இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விநாயகருக்கு அறுகம்புல் ஏன்

Go down

விநாயகருக்கு அறுகம்புல் ஏன் Empty விநாயகருக்கு அறுகம்புல் ஏன்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 4:30 pm

விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அது ஏன் என்பதை, அதற்கு உண்டான கதையைப் பார்த்து விட்டுப் பிறகு பார்க்கலாம்.
யமனுடைய மகன் பெயர் அனலன். அவன் ஓர் அபூர்வமான வரம் பெற்றிருந்தான். அனல் வடிவமான அவன் யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவருடைய உடலிலும் புகுந்து, அவரவரை உருக்கி உருக்குலைப்பதே - அவன் பெற்ற வரம். அதன் காரணமாக ஏராளமானோர் உருக்குலைந்து போனார்கள். துயரம் தாங்காத தேவர்கள் விநாயகரை நோக்கித் துதித்து முறையிட்டார்கள். அதே சமயம் அனலனும் தேவர்களை நெருங்கினான். அப்போதே, "தேவர்களே! பயப்படாதீர்கள்!" என்று சொல்லியபடியே விநாயகர் அங்கு தோன்றினார். அது மட்டுமல்ல; துதிக்கையை நீட்டி அனலனை வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டார். அனல் வடிவமான அனலன் விநாயகர் வயிற்றுக்குள் போனதும், உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் உடல் கொதித்துத் துயரப் பட்டன. உலகத்தையே தன் பெருத்த வயிற்றில் கொண்டவரல்லவா விநாயகர்! பிறகு... அவர் வயிற்றில் அனலன் புகந்தால், அனைத்து உலகமும் அல்லல் படத்தானே வேண்டும்!
விநாயகரின் திருமேனியைக் குளிர வைப்பதற்காக, பாலை எடுத்துக் குடம் குடமாக அவர் மீது ஊற்றினார்கள், சந்திரன் தன் அமுத மயமான ஒளிக்கதிர்களைச் சாற்றினான்; மிகவும் குளிர்ச்சி பொருந்திய பாம்புகளை எடுத்து விநாயகர் மீது சுற்றினாகள். என்ன முயன்றும் பலனில்லை; விநாயகரின் திருமேனி குளிரவே இல்லை.
அப்போது ...
ரிஷிகள் ஏழு பேர்களும் ஆளுக்கு 21 அறுகம்புல்லை எடுத்து விநாயகர் திருமேனியில் இட்டு அர்ச்சித்துச் சாற்றினார்கள். என்ன ஆச்சரியம்! அப்போதே விநாயகரின் திருமேனி குளிர்ந்தது. உலகத்து உயிர்களும் கொதிப்பு நீங்கி அமைதி அடைந்தன. அன்று முதல், விநாயகருக்கு அறுகம்புல் சார்த்தும் வழிபாடு தொடங்கியது. மறுபடியும் கதையை நன்றாகப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு வாருங்கள்! இக்கதையில் உள்ள விஞ்ஞானப் படிப்பினையை நாம் உணரலாம்.
ஆத்மார்த்தமாக வழிபாட்டில் ஈடுபடும்போது, நம் அனைவரது உடம்பிலும் ஒரு சக்தி பரவும். குண்டலினி சக்தி எழுந்து மூலாதாரம் முதல் அது பயணப்படும்போது, உடம்பு கொதிப்படைவதை அனுபவசாலிகள் உணர்ந்திருப்பார்கள். அந்தச் சூட்டினை உடனே இறக்கியாக வேண்டும். அதற்காகக் குளிர்ந்த தண்ணீரை எடுத்து உடம்பில் கொட்டிக் கொண்டால், உடம்பில் உள்ள சூடு போய் விடும்; கூடவே உடம்பில் பரவிய ஆத்மசக்தியும் இறங்கிவிடும். மாத்திரைகள் போட்டுக்கொண்டாலோ பக்க விளைவுகள் உண்டாகின்றன. (போலி மருந்துகளும், காலாவதியான, கடந்த மாத்திரைகளும் தமிழ்நாட்டையே ஆட்டிப்படைத்துப் பத்திரிகைகளுக்கும் தொலைக் காட்சிகளுக்கும் சாப்பாடு போட்டு அதன் உரிமையாளர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில்.... மருந்து மாத்திரைகளை, நினைக்கவே பயமாக இருக்கிறது.) பிறகு......உடல் கொதிப்பில் இருந்து விடுபடவேண்டும். ஏறிய சக்தியும் இறங்கக் கூடாது. என்ன செய்வது? அறுகம்புல் கஷாயமோ அல்லது அறுகம்புல் சாறோ அருந்தினால், உடல் கொதிப்பு நீங்கிவிடும்; பக்க விளைவுகள் கிடையாது; ஏறிய சக்தியும் இறங்காது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum