இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


குமுதம் கட்டுரை

2 posters

Go down

குமுதம் கட்டுரை Empty குமுதம் கட்டுரை

Post by ஆனந்தபைரவர் Sat Aug 07, 2010 10:56 pm

இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. பொதுவாக இது போன்ற கட்டுரைகளை பொது ஊடகங்களில் காண்பது அரிது. ஹிந்து விரோத சக்திகளின் கையில் சிக்கியுள்ள ஊடகங்கள் தொடர்ந்து பொது மக்களை ஒரு வித மூளைச் சலவைக்கு ஆளாக்கி வருகின்றன. ஹிந்துக்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்துவது, ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை இருட்டடிப்பு செய்வது, உண்மையை திரிப்பது என்று பலவித வரலாற்று தவறுகளை ஊடகங்கள் செய்து வருகின்றன. வெறும் வியாபார நோக்கம் மட்டும் அல்லது, தேச விரோதமாகவே ஊடகங்கள் செயல்பட்டும் இதனை கண்டுகொள்ளவோ, கண்டிக்கவோ சற்றும் எண்ணம் இல்லாத அரசாங்கம் வேறு. இந்நிலையில் இது போன்ற ஒரு கட்டுரை குமுதத்தில் வெளியாகி இருப்பது வரவேற்க தகுந்தது.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்களின் பூமியாக இருந்த ஆப்கனிஸ்தான் இன்று இந்துக்களின் சுவடே இன்றி ஆகி விட்டிருப்பதை கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அகண்ட பாரதமாக இருந்த இந்த தேசம், துண்டாடப்பட்டு அடையாளம் இழந்து நிற்கிறது.

இந்துக்களின், வேத, தர்ம சாத்திர, புராண, இதிகாச மொழியான சமஸ்க்ருதத்துக்கு புகழ் பெற்ற இலக்கண நூலை எழுதிய பாணினி இன்றைய ஆப்கனிஸ்தானில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சங்கரரும், ராமானுஜரும் தமது முக்கிய ஆன்மீக உரைகளை எழுத துவங்கியது நமது காஷ்மீரத்தில் தான் என்பது எத்தனை பேர் அறிவர்? காஷ்மீர ராஜ வம்ச வரலாற்றை பற்றி கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்கிற நூலை இன்றைக்கு காஷ்மீரில் அறிந்தவர்கள் ஓரிருவராவது மிச்சம் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஜனநாயகத்தின் வரவால், நாம் நமது பாரம்பரியத்தை இழந்து விட்டிருக்கிறோம். நமது நாட்டுக்கே உரிய கலாச்சாரங்கள் அழியும் நிலை அடைந்து, அரபி கலாச்சாரத்துக்கும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கும் மக்கள் ஏற்றுமதி ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கும் பாட திட்டத்தில், சங்கரர், ராமானுஜர் எல்லாம் எங்கே இடம் பெறுகிறார்கள்? இது திட்டமிட்ட இருட்டடிப்புதானே…!


குமுதம் கட்டுரை 1100533603-1
குமுதம் கட்டுரை 1100533604-1

இங்கே நீங்கள் காண்பவை ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையில் (Daily Mirror) வெளியாகியுள்ள இந்தியாவின் வரைபடங்கள். எதிர்வரும் ஆண்டுகளில் பாகிஸ்தானின் துணையுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தால் இந்தியா எப்படி உருமாறும் என்கிற இந்த படங்கள் வெறும் கற்பனை மட்டும் அல்ல - அவை நிஜத்தில் நடக்க சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. சுயநலமான அரசியல் வாதிகள், அவர்களின் நேர்மையில்லாத அரசாங்கம் என்கிற இந்த சூழ்நிலை அந்நிய சக்திகளுக்கு நிறையவே ஊக்கம் கொடுத்து வருகின்றன.

இதைத்தான் அந்த கட்டுரை, “சுதந்திரம் கிடைத்தபின்பு, தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக்கொடுப்பது; தகுதி இல்லாவிடினும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை முக்கியப் பதவிகளில் அமர்த்துவது, அரசியல் சட்டத்தை அவ்வப்போது தங்கள் இஷ்டம்போல் மாற்றுவது, ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதற்காகத் தேசத்தின் நலனைப் புறக்கணிப்பது, தங்கள் கோழைத்தனத்தை மறைப்பதற்காக அவ்வப்போது சாதுர்யமாக அறிக்கைகள் விடுவது, நாட்டு நலனின் முக்கியக் காவலர்களான பத்திரிகைகளைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்வது என்று காலம் காலமாக நம் அரசியல் கட்சிகள் - அதிலும் முக்கியமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததன் விளைவைத்தான் இன்று இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.” என்று மிகச்சரியாக குறிப்பிடுகிறது.

இது போன்ற ஒரு சூழல் நமக்கு புராணங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு அரக்கன், மக்களை கொடுமைப் படுத்தி அடக்குவதும், அதற்காக கடவுள் ஒரு அவதாரமெடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவதும் நமது நூல்களில் காணப்படும் ஒன்றுதான். கண்ணனே, யுகந்தோறும் தீமை மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட மறுபடி அவதரிப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறான். இந்த தேசத்தைக் தீய சக்திகளிடமிருந்து காக்க கண்ணனின் அவதாரமாக ஒரு தேச பக்தன் கிடைக்க மாட்டானா என்று அந்த குமுதம் கட்டுரை எழுப்புகிற கேள்வி மிக முக்கியமானது.

ஊடகங்களும், கல்வி முறையும், அரசியல் கடந்த பல ஆண்டுகளாக எழுப்பியுள்ள இந்த மேக மூட்டத்தை மீறி இந்துக்கள் உண்மையை கண்டுகொள்ள வேண்டிய தருணம் இது.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by Dheeran Thu Dec 08, 2011 5:28 pm

சரியான எச்சரிக்கை நண்பரே, ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு சுயநலத்தைமட்டும் பேணுவதை விட்டு விட்டு நாட்டுக்காகவும், பண்பாட்டுக்காகவும் ஒன்றுபடவும், தியாகங்கள் புறியவும் தயாராகாவிட்டால் மிகவிரைவில் ஹாஃபிஸ்சய்யித் போன்ற பயங்கரவாதிகளின் கருணையை எதிர்பார்த்து வாழும் நிலை விரைவில் வந்தாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

சூல்நிலை மோசமடைய ஆரம்பித்துவிட்டது தோழர்களே! கோவையில் வார்டு கவுன்சிலர்பதவிக்கு ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்கள். காசுபண்ண எதையும் செய்யும் காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் அவர்களுக்கு வேலைகளிலும் கல்வியிலும் தனி இட ஒதுக்கீடு தர தயாராகிவிட்டது, மீண்டும் நம் தாய்நாட்டுக்குள் குட்டி பாகிஸ்தான்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இன்னும் தூங்கிக்கொண்டிருந்தால் மானத்தோடு வாழ கோவணம்கூட கிடைக்காது. கடந்தகாலம் கற்றுக்கொடுத்த பாடங்களை மறந்துவிடாமல் செயல்படவில்லை என்றால்
நிலைமை கைமீறிவிடும் அதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை...
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum