இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருத்தொண்டர் புராண வரலாறு-1

Go down

திருத்தொண்டர் புராண வரலாறு-1 Empty திருத்தொண்டர் புராண வரலாறு-1

Post by ஆனந்தபைரவர் Mon Aug 02, 2010 4:09 pm

பாயிரம்

விநாயகர்

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் 1

சபாநாதர்

சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி 2

சிவகாமசுந்தரி

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி 3

கற்பக விநாயகர்

மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்
நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி 4

சுப்ரமணியர்

பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி 5

சைவ சமயாசாரியார்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி 6

திருத்தொண்டர் - சேக்கிழார்

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி 7

நூற்பெயர்

தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம் 8

அவையடக்கம்

*ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்
நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும் 9

$தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்
கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால் 10

(*) (இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்.)
(*) ஊர்க்கடலை - சாம்பற்புழுதி எனவும்;
ஓங்கு தமிழ் நூல்கடல் - பெரிய புராணம் எனவும் கூறுவர்.

($) தேவுடனே கூடியசொற் செந்தமிழோர் - தெய்வத்தன்மை வாய்ந்த தமிழ்
வாணராகிய சேக்கிழார். தெரிந்துரைத்த பா - பெரியபுராணம்.
பருப்பொருள் - அற்பப்பொருள்.

நூல்

பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்
பாளைவிரி மணங்கமழ் பூஞ்சே¨லை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்
றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்
நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் துரில்
சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே 11

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே
ஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்
குளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்
சேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம்
பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் 12

இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி
ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர்
தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி
உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்
தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே 13

விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை
நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன்
கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப்
பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி
ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே 14

மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்
சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து
செந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர்
அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ 15

காராளர் அணிவயலில் உழுதுதங்கள்
கையார நட்டமுடி திருந்தில்இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப்
பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர்
ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாளச்
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல்
செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ 16

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்
வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும்
இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில்
வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர்
தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ 17

அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக்
கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்குத்
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங்
தலைமையளித் தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும்
உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார் 18

தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந்
தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்கட்
கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்(து)
இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச்
செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில் 19

கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே
கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா
துமிக்குத்திக் கைவருந்திக் கறவைநிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை
வழியிருக்க குழிவீழ்ந் தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று
விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார் 20
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum