இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருவாதிரைக்கு இணை தரணியில் ஏது?-கே. சுவர்ணா

Go down

திருவாதிரைக்கு இணை தரணியில் ஏது?-கே. சுவர்ணா Empty திருவாதிரைக்கு இணை தரணியில் ஏது?-கே. சுவர்ணா

Post by ஆனந்தபைரவர் Tue Dec 21, 2010 4:41 pm

திருவாதிரைக்கு இணை தரணியில் ஏது?-கே. சுவர்ணா Lord-shiva-30a
மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் என்ற சிறப்பைப் பெற்றது. இம்மாதத்தில் பௌர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் திருவாதிரை விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

திரு என்ற அடைமொழி கொண்ட இரு நட்சத்திரங்கள் திருவாதிரையும், திருவோணமும் ஆகும். திருவாதிரை சிவபெருமானுக்கும், திரு வோணம் திருமாலுக்கும் உகந்தவையாகச் சிறப்பிக்கப் படுகின்றன.

திருவாதிரையன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு பஞ்ச கிருத்திய உற்சவம் நடை பெறுகிறது. சிருஷ்டி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம், கிருஷ்ணகந்தம் ஆகியவை பஞ்ச கிருத்தியங்கள் எனப்படுகின்றன. நடராஜர் பீடத்தை விட்டு எழுந்தருளுதல், ரக்ஷ£பந்தனம் தரித்தல், சம்ஹார காலத்தில் எழுந்த உக்கிர உருவத்தை தேவர்கள் வெண்மை நிற மலர்களாலும், வஸ்திரங்களாலும் மறைத்தல், உற்சவம் கொண்டு அருள்பாலித்தல், அசுரர் சரீரத்தை திருநீறாக்கித் தரித்துக் கொள்ளுதல் ஆகியவற்றையே அவை குறிக்கின்றன.

தானும் ஆடிக்கொண்டு, உலகமனைத்தையும் ஆடவைத்துக் கொண்டு ஒரு மகத்தான சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதே இப்பண்டிகையின் நோக்கம். உலக இயக்கத்திற்குக் காரணமான சிவபெருமானின் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் திருநாளே திருவாதிரை நாள். அன்று சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருவான்மியூர் ஆகிய தலங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சிவபெருமானுக்கு “ஆதிரையன்” என்ற பெயரும் உண்டு. ஆதிரை என்ற சொல் “ஆருத்ரா” என்ற சொல்லின் திரிபாகக் கூறப் படுகிறது. ஆருத்ரா என் றால் ‘குளிர்ச்சி பொருந் திய’ என்று பொருள். குளிர்ச்சியான மார்கழி மாதத்தில் இறைவனை அபிஷேக ஆராதனைகளால் குளிரவைத்து வழிபடு கிறோம். அவனும் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறான்.

திருவாதிரையன்று இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும் பொருள்களில் முக்கிய இடம் பெறுவது களி. “திருவாதிரைக்களி ஒரு வாய் தின்னாதவர் நரகக்கூழ்” என்பது பழமொழி. ஏழு காய்கறிகளால் செய்த கூட்டுடன் களியை நிவேதனம் செய்து வழிபட்டால் ஏழு பிறவிகளிலும் இன்பமே கிட்டும் என்பது ஐதீகம்.

களி நிவேதனம் செய்யப்படுவதற்கு ஒரு வரலாறும் கூறப்படுகிறது. சேந்தனார் என்ற சிவபக்தர் தில்லையில் விறகு விற்று ஜீவனம் நடத்திவந்தார். தினந்தோறும் அடியார்களுக்கு உணவளித்துவிட்டு, அதன் பிறகே தான் உண்ணும் பழக்கமுடையவர். ஒரு சமயம் தொடர்ந்து மழை பெய்ததால் விறகு சேகரிக்க முடியவில்லை. உணவில்லாமல் பசியால் வாடினார். ஒரு நாள் சிறிதளவு மாவு கிடைத்தது. அதில் களிசெய்து, உணவு படைப்பதற்காக சிவனடியார் யாரேனும் வருகின்றனரா என எதிர்பார்த்து காத்திருந்தார்.

சிவபெருமான் சேந்தனாரின் பக்தியைச் சோதிப்பதற்காக முதியவர் வேடம் கொண்டு அவருடைய இல்லத்திற்கு வந்தார். அவர் அளித்த களியை உண்டு மகிழ்ந்தார். மீதமிருந்த களியையும் தன்னிடம் கொடுக்கும்படி முதிய வர் கேட்டார். தனக்காக வைத்திருந்ததையும் ஒரு பழந்துணியில் கட்டி அடியாராக வந்த சிவபெருமானிடம் கொடுத்தார் சேந்தனார். அதனைப் பெற்றுக் கொண்ட இறைவன் பொன்னம்பலம் நோக்கிச் சென்றமர்ந்தார்.

சோழ மன்னன் தினந்தோறும் நாள் வழிபாட்டில் நடராஜப் பெருமானின் திருவடிச் சிலம்புகளின் அருளோசையைக் கேட்டு மகிழ்வான். அன்று சிலம்போசை கேளாததால் மனம் வருந்தினான். அன்றிரவு சிவபெருமான் அம்மன்னன் கனவில் தோன்றி, “சேந்தன் இல்லத்தில் களி அமுது உண்ணச் சென்றதால், நீ நடத்தும் நாள் வழிபாட்டிற்கு வரத்தவறி னோம்.” எனக்கூறி மறைந்தார்.

மறுநாள் விடியற்காலையில் வழிபாட்டிற் காக மன்னன் பொன்னம்பலத்திற்குச் சென்ற போது அங்கு களி சிந்தியிருந்ததைக் கண்டான். முதல் நாளிரவு கனவில் சேந்தன் இல்லத்தில் களி அமுது உண்டதாகக் கூறியது நினைவில் வந்தது. அது உண்மையே என்று உணர்ந்த மன்னன் அச்செய்தியை மற்றவர்களுக்கும் கூறினான். அன்று முதல் திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு களி நிவேதனம் செய்யும் மரபு ஏற்பட்டு ‘திருவாதிரைக் களி’ சிறப்பு பெற்றது.

அறிவிழந்து ஆணவம் கொண்டு செயல்படு வோரை, இறைவன் அசுரன் முயலகனைக் காலடியில் போட்டு மிதிப்பதைப் போல, மிதித்துக் களியாக்கி விடுவான் என்பதே களியின் தத்துவம்.

திருவாதிரை நன்னாளில் இறைவனின் திருநடனம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இறைவனின் திருநடனம் உலக இயக்கத்தைக் குறிக்கிறது. மிகச்சிறிய அணு முதல் பிரம்மாண் டமான அண்டங்கள் வரை சீராக இயங்குவதற்கு அந்நடனமே அடிப்படையாக விளங்குகிறது. நடராஜப் பெருமானின் திருநடனத்திலிருந்தே வேதங்கள், ஆகமங்கள், கலைகள் அனைத்துமே பிறக்கின்றன. நாதம் பிறக்கிறது. நாதத்திலிருந்தே ஓசை ஒலிகளும், ஓம் என்னும் பிரணவ மந்திரமும் தோன்றின. இந்த நன்னாளில்தான் உமையம்மை, பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் ஆகியோருக்கு சிவபெருமான் இத்திருக்கூத்தை ஆடிக்காட்டினார். அந்நடனத்தை பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் ஆடி, தரிசனம் தந்து, திருவாதிரையன்று அருள் பாலிக்கிறார். அதுவே ‘ஆருத்ரா தரிசனம்’ என்ற சிறப்பான விழாவாக நடராஜர் கோவில் கொண்டிருக்கும் தலங்களில் கொண்டாடப் படுகிறது.

இராமநாதபுரத்திற்கு மேற்கே உத்தரகோச மங்கை என்ற தலம் அமைந்துள்ளது. அங்குள்ள திருக்கோவிலின் வடக்குப் பிராகாரத்தில் நடராஜர் சந்நிதி சிறிய கோவில் அமைப்பில் உள்ளது. அங்குள்ள நடராஜர் நிரந்தரமாக சந்தனக் காப்புக்குள் மறைந்திருக்கிறார். அந்தத் திருஉருவம் மரகதத்தினால் ஆனது. அதன் பிரகாசம் கோடி சூரிய ஒளி கொண்டது. அவ்வுருவத்தை நேரிடையாகக் கண்ணால் காணமுடியாது. ஆண்டுக்கொரு முறை மார்கழி திருவாதிரை நாளில் முதல் ஆண்டில் இடப்பட்ட சந்தனக்காப்பு அகற்றப்பட்டு புதிதாக சந்தனக்காப்பு இடப்படுகிறது. இறைத் திருமேனியில் காப்பிடும் அர்ச்சகரும் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காப்பிடுவார். காப்பிடப்பட்ட பிறகுதான் நடராஜர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இத்திருவாதிரை நோன்பை அடிப்படையாகக் கொண்டே மாணிக்கவாசகர் திருவெம் பாவையைப் பாடியுள்ளார்.

திருவாதிரை நாளில் விரதமிருந்து மிகுந்த பலம் பெறலாம், சகல சௌபாக்கியங்களையும் அடையலாம் என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான நம்பிக்கை.

நன்றி அம்மன் தரிசனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum