இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இசையும் இறைவனும்

Go down

இசையும் இறைவனும் Empty இசையும் இறைவனும்

Post by ஆனந்தபைரவர் Sun Feb 13, 2011 11:56 am


இசையும் இறைவனும் Dancing-ganesha
இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.

நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்.

இசை என்றவுடன் சிலர் அதில் மனோமயக்க விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகம் என்பது இசையின் முதுகெலும்பு கொண்டே வளர்க்கபட்டது. இசையை மாயை என காண்பவர்களும் , இசையை உன்னதமாக காண்பவர்களுக்கும் இடையே இருப்பது சின்னஞ்சிறிய வித்தியாசம் தான். ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். அது போல இசையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

சிலர் இசையை மருத்துவ நிலையில் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து இருக்கிறார்கள் (Music therapy). மருந்து என்பது நம்மில் இல்லாத குறைவிஷயங்களை வெளியில் இருந்து கொடுப்பது அல்லவா? ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இசை மருத்துவம் என்பது அடிப்படையில் தவறு என்பேன். நம்மில் இசை இல்லா நேரம் எதுவும் இல்லையே..! அப்படி இருக்க எவ்வாறு வெளியில் இருக்கும் இசை நம்முள் நுழைந்து நம்மை குணமாக்கும்.?

வேத மந்திரங்கள் ஒருவித ஒலி அலையை ஏற்படுத்துகிறது. வேத ஒலி ஒரு இசையின் வடிவம்தான். வேதத்தை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும் அதுதான். வேதம் என்பது மதம் கடந்தது என நான் அடிக்கடி கூறகாரணம் இந்த ஒலிவடிவம் தான்.

குயில் கூவுகிறது, பசு சப்தம் எழுப்புகிறது, மயில் அகவுகிறது இந்த ஒலி எல்லாம் எந்த மதத்தை சார்ந்தது? அப்படித்தான் வேத ஒலிகளும். சென்ற பதிவில் ஒரு ஒலிக்கோப்பை வைத்திருந்தேன். அது 2 நிமிடம் ஒலிக்கக்கூடிய ஒலி அலைகள். அதில் 1.06 நிமிடத்திற்கு நான்கு வேதத்தில் ஒன்றான சாம வேதமும், முடிவு வரை குரானில் தேனீ பற்றி ஓதும் வரிகளும் இருக்கிறது.

குரல் மற்றும் ஒலி தெளிவு தவிர பிற விஷயங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது பார்த்தீர்களா? இதில் சிலர் நாங்கள் இந்து என சொல்லி மார்தட்டும் எத்தனை பேருக்கு இது சாம வேதம் என தெரியும்? வேதத்தின் சுருதியை அறியாமல் இவர்கள் இந்து தர்மத்தை காப்பாற்றுகிறேன் என மசூதியை இடிக்கிறார்கள். இவை இரண்டையும் கேட்டு மகிழ்ந்திருந்தால் அதன் ஓசையில் இருக்கும் ஒற்றுமையை கேட்டு லயித்திருந்தால் உடைக்கவும் வேண்டாம் அதற்கு கமிஷனும் வேண்டாம்.

சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் ஓசைக்காகவே அமைந்திருக்கிறது. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்று இருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகாணம் வாசித்தால் கைலாய மலையே உருகுமாம். இது போல சாம கானத்தின் ஆற்றலை பலவாறு புகழ்ந்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரும் பகவத் கீதையில் நான் வேதத்தில் சாமமாக இருக்கிறேன் என்கிறார். அதில் இசையின் வடிவாக இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. இலவசமாக அதை கணினியில் கேட்கமுடியும். ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)

ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் பொழுது எல்லோரும் தசவித நாதம் என்ற நிலையை அடைவார்கள். நம்முள் பத்துவிதமான ஒலிகள் கேட்கத்துவங்கும். அவ்வொலி மத்தளம், பறை, பேரிகை, துந்துபி என பல்வேறு இசை கருவிகளை போல இருக்கும்.

இந்நிலையை உணரும் பொழுது நம் மூன்னோர்கள் தங்களில் உணர்ந்த ஒலியை எப்படி வெளியே கருவிகளாக செய்தார்கள் என்று ஆச்சரியம் அடைவீர்கள். முன்பின் தெரியாத ஓசை நம்மில் கேட்கும்பொழுது நமக்கு நோய் வந்ததாக முடிவுக்கு வருவோம். வெளியே கேட்கும் ஓசைகள் உங்களுள் கேட்கும் பொழுது அதை பிடித்து மேலே செல்ல முயலுவோம். அதனால் அவற்றை வெளியே இசை கருவியாக உண்டு செய்தார்கள்.

பல்வேறு வகையாக ஒலி இறைவனின் ரூபம் என கூறினாலும் நாம் அதை உணர்ந்தால் தானே புரிந்துகொள்ள முடியும். எளிய தியான பயிற்சி மூலம் நீங்களும் ஒலி ரூபமான இறைவனை உணர முடியும். அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா?

அமைதியான ஒரு அரை இருள் கொண்ட அறையில் அமருங்கள். உங்கள் முதுகு பகுதியை சுவரில் சாய்த்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆழமாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். தொடர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.

சில நிமிடத்தில் உங்கள் இதயத்தின் ஓசை மிகவும் நுட்பமாக உங்களுக்கு கேட்கத்துவங்கும். இந்த ஓசை உங்கள் காது என்ற புலனுக்கு கேட்’காது’. அது உங்களுக்குள்ளே கேட்கும். உங்கள் இதய ஓசையின் அளவை கவனியுங்கள். ஒரு ஓசைக்கும் அடுத்த ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளியை கவனித்த வண்ணம் இருங்கள். பிறகு அனைத்தும் தானாகவே நடக்கும்.

அதிகமாக நீங்கள் சாப்பிட்டுவிட்டு இந்த தியானத்தை செய்தால் உங்கள் தூக்கத்தில் எழும் நாதத்தை (குறட்டை ஒலி) பிறர் கேட்கத் துவங்குவார்கள். :)

இரயில் பயணங்களை நான் அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு அதன் தாள லயம் ஒரு காரணம். ரயிலில் அமர்ந்து கண்களை மூடி அதன் தாளத்தை தியானம் செய்தபடியே பயணித்தது உண்டா? அருமையான ஒரு தியானவழிகாட்டி என்றால் ரயிலின் ஓசையை கூறலாம். அதே போல மாட்டு வண்டியும் சிறந்த கருவியே. அதில் அமர்ந்து பயணிக்கும் பொழுது நம்மை தியான நிலைக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

அடுத்த முறை ரயிலிலோ மாட்டுவண்டியிலோ பயணிக்கும் பொழுது கண்களை மூடி அதன் தாளத்தில் தியானித்து பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் நாதவடிவம் எங்கும் நிறைந்திருப்பது புரியதுவங்கும்.

எனக்கு ஒரு ரகசிய எதிரி ஒருவர் உண்டு. நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். அவர் பயன்படுத்தும் வார்த்தையும், கருத்தும் சில நேரங்களில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

அவரின் வரிகளை படித்தால் செயலற்று கல்லாகிப்போவேன். அவரை போல கருத்துக்கள் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரை எதிரியாக்கியது. நீங்களும் அந்த எதிரியை தெரிந்து கொள்ளுங்கள். நான் இரு பகுதிகளாக எழுதிய இந்த கட்டுரையை அவரின் நான்கே வரி கள் மூலம் உணரலாம். அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் என் எதிரியின் பெயர் திருமூலன்.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
---------------------------------------------------------------திருமந்திரம் 30.
நன்றி சுக்ரவந்தீ இசை
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum