இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன?

3 posters

Go down

இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன? Empty இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன?

Post by ஆனந்தபைரவர் Thu Feb 10, 2011 10:10 pm

அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

ஆன்மீக பாதையில் செல்லுங்காலை பலர் நட்பு மலிந்திடும், அடியேனின் வழியில் வந்த நட்பின் மிகுதியில் உறவான ஆன்மாக்கள் சற்றே அதிகம்தான், எனினும் அத்தகை நெஞ்சம்நிறைஆன்மநேய உறவுகளில் என்னைக் மிகவும் கவர்ந்தவர் அடியேனின் சகோதரி நந்திதா அவர்களாகும்.

அவர்களின் சொல்லாடலில் அழகும், ஆற்றலும், அழுத்தமும் காண மிகுந்திருக்கும்.

அவரது பார்வையில் இறைவனுக்கு நேர்த்திக்கடனாக மனிதர் உடைக்கும் தேங்காயில் அவர் உள்ளார்ந்த தத்துவம் காணுகிறார்.

என்னே நேர்த்தி ! நீங்களும் படித்து ஆனந்தியுங்களேன்.

பெருமதிப்புக்குரிய உடன் பிறவாச் சகோதரருக்கு

வணக்கம்.

திருக்கோயில்களில் தேங்காய் உடைப்பது ஒரு முக்கியமான சடங்காக இருக்கிறது.

இது ஏன் என்ற வினா என்னைப் பலகாலமாகக் குடைந்து கொண்டிருந்தது,

என் மனதில் தோன்றிய விடயங்களைத் தங்கள் முன் வைக்கிறேன்.

இறைவன் படைப்பில் ஒரு முக்கியமான தத்துவத்தை நாம் உணர வேண்டும் ஒன்றைப் படைக்குங்கால் அதன் இனம் பெருகுவதற்கு அதற்கு இணையையும், அதுவே உலகை ஆக்கிரமிது விடாதபடி அதற்கு எதிரியையும் படைத்து வைப்பான், அப்போது தான் தகுதியுள்ளது பரிணாமம் அடையும் (SURVIVE THE FITTEST) என்பது தான் காரணம். மானுக்குப் புல்லையும் பெண்மானையும் படைத்த இறைவன் புலியையும் படைத்துள்ளான்.

இதனை ஒரு வைணப் பெரியாரும்,

"உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை வைய மனிதரைப் பொய்யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்" என்றார்.


இதுவே படைப்பின் ABC ஆகும், அதாவது ACCELERATION BRAKE ANC CLUTCH. ஒருவனை ஒன்றும் தெரியாதவன் என்று கூற அவனுக்கு ஏ பி சி தெரியாது என்கிறோமே அதன் உள்ளர்த்தம் இது தான்,

இதைப் போன்று சிருட்டியில் வேறொரு விசேஷமும் உண்டு, ஒன்றின் போலியாக மற்றொன்று, ஒன்று தெய்வீகமானது மற்றது ப்ரகிருதியைச் சார்ந்தது,

எடுத்துக்காட்டு, பசு – எருமை, மான் – ஆடு முதலியன

இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன்

தென்னையும் பனையும் புல்லினத்தைச் சார்ந்தவை. (புறக்காழ் உடையன புல்லெனப் படுமே – தொல்காப்பியம்)


தென்னை தெய்வீகமானது, அதிலும் மூன்று கண்கள் உள்ளன, ஆனால் இரண்டு செயலற்றது. ஒன்றின்மூலம் தான் முளை வரும். தேங்காய் பழுக்காது , நெற்றாகி விடும், இது துறவு நிலை போன்றது,

பனையின் நுங்கிலும் மூன்று கண்கள் உள்ளன அந்த மூன்று கண்களிலிருந்தும் முளை தோன்றும்,


தெய்வீகத்தில் சத்வ குணம் மட்டுமே உயிர்க்கும் மற்றவை அதனுள் அடங்கி இருக்கும்

பிரகிருதில் சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றுமே உயிர்ப்பு நிலை அடையும். பனையில் அவ்வாறே உள்ளது. இதனையே கீதையில் கண்ணன், "தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா" என்றார்,


தெய்வீக சம்பத்தை நாம் தேடிப் பெற வேண்டும். பிரகிருதி தானாகவே வேண்டாமல் பலன் கொடுத்து விடும், அறிவைபெற காயத்ரி முதலான மந்திரங்களையும் தேவ உபாசனையும் வேண்டும் ஆனால் காமம், மதம் மாத்சர்யம் இவைகள் வேண்டாமலே வந்து சேரும்


ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையைச் சற்று ஆழமாக நோக்கினால் பசுக்களைப் பற்றிக் கூறும் போது நாச்சியார் “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்றும் எருமைகளைப் பற்றிக் கூறும் போது கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர, நனைத்தில்லம் சேறாக்கும் என்றார், அதே போல் “மோட்டெருமை வாவி புக முட்டு வரால் கன்றென்று வீட்டளவும் பால் சொரியும் வெண்ணை என்று கம்பரும் பாடியுள்ளனர்.

எனவே, தேங்காய் ஆத்மாவின் பிரதிநிதியாகவும், பனை ஜீவனின் பிரதி நிதியாகவும் கொள்ளலாம்.

ஆகவே ஆத்மாவை இறைவனிடம் அர்ப்பணம் செய்யும் முகத்தால் நாம் தேங்காயைத் தெய்வ காரியங்களுக்குப் பயன் படுத்துகிறோம்.

விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்

இது என் கருத்து, தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

என்றும் மாறா அன்புடன் உங்கள் சகோதரி



நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன? Empty Re: இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன?

Post by svelan74 Sun Feb 13, 2011 11:01 am

நந்திதா அவர்களுக்கு,

தேங்காயை ஏன் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம் என்பதை விளக்கி, இந்து தர்மத்தின் ஆழ்ந்த தத்துவங்களை விளக்கிவிட்டீர்கள்...!!

பரிணாமத்தைப் பற்றி இந்து தர்மம் கூறும் செய்தியையும், இந்து தர்மம் இயற்கைவாதத்திற்கு ஒத்தது எனபதையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

மிக்க நன்றி.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன? Empty Re: இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன?

Post by ஹரி ஓம் Sun Feb 13, 2011 12:24 pm

மிக அருமையான விளக்கம்.. நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன? Empty Re: இறைவனுக்கு தேங்காய் உடைப்பத்தின் சூட்சுமம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum