இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பக்தி யோகம்

Go down

பக்தி யோகம்   Empty பக்தி யோகம்

Post by eegaraiviswa Mon Apr 04, 2011 8:06 pm

பக்தி யோகம்

ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில்தான் கடவுளுக்கு அதிக பிரீதி.


अर्जुन उवाच
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥१२- १॥

அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா: || 12- 1||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
யே ப⁴க்தா: ஏவம் ஸததயுக்தா: = எந்த பக்தர்கள் இவ்வாறு யோகத்தமர்ந்து
த்வாம் பர்யுபாஸதே = நின்னை வழிபடுகிறார்களோ
யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி = மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ
தேஷாம் யோக³வித்தமா: கே = இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

श्रीभगवानुवाच
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥१२- २॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
மய்யாவேஸ்²ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
ஸ்²ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: || 12- 2||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
மயி மந: ஆவேஸ்²ய = என்னிடத்தே மனத்தைச் செலுத்தி
நித்யயுக்தா: = நித்திய யோகிகளாய்
யே = எந்த பக்தர்கள்
பரயா ஸ்²ரத்³த⁴யா உபேதா: = சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக
மாம் உபாஸதே = என்னை வழிபடுகிறார்களோ
தே யுக்ததமா = அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று
மே மதா: = என்னால் மதிக்கப் படுபவர்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.

ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥१२- ३॥

யே த்வக்ஷரமநிர்தே³ஸ்²யமவ்யக்தம் பர்யுபாஸதே |
ஸர்வத்ரக³மசிந்த்யம் ச கூடஸ்த²மசலம் த்⁴ருவம் || 12- 3||

து யே அக்ஷரம் அநிர்தே³ஸ்²யம் அவ்யக்தம் = எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்)
ஸர்வத்ரக³ம் அசிந்த்யம் = எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும்
கூடஸ்த²ம் அசலம் த்⁴ருவம் = நிலையற்றதும், அசைவற்றதும் , உறுதிகொண்டதுமாகிய பொருளை
பர்யுபாஸதே = வழிபடுகின்றனரோ

இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ

संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥१२- ४॥

ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||

இந்த்³ரியக்³ராமம் ஸந்நியம்ய = புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி
ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: = எங்கும் சமபுத்தியுடையோராய்
ஸர்வபூ⁴தஹிதே ரதா: = எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய
தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி = அவர்களும் என்னையே அடைகிறார்கள்

இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்

क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥१२- ५॥

க்லேஸோ²ऽதி⁴கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் |
அவ்யக்தா ஹி க³திர்து³:க²ம் தே³ஹவத்³பி⁴ரவாப்யதே || 12- 5||

அவ்யக்த ஆஸக்த சேதஸாம் = உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும்
தேஷாம் க்லேஸ²: அதி⁴கதர: = அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம்
ஹி தே³ஹவத்³பி⁴ = ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால்
அவ்யக்தா க³தி = உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம்
து³:க²ம் அவாப்யதே = மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.

ஆனால், ‘அவ்யக்தத்தில்’ மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் ‘அவ்யக்த’ நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥१२- ६॥

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||

து மத்பரா: = ஆனால் என்னையே கதியாகக் கொண்ட
யே ஸர்வாணி கர்மாணி = எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும்
மயி ஸந்ந்யஸ்ய = என்னிடம் சமர்ப்பணம் செய்து
மாம் ஏவ = என்னையே
அநந்யேந யோகே³ந = பிறழாத யோகத்தால்
த்⁴யாயந்த உபாஸதே = இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,

எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥१२- ७॥

தேஷாமஹம் ஸமுத்³த⁴ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக³ராத் |
ப⁴வாமி நசிராத்பார்த² மய்யாவேஸி²தசேதஸாம் || 12- 7||

பார்த² = பார்த்தா!
மயி ஆவேஸி²த சேதஸாம் = என்பால் அறிவைப் புகுத்திய
தேஷாம் நசிராத் = அவர்களை சீக்கிரமாகவே
அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாக³ராத் = நான் மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து
ஸமுத்³த⁴ர்தா ப⁴வாமி = கரையேற்றுபவனாக ஆகிறேன்

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்

मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥१२- ८॥

மய்யேவ மந ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஸ²ய: || 12- 8||

மயி ஏவ மந: ஆத⁴த்ஸ்வ = என்னிடமே மனதை நிலைநிறுத்து
மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய = என்னிடமே புத்தியை ஈடுபடுத்து
அத: ஊர்த்⁴வம் = அதற்கு மேல்
மய்யேவ நிவஸிஷ்யஸி = என்னிடமே வாழ்வாய்
ந ஸம்ஸ²ய: = ஐயமில்லை

மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.

अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनंजय ॥१२- ९॥

அத² சித்தம் ஸமாதா⁴தும் ந ஸ²க்நோஷி மயி ஸ்தி²ரம் |
அப்⁴யாஸயோகே³ந ததோ மாமிச்சா²ப்தும் த⁴நஞ்ஜய || 12- 9||

அத² சித்தம் = ஒரு வேளை சித்தத்தை
மயி ஸமாதா⁴தும் = என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு
ந ஸ²க்நோஷி = முடியாவிட்டால்
தத: அப்⁴யாஸ யோகே³ந = அப்போது (இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால்
மாம் ஆப்தும் இச்ச² த⁴நஞ்ஜய = என்னை அடைய விரும்பு அர்ஜுனா!

என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.

अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥१२- १०॥

அப்⁴யாஸேऽப்யஸமர்தோ²ऽஸி மத்கர்மபரமோ ப⁴வ |
மத³ர்த²மபி கர்மாணி குர்வந்ஸித்³தி⁴மவாப்ஸ்யஸி ||12- 10||

அப்⁴யாஸே அபி அஸமர்த² அஸி= (இவ்விதமான) பயிற்சியில் கூட திறமை அற்றவனாக இருந்தால்
மத் கர்ம பரம: ப⁴வ = எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டிரு
மத³ர்த²ம் கர்மாணி குர்வந் அபி = என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும்
மாம் அவாப்ஸ்யஸி = என்னை அடைவாய்

பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.

अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥१२- ११॥

அதை²தத³ப்யஸ²க்தோऽஸி கர்தும் மத்³யோக³மாஸ்²ரித: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் தத: குரு யதாத்மவாந் || 12- 11||

மத்³யோக³ம் ஆஸ்²ரித: = என்னை அடைவது என்ற யோகத்தை சார்ந்து நின்று
தத் அபி = இதைக் கூட
கர்தும் அத²: அஸ²க்த: அஸி = செய்யத் திறமையற்றவனாக இருந்தால்
தத: யதாத்மவாந் = அப்போது தன்னைத்தான் கட்டுப்படுத்தி
ஸர்வகர்மப²லத்யாக³ம் குரு = எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते ।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥१२- १२॥

ஸ்²ரேயோ ஹி ஜ்ஞாநமப்⁴யாஸாஜ்ஜ்ஞாநாத்³த்⁴யாநம் விஸி²ஷ்யதே |
த்⁴யாநாத்கர்மப²லத்யாக³ஸ்த்யாகா³ச்சா²ந்திரநந்தரம் || 12- 12||

அப்⁴யாஸாத் ஜ்ஞாநம் ஸ்²ரேய: = பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது
ஜ்ஞாநாத்³ த்⁴யாநம் விஸி²ஷ்யதே = ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது
த்⁴யாநாத் கர்மப²ல த்யாக³: = தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது
த்யாகா³த் அநந்தரம் ஸா²ந்தி = அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது)

பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥

அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||

ய: ஸர்வபூ⁴தாநாம் அத்³வேஷ்டா = எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி
மைத்ர: கருண ஏவ ச = அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய்
நிர்மம நிரஹங்கார: = யானென்பதும் எனதென்பதும் நீங்கி
ஸமது³:க²ஸுக²: க்ஷமீ = இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்

எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,

संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १४॥

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ³ யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||

ஸததம் ஸந்துஷ்ட: = எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய்
யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: = தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய்,
மயி அர்பித மந: பு³த்³தி⁴: = என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து
மத்³ப⁴க்த: ஸ: யோகீ³ = என் தொண்டனாகிய யோகி
மே ப்ரிய: = எனக் கினியவன்.

எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.

यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥१२- १५॥

யஸ்மாந்நோத்³விஜதே லோகோ லோகாந்நோத்³விஜதே ச ய: |
ஹர்ஷாமர்ஷப⁴யோத்³வேகை³ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: || 12- 15||

யஸ்மாத் லோக: ந உத்³விஜதே = எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ
ச லோகாத் ந உத்³விஜதே = எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ
ச ஹர்ஷ அமர்ஷ ப⁴ய: உத்³வேகை³ = களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும்
ய: முக்த: ஸ: மே ப்ரிய: = எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்

எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்

अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: ஸு²சி: = எதிர்பார்த்தலின்றித் தூயோனாய்,
த³க்ஷ உதா³ஸீந: = திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய்,
க³தவ்யத²: = கவலை நீங்கியவனாய்
ஸர்வ ஆரம்ப⁴ பரித்யாகீ³ = எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து
ஸ: மத்³ப⁴க்த: மே ப்ரிய: = என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்

எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்

यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥१२- १७॥

யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||

ய: ந ஹ்ருஷ்யதி = எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ
ந த்³வேஷ்டி = எதையும் வெறுப்பதில்லையோ
ந ஸோ²சதி = எதற்காகவும் துயரப் படுவதில்லையோ
ந காங்க்ஷதி = எதற்காகவும் ஆசைப் படுவதில்லையோ
ஸு²ப⁴ அஸு²ப⁴ பரித்யாகீ³ = நன்மையையுந் தீமையையுந் துறந்த
ஸ: ப⁴க்திமாந் மே ப்ரிய: = தொண்டனே எனக் கினியவன்

களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.

समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥१२- १८॥

ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||

ஸ²த்ரௌ ச மித்ரே ச = எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும்
மாந அபமாநயோ: ஸம: = மானத்திலும், அவமானத்திலும் சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ
ததா² ஸீ²தோஷ்ண ஸுக²து³:கே²ஷு ஸம: = குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்
ஸங்க³விவர்ஜித: = பற்றறுத்தவனோ

பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.

तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥१२- १९॥

துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||

துல்ய நிந்தா³ ஸ்துதி மௌநீ = புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி
யேந கேநசித் ஸந்துஷ்ட: = யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான்
அநிகேத: = குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று அற்றவன்)
ஸ்தி²ரமதி: = திடமான புத்தி உடையவன்
ப⁴க்திமாந் நர: மே ப்ரிய: = இத்தகைய பக்தன் எனக் கினியவன்

புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥१२- २०॥

யே து த⁴ர்ம்யாம்ருதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
ஸ்²ரத்³த³தா⁴நா மத்பரமா ப⁴க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: || 12- 20||

த⁴ர்ம்யாம்ருதமித³ம் = இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை
யதா² உக்தம் பர்யுபாஸதே = யான் சொல்லியபடி வழிபடுவோர்
ஸ்²ரத்³த³தா⁴நா = நம்பிக்கையுடையோர்
மத்பரமா = என்னை முதலாகக் கொண்டோர்
தே ப⁴க்தா: மே அதீவ ப்ரியா: = அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்

இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.

ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे भक्तियोगो नाम द्वादशोऽध्याय: || 12 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘பக்தி யோகம்’ எனப் பெயர் படைத்த
பன்னிரெண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.

eegaraiviswa

Posts : 26
Join date : 04/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum