Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சிவகங்கையின் இரட்டைத்திருப்பதி
3 posters
Page 1 of 1
சிவகங்கையின் இரட்டைத்திருப்பதி
பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.
Re: சிவகங்கையின் இரட்டைத்திருப்பதி
சிவன் wrote:பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.
rajanrajanrn- Posts : 1
Join date : 04/12/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum