இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யம பயம் போக்கும் மிருத்யுஞ்சய ஹோமத்துக்குச் சிறப்பு பெற்ற சந்திமௌலீஜ்வரர் ஆலயம்!

Go down

யம பயம் போக்கும் மிருத்யுஞ்சய ஹோமத்துக்குச் சிறப்பு பெற்ற சந்திமௌலீஜ்வரர் ஆலயம்! Empty யம பயம் போக்கும் மிருத்யுஞ்சய ஹோமத்துக்குச் சிறப்பு பெற்ற சந்திமௌலீஜ்வரர் ஆலயம்!

Post by ஆனந்தபைரவர் Mon Aug 02, 2010 3:47 pm

யம பயம் போக்கும் மிருத்யுஞ்சய ஹோமத்துக்குச் சிறப்பு
பெற்ற சந்திமௌலீஜ்வரர் ஆலயம்!

என். சத்தியநாராயணன்

சென்னை அண்ணாநகரில் பல நூற் றாண்டுகளுக்குமுன் "பாலீஸ்வரர்' என்ற பெயரில் ஒரு கோவில் இருந்தது. காலப்போக்கில் அவ்வாலயம் சிதைந்து கவனிப்பாரற்றுப் போய்விட்டது.

1968-ஆம் ஆண்டு உலக வர்த்தகப் பொருட் காட்சி முடிந்தவுடன், திருமங்கலம் என்று வழங்கப்பட்ட அந்தப் பகுதியை "அண்ணாநகர்' என்று பெயர் மாற்றியது அரசு. அப்பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி வீட்டுமனைகளாகப் பிரித்து ஒதுக்கீடு செய்தது. அப்போது அப்பகுதியை ஒட்டி காலியாக இருந்த மனையில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அது சூரிய பிம்ப வகை யிலான அபூர்வ சிவலிங்கமாகும். சிவலிங்கத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை வெளியில் எடுத்து மேற்கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். 1970-ஆம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரை நேரில் சந்தித்த மக்கள் இச்சிவலிங்கம் பற்றிய விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர், அந்தச் சிவலிங்கம் முன்பு அந்தப் பகுதி யில் இருந்த பாலீஸ்வரர் கோவிலுக்குரிய சிவலிங்கம் என்பதைத் தெரிவித்தார்.

சிவபெருமானின் திருக்கோலங்களை 25 திருமூர்த்தங்களாகப் பெரியோர் கூறுவர். அவற்றில் சந்திரமௌலீஸ்வரர் எனும் திரு மூர்த்தமும் ஒன்றாகும். காஞ்சி மகாபெரியவர் அண்ணாநகரில் பக்தர்கள் வழிபட்ட சிவலிங்கத் திற்கு சந்திரமௌலீஸ்வரர் எனப் பெயரிட்டார். திரிபுரசுந்தரி என்ற பெயரால் அம்பாளுக்குச் சந்நிதி அமைக்கவும், பரிவார தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைத்து வழிபடவும் அறிவுரை தந்து ஆசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடி நவகிரகங்கள், துவார முருகர், விநாயகர், ஐயப்பன் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து 1978-ல் சந்திரமௌலீஸ்வரருக்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். பின் பக்தர் கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சனேயர், கால பைரவர், சிவகாமி உடனுறை உற்சவர் (நடராஜர்), கொடி மரம் முதலானவை சிறப் பான முறையில் அமைக்கப்பட்டன. 1996-ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

அண்ணாநகர் சந்திரமௌலீஸ்வரர் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை என்ற குறைபாடு பக்தர்களிடையே இருந்து வந்தது. இதை நிவர்த்தி செய்யும் விதத்தில் 42 அடி உயரத்தில் புதிதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 28-1-2007-ல் கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவிலின் நுழைவாயில் தெற்குப்புறம் அமைந்துள்ளது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். திருச்செந்தூர், சுவாமி மலை, வடபழனி போன்ற முருகன் கோவில்கள் தெற்குப்புறம் நுழைவாயில் அமைந்துள்ள கோவில்களாகும். அவை விசேஷமான பரிகாரத் தலங்களாக விளங்குகின்றன. சந்திரமௌலீஸ் வரர் கோவிலும் தெற்குப் பார்த்த சந்நிதி உடையதாக இருப்பதால் இதையும் பக்தர்கள் பரிகாரத் தலமாக வழி பட்டு வருகின்றனர்.

உடல்நலம் பாதிக்கப் பட்டு மரண பயத்தில் உள்ளவர்களின் அச்சம் போக்க நடத்தப்படும் ஜபம் மிருத்யுஞ்சய ஜபம் எனப்படும். யாகமும் செய்வதுண்டு. பக்தர் களின் யம பயத்தைப் போக்கும் வகையில் அவர் கள் வேண்டுகோளின் பேரில் கடந்த பத்து ஆண்டுகளாக சந்திர மௌலீஸ்வரர் கோவிலில் மிருத்யுஞ்சய ஜபம் நடத் தப்பட்டு வருகிறது.

சந்திரமௌலீஸ்வரரை வணங்கும் பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையும்; தீராத நோய்களையும் நொடிப்பொழுதில் போக்கிவிடுவார் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது. மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப் படுகிறது.

கலசங்களைப் பிரதிஷ்டை செய்து ருத்ர மந்திரத்தை ஜபம் செய்து செய்யும் யாகம் ருத்ர ஹோமம் எனப்படும். ஸ்ரீ ருத்ர மந்திரத்தால் யாகங்களைச் செய்து கலசத்தில் உள்ள நீரை உருவேற்றி அந்த நீரால் சிவனை அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம் ஆகும்.

பரிகாரத் தலமான இக்கோவிலில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் அவர்கள் வேண்டிய வண்ணம் ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது சந்திர மௌலீஸ்வரருக்கு ருத்ரா பிஷேகம் நடைபெறுவது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

சென்னை மேற்கு அண்ணாநகரில் 15-ஆவது பிரதான சாலையில் அமைந்துள்ளது சந்திர மௌலீஸ்வரர் ஆலயம்.


நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum