்களும் முறையே இரண்டாயிரம், ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பது வரலாறு. ஏசுநாதரின் மேன்மைகளும் வழிகாட்டுதல்களும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறந்த போதனைகளும் மார்க்கங்களும் மக்களைக் கவர்ந்தன. இவ்விரு புண்ணிய புருஷர்களும் தோன்றுவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்கள் என்ன சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றோ, என்ன வழிபாட்டை நடத்தினார்கள் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் சூரியனையும் சந்திரனையும் கடவுளாக ஏற்றுக் கொண்டிருந்தார்களோ என்கிற வரலாற்று ஐயமும் எழுகின்றது. ரோமானி யக் கடவுள், கிரேக்கக் கடவுள் என்று சில உயர்வான தன்மைகளையும் ஏற்று வாழக் கூடிய மனிதர்களாகவும் இருந்திருக்கி றார்கள்.

இப்படி இவர்கள் வாழ்ந்த வெகு காலத்திற்கு முன்பே பாரதத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இருந்ததாகக் கூறப்படு கிறது. பல கூறுகளாக பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள் இராமாயண, மகாபாரதக் கதை களைத் தெரிந்து வைத்திருந்தார்கள். ராமன் என்பவன் க்ஷத்திரியனாகவும், கிருஷ்ணரை யாதவர் எனவும் தொழில் ரீதியாகச் சித்தரித் திருந்தார்கள். இந்த இரு இன மக்களோடு, மங்கோலியா போன்ற தேசங்களிலிருந்து கைபர் கணவாய் வழியாக வாழ வகை தேடி வந்த ஒரு பெரும் கூட்டம் சில நாகரீகங் களைத் தெரிந்து வைத்திருந்தது. இவர்கள் சூரியனை வழிபட்டார்கள். சூரிய குலத்தைச் சார்ந்தவன் ராமன் என்கிற வான்மீகி முனிவரின் கூற்றை நம்பினார்கள். அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்து சமவெளி நாகரீகம் மிகச் சிறப்பாக அப்பகுதியில் விளங்கி வந்தது. அந்த மக்களிடம் சிவ வழிபாடும் சக்தி வழிபாடும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார் கள். இவையெல்லாம் கலந்து- யாராலும் தோற்றுவிக்கப்படாத- மக்களாலேயே கண்டு பிடித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மதமாக இந்து மதம் விளங்கிற்று. பின்னர் வேத வியாசர் போன்ற முனிவர்களின் கருத்துக் களால் வேதங்கள், புராணங்கள், இதிகாசங் கள், சந்திர- சூரியனுக்கான வழிபாடுகள், மந்திர- தந்திரங்கள் என பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு மகான்களால் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றின் உயர்ந்த கருத்துக்கள் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தானாகவே வளர்ந்த மதம் இந்த மதம். இதை யாரும் கண்டு பிடிக்கவில்லை, தோற்றுவிக்கவுமில்லை. சுயம்புவாக உருவான மதம் இந்து மதம். பின்னர் வாழ்விற்கு ஏற்றாற்போல் கடவுளர் களை வணங்க ஆரம்பித்தனர். இந்த நம்பிக்கைகள்தான் ஆன்மிகம் அல்லது ஆத்திகம் என்று உணரப்பட்டன.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரென நம்புவது, அவரை வழிபடுவது, வழிபட்டால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை, புராண- இதிகாசங்களின் மேன்மையை ஒப்புக் கொண்டு அதன் வழி நடப்பது- இப்படிப் பட்ட கொள்கைகளே ஆத்திகம் என்றானது. இவற்றை ஒப்புக் கொள்ளாத மனிதர்களை நாத்திகர் என்றனர். இவை இரண்டுமே வட மொழிச் சொற்கள்தான். ராமாயண காலத்திலேயே நாத்திகம் இருந்தது.

ராமன் வனவாசம் சென்றபோது அயோத்தியில் தசரதர் காலமாகிவிடுகிறார். இதைச் சொல்லுவதற்கும், மீண்டும் ராமனே அயோத்தியை ஆள வேண்டும் என்பதற் காகவும் பரதன் அழுது கொண்டே கானகம் வருகிறான். முதலில் பரதன் தந்தையான தசரதர் இறந்ததைச் சொல்ல ராமன் துயருற்றான். உடனே கங்கை நதிக்கரையில் தன் தந்தைக்காக நீத்தார் கடன் (பித்ரு காரியம்) செய்கிறான். அப்படிச் செய்யும் போது நீத்தாருக்காக பிண்டம் வைப்பது இந்துக்கள் வழக்கம். சோறு (அன்னம்) சமைத்து, அதில் எள், வாழைப்பழம், தேன், நெய் முதலானவற்றைக் கலந்து உருண்டை யாக்கி, தன் தந்தையாகிய தசரதனுக்கு என்று சொல்லி அர்ப்பணம் செய்கிறான். உடனே ஜாபாலி என்பவன், "இறந்து போன உன் தந்தைக்கு இந்த சாத உருண்டை எப்படிப் போய்ச் சேரும்?' என்று நாத்திகம் பேசுகிறான். இது ராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நடந்த இந்த பித்ருக் கடனை இன்றும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு ஜாபாலியைப்போல் அந்த சந்தேகம் வரக்கூடும். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். இப்படிப்பட்ட பித்ரு காரியங்களைச் செய்தால் நம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கை. இந்தக் காரியங்களைச் சரிவர செய்யாதவனுடைய எதிர்கால சந்ததியி னருக்கு வாழ்க்கை நன்றாக இருக்காது என்கிறது ஜ்யோதிஷ சாஸ்திரம். ஆனாலும் பிண்டம் வைப்பது எப்படி நம் மூதாதை யருக்கு இங்கிருந்து போகும் என்பதை காஞ்சி மகாபெரியவர் ஓர் அற்புதமான உவமையால் விளக்கியிருக்கிறார்.

""வீட்டின் உள்ளே எங்கேயோ ஒரு சுவிட்ச் இருக்கிறது. அதைப் போட்டால் விளக்கு எரிகிறது. கரென்ட் இருக்கிறது என்று கண்களால் காண முடியாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லுகிறோம். அதே போலத்தான் பிண்டத்தை நம் மூதாதை யர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும்.'' -இது மகாபெரியவர் சொன்ன வாதம். இதை நம்ப வேண்டும்.

பூமிப் பந்தில் மேற்குப் புறம் மொராக்கோ என்று ஒரு இஸ்லாமிய நாடு உள்ளது. அந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய மகாராணி ஒருசில வருடங்களுக்குமுன் பாரதம் வந்திருந் தார். மெத்தப் படித்தவர். பல விஷயங்கள் அறிந்த அறிவாளி. பாரத தேசத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் வந்திருந்தார். ஏழு நாள் சுற்றுப்பயணம். வழக்கம்போல் அவரை மரியாதையுடன் வரவேற்று ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர் நம் அதிகாரி கள். டெல்லி செங்கோட்டையிலிருந்து குதுப்மினார், தாஜ்மஹால், அஜ்மீர் தர்க்கா என்று இப்படியே பல இடங்களைக் காட்டிவிட்டு மகாபலிபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை அவரை ஒரு வார காலம் அழைத்துச் சென்று, தக்க மரியாதைகளுடன் அவரை மொராக்கோ நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதற்கு முன்னால் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது மகாராணி இந்தியாவைப் பற்றிக் கூறும்போது, ""நான் இந்த ஏழு நாட்களில் இந்தியா முழுவதையும் பார்த்தேன். சுற்றுலா இடங்கள், வரலாற்று இடங்கள், நான் படித்திருந்த இந்திய கலாச்சார முறைகள் அனைத்தையும் பார்த்தேன். பல மொழி பேசும் மக்கள், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என வியந்தேன். முடிவில் உங்கள் இந்து மதம் இணைக்கிறதென அறிந்து கொண்டேன். மிகப் பழமையான உங்கள் இந்து மதம் புனிதமானது. பல நல்ல விஷயங்களை உள்ளடக்கியது. எத்தனை மதங்கள் தோன்றினாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது...'' -இப்படிப் புகழ்ந்துவிட்டு விமானம் ஏறினார் அந்த மகாராணி.

அதேபோல் மதுரை மாவட்டம் முழுவதும் ஆட்சி புரிந்த ஒரு வெள்ளைக்கார கலெக்டர், இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் ஒரு பெண் குழந்தை வந்து எழுப்பியது. அது யார் எனத் தெரிந்து கொள்ள அறையிலிருந்து வெளியே வந்த போது அறையின் மேற்கூரை இடிந்து விழுந்த தைப் பார்த்து அதிர்ந்தான். தன் உயிரைக் காத்தது மதுரை மீனாட்சியே என்று அறிந்து தன் சொத்து முழுவதையும் கோவிலுக்கே எழுதி வைத்தான்.

அதேபோல் கர்னல் ப்ளேஸ் என்பவன் மதுராந்தகம் ஏரி உடையாமல் காவல் காத்த ராம- லட்சுமணர்களைக் கண்டான்.

ராகவேந்திரனின் பிருந்தாவனப் பிரவேசம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து, இந்த சிறிய மடத்திற்கு ஏன் இவ்வளவு நிலங்கள் என்று கருதிய சர் தாமஸ் மன்றோ நிலவரி வசூலிக் கச் சென்றபோது, பிருந்தாவனத்திலிருந்த

ஸ்ரீ ராகவேந்திரரே மன்றோவுக்கு காட்சி தந்து, "நிலங்களுக்கு வரி கட்டினால் வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முடியாதே' என்று கூறியபோது, ஸ்ரீ ராகவேந் திர தரிசனம் செய்த மன்றோ நிலவரியிலிருந்து விலக்களித்தான். இந்தச் செய்தியை அதோனி தாலுகா அலுவலகத்தில் இன்றும் காணலாம். சென்னை திரும்பிய கலெக்டர் மன்றோவுக்கு ராகவேந்திரர் அருளால் உடனே கவர்னர் பதவி கிடைத்தது.

இப்படி அன்னியர் பலர் இந்து மதம் பற்றியும், இந்துக் கடவுளர்களின் உயர்வைப் பற்றியும் உணர்ந்திருந்தும் நம்மில் சிலர் உணராதது வேதனையே! நம்பிக்கை வைத்தால் நாம் உயரலாம் என்பதே உண்மை!
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum