இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மோஷ சந்நியாச யோகம்

Go down

மோஷ சந்நியாச யோகம் Empty மோஷ சந்நியாச யோகம்

Post by eegaraiviswa Tue Apr 05, 2011 3:59 pm

மோஷ சந்நியாச யோகம்

சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.

எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.



அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.

अर्जुन उवाच
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥१८- १॥

அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் |
த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||

அர்ஜுந உவாச மஹாபா³ஹோ = அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்
ஹ்ருஷீகேஸ² = ஹ்ருஷீகேசா
கேஸி²நிஷூத³ந = கேசியைக் கொன்றவனே
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம் = சந்நியாசத்தின் இயல்பையும்
த்யாக³ஸ்ய ச = தியாகத்தின் இயல்பையும்
ப்ருத²க் வேதி³தும் இச்சா²மி = பிரித்துக் கேட்க விரும்புகிறேன்

அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

श्रीभगवानुवाच
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥१८- २॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் = விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது
ஸந்ந்யாஸம் கவய: விது³: = சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்
ஸர்வகர்மப²ல த்யாக³ம் = எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்
த்யாக³ம் விசக்ஷணா: ப்ராஹு = தியாகமென்று ஞானிகள் கூறுவர்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥१८- ३॥

த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||

ஏகே மநீஷிண: = சில அறிஞர்
கர்ம தோ³ஷவத் = கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி
த்யாஜ்யம் இதி ப்ராஹு = விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்
யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் இதி ச அபரே = விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்

சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.

निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः संप्रकीर्तितः ॥१८- ४॥

நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம |
த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||

ப⁴ரதஸத்தம = பாரதரில் சிறந்தவனே
புருஷவ்யாக்⁴ர = புருஷப் புலியே
தத்ர த்யாகே³ மே நிஸ்²சயம் ஸ்²ருணு = தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்
ஹி த்யாக³: த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: = தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது

பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥१८- ५॥

யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||

யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் = விடக் கூடாது
தத் கார்யமேவ = செய்யவே வேண்டும்
யஜ்ஞ: தா³நம் ச தப ஏவ = வேள்வியும் தானமும், தவமும்
மநீஷிணாம் பாவநாநி = அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥१८- ६॥

ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச |
கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||

து பார்த² = ஆனால் பார்த்தா
ஏதாநி கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா = இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்
ப²லாநி ச = பயன்களை வேண்டாமலும்
கர்தவ்யாநி இதி = செய்ய வேண்டும் என்பது
மே உத்தமம் நிஸ்²சிதம் மதம் = என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.

ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥१८- ७॥

நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே |
மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||

து நியதஸ்ய கர்மண: = ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை
ஸந்ந்யாஸ: ந உபபத்³யதே = துறத்தல் தகாது
மோஹாத் தஸ்ய பரித்யாக³ = மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்
தாமஸ: பரிகீர்தித: = தமோ குணத்தால் நேர்வதென்பர்

நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.

दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥१८- ८॥

து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் |
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||

யத் கர்ம = எது செய்ய வேண்டிய கருமமோ
து³:க²ம் ஏவ இதி = துன்பமாகக் கருதி
காய க்லேஸ² ப⁴யாத் = உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்
த்யஜேத் = செய்யாமல் விடுவானேயானால்
ஸ: = அவன்
ராஜஸம் த்யாக³ம் க்ருத்வா = அவன் ராஜஸ தியாகம் செய்து
த்யாக³ ப²லம் ந லபே⁴த் ஏவ = தியாகப் பயனை அடையமாட்டான்

உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.

कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥१८- ९॥

கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந |
ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||

அர்ஜுந நியதம் யத் கர்ம = அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை
கார்யம் இதி ஏவ = இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால்
ஸங்க³ம் ப²லம் ச த்யக்த்வா = ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து
க்ரியதே = செய்தால்
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக³: மத: = அதுவே சாத்விக தியாகம் எனப்படும்

நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥१८- १०॥

ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே |
த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||

ஸத்த்வஸமாவிஷ்ட: மேதா⁴வீ = சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்
சி²ந்நஸம்ஸ²ய: த்யாகீ³ =ஐயங்களையறுத்த தியாகி
அகுஸ²லம் கர்ம = இன்பமற்ற செய்கையை
ந த்³வேஷ்டி = வெறுப்பதில்லை
குஸ²லே ந அநுஷஜ்ஜதே = இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை

சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥१८- ११॥

ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: |
யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||

ஹி தே³ஹப்⁴ருதா = மேலும் உடம்பெடுத்தவனால்
அஸே²ஷத: கர்மாணி = முழுதுமே செய்கைகளை
த்யக்தும் ந ஸ²க்யம் = விட்டுவிட முடியாது
ய கர்ம ப²லத்யாகீ³ = எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ
ஸ: து த்யாகீ³ இதி அபி⁴தீ⁴யதே = அவனே தியாகி யெனப்படுவான்

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥१८- १२॥

அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் |
ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||

அநிஷ்டம் இஷ்டம் மிஸ்²ரம் ச = வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என
த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் = மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்
அத்யாகி³நாம் ப்ரேத்ய ப⁴வதி = தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந =சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை

வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥१८- १३॥

பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே |
ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||

மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
க்ருதாந்தே ஸாங்க்²யே = கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்
ஸர்வகர்மணாம் ஸித்³த⁴யே = எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி = ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன
மே நிபோ³த⁴ = (அவற்றை) என்னிடம் கேட்டுணர்

எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.

अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥१८- १४॥

அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ருத²க்³வித⁴ம் |
விவிதா⁴ஸ்²ச ப்ருத²க்சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் || 18- 14||

அத்ர அதி⁴ஷ்டா²நம் ச = அவை இடமும்
கர்தா ச = செயலை செய்பவன்
ப்ருத²க்³வித⁴ம் கரணம் ச = பலவிதக் கரணங்கள்
விவிதா⁴: ப்ருத²க் சேஷ்டா ச = வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்
தை³வம் ச பஞ்சமம் = இயற்கை என ஐந்து (காரணங்கள்)

அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.

शरीरवाङ्‌मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥१८- १५॥

ஸ²ரீரவாங்‌மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: |
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||

நர: ஸ²ரீர வாக் ‌மநோபி⁴: = மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்
யத் கர்ம ப்ராரப⁴தே = எந்தச் செயலைத் தொடங்கினாலும்
ந்யாய்யம் வா விபரீதம் வா = அது நியாயமாயினும் விபரீதமாயினும்
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ: = அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்

மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥१८- १६॥

தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: |
பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||

து ஏவம் ஸதி = இங்ஙனமிருக்கையில்
ய: அக்ருதபு³த்³தி⁴த்வாத் = எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை
தத்ர கேவலம் ஆத்மாநம் = அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய ஆத்மாவை
கர்தாரம் பஸ்²யதி = கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ
ஸ து³ர்மதி: ந பஸ்²யதி = அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்

இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ॥१८- १७॥

யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே |
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||

யஸ்ய அஹங்க்ருதோ பா⁴வ ந = எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ
யஸ்ய பு³த்³தி⁴ ந லிப்யதே = பற்றுதல்கள் அற்று மதியுடையவன்
ஸ: இமாந் லோகாந் = அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்
ஹத்வா அபி ந ஹந்தி ந நிப³த்⁴யதே = கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்

‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.

ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா |
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா = அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்
த்ரிவிதா⁴ கர்மசோத³நா = இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித⁴: = கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்
கர்மஸங்க்³ரஹ: = கர்மத்தின் அமைப்பு ஆகும்

அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.

ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणु तान्यपि ॥१८- १९॥

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: |
ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||

கு³ணஸங்க்²யாநே = குணங்களை யெண்ணுமிடத்தே
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச = ஞானம், கர்மம், கர்த்தா
கு³ணபே⁴த³த: = இவை குண பேதங்களால்
த்ரிதா⁴ ஏவ = மும்மூன்று வகைப்படும் என்று
ப்ரோச்யதே = சொல்லப் படுகின்றன
தாநி அபி யதா²வத் ச்²ருணு = அவற்றையும் உள்ளபடி கேள்

குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.

सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥१८- २०॥

ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே |
அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||

ஏந விப⁴க்தேஷு = எந்த ஞானத்தினால் தனித்தனியான
ஸர்வபூ⁴தேஷு = உயிர்கள் அனைத்திலும்
அவிப⁴க்தம் அவ்யயம் ஏகம் பா⁴வம் = பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை
ஈக்ஷதே = காணுகிறானோ
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்³தி⁴ = அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி

பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥१८- २१॥

ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் |
வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||

து யத் ஜ்ஞாநம் = ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக
ஸர்வேஷு பூ⁴தேஷு = உயிர்களனைத்திலும்
ப்ருத²க்³விதா⁴ந் நாநாபா⁴வாந் = வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்
ப்ருத²க்த்வேந வேத்தி = பிரித்துக் காணும்
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்³தி⁴ = அந்த ஞானம் ராஜசம் என்றுணர்

உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.

यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥१८- २२॥

யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||

து யத் ஏகஸ்மிந் கார்யே = ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை
க்ருத்ஸ்நவத் ஸக்தம் = அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்
தத் அஹைதுகம் = யுக்திக்கு பொருந்தாததும்
அதத்த்வார்த²வத் = உண்மையில் அறியாததும்
அல்பம் ச = அற்பத் தன்மை உடையதும்
தாமஸம் உதா³ஹ்ருதம் = தாமசமென்று கூறப்படும்

காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

नियतं सङ्गरहितमरागद्वेषतः कृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥१८- २३॥

நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் |
அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||

யத் கர்ம = எந்த செய்கை
நியதம் ஸங்க³ரஹிதம் = விதிப்படி பற்றுதல் இன்றி
அப²லப்ரேப்ஸுநா = பயனைக் கருதாமல்
அராக³த்³வேஷத: = விருப்பு வெறுப்பின்றி
க்ருதம் = செய்யப் படுகிறதோ
தத் ஸாத்த்விகம் உச்யதே = அது சாத்விக மெனப்படும்

பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.

यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥१८- २४॥

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |

க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||

து யத் கர்ம = ஆனால் எந்த செயல்
புந: காமேப்ஸுநா = விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்
வா ஸாஹங்காரேண = அல்லது அகங்காரமுடையவனால்
ப³ஹுலாயாஸம் = செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை
தத்³ ராஜஸம் உதா³ஹ்ருதம் = அது ராஜசம் எனப்படும்

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.

अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥१८- २५॥

அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் |
மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||

யத் கர்ம அநுப³ந்த⁴ம் = எந்தச் செய்கையின் பின்விளைவையும்
க்ஷயம் = அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்
ஹிம்ஸாம் = துன்பத்தையும்
பௌருஷம் ச = செய்வானது திறமையையும்
அநவேக்ஷ்ய = கருதாமல்
மோஹாத் ஆரப்⁴யதே = அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ
தத் தாமஸம் உச்யதே =தாமச மெனப்படும்

செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥१८- २६॥

முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: |
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||

முக்தஸங்கோ³ = பற்றற்றவனாகவும்
அநஹம்வாதீ³ = நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்
த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: = உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்
ஸித்³தி⁴ அஸித்³த்⁴யோ நிர்விகார: = வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்
கர்தா ஸாத்த்விக உச்யதே = உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.

நசைக ளற்றான், நானென்ப தற்றான்,
உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான்-
இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.

रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥१८- २७॥

ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |
ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||

ராகீ³ = வேட்கையுடையோன்
கர்மப²லப்ரேப்ஸு = செய்கைப் பயன்களை விரும்புவோன்
லுப்³த⁴: = லோபி (பேராசை உள்ளவன்)
ஹிம்ஸாத்மக: = இடர் செய்வோன்
அஸு²சி: = தூய்மை யற்றோன்
ஹர்ஷஸோ²காந்வித: = இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்
கர்தா ராஜஸ: பரிகீர்தித: = இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்

வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥१८- २८॥

அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |
விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||

அயுக்த: = கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்
ப்ராக்ருத: = அறிவு முதிர்ச்சி அடையாதவன்
ஸ்தப்³த⁴: = கர்வமுடையவன்
ஸ²ட²: = வஞ்சகம் உடையவன்
நைஷ்க்ருதிக: = பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்
விஷாதீ³ = கவலை கொண்டவன்
அலஸ: = சோம்பேறியும்
தீ³ர்க⁴ஸூத்ரீ ச = காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்
கர்தா தாமஸ உச்யதே = இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்

யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.

बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय ॥१८- २९॥

பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |
ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
கு³ணத: ஏவ = குண வகையால்
பு³த்³தே⁴: த்⁴ருதே: ச = புத்திக்கும் மன உறுதிக்கும்
த்ரிவித⁴ம் பே⁴த³ம் = மூன்று விதமான வேறுபாட்டை
அஸே²ஷேண ப்ருத²க்த்வேந = முழுமையாகவும் பகுத்தும்
ப்ரோச்யமாநம் ஸ்²ருணு = உரைக்கிறேன், கேள்

குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.

प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३०॥

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே |
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||

பார்த² = அர்ஜுனா
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச = எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்
கார்யாகார்யே ப⁴யாப⁴யே ச = செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச வேத்தி = பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்
ஸா பு³த்³தி⁴: ஸாத்த்விகீ = அந்த புத்தியே சாத்விக புத்தியாம்

தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.

यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥१८- ३१॥

யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச |
அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||

பார்த² = பார்த்தா.
யயா த⁴ர்மம் அத⁴ர்மம் ச = எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்
கார்யம் அகார்யம் ஏவ ச = செய்யத் தக்கது, தகாதது
அயதா²வத் ப்ரஜாநாதி = உள்ளபடி அறியாத
ஸா பு³த்³தி⁴: ராஜஸீ = புத்தி ராஜச மெனப்படும்

தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.

अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥१८- ३२॥

அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா |
ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||

பார்த² = பார்த்தா
யா தமஸா ஆவ்ருதா = எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்
அத⁴ர்மம் த⁴ர்மம் இதி ச = அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்
ஸர்வார்தா²ந் விபரீதாந் ச = எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக
மந்யதே = நினைக்கிறதோ
ஸா பு³த்³தி⁴: தாமஸீ = அது புத்தி தாமச புத்தியாம்

பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३३॥

த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: |
யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||

பார்த² = பார்த்தா
யயா அவ்யபி⁴சாரிண்யா த்⁴ருத்யா: = எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்
யோகே³ந = யோகத்தின் மூலம்
மந: ப்ராண இந்த்³ரியக்ரியா: = மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை
தா⁴ரயதே = நிலை நிறுத்துகிறானோ
ஸா த்⁴ருதி: ஸாத்த்விகீ = அந்த உறுதியே சாத்வீகமாவது

மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.

यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥१८- ३४॥

யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந |
ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||

து பார்த² = ஆனால் பார்த்தா
அர்ஜுந = அர்ஜுனா
ப²லாகாங்க்ஷீ = பயன்களை விரும்புவோன்
யயா த்⁴ருத்யா = எந்த உறுதியினால்
ப்ரஸங்கே³ந = மிகுந்த பற்றோடு
த⁴ர்மகாமார்தா²ந் தா⁴ரயதே = அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ
ஸா த்⁴ருதி: ராஜஸீ = அந்த உறுதி ராஜசம் ஆகும்

பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.

यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥१८- ३५॥

யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச |
ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||

யயா = எந்த (மன உறுதியினால்)
ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் = உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்
விஷாத³ம் = ஏக்கத்தையும்
மத³ம் = செருக்கையும்
ந விமுஞ்சதி = விடமுடியவில்லையோ
பார்த² த்⁴ருதி: ஸா தாமஸீ = பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது

பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥१८- ३६॥

ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ |
அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||

ப⁴ரதர்ஷப⁴ = பாரதக் காளையே!
இதா³நீம் த்ரிவித⁴ம் ஸுக²ம் = இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை
மே ஸ்²ருணு = என்னிடமிருந்து கேள்
யத்ர அப்⁴யாஸாத் ரமதே = எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ
து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி = எதனில் துக்க நாச மெய்துவானோ

பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥१८- ३७॥

யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் |
தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||

யத் அக்³ரே விஷம் இவ = எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்
தத் பரிணாமே அம்ருதோபமம் = அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ
தத் ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் = அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது
தத் ஆத்ம பு³த்³தி⁴ ப்ரஸாத³ஜம் = அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது

எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥१८- ३८॥

விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||

யத் விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த் = எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்
அக்³ரே அம்ருதோபமம் = தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
பரிணாமே விஷமிவ = விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ
தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த இன்பம் ராஜசம் எனப்படும்

விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.

यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥१८- ३९॥

யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: |
நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||

யத் ஸுக²ம் அக்³ரே ச அநுப³ந்தே⁴ ச = எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்
ஆத்மந: மோஹநம் = ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்
நித்³ரா ஆலஸ்ய ப்ரமாத³: உத்த²ம் = உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்
தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அது தாமசமென்று கருதப்படும்

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥१८- ४०॥

ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: |
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||

ப்ரக்ருதிஜை: = இயற்கையில் தோன்றும்
ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணை: = இம்மூன்று குணங்களினின்றும்
முக்தம் = விடுபட்ட
யத் ஸத்த்வம் ஸ்யாத் = எந்த உயிர் இருக்குமோ
தத் ப்ருதி²வ்யாம் வா = அது மண்ணுலகத்திலோ
தி³வி தே³வேஷு வா = வானுலகத்தில் தேவருள்ளேயொ
புந: ந அஸ்தி = வேறு இடங்களிலோ இல்லை.

இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.


eegaraiviswa

Posts : 26
Join date : 04/04/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum