இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மதத்தின் குற்றமா? மனிதனின் குற்றமா?

Go down

மதத்தின் குற்றமா? மனிதனின் குற்றமா? Empty மதத்தின் குற்றமா? மனிதனின் குற்றமா?

Post by ராகவன் Wed Sep 15, 2010 12:32 am




இந்து மதம் காலம் காலமாக பல இடிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தெரிந்தோ, தெரியாமலோ, வெள்ளைக்காரர்களோ, விஷமிகளோ நம் மதத்தைப் பற்றி பல தவறான கருத்துக்களை பரப்பி வருவது புதிதான ஒரு விஷயமல்ல. அதை போக்குவது நமது கடமை. எதையும் மேலோட்டமாக பார்க்கும் பொழுது அதன் முழு அர்த்தம் புலப்படுவதில்லை. பல, தவறாகவே தெரிகின்றன. பழங்கால வாழ்க்கை முறையில் குறிப்பாக திருமணத்தைப் பற்றி இங்கே பார்ப்போம். எதற்காக ஒரு சில பழக்கங்கள் இருந்தன, அதன் உள்ளர்த்தம் என்ன என்பதைப் பற்றி ஒரு அலசல்...

காதல்... இன்று இந்த வார்த்தை தினமும் ஒரு நூறு முறையாவது நம் காதில் விழுகிறது. டி.வி-யில், ரேடியோ-வில் எந்த சேனலை போட்டாலும் சரி, எந்த பத்திரிக்கையை புரட்டினாலும் சரி, காதல்... காதல்... காதல்... காதலை மையமாக வைத்து நம் நாட்டில் கணக்கில் அடங்கா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்னமும் சலிக்காமல் புதிய காதல் படங்கள் வந்த வண்ணம் உள்ளன. முக்காலும் உணர்ந்த ஞானிகளைத் தவிர இந்த காதல் ரசத்தை ருசி பார்க்காதவனே இருக்க முடியாது. சமயத்தில் முனிவர்கள் கூட காதல் வயப்பட்டதாக புராணங்களில் படிக்கிறோம.; உயிருள்ள எந்த பிராணிக்கும் காதல் பொதுவே என்பதை உணர முடிகிறது. உயிரோட்டமுள்ள இந்த பூமிக்கு உயிர் கொடுப்பதே இந்த காதல்தான் என்று சொன்னாலும் தகும். இன்று நகரங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணங்களை ஏற்க ஆரம்பித்து விட்டார்கள். இருப்பினும் சமீப காலம் வரை நம் நாட்டில் காதலுக்கு மிகுந்த எதிர்ப்புகள் இருந்தது. காதலுக்காக உயிரை விட்ட எண்ணிக்கையை விட காதலை எதிர்த்து உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பூமியில் இனப்பெருக்கத்திற்கு அடிப்படை காரணமாக இருக்கும் ஒரு விஷயத்தை ஏன் இப்படி எதிர்த்தார்கள் என்று எனது மனதை வருடிக்கொண்டே இருந்தது. நம் முன்னோர்கள் விஷயம் தெரிந்தவர்கள், அறிஞர்கள் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எதையும் காரணம் இல்லாமல் செய்து இருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் பழையதை கொஞ்சம் கிளறினோம்...

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தைப் பற்றி நான் ஏதும் விளக்க வேண்டியதில்லை. ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து, மியுசியத்தில், மணமக்கள் இருவரின் மெழுகு பொம்மையை வைத்து, இவர்களுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது என்று போர்ட் மாட்டி வைத்திருப்பார்கள். அந்த நிலை வரும் பொழுது விளக்கினால் போதும். ஆனால் ஏன் இந்த வழிமுறையை பின்பற்றினார்கள் என்று பலரும் மறந்திருக்கும் காலம் இது. ஒரு ஆணோ பெண்ணோ மேஜர் ஆகும் வயது 18 என்று உலக ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ஒரு விஷயத்தை இது நல்லது இது தீயது என்று தானே ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய தகுதி பெற்றுவிட்டார்கள் என்று அதற்கு பொருள். ஆனால் பஸ்ஸில் ஃபுட்போர்டிலும், கூறையிலும் தொங்கிக் கொண்டு எத்தனை மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். சமயத்தில் சிலர் ஓட்டுனருக்கு உதவியாக இருக்க வெண்டுமென்று அருகே ஜன்னலில் தொங்கிக் கொண்டு "பாம் பாம்... பாம் பாம்..." என்று அந்த ஓசையெழுப்பியை அழுத்திக் கொண்டு கூட போகிறார்கள். பதினெட்டு வயதில் இப்படி ஒரு பொறுப்பா... நான் என்னவோ மாணவர்களின் ஓட்டு எண்ணிக்கையை மனதில் கொண்டு அவர்கள் மேஜர் ஆகும் வயதை முடிவு செய்தார்களோ என்று தவறாக புரிந்து கொண்டு விட்டேன். இந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான். காலேஜில், சினிமா தியேட்டரில், இன்னும் பல இடங்களில் இது போன்று பல சேட்டைகள். இதையெல்லாம் பார்த்தால் முதர்ச்சியில் "மு" - கூட வரவில்லையென்றுதான் தோன்றுகிறது. பொதுவாக மனிதனுக்கு அந்தந்த வயதில் இருக்கக்கூடிய முதிர்ச்சியே இருக்கும். பதினெட்டு வயது ஆகி விட்டால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததாகி விடாது. பதிமூன்று வயது தொடங்கி சில வருடங்களுக்கு காம இச்சையின் தூக்கலே அதிகம் இருக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும் காலம் அது. அப்போது மரத்துக்கு புடவை கட்டினால் கூட ரசிக்கத் தோன்றும். அதற்கு பெயர் காதல் அல்ல. ஆங்கிலத்தில் இன்ஃபடியுயேஷன் என்று கூறுவார்கள். இப்படி குறைவான அனுபவமுள்ள வயதில், தான் கடைசிவரை சேர்ந்து வாழ வேண்டிய துணையை முறையாக தேர்ந்தெடுக்க முடியாது என்பதால்தான் அனுபவமுள்ள பெற்றோர்கள் அந்த வேலையை செய்தார்கள். புராண காலங்களின் காதல்களோ, ரோமியொ ஜீலியட், லைலா மஜ்னு போன்ற காதல்களோ, காவியங்களாக மாறின என்பதை பாhக்கிறோம். இவையெல்லாம் காவியங்களாக மாறியதற்கு காரணம் அவை எங்கேயோ ஒரு மூலையில் எப்பொழுதாவது அறிதாக நடந்தது. அதனால் அதற்கு மதிப்பு இருந்தது. சமீபகாலங்களில்... "பாடையிலே போகையிலும் தேவி உனை தேடி உயிர் பறந்திடுமே.." என்பதில் ஆரம்பித்து இப்பொழுது "தாவணி போனால் சுடிதார் உள்ளதடா..." என்று ஆகிவிட்டதால் காதலின் மதிப்பு போய்விட்டது.

அந்த காலத்தில் பால்ய விவாகம் என்ற ஒரு பழக்கம் இருந்தது. அதாவது குழந்தைகளுக்கு ஐந்து பத்து வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் பருவ வயதை அடையும் போதுதான் சேர்த்து வைப்பார்கள். அதுவரை அவரவர் பெற்றோர் வீட்டில் தனித் தனியே தான் இருப்பார்கள். இப்படி தனியாக இருப்பதற்கு எதற்காக பிஞ்சு வயதிலேயே திருமணம் செய்து வைக்க வெண்டும்? ஏதோ யோசிக்காமல் செய்த காரியம் போன்றல்லவா தோன்றுகிறது? இல்லை... அதிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. கிறுக்குத்தனமான பால்ய விவாகத்தில் அப்படி என்ன ஆழ்ந்த அர்த்தம் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? இதோ! அதற்கு பதில்... ஏற்கனவே சொன்ன படி பண்ணிரெண்டு பதிமூன்று வயது முதல் மனது அலைபாயும் நேரம். அப்பொழுது காதல் வயப்படுவது இயல்பு. தவிர்க்க முடியாதது. அப்படி ஏற்படும் காதல் தன் கணவன் மீதோ மனைவி மீதோதான் வர வேண்டும் வேறு எவர் மீதும் மனம் செல்லக்கூடாது என்பது முதல் காரணம். அந்த வயதில் வரும் முதல் காதலானது மிக ஆழமானதாக இருக்கும், அசைக்க முடியாததாக இருக்கும், நிலையானதாக இருக்கும். அப்படிப்பட்ட காதல் கணவனையோ மனைவியையோ சேர்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம். இப்படி வலுவாக ஒரு விஷயத்தில் மனது ஒருமுகப்படும் பொழுது அங்கே சலனங்களுக்கு இடமில்லை என்பது மூன்றாவது காரணம். எல்லாவற்றிற்கும் மேலாக அக்காலத்தில் உடலளவில் கற்போடு இருந்தால் மட்டும் போதாது மனதளவிலும் கற்போடு இருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டதால், இந்த விவாகத்தின் மூலம் மனது ஓரிடத்திலேயே லயித்திருப்பதால் இதையும் காக்க முடியும் என்பது நான்காவது காரணம். மனம் ஒரு குரங்கு என்பதை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர்கள் அதை எப்பொழுது, எங்கே, எப்படி கடிவாளம் போட்டு கட்டினால் அது நல்ல பாதையில் போகும் என்பதையும் நன்கே அறிந்து இருந்தார்கள். இப்பொழுது சொல்லுங்கள்... அவர்கள் அறிஞர்கள் தானே?? :)). ஒரு சில காலங்களில் பல காரணங்களுக்காக குழந்தைகளின் "சர்வைவல் ரேட்" மிக குறைந்ததாக இருந்தது. இந்த தருணத்தில் விவாகம் செய்யப்பட்ட சிறுவன் இறந்து போனால் அந்த விதவை சிறுமிக்கு சமுதாயத்தால் இழைக்கப்பட்ட தாங்கிக் கொள்ள முடியாத கொடுமைகள் ஏராளம் இருந்தது என்பதை நாம் அறிவோம்.

சதி என்ற பழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. அதாவது கணவன் இறந்து போனால் மனைவி தானே விரும்பி கணவனுக்காக மூட்டிய தீயில் தானும் விழுந்து தன் உயிரை போக்கிக் கொள்வது. கணவன் இல்லா உலகில் தனக்கு வேலையில்லை என்று தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் ஒரு சிலர். ஆனால் இதற்கு வெகுவாக விதிமுறைகள் இருந்தது. அவ்வாறு தன் உயிரை போக்கிக் கொள்ள விரும்பிய ஒரு பெண், ஞானம் சித்தித்த ஒரு சந்யாசியிடமிருந்து ஆசி பெற்று அவர் சம்மதம் கொடுத்தால் தான் அப்படி செய்ய அனுமதிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணிடம் ஒரு தெய்வீகத் தன்மை இருந்தால் மட்டுமே அந்த ஞானி அப்படி அருள் புரிவார். எல்லோராலும் அது செய்யப்படவில்லை. செய்ய அனுமதிக்கப்பட்டதும் இல்லை. இதெல்லாம் புராண காலம். காலப்போக்கில் கணவனை இழந்த பெண்களை அவள் இஷ்டமின்றி வற்புறுத்தி தீயில் தள்ள ஆரம்பித்தது சமுதாயம். பால்ய விவாகம், சதி போன்ற பழக்கங்களை துஷ்ப்பிரயோகப் படுத்துவது அதிகரித்தமையால் பின் காலங்களில் அவை சட்டரீதியாக தடை செய்யப்பட்டன.

வாசகர்களுக்கு ஒன்றை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். சில பழங்கால முறைகளை பற்றி கூறியதால் நாம் அவற்றை மறுபடியும் பழக்கத்தில் கொண்டு வரவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. நாம் வாழும் கால நேரத்தை தெளிவாக மனதில் வைத்துக் கொண்டு பார்த்தோமானால் அவைகள் சாத்தியப்படாது என்பதும் தெரியும் இக்கால கட்டத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் நல்லதை தருவதோடு கேட்டை விளைவிப்பதே அதிகமாக இருக்கும் என்பதும் தெரியம். இவற்றை ஆராய்ந்ததின் காரணம் குறைந்த பட்சமாக நாம் நம் மத விஷயங்களில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த அர்த்தங்களாகிய பொக்கிஷத்தை பற்றி எழுத்தளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

மதம் பல உயரிய நோக்கங்களோடு பல விஷயங்களைச் சொல்ல, அதை மனிதன் தன் சௌகரியத்திற்கேற்றார்போல் மாற்றிக் கொண்டுவிட்டு, அதன் தீய பின் விளைவுகளை மதத்தின் வெளிப்பாடு என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?? வானஊர்தி கண்டுபிடிக்கப்பட்டதால் நாம் இன்று ஒரு நாளுக்குள் உலகை சுற்றிவர முடிகிறது. இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இன்று வானஊர்தியை நாம் பிரயாணம் செய்ய மட்டுமா பயன் படுத்துகிறோம்? கண நேரத்தில் ஒரு நகரத்தையோ நாட்டையோ அழிக்ககூடத்தான் இன்றுவரையில் நாம் பயன்படுத்துகிறோம். இனியும் பயன் படுத்த போகிறோம். அதற்கா உயரிய நோக்கத்தோடு கண்டுபிடிக்கப்பட்ட வானஊர்தியை குறை சொல்ல முடியுமா அல்லது கண்டு பிடித்தவரைதான் நாம் குறை சொல்ல முடியுமா? எந்த விஷயமுமே நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. நன்மைக்காக பயன்படுத்தினால் நன்மை. தீமைக்காக பயன்படுத்தினால் தீமை. நம் இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள எந்த விஷயமும் அர்த்தமற்றவையல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதை தவறாக பயன்படுத்துவது மனிதனின் குற்றமே தவிர மதத்தின் குற்றமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இதைச் சொன்னேன்.


ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum