இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2)

3 posters

Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2) Empty ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2)

Post by சாமி Sun Apr 01, 2012 8:48 am

ருத்திரத்தில் ருத்ரன் ஒரு வில்லன்
நமகம் எடுத்த உடனே ருத்ரனே உனது கோபத்திற்கு வணக்கம் என்று தொடங்குகிறது.

“(ருத்ர) ருத்திரரே (தே) உம்முடைய (மன்யவே) கோபத்திற்கு (நம) நமஸ்காரம்” என்பது அதன் தொடக்கம். இன்னும் பிற:
அழ வைப்பவரும் (பத்தீனாம் பதயே) காலாட்படையின் தலைவருமான பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(ஸ்தேனானம் பதயே) கள்வர் தலைவருமாகிய பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(தஸ்கரணாம் பதயே) கொள்ளைக்காரர்களின் தலைவரும் ஆகிய பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(வஞ்சதே) வஞ்சகராகவும் (படுவஞ்சதே) படுவஞ்சகராகவும் (ஸ்தாயூனாம் பதயே) நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(நிசரவே) திருடுவதற்காக உள்ளே சஞ்சரிப்பவராகவும் (பரிசராய) திருடுவதற்காக வெளிபோந்து சஞ்சரிப்பவராயும் (அரண்யானாம் பதயே) வனங்களில் வழிபறிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(ஸ்ருகாவிய்ய) ஆயுதங்களால் தங்களை ரட்சித்துக் கொள்பவர்களாயும் (ஜீகாங்வதிப்ய) பிறரை இம்சிப்பவர்களாகவும் (முஷ்ணதாம் பதயே) உழவாளியாய் இருந்து யஜமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(அஸிமத்ப்ய) வாளேந்தியவர்களாகவும் (நக்தஞ்சரத்ப்ய) திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்பவர்களாகவும் (ப்ரக்ருந்தானாம் பதயே) பிறரைக் கொன்று பொருளை அபகரிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.


ருத்ரத்தில் நமசிவாய சொருகப்பட்டது.
இதுபோல வரும் நமக சமக சுலோகங்கள் பல. இதில் ருத்ரன் எப்படி வர்ணிக்கப்படுகிறான் என்பது வெளிப்படை. இப்படி வரும் ஸ்ரீ ருத்ரத்தில் நட்ட நடுவில் நமசிவாய என்று வருகிறது

நமசிவாய வருகிறது என்று பலர் பெருமையாக சொல்வது பெரிய வேடிக்கை!. அப்படியானால் சிவமூலமந்திரம் கொள்ளைக் காரர்கள், பிறர் பொருளைக் கொன்று அபகரிக்கும் வழிப்பறித் திருடர்கள் நடுவே அல்லவா மாட்டிக்கொண்டுள்ளது? எனில் நமசிவாய என்ற மூலமந்திரமே இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தது, அவர்களுக்கு நடுநாயகமானது என்றுதானே பொருள்!

இதை எப்படி சிவவழிபாடாக ஏற்றுக் கொள்ள இயலும்? நடுநிலையாளர்கள் இது ஏற்கத் தக்கது என்றே கூறுவர் என்பது வெளிப்படை.

(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2) Empty Re: ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2)

Post by சேயோன் Sun Apr 01, 2012 9:51 am

படித்தாலே பயமாக இருக்கிறது. விளக்கத்திற்கு நன்றி

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2) Empty கடவுளைக்கண்டு பயமேன்?

Post by கணேஷ் Tue Apr 03, 2012 1:22 am

சேயோன் wrote:படித்தாலே பயமாக இருக்கிறது. விளக்கத்திற்கு நன்றி

நான் படித்த ஒரு ஜப்பான் நாட்டுக்கதை

ஒரு அழகிய இளம் வணிகனுக்கு அப்பொழுதுதான் திருமணம் முடிந்திருந்தது. கடவுள்மீது நம்பிக்கைகொண்டவனான அந்த இளைஞன் தனது புது மனைவியுடன் பக்கத்துத் தீவுக்குக் கப்பலில் இன்பச்சுற்றுலா சென்றான். அப்பொழுது திடீரெனப் பெரும் புயல் ஒன்று வீசத்தொடங்கியது அவனோ எந்தப் பதட்டமும் இல்லாமல் கப்பலைச் செலுத்த ஏற்பாடுகள் செய்தபடி இருந்தான் புதுமனைவிக்கோ இது வியப்பைத்தந்தது. அவள் கணவனிடம் இந்தப் புயலைக்கண்டு பயம் ஏற்படவில்லையா என்று கேட்டாள். உடனே அவன் அவளைப்பிடித்து அவளது கழுத்தின்மீது தன்னிடமிருந்த கத்தியை வைத்தான். இச்செயலைக்கண்ட அப்பெண் கலகல என்று சிரித்தாள்.

கத்தியை எடுத்தவாறே வாலிபன் கேட்டான்

"என் சிரித்தாய்?"

"எப்பொழுதுமே விளையாட்டு தானா ?"
இது புது மனைவியின் பதில்.

இளைஞன் மனைவியிடம் சொன்னான் "இதைப்போலத்தான் கடவுள் விளையாடுகிறார் நாம் அஞ்சவேண்டியதில்லை"

இது இறை நம்பிக்கையாளர்களின் வழி. நீங்களும் இவ்வழியை முயன்றுபாருங்கள் பயம் போய்விடும்.

அதுசரி தமிழில் ஒருவர் " பித்தா பிறைசூடி" என்று இந்த சிவனைப் பாடியுள்ளார் அப்படிப்பார்த்தால்
போயும் போயும் ஒரு பைத்தியத்தையா நாம் வணங்கிவருகிறோம் யாராவது என் குழப்பத்தைத் தீர்த்து வைக்கிறீர்களா?

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2) Empty Re: ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி - 2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum