இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

4 posters

Go down

தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம். Empty தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

Post by சாமி Sun Apr 08, 2012 9:00 pm

வடவேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஆரியப்பிராமணரான உமாபதிசிவம் தமிழ் – வடவேதங்களை ஒப்பீடு செய்து பாடிய பாடல் ஒன்றுண்டு. அது வருமாறு:

அருமறையைச் சிக்சிலிபண் டருந்தத் தேடும்
அதுபோலன் றிதுவெண்னும் உளதாம் உண்மை 1
பரபதமும் தற்பரமும் பரனே அன்றி
பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரில் 2
எரியினிடை வேவாது ஆற்றெதிரே ஓடும் 3
என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும் 4
கரியைவளை விக்கும்கல் மிதக்கப் பண்ணும் 5
கராமுதலை கரையிலுறக் காற்றும் காணே. 6

 
1. வடவேதங்கள் ‘சிச்சிலி’ என்ற பறவையால் விழுங்கி, பின் வெளிப்படுத்தப்பட்டவை. தமிழ் வேதமாகிய திருமுறையோ அப்படி இன்றி என்றும் உள்ளது.
2. வட வேதங்களில் இந்திரன், வருணன், அக்கினி, சவிதா எனப்பல தேவர்கள் வணங்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ் வேதமாகிய திருமுறை கடவுள் ஒருவர்தான் என்றும், அவரும் சிவன்தான் என்று கூறுவது.
(திருமுறைகள் மந்திர ஆற்றலுடையவை)
3. தீயில் இட்ட ஏடு எரியாது பச்சென்று நின்றது (சம்பந்தர் திருமுறை). ஆற்றில் விட்ட ஏடு ஆற்றின் நீரோட்டத்திற்கு எதிராக ஓடி நின்றது (சம்பந்தர் திருமுறை).
4. எலும்பைப் பெண்ணாக்கியது (சம்பந்தர் திருமுறை), நஞ்சை அமுதாக்கியது (அப்பர் திருமுறை)
5. கொல்ல ஏவப்ப்பட்ட யானை வலம் வந்து சென்றது (அப்பர் திருமுறை), கல்லைக் கடலில் இட்டபோது கல் கடலில் மிதக்கும்படி செய்தது (அப்பர் திருமுறை)
6. முதலை உண்ட பாலனை மீட்டு அம்முதலையே அந்த பாலனை குளக்கரையில் கக்கச் செய்தது (சுந்தரர் திருமுறை). இவ்வாறு அற்புதங்களை ஆற்றும் மந்திரவல்லமை தமிழ் வேதத்தில் காணப்படுகிறது. வடமொழி வேதத்தில் அப்படி ஒன்றும் காணப்படவில்லை.

இவ்வாறு உமாபதி சிவம் பாடிய பாடல் வடதமிழ் வேதங்களை ஒப்பீடு செய்து தமிழ் வேதமாகிய திருமுறையின் பெருமையை நிலைநாட்டுகிறது. இதனை வடவேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஆரியப்பிராமணரான உமாபதிசிவம் பாடியது குறிப்பிடத்தக்கது.

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம். Empty Re: தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

Post by சேயோன் Mon Apr 09, 2012 8:24 am

நன்றி சாமி,

உமாபதி சிவம் அவர்கள் தமிழ் வேதம் வடவேதம் இரண்டையும் முழுமையாக உணர்ந்து படித்ததால் இதைத் தெரிவித்தார்கள்.

இங்கே உள்ள சில அரைவேக்காடுகள் எதையும் படிக்காமல் தமிழில் என்ன சொல்லியிருந்தாலும் அதை திரித்து வடமொழிதான் எல்லாவற்றிற்கும் மூலம் எனப் பிதற்றுகிறார்கள். இது அவர்களின் அறியாமை. அவர்கள் இன்னும் பக்குவத்திற்கு வரவில்லை என்பது தெரிகிறது. பரம்பொருள்தான் அவர்கள் அறியாமையை போக்க வேண்டும்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம். Empty Re: தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

Post by tmm_raj_ramesh Mon Apr 09, 2012 11:07 am

நம் தாய்மொழியைக் காக்க இது போன்ற தேட்ல்கள் மிக முக்கியமாகும். தங்களின் பதிவிற்கு நன்றி
தேடல்கள் தொடரட்டும் வெற்றி நமதே.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம். Empty Re: தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

Post by svelan74 Mon Apr 09, 2012 6:14 pm

திரு சாமி அவர்களுக்கு,

இன்னொரு பதிவில் அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நான்கு வேதங்கள் என்கின்றீர்கள். இங்கு திரு உமாபதி சிவம் அவர்களின் பதிவை இட்டு திருமுறைகள் தான் தமிழ்வேதங்கள் என்று கூறுகின்றீர்கள். ஒரு தமிழ் மாணவனாக தங்களின் பதிவுகளிலிருந்து தெளிவு கிடைக்கும் என்று படிக்கும் எனக்கு தங்களுடைய பதிவுகள் மிகவும் குழப்பமடைய செய்கிறது. மேலும் மற்றோர் பதிவில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு நேரமின்மை காரணமாக பதில் அளிக்கவில்லை என்கிறீர்கள்..ஆனால் அதே கருத்தைக் கொண்ட செய்தியை இன்னொரு புதிய பதிவில் இடுகிறீர்கள்.  ஏன் இது? ஒரு தலைப்பை எழுதி, அது சம்பந்தமான செய்திகள், துணைசெய்திகள், அதற்கு வரும் கேள்விகள், இவையெல்லாவற்றையும் அந்த தலைப்பிலேயே பதிலெழுதி முடிப்பது தானே சிறப்பு?

மேலும் ஆரிய பிராமணர் என்று வலிந்து திரு உமாபதி சிவம் அவர்களை குறிக்க வேண்டிய அவசியமென்ன? பிராமணர்கள் கூறினாற்தான் உண்மைகள் இருக்குமா? யாராயிருந்தாலும் தகுதியான ஆராய்ச்சியும், காரணங்களும் தானே உண்மையை வெளிக்கொணர வைக்கும். தங்களின் கருத்துக்கு ஒத்து இருப்பதாக எண்ணி ஆரிய பிராமணரே கூறிவிட்டார் என்று கூறுகிறீர். நான் வேறோர் ஆரியபிராமணர் வடமொழியில் இருப்பதே வேதம்..மற்றெல்லாம் இல்லை என்று இந்த ஆரிய பிராமணர் கூறிவிட்டார் என்று பதிவிட்டால் என்ன ஒத்துக் கொள்வீர்களா? சொல்ல வந்த கருத்தல்லவோ முக்கியம்??!!

திரு சேயோன் அவர்களுக்கு,

உண்மைகளை வெளி கொணர வேண்டும் என்ற எண்ணம் தான் இருத்தல் வேண்டும். தன் கருத்து தான் உண்மை, அந்த கருத்தை ஆதரிப்போர் தான் முற்றும் படித்தோர், ஒத்துக் கொள்ளாதோர் அரை வேக்காடுகள் என்ற தங்களின் கருத்து தரம் தாழ்ந்ததாக இருக்கிறது. இறைவனே ஆயினும் அவன் பாட்டை விமர்சனம் செய்ய துணிந்தவர் பிறந்த பூமி இது என்பதை மறக்காதீர்கள்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம். Empty Re: தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum