இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மலைமண்டலப் பெருமாள் ஆலயம்

2 posters

Go down

மலைமண்டலப் பெருமாள் ஆலயம் Empty மலைமண்டலப் பெருமாள் ஆலயம்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 10, 2011 4:35 pm

புராதனத்திற்கும் புனிதத்துக்கும் முக்கிய இடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. ஆங்காங்குள்ள பழமையான தலங்களைத் தரிசிக்கவும் புனருத்தாரணம் செய்து நித்யபூஜை நடத்தவும் பலர் முயற்சி எடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

அவ்வகையில் மிகப் பழமையான பிரார்த்தனைத் தலமாக விளங்குவது மலைமண்டலப் பெருமாள் ஆலயம். இது சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினத்தில் (நஆஉதஆந) அமைந்துள்ளது.

முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்றும்; கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கி.பி. 850-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக் கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு கல்வெட்டைக் காணலாம். அதைக் கொண்டே இத்திருக்கோவிலின் புராதனத்தை உணரலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை பிரதான வாயிற்கதவாய் அமைந் துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் கோவிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித் தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். கருட னின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பி டத்தக்கது.

இந்த கருட பகவான் மிகவும் விசேஷமானவர். தலையில் ஒன்று; இரு காதுகளில் ஒவ்வொன்று; மார்பினில் மாலையாக இரண்டு; இரு தோள்களிலும் ஒவ்வொன்று; இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங் களை ஆபரணமாய்க் கொண்ட இவரை அஷ்டநாக கருடன் என்று அழைக்கிறார்கள். இதனால் இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

திருமணத் தடையை நீக்குதல் மட்டுமின்றி, தாம்பத்திய வாழ்வில் நிம்மதியைக் கொடுத்து புத்திர பாக்கியம் அளித்தல், பல காரணங்களால் பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்த்தல் என்று பலவிதமாக அருள் பாலிக் கிறார். இவர் சந்நிதியில் பலர் நெய் விளக்கேற்றுதல், அபிஷேக ஆராதனைகள், கருடனுக்குப் பிடித்தமான அமிர்த கலசம் (ஒரு விதமான கொழுக்கட்டை) நைவேத்தியம் என்று வழிபாடு செய்தவண்ணம் உள்ளனர்.

கருடனைக் கடந்து முன்மண்டபம் சென்றால் அங்கே ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபை யுடன் கூடிய லட்சுமி நாராயணனைத் தரிசிக்க லாம். மேலும் அவரருகில் லட்சுமி பிராட்டி யையும் தரிசிக்கலாம். இவர்தான் இத்தலத் தின் மூலமூர்த்தியாய் இருந்தவர். திருப் பணிகள் செய்தபோது பூமியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கூடிய கிரிவரதராஜரே பிற்காலத்தில் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டார்.

லட்சுமி நாராயணன் அருகே புதிதாய் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராமர், சீதை, இலக்குவன், ஆஞ்சனேயர் மற்றும் ஆழ்வார், ஆசார்யர்களின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

இந்த சந்நிதியில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடன்களும் நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ் பாகத்திலோ கிளிகள் தாங்குவதுபோன்ற அமைப்பு. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும். சிதம்பரத்தைச் சார்ந்த ஒரு அன்பரின் வீட்டில் இருந்த இவ்விளக்கு கிரிவரதராஜன் அருளாணைப் படி இத்திருக்கோவிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. புரட்டாசி சிரவணத்தன்று இவ்விளக்குக்கும் விசேஷ பூஜை உண்டு.

கர்ப்பக் கிரக நுழைவு வாயிலில் இரு துவார பாலகர்கள் உள்ளனர். மேல் நிலைப்படியில் எங்கும் காணாத அதிசயமாக யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. (பொதுவாக கஜலட்சுமியைத்தான் காணலாம்.) இவரும் சிறந்த வரப்பிரசாதி. இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் உண்டு. பிரதோஷ வழிபாடு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

கருவறைக்குள் கருணாமூர்த்தியாம் கிரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கி றார். பெருமாள் சுமார் ஆறடி உயரம் கொண்டவர். ஒரு காலை முன் வைத்தபடி கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் காணப்படுகிறார். அதுபோல வலக்கை சக்கரமும் சற்று சாய்ந்து ஏவிய நிலையில் உள்ளது. முன்னதாக உற்சவ மூர்த்திகள் உள்ளன. உற்சவத் தாயாரும் இங்கே பெருமாளுடன் தரிசனம் தருகிறார்.

இத்திருத்தலத்தில் லட்சுமி மூன்று வடிவங்களில் அருட்காட்சியளிப்பது குறிப் பிடப்பட வேண்டிய அம்சம். லட்சுமி நாராயணனுக்கு இருபுறமும் இரண்டு தாயார்கள். தவிரவும் தனிக்கோவில் தாயாராக பெருந்தேவி.

மூலஸ்தானத்தில் மற்றுமொரு முக்கிய மூர்த்தியையும் காணலாம். அவர்தான் புஷ்பாஞ்சலி ஆஞ்சனேயர். கலைநயமும் காருண்யமும் நிறைந்த விஜயநகர காலத்திய பஞ்சலோக ஆஞ்சனேயர். பொதுவாக அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் அனுமன் திருக்கரத்தில் புஷ்பமும் அமைந் துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். கரங்களில் உள்ள புஷ்பத்தை ராமருக்கு சமர்ப்பிக்கப் போகிறாரா அல்லது நமக்கு தரப் போகிறாரா? அஞ்சலி ராமருக்கு; அருள் நமக்கு.

இப்படி பல அதிசயங்கள் நிறைந்த இத்திருக்கோவில் ஒரு நந்தவனத்தில் அமைந்திருப்பது போன்ற அமைப்பில் உள்ளது.

click here
விஸ்தாரமான வெளிப் பிராகாரத்தில் துர்க்கை, தாயார் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி, அரங்கனின் சந்நிதிகள் உள்ளன. இங்கு அரங்கன் சிறு பாலகனாகக் காட்சியளிக்கிறார். உற்சவ விக்ரகங்களும் ஸ்ரீ ரங்கத்தை நினைவூட்டும்படியான அமைப்பில் உள்ளன.

இத்திருக்கோவிலின் பெருமை இவ்வளவு தானா என்று சிந்திக்கிறீர்களா? இன்னுமோர் அதிசயமும் உண்டு. மகான் ராகவேந்திரரும் இத்தலத்தில் தங்கி இப்பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்துள்ளார். இத்திருக்கோவில் அருகிலேயே மகான் ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. பிருந்தாவனத்தில் மகான் ராகவேந்திரர் சிலாமூர்த்தியாய் கம்பீரமாய் எழுந்தருளியுள்ளார். அவரின் எதிரே பஞ்சமுக அனுமனின் சந்நிதியும் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு ஒருமுறை வந்தாலே இவ்வெம்பெருமாள் பலமுறை உங்களை அழைத்து அருள்புரிவார் என்பது நீங்கள் அனுபவிக்க வேண்டிய அற்புதம்!

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மலைமண்டலப் பெருமாள் ஆலயம் Empty Re: மலைமண்டலப் பெருமாள் ஆலயம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:43 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum