Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யலாமா?
3 posters
Page 1 of 1
குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யலாமா?
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.
தற்காலத்தில் க்ரஹ பெயர்ச்சிகளெல்லாம் பல இடங்களிலும்,பல ஆலயங்களிலும் வெகு விமர்சையான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இவை தேவையா?தேவையில்லையா?என்பதை பிறகு வேறு சமயம் விவாதிப்போம்.மேலும் குருப்பெயர்ச்சி சிறப்பாக இருந்த காலம் போய் குரு வக்ர நிவர்த்தி பெயற்சியும் தற்போது பிரபலமாகியுள்ளது.இது ஆன்மீகம் மக்களிடம் பரவுகிறதா?அல்லது மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரப்பப்படுகிறதா?என்ற கேள்வியையே ஏற்படுத்துகின்றது.சரி....விஷயத்துக்கு வருவோம்.
குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யக்கூடாது என்பதே என் கருத்து.இது பற்றி எனது ஆகமக்கடல் என்னும் வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளேன்.அதன் சாராம்சத்தை இங்கே வழங்குகிறேன்.
1.குரு பகவான் எனும் வியாழ பகவான் நவகிரஹங்களில் ஒருவர்.
2.தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவபெருமானின் 64 மாஹேஸ்வர வடிவங்களில் ஒருவர்.
3.வியாழன் எனும் குரு பகவான் பிறப்பெடுத்தவர்.
4.தக்ஷிணாமூர்த்தி பிறப்பற்றவர்.சிவனின் அம்சமே அவர்.அதாவது சிவபெருமானின் ஜெராக்ஸ் எனலாம்.
5.வியாழ பகவான் நவகிரஹங்களில் பெரிதாக இருக்கும் காரணத்தால் குரு என்ற பெயரையும் பெற்றுள்ளார்.{சமஸ்கிருதத்தில் குரு गुरु என்றால் பெரிய என்று பொருள.लघु லகு என்றால் சிறிய என்று பொருள்}
6.தக்ஷிணாமூர்த்தி சைவ ஆலயங்களில் தென்முகம் மௌனமாகஅமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு சின்முத்திரை காட்டி ஞானத்தை உபதேசிக்கிறார்.இவ்வாறாக ஆன்மாக்கள் ஈடேற ஞானத்தை உபதேசிக்கின்ற குரு வாக அவர் விளங்குவதால் தக்ஷிணாமூர்த்தியும் குரு என அழைக்கப்படுகிறார்.
7.குரு எனும் வியாழ பகவனுக்கு பெயர்ச்சி அதாவது இடம் மாறும் தன்மை உண்டு.
8.தக்ஷிணாமூர்த்தி சிவ பரம்பொருள்.அவரே மூலம்.எனவே இச்சிறிய தன்மையை விட அவர் மேலானவர்.
9.வியாழ பகவான் நவகிரக குரு.
10.தக்ஷிணாமூர்த்தி ஞான குரு.
11.நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கே கடலை மாலை,மஞ்சள் துணி போன்றவற்றை அணிவிக்கவேண்டும்.தக்ஷிணாமூர்த்திக்கு அல்ல.
12.தக்ஷிணாமூர்த்திக்கு சிவபெருமானுக்கு செய்யும் வழிபாடுகளே செய்யலாம்.ஞானத்தின் அடையாளமாக வெண்மை விளங்குவதால் தக்ஷிணாமூர்த்திக்கு வெள்ளை ஆடை அணிவிப்பது சிறப்பு.
மேலும் இதுபற்றிய விரிவான தகவல்களை படிக்க http://aagamakadal.blogspot.com
ல் சென்று படிக்கவும்.
எனவே இதை படிக்கின்ற அன்பர்கள் செய்யவேண்டியது.
1.எனது கருத்துக்களில் உடன்பாடு இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.இல்லை எனில் எக்காரணத்தினால் இதை ஏற்கவில்லை என்பதை எனக்கு தெரிவித்தால் அதற்கான பதில் வழங்கப்படும்.
2.தங்களுக்கு தெரிந்த அன்பர்களிடமும் இதை தெரிவியுங்கள்.
3.தங்களுக்கு அருகிலுள்ள ஆலங்களில் தக்ஷிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றால் ஆலய அர்ச்சகர் மற்றும் நிர்வாகிகளிடம் இது பற்றி எடுத்துக்கூறி அது தவறு என்றும் நவகிரக குருவுக்கே செய்யவேண்டும் என்பதையும் வலியுருத்துங்கள்.அல்லது அவர்களின் செயலே சரி என அவர்கள் கூறினால்,அவர்கள் கூறும் காரணத்தை எனக்கு தெரிவியுங்கள்.நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்.
இவ்வாறு நான் கூறுவதின் நோக்கம் என்ன எனில் மக்கள் அனைவரும் தவறான வழிபாட்டை செய்யாமல் வழி தெரிந்து வழிபடவேண்டும் என்பதே.இல்லையேல் நம் சந்ததிகளும் இதே தவறை சரி என செய்யலாம்.மிகுந்த மனம் வெதும்பி முடிக்கிறேன்.வேண்டும் தங்களின் ஒத்துழைப்பு.
நன்றி.
தற்காலத்தில் க்ரஹ பெயர்ச்சிகளெல்லாம் பல இடங்களிலும்,பல ஆலயங்களிலும் வெகு விமர்சையான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இவை தேவையா?தேவையில்லையா?என்பதை பிறகு வேறு சமயம் விவாதிப்போம்.மேலும் குருப்பெயர்ச்சி சிறப்பாக இருந்த காலம் போய் குரு வக்ர நிவர்த்தி பெயற்சியும் தற்போது பிரபலமாகியுள்ளது.இது ஆன்மீகம் மக்களிடம் பரவுகிறதா?அல்லது மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரப்பப்படுகிறதா?என்ற கேள்வியையே ஏற்படுத்துகின்றது.சரி....விஷயத்துக்கு வருவோம்.
குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யக்கூடாது என்பதே என் கருத்து.இது பற்றி எனது ஆகமக்கடல் என்னும் வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளேன்.அதன் சாராம்சத்தை இங்கே வழங்குகிறேன்.
1.குரு பகவான் எனும் வியாழ பகவான் நவகிரஹங்களில் ஒருவர்.
2.தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவபெருமானின் 64 மாஹேஸ்வர வடிவங்களில் ஒருவர்.
3.வியாழன் எனும் குரு பகவான் பிறப்பெடுத்தவர்.
4.தக்ஷிணாமூர்த்தி பிறப்பற்றவர்.சிவனின் அம்சமே அவர்.அதாவது சிவபெருமானின் ஜெராக்ஸ் எனலாம்.
5.வியாழ பகவான் நவகிரஹங்களில் பெரிதாக இருக்கும் காரணத்தால் குரு என்ற பெயரையும் பெற்றுள்ளார்.{சமஸ்கிருதத்தில் குரு गुरु என்றால் பெரிய என்று பொருள.लघु லகு என்றால் சிறிய என்று பொருள்}
6.தக்ஷிணாமூர்த்தி சைவ ஆலயங்களில் தென்முகம் மௌனமாகஅமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு சின்முத்திரை காட்டி ஞானத்தை உபதேசிக்கிறார்.இவ்வாறாக ஆன்மாக்கள் ஈடேற ஞானத்தை உபதேசிக்கின்ற குரு வாக அவர் விளங்குவதால் தக்ஷிணாமூர்த்தியும் குரு என அழைக்கப்படுகிறார்.
7.குரு எனும் வியாழ பகவனுக்கு பெயர்ச்சி அதாவது இடம் மாறும் தன்மை உண்டு.
8.தக்ஷிணாமூர்த்தி சிவ பரம்பொருள்.அவரே மூலம்.எனவே இச்சிறிய தன்மையை விட அவர் மேலானவர்.
9.வியாழ பகவான் நவகிரக குரு.
10.தக்ஷிணாமூர்த்தி ஞான குரு.
11.நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கே கடலை மாலை,மஞ்சள் துணி போன்றவற்றை அணிவிக்கவேண்டும்.தக்ஷிணாமூர்த்திக்கு அல்ல.
12.தக்ஷிணாமூர்த்திக்கு சிவபெருமானுக்கு செய்யும் வழிபாடுகளே செய்யலாம்.ஞானத்தின் அடையாளமாக வெண்மை விளங்குவதால் தக்ஷிணாமூர்த்திக்கு வெள்ளை ஆடை அணிவிப்பது சிறப்பு.
மேலும் இதுபற்றிய விரிவான தகவல்களை படிக்க http://aagamakadal.blogspot.com
ல் சென்று படிக்கவும்.
எனவே இதை படிக்கின்ற அன்பர்கள் செய்யவேண்டியது.
1.எனது கருத்துக்களில் உடன்பாடு இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.இல்லை எனில் எக்காரணத்தினால் இதை ஏற்கவில்லை என்பதை எனக்கு தெரிவித்தால் அதற்கான பதில் வழங்கப்படும்.
2.தங்களுக்கு தெரிந்த அன்பர்களிடமும் இதை தெரிவியுங்கள்.
3.தங்களுக்கு அருகிலுள்ள ஆலங்களில் தக்ஷிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றால் ஆலய அர்ச்சகர் மற்றும் நிர்வாகிகளிடம் இது பற்றி எடுத்துக்கூறி அது தவறு என்றும் நவகிரக குருவுக்கே செய்யவேண்டும் என்பதையும் வலியுருத்துங்கள்.அல்லது அவர்களின் செயலே சரி என அவர்கள் கூறினால்,அவர்கள் கூறும் காரணத்தை எனக்கு தெரிவியுங்கள்.நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்.
இவ்வாறு நான் கூறுவதின் நோக்கம் என்ன எனில் மக்கள் அனைவரும் தவறான வழிபாட்டை செய்யாமல் வழி தெரிந்து வழிபடவேண்டும் என்பதே.இல்லையேல் நம் சந்ததிகளும் இதே தவறை சரி என செய்யலாம்.மிகுந்த மனம் வெதும்பி முடிக்கிறேன்.வேண்டும் தங்களின் ஒத்துழைப்பு.
நன்றி.
Re: குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யலாமா?
மிக்க நன்றி ஐயா ,
நடத்துனர்- Posts : 49
Join date : 31/07/2010
Re: குருப்பெயர்ச்சி வழிபாடுகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யலாமா?
தங்கத்தை மதிப்பீடு செய்வதற்க்கு இரும்பும் , பித்தளையும் ( தராசு வடிவில்)
உதவுவது போல, சூரியனை ஆராதனை செய்து அவருக்கு வழங்கப்படும் காணிக்கைகளை அக்னி தேவன் ஏற்று சேர்ப்பது போல, பரம்பொருளான மேதா தட்சிணாமூர்திக்கு வழங்க குரு பகவான் அவர் சார்பில் ஏற்று அவரிடமே ( பரம்பொருளிடமே) கொண்டு சேர்கிறார். இதில் பிரதிநிதித்வம் முக்கியமானது. புனிதமான தாயை மரியாதை செய்தால் அகிலாண்டேஸ்வரிக்கு மரியாதை செய்தது போலாகும். காரகத்துவம் வைத்தே பிரதிநிதிth வம் அமைகிறது என்பது என் தாaalமையான கருத்து.
உதவுவது போல, சூரியனை ஆராதனை செய்து அவருக்கு வழங்கப்படும் காணிக்கைகளை அக்னி தேவன் ஏற்று சேர்ப்பது போல, பரம்பொருளான மேதா தட்சிணாமூர்திக்கு வழங்க குரு பகவான் அவர் சார்பில் ஏற்று அவரிடமே ( பரம்பொருளிடமே) கொண்டு சேர்கிறார். இதில் பிரதிநிதித்வம் முக்கியமானது. புனிதமான தாயை மரியாதை செய்தால் அகிலாண்டேஸ்வரிக்கு மரியாதை செய்தது போலாகும். காரகத்துவம் வைத்தே பிரதிநிதிth வம் அமைகிறது என்பது என் தாaalமையான கருத்து.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum