Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து! - ச. நாகராஜன்
Page 1 of 1
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து! - ச. நாகராஜன்
ஒரு நாள் சீன ஞானியான கன்பூஷியஸ் தனது செல்லச் சீடரான யுவான் ஹுயி மற்றும் ஸி லியூ ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். யுவானின் ஞானம் எல்லையற்றதாக இருந்தது. ஸி லியூவோ துடிப்பானவர். உடனடியாக எதற்கும் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடும் உணர்ச்சி மயமான சுபாவத்தை உடையவர்.
வழியிலே, கன்பூஷியஸ், 'நமது குறிக்கோளைப் பற்றியும் அபிலாஷைகளைப் பற்றியும் பேசுவோமே', என்று கூறி விட்டு ஸி லியூவைப் பார்த்து, "ஸி லியூ! உன் குறிக்கோள், ஆசைகள் என்ன? சொல்லு" என்றார்.
உடனே ஸி லியூ," ஆ! எனது குறிக்கோளா! என் உடலில் போர்த்தியிருக்கும் இந்த ஆடைகளைக் கொடுக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதோ, இந்தக் குதிரைகளைத் தருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ரதங்களையும் தருவேன். எனது அனைத்தையும் தரத் தயார்!" என்றார்.
கன்பூஷியஸ் யுவானைப் பார்த்தார்.
"ஆசார்யரே! எனது திறமைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொள்ளாத நிலை எனக்கு ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தந்ததற்கு அதிகமாக எதையும் பூதக்கண்ணாடி வைத்து காண்பிக்காத மனநிலையை ஒரு நாள் எய்துவேன் என்று எதிர்பார்க்கிறேன்" என்று யுவான் கூறினார்.
ஸி லியூ, 'அடடா! உளறிவிட்டோமே! யுவானுக்கு அடுத்ததாக நாம் பேசியிருக்கலாமே' என்று நினைத்தார்.
இருவரும் கன்பூஷியஸிடம், "ஆசார்யரே! உங்கள் குறிக்கோள், அபிலாஷை என்ன?" என்று வினவினர்.
கன்பூஷியஸ் பதில் கூறினார்: "சீடர்களே! என்னைப் பொறுத்தவரை லோகத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் நன்கு கவனிக்கப்பட்டு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன். எல்லா நண்பர்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை, சிரத்தை இருக்கும் நிலை ஏற்படுவதைப் பார்ப்பேனாகுக! இளைஞர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்பார்களாகுக. மேலிருந்து பொழியும் கருணையை அவர்கள் உணர்ந்து நன்றி பாராட்டுவார்களாகுக. உலகில் உள்ள எல்லோரும் இருக்க இடமும் நல்ல நிலையும் அடைந்து எங்கும் சாந்தி நிலவ வேண்டும். இதுவே என் ஆசை; குறிக்கோள்" .
யுவானும் ஸி லியூவும் ஆசார்யரின் இந்த பதிலைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர். தங்களுடைய பதில் மிகவும் கீழான நிலையில் தங்களைச் சுற்றியே அமைந்திருந்ததையும் ஆசார்யரின் பதில் மிக உயரிய நிலையில் லோகக்ஷேமத்தில் அக்கறை உள்ளதாக அமைந்திருந்ததையும் எண்ணிப் பார்த்தனர். ஆசார்யருக்கும் தமக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவர்களால் நன்கு உணர முடிந்தது.
இளைஞர் முதல் முதியோர் வரை உலகில் உள்ள அனைவரும் எப்படி சாந்தியுடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றிய அவரது நோக்கம் உலகளாவியதாக இருப்பதை எண்ணி மகிழ்ந்த சீடர்கள் பெருமைப்பட்டனர்.
ஹிந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமாக,"லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து" -அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும்" என்ற மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது.
'சர்வே ஜனா: சுகினோ பவந்து' என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக என்ற பிரார்த்தனையைப் புரிய வைக்கிறது.
ஹிந்து மதம் வேண்டும் பிரபஞ்சமளாவிய நன்மையைத் தவிர வேறு என்ன வேண்டும்?
சுவாமி விவேகானந்தரிடம், "நீ மோக்ஷத்தை அடைய விரும்புகிறாயா?" என்று கேட்ட போது, "தனி ஒருவனாக நான் மட்டும் மோக்ஷத்தை அடைந்து பயன் என்ன? கடைசி தரித்திர நாராயணனும் மோக்ஷம் அடையும் நிலை வரும் வரை நான் காத்திருப்பேன்" என்று பதில் கூறினார். அவரது இந்த பதிலில் உள்ள நோக்கம் நம்மைப் புல்லரிக்கச் செய்யும்.
'ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச" என்ற குறிக்கோளை (Motto) அவர் ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோளாகப் பொறித்தார்.
ஆத்மா மோக்ஷம் அடையட்டும்; உலகம் இதத்தைப் பெறட்டும் என்ற குறிக்கோள் சகலரின் மோக்ஷத்தையும் இதத்தையும் தழுவிய குறிக்கோளாக, பிரார்த்தனை மந்திரமாக அமைந்திருப்பது எண்ணி மகிழ்வதற்குரியது.
ஆசார்ய ராமானுஜரும் கோவில் கோபுரத்தின் மீது நின்று ஏழையரும் உய்த்து உணரவேண்டும் என்ற பரந்த நோக்கில் ஓம் நமோ நாராயணாய என்ற ரகசிய மந்திரத்தை உரக்கக் கூவினார்.
பெரியோர்கள் தமக்காக எதையுமே சிந்திப்பதே இல்லை.அவர்கள் உலக நலனுக்காக மட்டுமே வாழ்பவர்கள் என்பதை பண்டைய ரிஷிகள் சரித்திரம் தொடங்கி இன்றைய விவேகானந்தரின் வாழ்வு நிகழ்ச்சி ஈறாகப் பார்க்க முடிகிறது.
அவர்களின் குறிக்கோளைப் பார்த்து நம் குறிக்கோளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!
நன்றி நிலாச்சாரல் இணையம்
வழியிலே, கன்பூஷியஸ், 'நமது குறிக்கோளைப் பற்றியும் அபிலாஷைகளைப் பற்றியும் பேசுவோமே', என்று கூறி விட்டு ஸி லியூவைப் பார்த்து, "ஸி லியூ! உன் குறிக்கோள், ஆசைகள் என்ன? சொல்லு" என்றார்.
உடனே ஸி லியூ," ஆ! எனது குறிக்கோளா! என் உடலில் போர்த்தியிருக்கும் இந்த ஆடைகளைக் கொடுக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதோ, இந்தக் குதிரைகளைத் தருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ரதங்களையும் தருவேன். எனது அனைத்தையும் தரத் தயார்!" என்றார்.
கன்பூஷியஸ் யுவானைப் பார்த்தார்.
"ஆசார்யரே! எனது திறமைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொள்ளாத நிலை எனக்கு ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தந்ததற்கு அதிகமாக எதையும் பூதக்கண்ணாடி வைத்து காண்பிக்காத மனநிலையை ஒரு நாள் எய்துவேன் என்று எதிர்பார்க்கிறேன்" என்று யுவான் கூறினார்.
ஸி லியூ, 'அடடா! உளறிவிட்டோமே! யுவானுக்கு அடுத்ததாக நாம் பேசியிருக்கலாமே' என்று நினைத்தார்.
இருவரும் கன்பூஷியஸிடம், "ஆசார்யரே! உங்கள் குறிக்கோள், அபிலாஷை என்ன?" என்று வினவினர்.
கன்பூஷியஸ் பதில் கூறினார்: "சீடர்களே! என்னைப் பொறுத்தவரை லோகத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் நன்கு கவனிக்கப்பட்டு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன். எல்லா நண்பர்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை, சிரத்தை இருக்கும் நிலை ஏற்படுவதைப் பார்ப்பேனாகுக! இளைஞர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்பார்களாகுக. மேலிருந்து பொழியும் கருணையை அவர்கள் உணர்ந்து நன்றி பாராட்டுவார்களாகுக. உலகில் உள்ள எல்லோரும் இருக்க இடமும் நல்ல நிலையும் அடைந்து எங்கும் சாந்தி நிலவ வேண்டும். இதுவே என் ஆசை; குறிக்கோள்" .
யுவானும் ஸி லியூவும் ஆசார்யரின் இந்த பதிலைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர். தங்களுடைய பதில் மிகவும் கீழான நிலையில் தங்களைச் சுற்றியே அமைந்திருந்ததையும் ஆசார்யரின் பதில் மிக உயரிய நிலையில் லோகக்ஷேமத்தில் அக்கறை உள்ளதாக அமைந்திருந்ததையும் எண்ணிப் பார்த்தனர். ஆசார்யருக்கும் தமக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவர்களால் நன்கு உணர முடிந்தது.
இளைஞர் முதல் முதியோர் வரை உலகில் உள்ள அனைவரும் எப்படி சாந்தியுடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றிய அவரது நோக்கம் உலகளாவியதாக இருப்பதை எண்ணி மகிழ்ந்த சீடர்கள் பெருமைப்பட்டனர்.
ஹிந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமாக,"லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து" -அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும்" என்ற மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது.
'சர்வே ஜனா: சுகினோ பவந்து' என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக என்ற பிரார்த்தனையைப் புரிய வைக்கிறது.
ஹிந்து மதம் வேண்டும் பிரபஞ்சமளாவிய நன்மையைத் தவிர வேறு என்ன வேண்டும்?
சுவாமி விவேகானந்தரிடம், "நீ மோக்ஷத்தை அடைய விரும்புகிறாயா?" என்று கேட்ட போது, "தனி ஒருவனாக நான் மட்டும் மோக்ஷத்தை அடைந்து பயன் என்ன? கடைசி தரித்திர நாராயணனும் மோக்ஷம் அடையும் நிலை வரும் வரை நான் காத்திருப்பேன்" என்று பதில் கூறினார். அவரது இந்த பதிலில் உள்ள நோக்கம் நம்மைப் புல்லரிக்கச் செய்யும்.
'ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச" என்ற குறிக்கோளை (Motto) அவர் ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோளாகப் பொறித்தார்.
ஆத்மா மோக்ஷம் அடையட்டும்; உலகம் இதத்தைப் பெறட்டும் என்ற குறிக்கோள் சகலரின் மோக்ஷத்தையும் இதத்தையும் தழுவிய குறிக்கோளாக, பிரார்த்தனை மந்திரமாக அமைந்திருப்பது எண்ணி மகிழ்வதற்குரியது.
ஆசார்ய ராமானுஜரும் கோவில் கோபுரத்தின் மீது நின்று ஏழையரும் உய்த்து உணரவேண்டும் என்ற பரந்த நோக்கில் ஓம் நமோ நாராயணாய என்ற ரகசிய மந்திரத்தை உரக்கக் கூவினார்.
பெரியோர்கள் தமக்காக எதையுமே சிந்திப்பதே இல்லை.அவர்கள் உலக நலனுக்காக மட்டுமே வாழ்பவர்கள் என்பதை பண்டைய ரிஷிகள் சரித்திரம் தொடங்கி இன்றைய விவேகானந்தரின் வாழ்வு நிகழ்ச்சி ஈறாகப் பார்க்க முடிகிறது.
அவர்களின் குறிக்கோளைப் பார்த்து நம் குறிக்கோளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!
நன்றி நிலாச்சாரல் இணையம்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Similar topics
» நாகராஜன் கோயில்
» ராம ரஹஸ்ய உபநிஷத்! - ச.நாகராஜன்
» போரும் யோகாவும்! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
» ராம ரஹஸ்ய உபநிஷத்! - ச.நாகராஜன்
» போரும் யோகாவும்! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
» சேதுவின் வரலாறு! - ச.நாகராஜன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum